என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார்.

    வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் மே 25-ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் காரணமாக இத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

    மேலும் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரானது தற்சமயம் மூன்று போட்டிகள் கொண்ட தொடராக மாற்றப்பட்டுள்ளது. இந்த தொடர் மே 28-ம் தேதி முதல் நடைபெறும். இதற்காக இரு அணி வீரர்களும் தயாராகி வருகின்றனார்.

    இந்நிலையில் இந்த தொடரில் இருந்து வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார்.

    இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வந்த நிலையில், காயத்தை சந்தித்தாக கூறப்படுகிறது. அதன்படி பஞ்சாப் கிங்சுக்கு எதிரான போட்டியில் ஜோஷ் இங்கிலிஸின் கேட்ச்சை பிடிக்க முயற்சித்த போது முஸ்தபிசூர் காயத்தை சந்தித்தார். மேலும் அவருக்கு எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக அதிலிருந்து குணமடைய சிறிது காலம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அவருக்கு பதிலாக வங்கதேச அணியில் கலித் அஹ்மத் சேர்க்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச பிரீமியர் லீக் தொடரில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்தில் உள்ளது.
    • 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைகிறது. நடப்பு ஐ.பி.எல் தொடரில் குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

    ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் (இன்ஸ்டாகிராம், எக்ஸ்) புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகின்றன.

    இதன்காரணமாக அணிகளின் சமூக வலைத்தள பக்கங்களை ரசிகர்கள் ஏராளமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 20 மில்லியன் பின் தொடர்பவர்களை பெற்ற முதல் அணி என்ற சாதனையை ஆர்சிபி அணி படைத்துள்ளது.

    அந்த அணிக்கு அடுத்தபடியாக 18.6 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் சிஎஸ்கே அணி 2-வது இடத்திலும், 18 மில்லியன் பின் தொடர்பவர்களுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    • கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கிளாசன் சதம் விளாசினார்.
    • இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை கிளாசன் தட்டிச் சென்றார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ச் ஐதராபாத் அணி- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹென்ரிச் கிளாசன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இந்நிலையில் இப்போட்டியில் சதமடித்து அசத்திய ஹென்ரிச் கிளாசென் சில சாதனைகளையும் படைத்து அசத்தியுள்ளார்.

    அதன்படி இப்போட்டியில் கிளாசென் 37 பந்துகளில் சதத்தை பதிவுசெய்து அசத்தியதன் மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிவேகமாக சதமடித்த 3-வது வீரர் எனும் சாதனையை சமன்செய்துள்ளார்.

    முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு இந்திய அணியின் முன்னாள் வீரர் யூசுப் பதான் 37 பந்துகளில் சதமடித்து அசத்திய நிலையில், தற்சமயம் ஹென்ரிச் கிளாசன் அவரின் சாதனையை சமன்செய்து அசத்தியுள்ளார்.

    அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் ஜாம்பவான் கிறிஸ் கெயில் 30 பந்துகளில் சதமடித்து முதலிடத்தில் உள்ளார். மேற்கொண்டு நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதமடித்து இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது ஹென்ரிச் கிளாசென், யூசுஃப் பதான் ஆகியோர் கூட்டாக மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன.

    ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதமடித்த வீரர்கள்

    30 பந்துகள் – கிறிஸ் கெய்ல் vs புனே வாரியர்ஸ் இந்தியா, 2013

    35 பந்துகள் - வைபவ் சூர்யவன்ஷி vs குஜராத் டைட்டன்ஸ், 2025

    37 பந்துகள் – ஹென்ரிச் கிளாசென் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், 2025*

    37 பந்துகள் – யூசுப் பதான் vs மும்பை இந்தியன்ஸ், 2010

    இதுதவிர்த்து ஐபிஎல் தொடர் வரலாற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் எனும் சாதனையையும் ஹென்ரிச் கிளாசென் படைத்துள்ளார். முன்னதாக அபிஷெக் சர்மா 39 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்த நிலையில், தற்போது ஹென்ரிச் கிளாசென் 37 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் டேவிட் வார்னர் 43 பந்துகளில் சதமடித்து மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

    சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அதிவேக சதமடித்த வீரர்கள்

    37 - ஹென்ரிச் கிளாசென் vs கேகேஆர், 2025*

    39 - அபிஷேக் சர்மா vs பஞ்சாப் கிங்ஸ், 2025

    43 - டேவிட் வார்னர் vs கேகேஆர், 2017

    45 - இஷான் கிஷன் vs ராஜஸ்தான் ராயல்ஸ், 2025

    இப்போட்டி குறித்து பேசினால் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஹென்ரிச் கிளாசென், டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் 278 ரன்களைக் குவித்தது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணியானது 168 ரன்களில் ஆல் அவுட்டானது. இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 110 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது.

