என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- காங்கிரஸை பலமாக்குவதுதான் எங்களின் வேலை
- முதலமைச்சர் கூறியதுபோல தமிழ்நாடு - டெல்லிக்கு இடையேதான் போட்டி என போராடுகிறோம்
நீண்ட நாட்களாகவே தமிழ்நாட்டின் முக்கிய காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் திமுகவை கடுமையாக சாடிவருகின்றனர். அதில் ஒருவர் மாணிக்கம் தாகூர். இதனால் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பு நிலவிவந்தது.
நேற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத்தொடர்ந்து மாணிக்கம் தாகூர் மீது தொடர்ந்து எழுந்துவரும் புகார்கள் தொடர்பாக பேச இன்று பெங்களூரு செல்வதாக மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர்,
"மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது டிஎன்டி (பிரமலைக்கள்ளர், நரிக்குறவர் உள்ளிட்ட சமூகங்கள் ) சமூகத்தினருக்கு தனியாக ஒரு பத்தியை சேர்க்கவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளேன். ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கை குறித்து தலைமைக்கு தெரியும். ஏற்கெனவே கடந்த 17-ம் தேதி கட்சியின் தலைமையிடம் பேசிவிட்டுதான் வந்தேன்" என தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின்போது
தொடர்ந்து கார்கே, ராகுல் காந்தியைவிட மாணிக்கம் தாகூர் பெரிய ஆளா? என செல்வப்பெருந்தகை கூறியது குறித்த கேள்விக்கு, அதெல்லாம் அண்ணனையும், தம்பியையும் பொறுத்த அளவில் பெரிய பிரச்சனையில்லை. நாங்கள் எல்லாம் சகோதரர்கள். காங்கிரஸை பலமாக்குவதுதான் எங்களின் வேலை." என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி வருங்காலத்தில் வளர்ச்சிக்காக இருக்க போகிறதா அல்லது வெற்றிக்காக இருக்கப் போகிறதா என்ற கேள்விக்கு, தமிழ்நாட்டின் நன்மைக்காக போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் முதலமைச்சர் கூறியதுபோல தமிழ்நாடு - டெல்லிக்கு இடையேதான் போட்டி என போராடுகிறோம். எங்களை பொறுத்தவரைக்கும் நம்பிக்கை உள்ளது. இந்தத் தேர்தலில் தமிழ்நாடு வெற்றிப்பெறும்." என தெரிவித்தார்.
- ஒரு மாநில அரசு மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்க வேண்டும்.
- 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனை விட 109% கடனை திமுக ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டை கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து வரும் திமுக அரசு, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு கடன்கார மாநிலமாக மாற்றி வைத்திருக்கிறது என்பதற்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கை தான் சான்று ஆகும். சொந்த வரி வருவாயாக ரூ.2.06 லட்சம் கோடியை மட்டுமே ஈட்டியிருக்கும் திமுக அரசு, அதில் 90 விழுக்காட்டை, அதாவது 1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கிக் குவித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொருவரின் தலையிலும் ரூ.1.27 லட்சம் கடன் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் இன்று தாக்கல் செய்தார். இடைக்கால நிதிநிலை அறிக்கை என்பதால் இதில் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால், 2025-26ஆம் ஆண்டிற்கான திமுக அரசின் நிதிச் செயல்பாடுகள் தமிழ்நாட்டை சீரழித்து, கடன் வலையில் வீழ்த்துவதாக அமைந்திருக்கின்றன. திமுக அரசின் மிக மோசமான செயல்பாடுகள் காரணமாக நடப்பாண்டில் மட்டும் கணிக்கப்பட்டதை விட 21% அதிகமாக ரூ.1 லட்சத்து 84,551 கோடியை கடனாக மு.க.ஸ்டாலின் அரசு வாங்கிக் குவித்திருக்கிறது.
