என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது.
- கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே நெடுங்குளத்தை சேர்ந்தவர் ஈசுவரன் (வயது 32). இவருடைய மனைவி ராமு (28). இவரது வங்கிக்கணக்கில் தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை ரூ.3 ஆயிரம். கோடை கால சிறப்பு நிதி ரூ.2 ஆயிரம் என மொத்தம் ரூ.5 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.
இந்த பணத்தை மனைவி ராமுக்கு தெரியாமல் ஏ.டி.எம். மூலம் எடுத்து ஈசுவரன் செலவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த ராமு கணவருடன் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் கோபித்துக்கொண்டு ராமு தனது தாய் வீட்டுக்கு சென்றார்.
இதனால் மனவேதனை அடைந்த ஈசுவரன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கூமாப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- தேர்தல் கமிஷனர்கள் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டனர்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழக சட்டசபையின் பதவிக்காலம் 10-5-2026 அன்று நிறைவடைகிறது. புதுச்சேரி சட்டசபை 15-6-2026-ல் முடிவடைகிறது. இதுபோல மேற்கு வங்காள சட்டசபை 7-5-2026-லும், அசாம் சட்டசபை 20-5-2026-லும், கேரள சட்டசபை 23-5-2026-லும் நிறைவடைகிறது. இதனால் இந்த மாநிலங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த தேர்தல்களுக்கான அட்டவணை மார்ச் மாத மத்தியில் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்தலை முன்னிட்டு. தேர்தல் கமிஷனர்கள் மேற்கண்ட 5 மாநிலங்களிலும் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி விட்டனர். தேர்தல் தயார்நிலையை மதிப்பிடுவதற்காக தேர்தல் அதிகாரிகள் அசாமில் முகாமிட்டனர்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இறுதி வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த 2021-ம் ஆண்டு இந்த 5 மாநிலங்களுக்கும் பிப்ரவரி மாதம் 26-ந் தேதி தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில்தான் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பள்ளி இறுதித் தேர்வுகளை கருத்தில்கொண்டு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் வைத்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
தேர்தலைப் பொறுத்தவரை கடந்த முறை மேற்கு வங்காளத்தில் 8 கட்ட தேர்தல் நடைபெற்றது. அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது.
- மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசுவதற்கு செல்வப்பெருந்தகை கண்டம் தெரிவித்து இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மாநிலத் தலைவர்கள் உட்பட யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது. கூட்டணி குறித்து பொதுவெளியில் பேசக் கூடாது. கூட்டணி குறித்து தேசிய தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது என தெரிவித்து இருந்தார்.
மாணிக்கம் தாகூர் பொதுவெளியில் கூட்டணி குறித்து பேசுவதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம்தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
காலை வணக்கம்.
தேடிச்சோறு நிதம் தின்று பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பம் மிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப்போல நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாகவும் இருக்கிறோம்
- யாருக்கும் பொதுவெளியில் பேசுவதற்கு உரிமை கிடையாது.
தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு" என்ற விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தை மோதலாகவும் நீடித்து வருகிறது. குறிப்பாக காங்கிரஸ் எம்.பி.மாணிக்கம் தாகூர் இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வருவது காங்கிரஸ்-திமுக இடையே மட்டுமல்லாமல் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளிடையேயும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மாணிக்கம் தாகூர் தொடர்பாக தலைமையிடம் பேசு முடிவெடுக்கப்படும் என மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்தார். இச்சூழலில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் இன்று சென்னை மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
நிகழ்ச்சிகளை தொடர்ந்து முகப்பேரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்த சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அவர்,
"காங்கிரசும் திமுகவும் நீண்டகால கூட்டாளிகள். பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் திமுக-காங்கிரஸ் ஒன்றாக உள்ளது. பொதுவான பிரச்சினைகளில் கூட்டணி வைத்து, பாசிச சக்திகளை எதிர்த்துப் போராட... வகுப்புவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் பாரம்பரியம் எங்களுக்கு உண்டு. நாங்கள் ஒன்றாக இருந்தோம், ஒன்றாகவும் இருக்கிறோம். நிச்சயமாக, சட்டமன்றத் தேர்தல்கள் வருகின்றன... நாங்கள் செயல்பாட்டில் இருக்கிறோம், எங்கள் மக்களுக்கும் அரசியல் லட்சியம் உள்ளது காங்கிரஸில் இருந்து வெவ்வேறு குரல்கள் எழுந்தாலும் நாங்கள் ஒன்றாகத்தான் இருக்கிறோம். தெளிவான கூட்டணி விவாதம் இருக்க வேண்டும். விவாதத்திற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அது எப்போது தொடங்கும் என்பதை திமுக எங்களுக்குத் தெரிவிக்கும் என்று நினைக்கிறேன்". என தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,
"காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள 'வெவ்வேறு குரல்களைப்' பொறுத்தவரை, நான் திட்டவட்டமாகச் சொல்ல விரும்புகிறேன். கூட்டணி குறித்து வெளிவரும் கருத்துகள், அவரவர்களின் தனிப்பட்ட கருத்து. அது கட்சியின் கருத்து அல்ல. இறுதி முடிவு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியால் எடுக்கப்படும். தமிழ்நாடு கூட்டணி குறித்து உயர்மட்டக் குழுவால் இறுதி முடிவு எடுக்கப்படும். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் உள்ளோம். கலந்தாலோசிக்க காத்திருக்கிறோம். யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் பேசுவதற்கு உரிமை கிடையாது. இப்போது தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். மாநிலத் தலைவர்கள் உட்பட யாருக்கும் கூட்டணி கட்சிகள் குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவிக்க உரிமை கிடையாது." என தெரிவித்தார்.
- எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது
- எடப்பாடி பழனிசாமி ரசிகர்களுடன் இதயக்கனி படம் பார்த்தார்.
சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.
ஆல்பர்ட் தியேட்டரில் MGR-ன் இதயக்கனி படத்தின் 225வது நாள் வெற்றி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் படத்தை பார்த்தனர்.
படம் பார்த்த பின்பு பேசிய எடப்பாடி பழனிசாமி, "எம்.ஜி.ஆர். பெயரை சொல்பவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது" என்று தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர். குறித்து தவெக தலைவர் விஜய் அண்மையில் அடிக்கடி பேசிவரும் நிலையில், இதயக்கனி பட வெற்றி விழாவில் விஜயை மறைமுகமாக தாக்கி எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
- எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.
- எடப்பாடி பழனிசாமி ரசிகர்களுடன் இதயக்கனி படம் பார்த்தார்.
சென்னையில் உள்ள ஆல்பர்ட் தியேட்டரில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் இதயக்கனி படம் வெற்றிகரமாக 225வது நாளை எட்டியுள்ளது.
ஆல்பர்ட் தியேட்டரில் MGR-ன் இதயக்கனி படத்தின் 225வது நாள் வெற்றி விழாவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ரசிகர்களுடன் படம் பார்த்தார்.
அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜு, வேலுமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியுடன் படத்தை பார்த்தனர்.
- காளியிடம் முறத்தால் அடி வாங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும்
- திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அரும்பாவூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு மயானக்கொள்ளை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக காளி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், காளி வேடம் அணிந்தவர்கள் பக்தர்களை முறத்தால் அடித்தனர். காளியிடம் முறத்தால் அடி வாங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் மண்டியிட்டு காளியிடம் முறத்தால் அடி வாங்கினர்.
அதனைத்தொடர்ந்து அங்காயி வேடம் அணிந்தவர் ஆட்டுக் குடலை மாலையாக அணிந்து ஊர்வலமாக வந்தார். பின்னர், அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் ஆடு, கோழி பலியிடப்பட்டு அதன் ரத்தத்தில் சாதத்தை கலந்து வானத்தில் வீசி மயான சூறை நிகழ்ச்சி நடந்தது.

அப்போது குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மடியேந்தி சாதத்தை வாங்கி அதனை சாப்பிட்டனர். திருவிழாவில் அரும்பாவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர்.
- தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் மாமியார்
- இவரது மகன் புதுச்சேரியில் புதிய கட்சி தொடங்கியுள்ளார்.
சமீபத்தில் இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவியும், தவெகவின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவின் மாமியாருமான லீமா ரோஸ் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக ஐ.ஜே.கேவில் இருந்த இவர், தனது உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும், சில கசப்பான அனுபவங்கள் காரணமாகவும் விலகுவதாக தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. அவரை கட்சிக்குள் இழுக்க முயற்சித்து வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார் லீமா ரோஸ்.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடானை அல்லது கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த டிசம்பரில் இவரது மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரிசயில் "லட்சிய ஜனநாயக கட்சி" என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினார்.
முன்னதாக கடந்த மாதம் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த போது, அவர் அதிமுகவில் இணைந்துவிட்டதாகப் பரவிய செய்திகளை லீமா ரோஸ் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார்.
- அதிமுக, பாஜக தரப்பில் இருந்து அழைப்புகள் வந்தநிலையில் திமுகவில் சேர விருப்பம் காட்டியுள்ளார் மன்னன்.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டிவருகின்றனர். ஒருபக்கம் கூட்டணி பேச்சுவார்த்தைகள், தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடக்க, மறுபக்கம் அந்தந்த கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள் வேறுகட்சிகளுக்கு தாவி வருகின்றனர்.
அந்த வகையில் மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளரான மன்னன் இன்று திமுகவில் இணைந்துள்ளார். கட்சியில் இருந்த காலக்கட்டத்தில் மதுரை திமுக என்றாலே அழகிரியின் கோட்டை எனக்கூறிவந்தார்கள். ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதிலிருந்து அந்த சாம்ராஜ்யம் சரிந்தது. ஆனால் அப்போதிலிருந்து அவரின் வலது கரமாக இருந்தவர் தான் பி.எம்.மன்னன்.
