என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்திய நிலையில், போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக வாரியத்திடம் கோப்பையை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி ஒப்படைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- முதல் 2 இடங்களில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணி உள்ளது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி டிம் ராபின்சன் (106) சதத்தால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மிட்செல் மார்ஷின் (85 ரன்கள் ) அதிரடியால் 16.3 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 180-க்கு கூடுதலான ரன்களை அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனை பட்டியில் ஆஸ்திரேலியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.
முதல் 2 இடங்களை பாகிஸ்தான், ஆஸ்திரேலியா அணி உள்ளது. பாகிஸ்தான் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்த சாதனையை படைத்துள்ளது.
வெற்றிகரமான 180+ டி20 சேசிங்கில் மீதமுள்ள அதிக பந்துகள்:-
24 - PAK vs NZ, ஆக்லாந்து, 2025 (இலக்கு: 205)
23 - AUS vs WI, வெஸ்ட் இண்டீஸ் 2025 (இலக்கு: 215)
21 - AUS vs NZ, மவுண்ட் மௌங்கானுய், 2025 (இலக்கு: 182)
20 - SL vs BAN, மிர்பூர் 2018 (இலக்கு: 194)
19 - PAK vs IRE, டப்ளின், 2024 (இலக்கு: 194)
19 - EN vs WI, பிரிட்ஜ்டவுன், 2024 (இலக்கு: 183)
- மிட்செல் மார்ஷ், 23 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
- ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி டிம் ராபின்சன் (106) சதத்தால் 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட்- மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதில் டிராவிஸ் ஹெட் 18 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் பவர்பிளேயில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 68 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மிட்செல் மார்ஷ், 23 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
அடுத்து வந்த ஷாட்ஸ் 29 ரன்னிலும் அலெக்ஸ் ஹேரி 7 ரன்னிலும் வெளியேறினார். அதிரடியாக விளையாடிய மார்ஷ் 43 பந்தில் 85 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
இறுதியில் ஆஸ்திரேலிய அணி 16.3 ஓவரில் 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 3-ந் தேதி நடைபெறும்.
- ஆசிய கோப்பை தொடரில் அபிஷேக் சர்மா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
- ஆசிய தொடரில் 314 ரன்கள் குவித்து அசத்தினார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடரின் நாயகனாக இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரரான அபிஷேக் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
ஆசிய தொடரில் அபிஷேக் சர்மா 45 சராசரியுடன் 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 314 ரன்கள் விளாசினார். இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முதலிடத்தை அவர் தக்கவைத்து கொண்டார்.
சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிராக 61 ரன்கள் எடுத்த போது அவர் 931 புள்ளிகளை பெற்றார். அதன்பிறகு நடந்த இறுதிப்போட்டியில் 5 ரன்களில் ஆட்டமிழந்ததால் அவர் 926 புள்ளிகளை பெற்றார். இருப்பினும் அவர் முதல் இடத்தில்தான் தொடர்கிறார்.
இதன்மூலம் டி20 தரவரிசையில் அதிக மதிப்பீடு புள்ளிகளை (931) பெற்ற முதல் வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்துள்ளார். இதற்கு முன்பு இங்கிலாந்து அணி வீரர் டேவிட் மலான் 919 புள்ளிகளை பெற்றதே சாதனையாக இருந்த நிலையில் அபிஷேக் சர்மா அதனை முறியடித்துள்ளார்.
- நியூசிலாந்து தரப்பில் ராபின்சன் 106 ரன்கள் குவித்தார்.
- ஆஸ்திரேலியா தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டிம் சீஃபர்ட்- டேவான் கான்வே களமிறங்கினார்கள். இதில் டிம் சீஃபர்ட் 4 ரன்னிலும் கான்வே 1 ரன்னிலும் அடுத்து வந்த சாப்மேன் 0 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து அணி 6 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனையடுத்து டிம் ராபின்சன்- டேரில் மிட்செல் ஆகியோர் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் மிட்செல் 23 பந்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஜேக்கப் மந்தமாக விளையாடினார். அவர் 21 பந்தில் 20 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு முனையில் தனி ஆளாக போராடிய டிம் ராபின்சன் சதம் விளாசி அசத்தினார். அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 106 ரன்கள் குவித்தார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா தரப்பில் பென் த்வார்ஷுயிஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 269 ரன்கள் எடுத்தது.
- இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் நேற்று மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 211 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
மகளிர் கிரிக்கெட் போட்டியில் அதிக ரசிகர்கள் வருகை தந்தது சாதனை படைத்துள்ளது. அதன்படி இந்த போட்டியில் 22,843 பேர் வருகை தந்துள்ளனர்.
இதற்கு முன்பு 2024-ம் ஆண்டு இந்தியா மகளிர்- பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதிய போட்டியில் 15,935 பேர் கலந்து கொண்டதே சாதனையாக இருந்தது.
- முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- வைபவ் சூர்யவன்ஷி 78 பந்தில் சதம் அடித்து அசத்தினார்.
19 வயதுகுட்பட்டோருக்கான இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 போட்டிகளையும் வென்று அசத்தியது.
இதனையடுத்து ஆஸ்திரேலியா அண்டர்-19 அணிக்கும் இந்தியா அண்டர்-19 அணிக்கும் இடையிலான முதல் யூத் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள இயான் ஹீலி ஓவலில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 243 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து இந்திய அணி களமிறங்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர் வைபவ் சூர்யவன்ஷி ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் சத்தத்தை பதிவு செய்துள்ளார்.
அவர் 78 பந்தில் சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 86 பந்தில் 113 ரன்கள் விளாசி அவுட் ஆனார். இதில் 9 பவுண்டரிகளும் 8 சிக்சர்களும் அடங்கும்.
அவரது அதிரடியான ஆட்டம் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவர் இந்திய அணிக்கான தேர்வில் சீக்கிராமாக இடம் பிடிப்பார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
- திலக் வர்மாவுக்கு ஒரு பேட்டை முதலமைச்சர் பரிசாக வழங்கினார்.
- வெகுமதியாக ரூ.10 லட்சமும் திலக் வர்மாவுக்கு வழங்கப்பட்டது.
ஆசிய கோப்பை தொடர் சில நாட்களுக்கு முன்னர் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் இந்திய தடுமாறிய நிலையில் ஒற்றை ஆளாக அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் கலக்கிய ஐதராபாத்தை சேர்ந்த திலக் வர்மாவுக்கு அம்மாநில முதலமைச்சர் ரெவந்த் ரெட்டி நேரில் அழைத்து பாராட்டினார். அதனை தொடர்ந்து அவருக்கு ஒரு பேட்டை பரிசாகவும் வழங்கினார். வெகுமதியாக ரூ.10 லட்சமும் வழங்கினார்.
- 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.
- மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாகூர்:
வெளிநாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு வழங்கிய தடையில்லா சான்றிதழை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ரத்து செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தோற்றதை தொடர்ந்து, உள்ளூர் போட்டியில் வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மறுஉத்தரவு வரும்வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷகீன் ஷா அப்ரிடி உள்பட 7 பாகிஸ்தான் வீரர்கள் டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் தொடங்கும் பிக் பாஷ் போட்டியில் விளையாட இருந்தனர்.
அத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று நடைபெறும் சர்வதேச லீக் 20 ஓவர் போட்டிக்கான ஏலத்தில் 16 பாகிஸ்தான் வீரர்களின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போதைய உத்தரவால் அதில் அவர்கள் விளையாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
- ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் 18-வது சீசனில் ஆர்சிபி அணி கோப்பையை முதல் முறையாக வென்று சாதனை படைத்தது.
இதனை பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் சிறப்பாக கொண்டாட அணி நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்படி சின்னசாமி மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, சின்னசாமி மைதானம் பெரிய நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சின்னசாமி மைதானம் மூடப்பட்டது. இதனால் ஆர்சிபி அணி அடுத்த ஐபிஎல் போட்டிகளில் மூன்று வெவ்வேறு மைதானங்களில் விளையாட உள்ளது.
இந்நிலையில் பிரிட்டனின் Diageo குழுமத்திற்கு சொந்தமான ஆர்சிபி அணியை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அணியின் மதிப்பு சுமார் $2பில்லியனாக |(ரூ.17,762 கோடி) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், Serum நிறுவன CEO அதார் பூனாவாலா அணியை வாங்க பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆர்சிபி அணியின் முதல் தலைவராக மல்லையா இருந்தார். அதனை தொடர்ந்து Diageo குழுமம் இந்த அணியை வாங்கியது. கூட்ட நெரிசல் சம்பவத்தையடுத்து அந்த குழுமம் அணியை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் பிரபலமான அணியாக திகழும் ஆர்சிபி அணியை வாங்க இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும் போட்டி போட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- இவ்விரு அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 100 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன.
- 23-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 47 போட்டி ‘டிரா ’ ஆனது.
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
ஆசிய கோப்பை முடிந்த அடுத்த 4 நாட்களில் இந்திய வீரர்கள் இந்த தொடரில் களம் காணுகிறார்கள். இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இந்த தொடர் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கடந்த ஜூன், ஜூலையில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில் 4 சதம் உள்பட 754 ரன்கள் குவித்து வியப்பூட்டினார். ரவீந்திர ஜடேஜா, லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜிம் அந்த தொடரில் கலக்கினர். தற்போது உள்ளூர் சூழலில் ஆடுவதால் இந்தியாவின் கை இன்னும் வலுவாக ஓங்கி நிற்கும். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாமல் 2011-ம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டில் இந்தியா விளையாடப்போகும் முதல் டெஸ்ட் இதுவாகும். அதனால் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் உள்ளிட்ட சுழல் ஜாலங்கள் மீது கவனம் திரும்பி இருக்கிறது. ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் முழுமையாக ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு முதலாவது டெஸ்டில் ஓய்வு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி 9 டெஸ்ட் தொடரை வரிசையாக கைப்பற்றி இருக்கும் இந்திய அணி, அந்த ஆதிக்கத்தை நிலைநாட்டும் முனைப்புடன் காத்திருக்கிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இரு மாதங்களுக்கு முன்பு சொந்த மண்ணில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் உதை வாங்கியது. இதில் ஒரு இன்னிங்சில் வெறும் 27 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றது.