ஒரு மாநில அரசு மூலதனச் செலவுகளுக்காக மட்டும் தான் கடன் வாங்க வேண்டும். அதன்படி பார்த்தால், 2025-26ஆம் ஆண்டில் மூலதனச் செலவாக ரூ.51,443 கோடியை மட்டுமே செலவழித்திருக்கிறது. இது 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த ரூ.57,231 கோடியை விட ரூ.6788 கோடி குறைவாகும். ரூ.51,443 கோடிக்கு மூலதனச் செலவுகளை செய்துள்ள திமுக அரசு, அந்த அளவுக்கு மட்டும் தான் கடன் வாங்கியிருக்க வேண்டும். ஆனால், அதை விட மூன்றரை மடங்கு அதிகமாக ரூ.1.84 லட்சம் கோடியை கடனாக வாங்கியுள்ளது. இதை விட மோசமான நிதி மேலாண்மை இருக்க முடியாது.
வாங்கிய கடனில் மூலதன செலவுகளை செய்தது போக மீதமுள்ள சுமார் ரூ.1.33 லட்சம் கோடியை திமுக அரசு என்ன செய்தது?
கடந்த காலங்களில் வாங்கிய கடன்களில் ரூ.55,844 கோடி கடன் நடப்பாண்டில் திருப்பி செலுத்தப்பட்டு உள்ளது. இந்தத் தொகையை நடப்பாண்டில் கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியிலிருந்து தான் திமுக அரசு செலுத்தியுள்ளது. புதிய கடனை வாங்கி, பழைய கடனை அடைக்கும் அற்புதமான நிதி நிர்வாகத்தைத் தான் திமுக செய்திருக்கிறது. கடனை அடைக்க செலுத்தப்பட்ட தொகையும் போக, கடனாக வாங்கிய ரூ.1.84 லட்சம் கோடியில் ரூ.77,223 கோடி மீதமிருக்க வேண்டும். ஆனால், அந்தத் தொகை எங்கு போனது என்பது தெரியவில்லை.
வருவாய்ப் பற்றாக்குறையை முற்றிலுமாக ஒழித்து, வருவாய் உபரியை ஏற்படுத்துவதாகக் கூறித்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அடுத்த ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை ஒழிக்கப்படும் என்று ஒவ்வொரு ஆண்டும் கூறி வந்தது. ஆனால், இன்று வரை திமுக அரசு வருவாய்ப் பற்றாக்குறையை ஒழிக்கவில்லை; மாறாக உயர்த்தி வைத்திருக்கிறது. 2025-26ஆம் ஆண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41,635 கோடியாக இருக்கும் என்று கடந்த நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. திமுக அரசுக்கு நிதி மேலாண்மைத் திறன் இருந்திருந்தால் இதை இயன்றவரை குறைத்திருக்க வேண்டும். ஆனால், இலக்கை விட 66%, அதாவது ரூ.27,584 கோடி அதிகமாக ரூ.69,219 கோடியாக வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்திருக்கிறது.
அரசு ஊழியர்கள் ஊதியம், சமூகநலத் திட்டங்கள் உள்ளிட்ட வருவாய்ச் செலவுகளைக் கூட திமுக அரசால் சமாளிக்க முடியவில்லை; அதைக் கூட கடன் வாங்கித் தான் அரசு செலவு செய்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. வருவாய்ப் பற்றாக்குறை குறைக்கப்பட்டிருந்தால் தமிழக அரசு தேவையின்றி கடன் வாங்கியிருக்க வேண்டியிருந்திருக்காது. மூலதன செலவுகளுக்காக மட்டும் கடன் வாங்கி, மொத்தக் கடன் சுமையை குறைத்திருக்க முடியும். ஆனால், அதற்கான திறனும், அறிவும் திமுக அரசுக்கு இல்லை.