    • ஆர்சிபி புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.
    • நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசன் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. ஆர்சிபி 13 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி, கைவிடப்பட்ட ஒரு போட்டியுடன் 17 புள்ளிகள் பெற்று புள்ளிகள் பட்டியலில் 3 ஆவது இடத்தை பிடித்து பிளேஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது.

    நாளை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் பெங்களூரு அணி மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களுக்குள் பிடித்து குவாலிபியர் 1 போட்டியில் பெங்களூரு அணி விளையாடும்.

    லீக் போட்டிகள் முடிவடைந்த பின்னர், வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்களுடைய நாட்டுக்காக சர்வதேச போட்டிகளில் விளையாட சென்றுவிடுவார்கள் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதனால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறிய அணிகள் மாற்று வீரர்களை தேர்வு செய்து வருகின்றன. அவ்வகையில், லுங்கி இங்கிடிக்கு பதிலாக, ஆர்சிபி அணியில் ஜிம்பாப்வே வீரர் பிளசிங் முசராபானி. இணைந்துள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பயிற்சிக்காக தென்னாப்பிரிக்க அணியுடன் லுங்கி இங்கிடி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குஜராத் எதிரான போட்டியில் சென்னை அணி 230 ரன்கள் குவித்தது.
    • 83 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினாலும் கடைசி போட்டியில் வெற்றி பெற்று ரசிகர்களை சென்னை அணி சந்தோசப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் புதிய பேட்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    நேற்றைய போட்டியின் வர்ணனையின்போது, "அடுத்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் வருவார்" என்று சுரேஷ் ரெய்னா கூறினார். அதற்கு அவர் பெயர் S-ல் தொடங்குமா?

    என்று சக வர்ணனையாளர் சோப்ரா, கிரிக்கெட் கேட்க, அவர் இந்த அணிக்காக அதிவேக அரைசதம் அடித்துள்ளார் என்று சுரேஷ் ரெய்னா சிரித்தபடியே பதில் கூறினார்.

    • குஜராத்தை விட ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும்.
    • பஞ்சாப் தோற்றால் 3 அல்லது 4-வது இடத்தில் இருக்கும்.

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று 'கிளைமாக்ஸ்' கட்டத்துக்கு வந்துவிட்டது. நாளையுடன் லீக் போட்டி முடிவடைகிறது.

    ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று நடக்கும் 69-வது லீக்கில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை எதிர் கொள்கிறது. இவ்விரு அணிகளும் ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்ட நிலையில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடத்தை பிடிப்பதற்கு இந்த ஆட்டத்தின் முடிவு அவசியமாகும்.

    கடைசி 8 ஆட்டங்களில் 7-ல் வாகை சூடி வீறுநடை போடும் மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றியை வசப்படுத்தினால் 18 புள் ளியை எட்டும். குஜராத்தை விட ரன்ரேட்டில் வலுவாக இருப்பதால் மும்பைக்கு டாப்-2 இடம் உறுதியாகி விடும். தோற்றால் 4-வது இடத்திலேயே நீடிக்கும்.

    டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 206 ரன்கள் குவித்தும் கடைசி ஓவரில் தோல்வியை தழுவிய பஞ்சாப் அணி மும்பையை வீழ்த்தினால் அதன் புள்ளிகள் 19-ஆக உயரும். அப்போது அந்த அணிக்கு டாப்-2 இடங்கள் உறுதியாகும். கடைசி லீக்கில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோவை தோற்கடித்தாலும் பிரச்சினை இருக்காது. மாறாக பஞ்சாப் தோற்றால் 3 அல்லது 4-வது இடத்தில் இருக்கும். ஐ.பி.எல். கிரிக்கெட்டை பொறுத்தவரை டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு இறுதிப்போட்டியை எட்ட இரண்டு வாய்ப்பு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதனால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இரு அணியிலும் அதிரடி சூரர்கள் நிறைந்து இருப்பதால், ரன் விருந்தையும் எதிர்பார்க்கலாம். தொடர்ந்து 13 ஆட்டங்களில் குறைந்தது 25 ரன்களுக்கு மேல் எடுத்துள்ள மும்பை வீரர் சூர்யகுமார் யாதவ் இந்த ஆட்டத்திலும் கால்சதத்தை எட்டினால் அது புதிய வரலாற்று சாதனையாக அமையும்.

    • ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சுனில் நரைன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் நரைன் விளையாடியுள்ளார்.

