என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக ஃபைல்ஸ்"

    • திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் வெளியீடு.
    • விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

    2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று டி.ஆர்.பாலு ஆஜரானார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு டி.ஆர்.பாலு கூறுகையில்," 21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என

    அண்ணாமலை சொல்லியிருந்தார். அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.

    ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

    மேலும், அண்ணாமலை," 2004ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை" கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த டி.ஆர்.பாலு, "சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார். அப்போது நான் பதில் சொல்லிக்கிறேன்" என்றார்.

    மேலும், ரூ.10 ஆயிரம் கோடி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.
    • இதுகுறித்து திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

    சென்னை:

    தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது திமுக தலைவர்களின் சொத்து விவரம் மற்றும் பல்வேறு ஆவணங்களை பெட்டியில் வைத்து ஒப்படைத்தார்.

    திமுக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய, திமுக ஃபைல்ஸ் பகுதி 2 ஆவணங்களையும், மேலும், ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களையும் வழங்கி, இது தொடர்பாக ஆளுநர் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்ததாக அண்ணாமலை தெரிவித்தார்.

    இந்நிலையில், திமுக ஃபைல்ஸ் 2 என்ற பெயரில்  அண்ணாமலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் இடிஎல் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு போக்குவரத்துத்துறை மூலம் 2 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழ்நாடு மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மூலம் 600 கோடி ரூபாய் என மொத்தம் 5600 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

    ×