வருவாயைப் பெருக்குவதும், அதற்குள் செலவு செய்வதும் தான் சிறந்த நிதி நிர்வாகம் ஆகும். ஆனால், இந்த இரண்டிலுமே திமுக அரசு படுதோல்வி அடைந்துள்ளது. 2025-26ஆம் ஆண்டில் ரூ.2.20 லட்சம் கோடி சொந்த வரி வருவாய் ரூ.2.06 லட்சம் கோடியாக குறைந்திருக்கிறது. இது இலக்கை விட ரூ.14,355 கோடி, அதாவது 6.50% குறைவு ஆகும். அதேபோல், வரி அல்லாத வருவாய் இலக்கை விட 7.82%, அதாவது ரூ.2554 கோடி குறைந்து விட்டது. மொத்த வருவாயும் ரூ.3.31 லட்சம் கோடி என்ற இலக்கில் இருந்து ரூ.21,871 கோடி (6.6%) குறைந்து ரூ.3.09 லட்சம் கோடியாக சுருங்கி விட்டது. அதே நேரத்தில் அரசின் வருவாய் செலவுகள் ரூ.5113 கோடி அதிகரித்து ரூ.3 லட்சத்து 78,917 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் கடன் வாங்கிக் குவித்ததைத் தவிர வேறு எந்த சாதனையும் செய்யப்படவில்லை. இந்திய விடுதலைக்குப் பிறகு, தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஏற்படுத்தப்பட்ட 1952-ஆம் ஆண்டிலிருந்து திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முந்தைய 2020-21ஆம் நிதியாண்டின் இறுதி வரையிலான 70 ஆண்டுகளில் தமிழகத்தின் நேரடிக் கடன் ரூ. 4.56 லட்சம் கோடி மட்டும் தான். ஆனால், அதன்பின் பொறுப்பேற்ற திமுக அரசு ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்துள்ள கடன் மட்டும் ரூ.4.96 லட்சம் கோடி ஆகும். 70 ஆண்டுகளில் வாங்கப்பட்ட கடனை விட 109% கடனை திமுக ஐந்தாண்டுகளில் வாங்கிக் குவித்திருக்கிறது. தமிழ்நாட்டிலிலுள்ள ஒவ்வொருவர் பெயரிலும் ரூ.1.27 லட்சமும், 4 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பெயரில் ரூ.5.08 லட்சமும் கடன் சுமையை மு.க.ஸ்டாலின் அரசு சுமத்தியிருக்கிறது.
தமிழ்நாட்டில் திமுக அரசு தொடர்ந்தால் ஒட்டுமொத்த தமிழ்நாடும் வங்கிகளிடம் அடகு வைக்கப்பட்டு விடும். தமிழ்நாடு திவாலாவதை தடுக்க வேண்டும் என்றால், திமுக அரசு உடனடியாக அகற்றப்பட வேண்டும். அதை அடுத்த சில வாரங்களில் நடைபெறவுள்ள தேர்தலில் தமிழக மக்கள் செய்து முடிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
- உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவிற்கு குறைந்துள்ளது.
தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவையில் தமிழக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. அரசின் பட்ஜெட்டால் தமிழக மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.
* வருமானம் ஈட்டாத கடனை வாங்கி செலவு செய்யும் அரசாக தி.மு.க. அரசு உள்ளது.
* தி.மு.க. அரசு தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
* பல்வேறு மக்களின் கோரிக்கைகளை கண்டுகொள்ளாமல் பட்ஜெட்டில் பொய் சொல்லுவேன் என நிதி அமைச்சர் அடம்பிடித்திருக்கிறார்.
* எது குறித்தும் அக்கறை இல்லாமல் வழக்கம்போல பட்ஜெட்டில் பொய்களை வாசித்துள்ளார் நிதி அமைச்சர்.
* 2027 மார்ச் 31-ல் தமிழகத்தின் மொத்த கடன்தொகை 10.62 லட்சம் கோடியாக இருக்கும் என்று பட்ஜெட்டில் உள்ளது.
* கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்க திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை நிதியமைச்சர் ஏன் சமர்ப்பிக்கவில்லை.
* உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் 2% அளவிற்கு குறைந்துள்ளது.
* கோவில்கள் புனரமைப்புக்காக ரூ.8,200 கோடி செலவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
* வெறும் ரூ.82 கோடி மட்டுமே கோவில்கள் புனரமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.
* கோவில்கள் புனரமைப்பு தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
* தி.மு.க. அரசின் தோழி திட்டம், கலைஞர் கனவு திட்டம் ஆகியவை மத்திய அரசின் திட்டங்கள்.
* தமிழ்நாட்டுக்கு மொத்தமாக பூஜ்ஜியத்தை மட்டுமே கொடுத்துள்ளது தி.மு.க. அரசின் பட்ஜெட்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்.20-ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார்.
- இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும்.
தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். இதையடுத்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட பிறகு அவையின் நிகழ்ச்சிகள் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம், சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்த வேண்டும்? என்னென்ன அலுவல்கள் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்? என்பது தொடர்பான ஆலோசனை நடைபெற்றது.
இந்நிலையில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிப்.20-ந்தேதி வரை நடைபெறும் சட்டப்பேரவை அமர்வில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்.
பட்ஜெட் மீதான விவாதத்தின் இறுதியாக பிப்.20-ந்தேதி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் உரையாற்றுவார்.
இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நாளையும், நாளை மறுநாளும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
- ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்" என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் அமைச்சர் தென்னரசு அவர்கள்!
ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!
ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!
நமது திராவிட மாடல் அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்… என்று கூறியுள்ளார்.
- நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர்.
- நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மேலும் கூடியது.
நெல்லை:
நெல்லை-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் பாளையங்கோட்டையில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றத்தின் வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிமன்றம், குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றம், மகளிா் சிறப்பு நீதிமன்றம், போக்சோ சிறப்பு நீதிமன்றம் என ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
இந்த நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் வருவதற்கு தனி நுழைவு வாயில் உள்ளது. இதை தவிர கோர்ட்டுக்கான மெயின் நுழைவாயில் மற்றும் வக்கீல்கள் செல்லும் நுழைவு வாயில் என மொத்தம் 3 வாயில்கள் உள்ளன. இந்த வாசல்களில் போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம்.
தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த நீதிமன்றத்திற்கு வந்து செல்வதால் எப்போதும் நீதிமன்ற வளாகம் பரபரப்பாகவே காணப்படும்.
இங்கு இன்று காலை வழக்கம்போல் நீதிமன்ற பணிகள் தொடங்கிய நிலையில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற அலுவலக மின்னஞ்சலுக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலின்பேரில், நெல்லை மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் உடனடியாக நீதிமன்றத்திற்கு விரைந்தனர். நீதிமன்ற வளாகம் முழுவதும் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனா்.
நீதிபதியின் ஓய்வு அறைகள், நிர்வாக கட்டிடங்கள், கழிப்பிடங்கள், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் என அனைத்து இடங்களிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக மெட்டல் டிடெக்டர் மூலமாக தீவிர சோதனை மேற்கொண்டனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு மேலும் கூடியது.
ஏற்கனவே கடந்த மாதம் 22-ந்தேதி இதே போல் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திலும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக இன்று காலை மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
மேலும் சரியாக 12.20 மணிக்கு வெடிகுண்டு வெடிக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து அங்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
- தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது.
- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார்.
திருச்சி:
தஞ்சை மாவட்டம் திருபுவனத்தில் நடைபெறும் நிதி அளிப்பு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைவருக்கும் பிரமிப்பூட்டும் வகையில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். இந்த இடைக்கால நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையிலும், பொருளாதாரத்தில் தமிழ்நாட்டை முதலிடத்திற்கு கொண்டு செல்லும் வகையிலும், இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்களை சுட்டிக்காட்டி அடுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளையும் அறிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தில் இருந்து அகற்ற தொடர் போராட்டம் நடத்தினேன். அதன் காரணமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. இந்த சூழலில் பசுமை தாமிரம் என்ற பெயரில் தொழிற்சாலை ஆரம்பிக்க வேதாந்தா நிறுவனம் முயற்சி மேற்கொள்கிறது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து எந்திரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தூத்துக்குடி மாநகர் மற்றும் சுற்றுவட்டார மக்களை கொண்டு மனுகொடுக்க செய்து எங்களுக்கு ஸ்டெர்லைட் வேண்டும் என்று சொல்ல வைத்திருக்கிறார். பொதுமக்கள் ஸ்டெர்லைட் நிறுவனம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
காங்கிரஸ், இந்தியா கூட்டணியில் நீடிக்குமா? நீடிக்காதா? என்ற கேள்வி தொடர்ந்து எழுப்பப்படுகிறது. காங்கிரக் கட்சியை சேர்ந்த ஓரிருவர் விமர்சனம் செய்து அறிக்கை கொடுத்து வருகிறார்கள். காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கும் என்றே நம்புகிறேன்.
தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும், தி.மு.க. தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெறும். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்தே இந்தப் போக்கு உள்ளது. இடைக்கால பட்ஜெட் பொதுமக்களுக்கு காதுகுத்து வேலை என எடப்பாடி விமர்சித்துள்ளர். இடைக்கால பட்ஜெட் காதிலே பொன் ஆபரணம் சூட்டுகிற வேலை.
தமிழகத்தின் கடன் சுமை ஒரு பொருட்டல்ல. இந்தியாவே கடனில் தான் உள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுத்துவார். மீண்டும் முதல்வர் ஆவார் என்றார்.
- எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?
- நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழக மக்களை ஏமாற்றி வந்த திமுக அரசு, தனது கடைசி பட்ஜெட் உரையிலும் பொதுமக்களை ஏமாற்றுவதை விடவில்லை.
தூய்மைப் பணியாளர்கள், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் கோரும் ஆசிரியப் பெருமக்கள், அரசு மருத்துவர்கள், லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசுப் பணிகளை விற்பனை செய்து வரும் திமுக அமைச்சர்களை எதிர்த்துப் போராடும் இளைஞர்கள் என கடந்த ஐந்து ஆண்டுகளில், எந்தத் தரப்பு மக்களின் கோரிக்கைகளையுமே கண்டுகொள்ளாமல், கடைசி பட்ஜெட்டில் கூட பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று அடம்பிடித்திருக்கிறார் தமிழக நிதியமைச்சர்.
கட்டிடங்கள் இல்லாமல் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நம் குழந்தைகள், அடிப்படை வசதிகள் கூட இல்லாத மாணவர் விடுதிகள், பள்ளி மாணவர்களிடையே பெருகி வரும் போதைப் பொருள் கலாச்சாரம் என எது குறித்தும் அக்கறை இல்லாமல், வழக்கம்போல பொய்களை வாசித்துச் சென்றிருக்கிறார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், திமுக வாங்கிக் குவித்த தமிழகத்தின் மொத்த கடன் தொகை, வரும் மார்ச் 31, 2027ல் 10,62,248 கோடியாக இருக்கும் என கூறியிருக்கிறார்கள். கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. புதிய திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை. எதற்காக திமுக இத்தனை லட்சம் கோடி கடன் வாங்கியது? எங்கே சென்றது இந்த நிதி மொத்தமும்?
திமுகவுக்கு வாக்களிக்காத கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களில், மெட்ரோ திட்டம் வரக்கூடாது என்று, வேண்டுமென்றே தவறான திட்ட அறிக்கையை வழங்கிவிட்டு, தற்போது மத்திய அரசு மீது குற்றம் சுமத்தும் தமிழக நிதியமைச்சர், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை ஏன் இன்னும் சமர்ப்பிக்கவில்லை? உண்மையாகவே மெட்ரோ திட்டம் வர வேண்டுமென்று அக்கறை திமுகவுக்கு இல்லை. அதனால்தான், நான்கு மாதங்கள் ஆகியும், திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், அவசர அவசரமாக பட்ஜெட் அறிக்கையை வாசித்ததைப் பார்த்தால், 'அப்பாடா, இதை விரைவில் முடித்து விட்டால், இனி எப்போதும் நமக்கு இந்த பட்ஜெட் அறிக்கை வாசிக்கும் தொல்லை இருக்காது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து பொழுது போக்கலாம்' என்ற நிம்மதிப் பெருமூச்சுதான் வெளிப்படுகிறது.
முதலமைச்சரின் தந்தை மறைந்த கருணாநிதி அவர்கள் காலத்தில் இருந்து, திமுக பட்ஜெட் என்றாலே தவறாமல் இடம்பெறும், கூவத்தைச் சுத்தம் செய்வோம், அடையாறை சுத்தம் செய்வோம் என்று கூறி ஆண்டுதோறும் நிதி ஒதுக்கீடு செய்யும் நகைச்சுவை, இந்த ஆண்டு இடம்பெறவில்லை என்பது, உண்மையாகவே வருத்தமளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடையாறைச் சுத்தம் செய்ய ஆண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ததாகக் கூறிய நிதி எங்கு போனது என்பதும் தெரியவில்லை.
