என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- நியூசிலாந்து- ஆஸ்திரேலியாஅணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது
- இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
நியூசிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. 3-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.
இரு அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேஎல் ராகுல் சதம் விளாசினார்.
- டெஸ்ட்டில் கேஎல் ராகுலின் 11-வது சதம் இதுவாகும்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இந்த வரிசையில், கே.எல். ராகுல் 197 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். இது அவரின் 11-வது டெஸ்ட் சதமாகும்.
சதம் விளாசிய கேஎல் ராகுல் சதத்தை தனது மகளுக்கு அர்பணிக்கும் விதமாக வித்தியாசமான முறையில் கொண்டாடினார். இரண்டு விரலை வாயில் வைத்து கொண்டு கை காட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது
- ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியா வில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.
டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவின் அபார பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
வெஸ்ட் இண்டீஸ் 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன் எடுத்தார்.
இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 36 ரன்னில் அவுட் ஆனார். சாய் சுதர்சன் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க வீரர் கே.எல்.ராகுல் அரை சதம் அடித்தார். நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 38 ஓவரில் 2 விக்கெட் இழப் புக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 53 ரன்னுடனும், சுப்மன் கில் 18 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று காலை 121/2 என்ற நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தைத் தொடங்கியது இந்தியா. இருவரும் தொடர்ந்து விளையாடினார்கள். இன்றைய ஆட்டத்தின் முதல் ஓவரை ஜெய்டன் சீல்ஸ் வீசினார். இதை எதிர்கொண்ட கே.எல்.ராகுல் 2 பவுண்டரிகளை அடித்தார்.
தொடர்ந்து கே.எல்.ராகுல்-சுப்மன் கில் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 188 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது அணியின் மூன்றாவது விக்கெட்டாக ஷுப்மான் கில் ஆட்டமிழந்தார். பின்னர், ராகுல், கிரீஸுக்கு வந்த துருவ் ஜூரலுடன் சேர்ந்து, கவனமாக விளையாடி ரன்களை அதிகரித்தார்.
இந்த வரிசையில், கே.எல். ராகுல் 19 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்தார். ராகுலின் சதத்தில் 12 பவுண்டரிகள் அடங்கும்.
மதிய உணவு நேரத்தில், இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்து வேஸ்ட் வேஸ்ட் இண்டீஸ்-ஐ விட 56 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 40 ரன்னும், மொகம்மது நபி 38 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தன்ஜிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய வங்கதேச வீரர்களை ரஷித் கான் சோதனைக்கு ஆளாக்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த நிலையில் பர்வேஸ் ஹொசைன் 54 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து பந்துவீசிய ரஷித் கான் தன்ஜிம் ஹசனை 51 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். சயீப் ஹசன், ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஆகியோரையும் விரைவில் அவுட்டாக்கினார்.
118 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தத்தளித்தது.
அடுத்து இறங்கிய நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறச் செய்தது.
இறுதியில், வங்கதேசம் 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கொழும்பு:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 38.3 ஓவரில் 129 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வங்கதேசம் சார்பில் ஷோமா அக்தர் 3 விக்கெட்டும், மரூபா அக்தர், நஹிதா அக்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து 130 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க வீராங்கனை ரூபியா ஹெய்டர் அரை சதம் கடந்து 54 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி 31.3 ஓவரில் 131 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் அந்த அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
- பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி ஆசிய கோப்பை வென்றது.
- இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து பேசிய நக்வி, "ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று தெரிவித்தார்.
முன்னதாக ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணி வீரர்களுடன் கைகுலுக்க மாட்டோம் என்று அறிவித்த இந்திய அணி வீரர்கள், அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் அமைச்சரின் கையால் கோப்பையை வாங்க மறுத்துவிட்டனர்.
ஆசிய கோப்பையை பாகிஸ்தான் அமைச்சர் கையால் வாங்க மறுத்த, இந்திய வீரர்களின் செயலை சுட்டிக்காட்டி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் ஜாம்பவான் ஏபி டிவில்லியர்ஸ் கடுமையாக விமர்சித்தார்.
இதுகுறித்து பேசி டிவில்லியர்ஸ் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "கோப்பையை யார் வழங்குகிறார்கள் என்பது இந்திய அணிக்கு நெருடலாக உள்ளது. விளையாட்டை விளையாட்டாக மட்டும் தான் பார்க்கவேண்டும். விளையாட்டு என்பது அனைவருக்குமானது, அத்துடன் அரசியலை இணைப்பது மிகவும் ஆபத்தானது
இந்திய அணி வீரர்களின் செயல் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால் எதிர்காலத்தில் அவர்கள் விஷயங்களை சரிசெய்வார்கள் என்று நம்புகிறேன். இது விளையாட்டிற்கு , விளையாட்டு வீரர்களுக்கும் மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்குகிறது. அதை நான் பார்க்க விரும்பவில்லை. இறுதியில் அது மிகவும் மோசமாக இருந்தது" என்று தெரிவித்தார்.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது
- 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது வெஸ்ட் இண்டீஸ்
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும் பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்களை சேர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் 36 ரன்கள் மற்றும் சாய் சுதர்சன் 7 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தனர்.
