என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பிராண்டன் கிங் 47 ரன்னில் அவுட்டானார். மேத்யூ போர்டு 27 ரன்னில் வெளியேறினார்.

    இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆப்கானிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது.

    தொடக்க ஆட்டக்காரர் குர்பாஸ் அதிரடியாக ஆடி 71 ரன்கள் குவித்தார். இப்ராகிம் ஜட்ரன் 28 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கல் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 15 ரன் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷமர் ஸ்பிரிங்கர் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
    • அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா இரண்டாவது சுற்றில் வென்றார்.

    மெல்போர்ன்:

    நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனை கெஸ்லர் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பெகுலா 6-0, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் செக் வீராங்கனை மேரி பவுஸ்கோவாவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 153 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    வதோதரா:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபி டிவைன் 50 ரன்னில் வெளியேறினார். பெத் மூனி 38 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி.வாரியர்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே விக்கெட்கள் சீராக விழுந்தன.

    இறுதியில், உ.பி.வாரியர்ஸ் அணி 17.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது.

    • முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவரில் 271 ரன்கள் எடுத்தது.
    • குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 93 ரன் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார்.

    கொழும்பு:

    இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்

    தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி 93 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ஜனித் லியாங்கே 46 ரன்கள் சேர்த்தார்.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலி 6 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென் டக்கெட்டுடன் ஜோ ரூட் இணைந்தார். இருவரும் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர்.

    2வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 62 ரன்னில் அவுட்டானார். ஜோ ரூட் 61 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஜேமி ஓவர்டன் 17 பந்தில் 34 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 49.2 ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், ஒருநாள் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    இலங்கை அணி சார்பில் பிரமோத் மதுஷான் 3 விக்கெட்டும், துனித் வெல்லாலகே, ஜெப்ரி வாண்டர்சே தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது துனித் வெல்லாலகேவுக்கு அளிக்கப்பட்டது.

    • இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.
    • இதில் இந்தியாவின் பி.வி.சிந்து 2வது சுற்றில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் இந்தோனேசியாவில் நடந்து வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்தியாவின் பிவி சிந்து, டென்மார்க்கின் லைன் ஜேயர்ஸ்பெல்ட் உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய பி.வி.சிந்து 21-19, 21-18 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெற உள்ள காலிறுதியில் பிவி சிந்து சீனாவின் சென் யூபி உடன் மோதுகிறார்.

    இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீரரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    • இந்தியாவில் நடக்கும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தல்.
    • வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஐசிசி நிராகரித்தது.

    2026 டி-20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    டாக்காவில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முடிவெடுக்கப்பட்டதாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணமாக இந்தியாவில் விளையாடப் போவதில்லை என்று வங்கதேசம் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இந்தியாவில் நடக்கும் போட்டிகளை வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கை ஐசிசி நிராகரித்தது.

    • பிக்பாஷ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது
    • சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.

    பிக்பாஷ் லீக் தொடரின் லீக் சுற்றுகள் முடிந்து தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் முடிவடைந்து பிளே ஆப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக பாகிஸ்தானின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் விளையாடி வருகிறார்.

    இந்நிலையில், பிக்பாஷ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில், மீதமுள்ள போட்டிகளில் பாபர் அசாம் பங்கேற்க மாட்டார் என சிட்னி சிக்சர்ஸ்அணி அறிவித்துள்ளது.

    பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச போட்டிகளில் அவர் பங்கேற்க உள்ளதால் இந்த முடிவு என தகவல் வெளியாகியுள்ளது. 

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

    துபாய்:

    ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி துபாயில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் முஜிபுர் ரகுமான் 4 விக்கெட்டும், பரூக்கி, ஓமர் சாய் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்நிலையில் இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரகுமான் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம் டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய 3-வது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இவருக்கு முன்பு 2019-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ரஷித்கானும் 2023-ம் ஆண்டில் வங்கதேச அணிக்கு எதிராக கரீம் ஜனட் ஆகியோர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

    • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 24-ந்தேதி தொடங்குகிறது.
    • முதலாவது சுற்றில் தமிழக வீராங்கனை தியா ரமேஷ் அமெரிக்காவின் அனிதா டூவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஜூனியர் சாம்பியன்ஷிப் 24-ந்தேதி தொடங்குகிறது. இதற்கான தகுதி சுற்று தற்போது நடந்து வருகிறது. இதன் சிறுமியர் பிரிவின் முதலாவது சுற்றில் தமிழக வீராங்கனை தியா ரமேஷ் அமெரிக்காவின் அனிதா டூவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

    2-வது சுற்றில் தியா ரமேஷ், ஜப்பானின் அஜூனா இச்சியோகாவுடன் மோதுகிறார். இதிலும் தியா வெற்றி பெற்றால் ஜூனியர் பிரதான சுற்றுக்கு தகுதி பெறுவார்.

    • இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.
    • பி.வி.சிந்து 22-20, 21-18 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மனானி சுய்சூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார்.

    ஜகர்த்தா:

    இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி ஜகர்த்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், கிரண் ஜார்ஜ், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.

    பெண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து 22-20, 21-18 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மனானி சுய்சூவை தோற்கடித்து 2-வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அன்மோல் கார்ப் 21-16, 21-17 என்ற நேர்செட்டில் சீன தைபேயின் பாய் யூ போவை விரட்டியடித்தார். அதே சமயம் ஆகர்ஷி காஷ்யப் 21-8, 20-22, 17-21 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் ஜூலி டாவலிடம் போராடி பணிந்தார். மாள்விகா பான்சோத், தன்வி ஷர்மா ஆகியோரும் முதல் சுற்றுடன் வெளியேறினர்.

    • ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன்.
    • இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன்.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டில் நடந்த 9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி மகுடம் சூடியது. அத்துடன் ரோகித் சர்மா சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் விரைவில் இந்தியாவில் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடக்க இருப்பது குறித்து 38 வயதான ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2007-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அறிமுகம் ஆனதில் இருந்து ஒவ்வொரு உலகக் கோப்பை தொடரிலும் பங்கேற்று இருக்கிறேன். இந்த முறை அந்த போட்டியை வீட்டில் இருந்தபடி பார்ப்பது புதுமையாக இருக்கும். உலகக் கோப்பை போட்டியை தவற விடும் போதுதான், அதன் யதார்த்தத்தை முழுமையாக புரிந்து கொள்வீர்கள். அப்போது தான், உலகக் கோப்பை பயணத்தில் நீங்கள் ஒரு பகுதியாக இல்லை என்பதை உணர்வீர்கள்.

    இருப்பினும் மைதானத்தில் ஏதாவது ஒரு இடத்தில் நான் இருப்பேன். அது முன்பிருந்தது போல் இருக்காது. ஆனால் நிச்சயம் இது வித்தியாசமான ஒரு அனுபவமாக இருக்கும். எப்போதுமே உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி இருக்கும். எனது கேப்டன்ஷிப்பில் பல முறை நடந்துள்ளது. எல்லோரையும் உங்களால் திருப்திப்படுத்த முடியாது. ஆனால் அந்த முடிவு (அணியில் நீக்கம்) ஏன் எடுக்கப்பட்டது என்பதை சம்பந்தப்பட்ட வீரர் அறிவது முக்கியம்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம் என வங்கதேசம் தெரிவித்தது.
    • தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

    துபாய்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அங்கம் வகித்த வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அந்த அணி நிர்வாகம் விடுவித்தது. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதனால் ஆத்திரமடைந்த வங்கதேசம், இந்திய மண்ணில் நடக்கும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விளையாடமாட்டோம். அங்கு எங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. எனவே தங்கள் அணிக்குரிய ஆட்டங்களை போட்டியை நடத்தும் மற்றொரு நாடான இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியது.

    ஆனால் கடைசி நேரத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது இயலாத காரியம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கைவிரித்தது. பலகட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுக முடிவு எட்டப்படவில்லை. இந்தியாவுக்கு செல்வதில்லை என்ற நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத வங்கதேசம், எந்த வித அழுத்தத்துக்கும் அடிபணியமாட்டோம் என்றும் கொக்கரித்தது.

    இந்தியாவில் ஆடுவது குறித்து ஜன.21-ந்தேதிக்குள் (அதாவது நேற்று) தெளிவான முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மாற்று அணி அறிவிக்கப்படும் என ஐ.சி.சி., வங்கதேசத்தை எச்சரித்து இருந்தது. இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வங்கதேசத்துக்கு ஆதரவு கரம் நீட்டியது. ஐ.சி.சி.க்கு கடிதம் எழுதிய பாகிஸ்தான், வங்கதேசத்தின் உணர்வுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் அவர்களுக்குரிய ஆட்டங்களை பாகிஸ்தானில் நடத்த தயாராக இருப்பதாக அதில் கூறியிருந்தது.

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐ.சி.சி.யின் போர்டு இயக்குனர்கள் நேற்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசித்தனர். இதில் வங்கதேசத்தின் கோரிக்கை முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. அத்துடன் வங்கதேச அணி இந்தியாவுக்கு வந்து விளையாட மறுத்தால் அதற்கு பதிலாக மாற்று அணியை சேர்ப்பதற்கு பெரும்பாலான இயக்குனர்கள் சம்மதம் தெரிவித்தனர். அதாவது பங்கேற்ற 15 இயக்குனர்களில் பாகிஸ்தான் மட்டுமே வங்கதேச கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவு அளித்தது.

    பின்னர் ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில், 'பலகட்டமாக எல்லாவிதமான பாதுகாப்பு அம்சங்களையும், தனிப்பட்ட முறையிலும் விரிவாக ஆய்வு செய்த போது, இந்தியாவில் போட்டி நடைபெறும் எந்த ஒரு இடத்திலும் வங்கதேச அணியினர், ஊடகத்தினர், அதன் அதிகாரிகள், ரசிகர்களுக்கு எந்தவித பாதுகாப்பு மிரட்டலும் இல்லை என சுட்டிகாட்டப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் போட்டி அட்டவணையில் மாற்றம் செய்வது சாத்தியமில்லை. அது மட்டுமின்றி நம்பகமான எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லாத இத்தகைய சூழலில் போட்டி அட்டவணையை மாற்றம் செய்வது என்பது புனிதமான ஐ.சி.சி. போட்டிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் தவறான முன்னுதாரணமாகி விடும். மேலும் இது ஐ.சி.சி.யின் நடுநிலை தன்மைக்கு பாதகமாக அமையும் என்பதை கவனத்தில் கொண்டுள்ளோம்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இப்போதைக்கு வங்கதேசத்துக்கு மேலும் ஒரு நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு வந்து விளையாடமாட்டோம் என்று தொடர்ந்து முரண்டு பிடித்தால் அந்த அணிக்கு பதிலாக தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள ஸ்காட்லாந்து அணி சேர்க்கப்படும்.

    20 அணிகள் இடையிலான 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 'சி' பிரிவில் இடம் பெற்றுள்ள வங்கதேச அணிக்குரிய ஆட்டங்களை கொல்கத்தா (பிப்.7 வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, பிப்.9 இத்தாலிக்கு எதிராக, பிப்.14 இங்கிலாந்துக்கு எதிராக) மற்றும் மும்பையில் (பிப்.17 நேபாளத்துக்கு எதிராக) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×