- மக்கள் மீது வரிச்சுமை அதிகமானதை தவிர வேறு எந்த சாதனையும் இல்லை.
- நிதி பற்றாக்குறை அதிகரித்தால் மக்களின் தலையில் வரிச்சுமை கூடும்.
சென்னை :
தமிழக சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* 5 ஆண்டுகளாக தமிழக மக்களை வாட்டிவதைத்த ஏமாற்று மாடல் திமுக அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
* திமுக அரசு எந்த அளவிற்கு தமிழக மக்களுக்கு காது குத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவே பத்திரிகை வெளியிட்டோம்.
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிவிக்காமல் திமுக அரசு ஏமாற்றி உள்ளது.
* பல்வேறு துறைகளில் உள்ள அலுவலர்களுக்கு திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
* வாய்ஜாலம் நிறைந்த மேனாமினிக்கி உரை போல் தான் இடைக்கால பட்ஜெட் உரை உள்ளது.
* திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தமிழ்நாடு போராட்டக்களமாக மாறியுள்ளது.
* சுமார் ரூ.26,000 கோடி அளவுக்கு மாநில அரசின் வருவாய் குறைந்துள்ளது.
* மாநில சொந்தவரி வருவாய் குறைந்தது குறித்து சட்டசபையில் இன்று எந்த விளக்கத்தையும் நிதியமைச்சர் கூறவில்லை.
* நிதி நிர்வாக திறனற்ற திமுக அரசால் மக்கள் மீது மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது.
* நிதி பற்றாக்குறையை குறைக்க மக்கள் மீது வரி சுமையை ஏத்துவதும் கடன் வாங்குவதும் நல்லதல்ல.
* மக்கள் மீது வரிச்சுமை அதிகமானதை தவிர வேறு எந்த சாதனையும் இல்லை.
* நிதி பற்றாக்குறை அதிகரித்தால் மக்களின் தலையில் வரிச்சுமை கூடும்.
* அத்திப்பழம் வெளியே அழகாக இருக்கும், புட்டு பார்த்தால் சொத்தையாக இருக்கும் அதுதான் இன்றைய பட்ஜெட்.
* ஆண்டுக்கு 100 நாள் சட்டசபை நடக்கும் என்று கூறினார்கள் மொத்தமாகவே 140 நாள் தான் நடத்தினார்கள்.
* வேளாண்துறையில் நீர்வளத்துறையை சேர்த்தது ஏன்? வேளாண் பட்ஜெட் ஒரு ஏமாற்று பட்ஜெட்.
* கறிக்கோழி வளர்க்கும் விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை என்றார்.
- புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.
- பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* ரூ.495 கோடியில் 3.30 லட்சம் மெட்ரிக் கடன் கொள்ளளவு கொண்ட 130 நவீன சேமிப்பு தளங்கள்.
* ரூ.331 கோடியில் 4 லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
* 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்பட உள்ளன.
* பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் 101 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம். பனையில் குட்டை ரகத்தை உருவாக்க ஆராய்ச்சி நடைபெறுகிறது.
* விவசாயிகளுக்காக 24 சேவைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட உழவர் செயலியை இதுவரை 20 லட்சம் விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
* வெள்ளக்காலங்களில் நெல்மணிகள் வீணாவதை தடுக்க ரூ.495 கோடியில் 130 நவீன சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளது.
* புதிதாக 31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் கட்டப்படும்.
* பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலை கிடைக்க லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* பால் உற்பத்தியாளர்களுக்கான ஊக்கத்தொகைக்காக 730 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 5 ஆண்டுகளில் அரசு மீன் பண்ணைகள் மூலம் 48 கோடி மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* அலைகள் திட்டம் மூலம் 15 ஆயிரம் விவசாயிகளுக்கு நுண் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.