கே.எல்.ராகுல் (53), கில் (18) ஆகியோர் களத்தில் உள்ள நிலையில் இந்திய அணி 41 ரன்கள் பின் தங்கியுள்ளது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் அடித்தார்.
ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜஸ்டின் கிரீவ்ஸ் 32 ரன்கள் அடித்தார்.
இந்திய அணி தரப்பில் சிராஜ் 4 விக்கெட்டுகளும் பும்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.
- முதல் போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
- வருகிற ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
13-வது மகளிர் உலகக் கோப்பை போட்டியை ஆசிய நாடுகளான இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. இந்த கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நவ.2-ந்தேதி வரை கவுகாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம், நவிமும்பை மற்றும் இலங்கையின் கொழும்பு ஆகிய நகரங்களில் நடக்கிறது.
பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு வராது என்பதால் அந்த அணிக்குரிய அனைத்து ஆட்டங்களும் இலங்கை மண்ணில் ஆடும் வகையில் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டியை எட்டினால், இறுதி ஆட்டம் கொழும்பில் நடக்கும். இல்லாவிட்டால் நவிமும்பையில் அரங்கேறும். 12 ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்கு உலகக் கோப்பை போட்டி திரும்பியிருக்கிறது.
இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இந்த போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 269 ரன்கள் அடித்த நிலையில், இலங்கை அணி 211 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து வருகிற ஞாயிற்றுக்கிழமை கொழும்புவில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்திய மகளிர் அணி, பாகிஸ்தான் அணி வீராங்கனைகளுடன் கை குலுக்குமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், மகளிர் உலக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைகுலுக்க வேண்டாம் என இந்திய வீராங்கனைகளுக்கு பி.சி.சி.ஐ அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், கிரிக்கெட்டின் அனைத்து விதிமுறைகள் இந்தப்போட்டியின் போது முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் கை குலுக்குதல் அல்லது வீராங்கனைனகள் சகஜமாகப் பேசிக்கொள்வது போன்ற விஷயங்களுக்கு எந்த உத்தரவாதமும் அளிக்க முடியாது என்று பி.சி.சி.ஐ. செயலாளர் கூறியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2025 ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுடனான போட்டிகளின் போது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி, கை குலுக்கும் வழக்கத்தைத் தவிர்த்தது குறிப்பிடத்தக்கது.
- மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியாவின் ஆஷ்லீ கார்ட்னர் சதமடித்து அசத்தினார்.
இந்தூர்:
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவரில் 326 ரன்களைக் குவித்து ஆல் அவுட்டானது. அந்த அணியின் ஆஷ்லீ கார்ட்னர் அதிரடியாக ஆடி 83 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரி உள்பட 115 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
நியூசிலாந்து சார்பில் ஜெஸ் கெர், லியா தகுகு ஆகியோர் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
இதையடுத்து 327 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. கேப்டன் சோபி டிவைன் தனி ஆளாகப் போராடி சதமடித்து 112 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்ற வீராங்கனைகள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நியூசிலாந்து அணி 43.2 ஓவரில் 237 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.
- மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன் என்று நக்வி தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், "கோப்பையை பெற BCCI ஆர்வமாக இருந்தால் ACC அலுவலகத்திற்கு வந்து பெற்றுக்கொள்ளவும்" என்று கூறினார்.
அதே சமயம் பிசிசிஐ-யிடம் நான் மன்னிப்பு கேட்டதாக வெளியான தகவலுக்கு நக்வி திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
- அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார்.
- இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும்.
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின். இவர் கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் போது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அஸ்வின் அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்த கையோடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐ.எல்.டி டி20 லீக் தொடருக்கான ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஐஎல்டி டி20 தொடரின் 4-வது சீசன் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறும் நிலையில் இதன் ஏலம் அக்டோபர் 1-ந் தேதி துபாயில் நடைபெற உள்ளது.
அஸ்வின் தனது அடிப்படை விலையாக ரூ.1.06 கோடி என நிர்ணயித்திருந்தார். இது எந்த வீரருக்கும் இல்லாத அதிகபட்ச விலையாகும். இந்நிலையில், ஏலத்தில் அஷ்வினை எந்த அணியும் எடுக்கவில்லை.
அதே சமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் BBL தொடரில் அஸ்வின் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






