என் மலர்
விளையாட்டு
- லக்னோவில் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
- கடந்த 3-ம் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 14-ம் தேதி வரை நடக்கின்றன.
லக்னோ:
உத்தர பிரதேசத்தின் லக்னோவில் தேசிய பளு தூக்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பிப்ரவரி 3-ம் தொடங்கிய இந்தப் போட்டிகள் வரும் 14-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
இந்நிலையில், மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு தேசிய பளு தூக்குதலில் 3 தேசிய சாதனைகளை படைத்து அசத்தியுள்ளார்.
மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் மீரா பாய் சானு முதலில் ஸ்நாட்ச் பிரிவில் 86, 89 கிலோ எடையைத் தூக்கினார். 91 கிலோவை தூக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தும், இந்தப் பிரிவில் 89 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
அடுத்ததாக க்ளீன் & ஜெர்க் பிரிவில் 116 கிலோ எடையைத் தூக்கி புதிய தேசிய சாதனையை நிகழ்த்தினார்.
48 கிலோ மகளிருக்கான எடைப் பிரிவில் மொத்தமாக (89 + 116) 205 கிலோ எடையைத் தூக்கி மூன்று சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
- இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்கள் அடித்தார்.
- திலக் வர்மா 19 பந்தில் 45 ரன்கள் விளாசினார்.
டி20 உலகக் கோப்பை வருகிற 7-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில் இன்று இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான பயிற்சி ஆட்டம் நவி மும்பையில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், அபிஷேக் சர்மா இறங்கினர். இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்களும், அபிஷேக் சர்மா 18 பந்தில் 24 ரன்களும் எடுத்து ரிட்டையர்டு அவுட் முறையில் வெளியேறினர்.
அடுத்து வந்த திலக் வர்மா அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 19 பந்தில் 45 ரன்கள் விளாசி தனது உடற்தகுதியை நிரூபித்தார். இவர் காயம் காரணமாக சில தொடர்களை தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் 16 பந்தில் 30 ரன்களும், ரிங்கி சிங் 13 பந்தில் 16 ரன்களும் எடுத்து வெளியேறினர். ஹர்திக் பாண்ட்யா 10 பந்தில் 30 ரன்களும், அக்சர் பட்டேல் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 35 ரன்களும் அடிக்க இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்துள்ளது.
- ஆப்கானிஸ்தான் வீரர்கள் இருவர் சதம் அடித்தனர்.
- இந்த அணி சார்பில் இரு வீரர்கள் அரைசதமும், ஒரு வீரர் சதமும் விளாசினர்.
19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. ஜிம்பாப்வேயின் ஹராரேவில் இன்று இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய 2-வது அரையிறுதி போட்டி நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. அந்த அணியின் பைசல் ஷினோசடா 93 பந்தில் 110 ரன்கள் விளாசினார். மற்றொரு வீரர் உஜைருல்லா நியாஜாய் ஆட்டமிழக்காமல் 86 பந்தில் 101 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி சார்பில் தீபேஷ் தேவேந்திரன், கனிஷ்க் சவுகான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 311 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் களம் இறங்கியது. ஆரோன் ஜார்ஜ்- வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 33 பந்தில் 68 ரன்கள் சேர்த்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 90 ரன்கள் சேர்த்தது.
அடுத்து கேப்டன் ஆயுஷ் மாத்ரே களம் இறங்கினார். இவர் 59 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் விளையாடிய ஆரோன் ஜார்ஜ் அபாரமாக விளையாடி 95 பந்தில் சதம் விளாசினார். தொடர்ந்து விளையாடிய அவர் 104 பந்தில் 115 ரன்கள் சேர்த்தார். விஹான் மல்ஹோத்ரா 47 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 41.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப் போட்டியில் வருகிற 6-ந்தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியும் ஹாராரேயில் நடக்கிறது.
- முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 182 ரன்கள் விளாசியது.
- வெஸ்ட் இண்டீஸ் அணியால் 159 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 7-ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இன்று பெங்களூருவில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடி ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் விளாசியது. தொடக்க வீரர் குர்பாஸ் 43 ரன்களும், இப்ராஹிம் ஜத்ரன் 51 ரன்களும் சேர்த்தனர். ஓமர்சாய் 15 பந்தில் 35 ரன்கள் விளாசினார்.
பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. முதல் 4 வீரர்கள் ஒற்றையிலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
ரோவ்மன் பொவெல் 27 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார். மேத்யூ போர்டு ஆட்டமிழக்காமல் 26 பந்தில் 52 ரன்கள் விளாசினாலும் வெஸ்ட் இண்டீஸ் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் ஆப்கானிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின .
- முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது.
16-வது இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடந்து வருகிறது.
16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (குரூப் 1), இந்தியா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
இதில் ஹராரேயில் இன்று (புதன்கிழமை) அரங்கேறும் இரண்டாவது அரைஇறுதியில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் (பிற்பகல் 1 மணி) மோதின .