* விபத்தில் உயிரிழக்கும் நிலமற்ற வேளாண் தொழிலாளருக்கான மரண இழப்பீடு ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் ஆடு, பன்றி, கோழி வளர்ப்பு பண்ணை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
* தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
- கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கடந்த 5 ஆண்டுகளில் இயற்கை பேரிடருக்காக ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 25.36 லட்சம் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள்.
* 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
* புதிதாக 2 லட்சம் விவசாயிகளின் நிலங்களுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
* 150 ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மின்னணு சந்தையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
* நுண்ணீர் பாசனத்திட்டத்தை பயன்படுத்தும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
* 5 ஆண்டுகளில் குளிர் பதனிடும் கிடங்குகளுக்காக 27 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
* 5 ஆண்டு காலத்தில் 5.70 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.1,894 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
* இ-வாடகை செயலி மூலம் 3,816 வேளாண் இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டது.
* கடந்த 5 ஆண்டுகளில் 15 புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன.
* உழவர் சந்தைக்கு கொண்டுவரப்படும் காய்கறிகளின் அளவு தினமும் அதிகரித்து வருகிறது.
* உழவர் சந்தைகளில் சுமார் 4 லட்சம் மக்கள் தினந்தோறும் வருகை தருகின்றனர்.
* புவிசார் குறியீட்டுக்காக 41 விலைப்பொருட்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.
* ஒன்பது பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
* கிருஷ்ணகிரியில் புதிதாக தோட்டக்கலை கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
* நாகை, சிவகங்கை, கரூரில் புதிதாக அரசு வேளாண் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது.
* 30 ஆயிரம் நபர்களுக்கு தேனீ வளர்ப்பு மதிப்பு கூட்டு இயந்திரங்களை இயக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
* 150 விவசாயிகள் அயல் நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
* இயற்கை எழில் கொஞ்சும் பூங்காக்களை உருவாக்க தனியாரிடமிருந்து 176 ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டுள்ளது.
* பயிர்க்கடன் உள்ளிட்ட வேளாண் சார்ந்த நடவடிக்கைகளுக்காக வட்டி மானியம் ரூ.3002 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1320 வேளாண் இயந்திர வாடகை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
- ஐந்தாண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சட்டசபையில் தமிழ்நாடு அரசின் 2026-2027-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த நிலையில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு அரசின் வேளாண் காடுகள் கொள்கை விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
* 496 பட்டதாரி இளைஞர்களுக்கு வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* 4150 சூரிய சக்தி பம்பு செட்கள் வாங்க 83 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* 1320 வேளாண் இயந்திர வாடகை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
* 10 லட்சத்தில் இருந்து 12 லட்சமாக மக்காச்சோள சாகுபடி பரப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* மிளகாய், ஏலக்காய், சாதிக்காய் சாகுபடி 22,950 ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
* 8400 ஏக்கரில் முந்திரி உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு ரூ.12 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* தக்காளி, வெண்டை, கத்திரிக்காய் சாகுபடி பரப்பளவை 1 லட்சம் ஏக்கரில் விரிவாக்கம் செய்ய 1.68 லட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* 5 ஆயிரம் புதிய பம்பு செட்கள் 7 கோடி ரூபாயில் வழங்கப்பட்டுள்ளன.
* 2021-22ம் ஆண்டு முதல் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
* ஐந்தாண்டுகளில் 68 லட்சம் பனை விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
* கடந்த 5 ஆண்டுகளில் 80 கோடி மதிப்பிலான பனைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
* 650 மகளிர்க்கு பனை ஓலை தயாரிக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
* பனை ஓலை பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியின் மூலம் 1.45 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
* 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
* 2025-26ம் ஆண்டில் குறுவை பருவத்தில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
* சூரிய சக்தி பம்பு செட்டு போன்ற உயர்மதிப்பு திட்டம்- ஆதி திராவிடர் பழங்குடியினர் பிரிவு சிறு, குறு விவசாயிகளுக்கு 70 சதவீத மானியம் வழங்கப்பட்டுள்ளது.
* ரூ.1600 கோடி மதிப்பில் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