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்தார்.

    கொல்கத்தா அணிக்காக 198 போட்டிகளில் விளையாடியுள்ள நரைன் 210 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

    இதற்கு முன்பு நாட்டிங்ஹாம்ஷையர் அணிக்காக இங்கிலாந்தின் சமித் படேல் 208 விக்கெட்டுகள் வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

    டி20 கிரிக்கெட்டில்ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்

    1. சுனில் நரைன் - 210* (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)

    2. சமித் படேல் - 208 (நாட்டிங்ஹாம்ஷையர்)

    3. கிறிஸ் உட் - 199 (ஹாம்ப்ஷயர்)

    4. லசித் மலிங்கா - 196 (மும்பை இந்தியன்ஸ்)

    5. டேவிட் பெய்ன் - 193 (க்ளௌசெஸ்டர்ஷையர்)

    • ஐபிஎல் வரலாற்றில் 3 ஆவது அதிகபட்ச ஸ்கோரை ஐதராபாத் அணி பதிவு செய்தது.
    • ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது.

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.

    கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.

    இந்த போட்டியில் 278 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது.

    மேலும், ஒரு புதிய உலக சாதனையையும் ஐதராபாத் அணி படைத்துள்ளது. அதாவது, டி20 போட்டிகளில் அதிகமுறை 250க்கும் மேல் ரன்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.

    ஐதராபாத் அணி ஒரு இன்னிங்சில் 5 முறை (287, 286, 277, 266, 278) 250 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், சர்ரி கவுன்டி அணியும் (தலா 3 முறை) உள்ளன.

    • எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன.
    • ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 231 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில் 18 ஓவர்கள் முடிவில் 147 ரன்களுக்கு குஜராத் அணி ஆல் அவுட்டானது. இதன்மூலம் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டிக்கு பின்பு ஓய்வு குறித்து பேசிய கேப்டன் தோனி, "எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. நான் மீண்டும் ராஞ்சிக்கு சென்று, கொஞ்சம் ஜாலியாக பைக் ஓட்டி மகிழ்ந்துவிட்டு பிறகு முடிவு செய்வேன். ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை. கிரிக்கெட் வீரர்கள் தங்களின் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஓய்வு பெற வேண்டுமென்றால் சிலர் 22 வயதிலேயே ஓய்வு பெற்றிருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    அப்போது வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, "வைபவ் சூர்யவன்ஷி உங்கள் காலைத் தொட்டு வணங்கியபோது நீங்கள் எப்படி உணர்ந்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த தோனி, "வயதாகிவிட்டதைப் போல உணர்ந்தேன். எங்கள் அணி வீரர் ஆண்ரே சித்தார்த்திடம், உனக்கு என்ன வயது? எனக் கேட்டேன். அவர் என்னை விட 25 வயது இளையவராம். இதைக் கேட்டபோதுதான் 'ஆம் நமக்கு நிஜமாகவே வயதாகிவிட்டது என்று எனக்குத் தோன்றியது" என்று கூறினார்.

    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 385 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் கீசி கார்டி 170 ரன்கள் விளாசி அசத்தினார்.

    டப்ளின்:

    அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் ஒருநாள் போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி பெற்றது. 2வது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 3வது விக்கெட்டுக்கு கீசி கார்டி. ஷாய் ஹோப் ஜோடி இணைந்தது. ஆரம்பம் முதலே இந்த ஜோடி அதிரடியாக ஆடியது.

    3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்த நிலையில் ஷாய் ஹோப் 75 ரன்னில் அவுட்டானார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய கார்டி சதமடித்து 170 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    கடைசி கட்டத்தில் ஜஸ்டின் கிரீவ்ஸ் 23 பந்தில் 50 ரன் எடுத்தார்.

    இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 385 ரன்கள் குவித்தது. மழை காரணமாக ஆட்டம் சிறிது தடைபட்டது.

    இதனால் 46 ஓவரில் 363 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆனால் அயர்லாந்து 29.5 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 197 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரை 1-1 என சமனிலை அடையச் செய்தது.

    ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை கீசி கார்டி வென்றார்.

    • டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.

    மணீஷ் பாண்டே 23 பந்தில் 37 ரன்னும், சுனில் நரைன் 16 பந்தில் 31 ரன்னும் எடுத்தார். ஹர்ஷித் ராணா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.

    • அதிரடியாக விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 16 பந்துக்களில் 32 ரன்கள் அடித்து அவுட்டானார்.பொறுப்புடன் விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளாசான் - இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.

    இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை குவித்தது. 

    ×