கட்சிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் 2014 ஆம் ஆண்டு மு.க.அழகிரியை முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார். அப்போதும் அவருடன் இருந்தவர் மன்னன். இந்நிலையில் கடந்தவாரம் முதல் இவர் அதிமுகவில் இணைவதாக தகவல்கள் வெளியாகின. அதனைத்தொடர்ந்து இன்று பி.எம்.மன்னன் அவரது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
நீண்ட நாட்களாக அதிமுக, பாஜக தரப்பில் இருந்து அழைப்புகள் வந்தநிலையில் திமுகவில் சேர விருப்பம் காட்டியுள்ளார் மன்னன். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இடமும் தெரிவித்துள்ளார். ஆனால் திமுகவில் தரப்பில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காத நிலையில் அதிமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.
- வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது.
வால்பாறை:
கோவை மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்று வால்பாறை.
இங்குள்ள தேயிலை தோட்டங்கள், இங்கு நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் அதிகளிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.
அரசு விடுமுறை தினங்கள், வாரவிடுமுறை நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். அவ்வாறு வருபவர்கள் தேயிலை தோட்டங்களை கண்டு ரசித்தும், வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு உள்ளிட்டவற்றையும் பார்த்து செல்கின்றனர்.
வால்பாறையில் கடந்த மாதங்களில் இதமான காலநிலை நிலவியதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியிருக்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கூழாங்கல் ஆறு, வெள்ளமலை ஆறு, சின்னக்கல்லாறு, இறைச்சிப்பாறை அருவி, அணைகளிலும் நீர்வரத்து குறைந்து வருகிறது.
இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவினாலும், பகல் நேரங்களில் வெயில் தனது உக்கிரத்தை காட்டுகிறது. இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. விடுமுறை தினங்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை குறைந்த அளவே இருந்ததை பார்க்க முடிந்தது.
- இதுவரையில் 10 11-வது பிளாட்பாரத்தில் 324 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
- மின்சார ரெயில் பிளாட்பாரம் மாற்றத்தால் ராமேஸ்வரம் சேது ரெயில் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னை:
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன.
தற்போது மின்சார ரெயில்கள் இயக்கப்படும் 10 மற்றும் 11-வது பிளாட்பாரங்களில் பணிகள் தொடங்கப்பட இருப்பதால் புறநகர் ரெயில் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
இது குறித்து சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக வழக்கம் போல் பத்து மற்றும் 11-வது நடைமேடைகளில் கையாளப்படும் மின்சார ரெயில்கள் வருகிற 20-ந்தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் மாதம் 5-ந்தேதி நள்ளிரவு வரை 45 நாட்களுக்கு 5 மற்றும் 6- வது நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளன.
சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு-காஞ்சிபுரம்- அரக்கோணம் மார்க்கத்தில் அனைத்து மின்சார ரெயில்களும் 6-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.
அரக்கோணம்-காஞ்சிபுரம்-செங்கல்பட்டு-தாம்பரம்-கடற்கரை மறுமார்க்கத்தில் வரும் அனைத்து மின்சார ரெயில்களும் இதே காலகட்டத்தில் எழும்பூரில் 5-வது நடைமேடையில் இருந்து இயக்கப்படும்.
மின்சார ரெயில்கள் விரைவுப் பாதையில் இருந்து இயக்கப்பட உள்ளன. ரெயில் எண்கள் மற்றும் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது உள்ள மின்சார சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, புதிய மின்சார வண்டி எண்களுடன் திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்படும். இந்த 45 நாட்களில் கடற்கரை- தாம்பரம்- செங்கல்பட்டு மார்க்கத்தில் தனி ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணை கிடையாது. புதிய எண்கள் மற்றும் கால அட்டவணையுடன் 164 மின்சார ரயில்கள் இயக்கப்படும். 84 ரெயில்கள் சென்னை கடற்கரையில் இருந்தும் 80 ரெயில்கள் செங்கல்பட்டு- தாம்பரத்தில் இருந்தும் இரு மார்க்கமும் இயக்கப்பட உள்ளது.
இதுவரையில் 10 11-வது பிளாட்பாரத்தில் 324 மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதில் 160 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரெயில் பிளாட்பாரம் மாற்றத்தால் ராமேஸ்வரம் சேது ரெயில் மட்டும் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.
வேளச்சேரி- பரங்கிமலை பறக்கும் ரெயில் சேவைக்கான பாதுகாப்பு சோதனை மார்ச் மாதம் நடைபெற்று இறுதியில் தொடங்கும். இதே போல கிளாம்பாக்கம் ரெயில் பணியும் நிறைவு பெற்றுள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மார்ச் மாதம் திறக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