இந்தியாவுக்கு எதிராக டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி கண்டு 23 ஆண்டுகள் ஆகி விட்டது. கடைசியாக 2002-ம் ஆண்டு கிங்ஸ்டனில் நடந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருந்தது. இதே போல் இந்திய மண்ணில் எடுத்துக் கொண்டால், அந்த அணி டெஸ்டில் வென்று 31 ஆண்டுகள் ஆகிவிட்டது. இங்கு தொடரை கைப்பற்றி 42 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இப்படி எல்லாமே வெஸ்ட் இண்டீசுக்கு எதிர்மறையான சாதனைகள் தெரிந்தாலும் கடந்த ஆண்டு நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு வந்து டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி வரலாறு படைத்ததை உத்வேகமாக எடுத்துக் கொண்டு சாதிக்க முயற்சிப்போம் என வெஸ்ட் இண்டீசின் பயிற்சியாளர் டேரன் சேமி கூறியுள்ளார். ஆடுகளம் சுழலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால், அந்த அணி ஜோமல் வாரிகன், கேரி பியார் ஆகியோரை தான் மலைபோல் நம்பி உள்ளது. பேட்டிங்கில் தேஜ்நரின் சந்தர்பால், பிரன்டன் கிங், ஷாய் ஹோப், அலிக் அதானேஸ் உள்ளிட்டோர் கணிசமாக ரன் எடுத்தால் சவால் அளிக்கலாம்.
இவ்விரு அணிகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 100 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 23-ல் இந்தியாவும், 30-ல் வெஸ்ட் இண்டீசும் வெற்றி பெற்றன. 47 போட்டி 'டிரா ' ஆனது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 46.67 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ள இந்தியா தற்போதைய தொடரை முழுமையாக வென்று புள்ளி எண்ணிக்கையை உயர்த்தும் நோக்குடன் தயாராகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், சுப்மன் கில் (கேப்டன்), சாய் சுதர்சன் அல்லது தேவ்தத் படிக்கல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்ஷர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ், நிதிஷ்குமார் ரெட்டி, முகமது சிராஜ், பும்ரா அல்லது பிரசித் கிருஷ்ணா.
வெஸ்ட் இண்டீஸ்: தேஜ்நரின் சந்தர்பால், ஜான் கேம்ப்பெல் அல்லது கெவ்லோன் ஆண்டர்சன், அலிக் அதானேஸ், பிரன்டன் கிங், ஷாய் ஹோப், ரோஸ்டன் சேஸ் (கேப்டன்), ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜெய்டன் சீல்ஸ், ஜோமல் வாரிகன், கேரி பியார், ஜோகன் லெய்ன் அல்லது ஆண்டர்சன் பிலிப்ஸ்.
காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் அவுட்டானார்.
- இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில், மகளிர் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் கவுகாத்தியில் நேற்று மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய மகளிர் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 ரன்னில் அவுட்டானார்.
2வது விக்கெட்டுக்கு பிரதிகா ராவல், ஹர்லின் தியோல் ஜோடி 67 ரன்கள் சேர்த்த நிலையில் பிரதிகா ராவல் 37 ரன்னில் வெளியேறினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஹர்லின் தியோல் 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின், பெய்த மழை காரணமாக போட்டி 47 ஓவராக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 124 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
7வது விக்கெட்டுக்கு இணைந்த தீப்தி ஷர்மா, அமன்ஜோத் கவுர் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். 83 ரன்கள் சேர்த்த நிலையில் அமன்ஜோத் கவுர் 57 ரன்னில் வெளியேறினார். தீப்தி சர்மா 53 ரன்னில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ஸ்ரே ரானா அதிரடியாக ஆடி 15 பந்தில் 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் குவித்தார்.
இறுதியில், இந்திய மகளிர் அணி 47 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 269 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி சார்பில் இனோகா ரணவீரா 4 விக்கெட்டும், பிரபோதினி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து 270 என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால் இந்தியப் பந்துவீச்சாளர்கள் அபாரமாகச் செயல்பட்டதால் இலங்கை அணி திணறியது.
தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும், ஸ்னே ராணா மற்றும் சரணி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இலங்கை அணியை 211 ரன்களுக்கு சுருட்டினர். இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.