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் குவித்தது. இதையடுத்து 311 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியுள்ளது.
- பாகிஸ்தானின் ஆண்டு வருவாய் பகிர்வான ரூ.316 கோடியை ஐ.சி.சி. நிறுத்தி வைத்துள்ளது.
- ஐ.சி.சி.யின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாய்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது. அதே நேரத்தில் 20 ஓவர் உலகக் கோப்பையில் ஆடுவோம் என்றும் தெரிவித்து இருந்தது.
இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரிக்கை விடுத்தது. கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் இதனால் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
பாகிஸ்தான் அரசின் முடிவுப்படி இந்தியாவுக்கு எதிராக விளையாட இயலாது என்ற முடிவில் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. மீண்டும் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானுடனான போட்டியை புறக்கணித்தால் ஒளிபரப்பு நிறுவனத்திடம் இருந்து சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானின் ஆண்டு வருவாய் பகிர்வான ரூ.316 கோடியை ஐ.சி.சி. நிறுத்தி வைத்துள்ளது. அந்த நிதியில் இருந்து ஒளிபரப்பாளர்களுக்கு ஐ.சி.சி. செலுத்த வாய்ப்புள்ளது. ஒளிபரப்பு நிறுவனம் தொடுக்கும் வழக்கில் பாகிஸ்தானுக்கு எந்த விதத்திலும் ஐ.சி.சி. உதவியாக இருக்காது என்றும் கூறப்படுகிறது. டி.ஆர்.சி. குழுவிடம் ஒளிபரப்பு நிறுவனம் மேல் முறையீடு செய்யலாம்.
இதற்கிடையே ஐ.சி.சி.யின் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கடந்த 2-ந் தேதி இந்தியா ஏ அணிக்கு அமெரிக்கா அணிக்கும் பயிற்சி போட்டி நடைபெற்றது.
- இதில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வருகிற 7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
அதற்கு முன்னதாக பயிற்சி போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2-ந் தேதி இந்தியா ஏ அணிக்கு அமெரிக்கா அணிக்கு பயிற்சி போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அணி வீரர்கள் மும்பையில் உள்ள தள்ளுவண்டி கடையில் பானி பூரி சாப்பிட்டு மகிழ்ந்தனர். இந்தியா வந்து பானி பூரி சாப்பிடாமல் போன அந்த சுற்றுப்பயணம் முழுமை பெறாததாக இருக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அணிக்கு தேர்வான 15 வீரர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும்.
- உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம்.
2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இடம்பெறுவார்களா என்பது தற்போது வரை முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் விராட் கோலியின் இடம் கிட்டத்தட்ட உறுதியாகத் தெரிகிறது. சமீபத்திய தொடர்களில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவை) சிறப்பாக விளையாடி உள்ளார். அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் பந்து வீச்சு பயிற்சியாளர் போன்றவர்கள் அவரை 2027 திட்டத்தில் முக்கியமாகக் கருதுகின்றனர்.
அதே சமயத்தில் ரோகித் சர்மா, சமீப தொடர்களில் சில சிறப்பான இன்னிங்ஸ் ஆடியுள்ளார், ஆனால் சில போட்டிகளில் சொதப்பியுள்ளார். இருப்பினும், அணி அவரை முக்கியமாகக் கருதுகிறது.
இந்நிலையில் இருவரும் 2027-ம் ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை தொடரில் இடம் பெறுவார்களாக என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து தோனி கூறியதாவது:-
அடுத்த உலகக் கோப்பையில் ஏன் விளையாடக் கூடாது? என்னைப் பொறுத்தவரை, உடற்தகுதியை வயது தீர்மானிக்காது. அவர்களது பெர்ஃபார்மன்ஸ், பிட்னஸ் தான் தீர்மானிக்கும்.
உலகக் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அனுபவம் மிக முக்கியம். அனுபவம் மற்றும் ஃபிட்னஸ் இருந்தால் ஏன் விளையாடக்கூடாது.
ஆனால் ஒரு விஷயம் தெளிவுபடுத்தப்பட வேண்டும். எல்லோரும் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். நான் டெப்யூ செய்தபோது 24 வயது, யாரும் என்னிடம் வயது பற்றி எதுவும் சொல்லவில்லை. அதே போல், 1, 2, 5 அல்லது 10 வருடங்கள் விளையாடினாலும், வயது பற்றி யாரும் எதுவும் சொல்லக் கூடாது.
அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டால், அணியில் இருப்பார்கள். சிறப்பாகச் செயல்படாவிட்டால், இருக்க மாட்டார்கள் என தோனி கூறினார்.
- இந்தியா-பாகிஸ்தான் போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும்.
- ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக விளையாடமாட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
டி20 உலக கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பது தொடர்பாக முன்னாள் சுழற்பந்து வீரர் ஆர்.அஸ்வின் கூறியதாவது:-
இந்தியா-பாகிஸ்தான் போட்டி நிச்சயமாக 100 சதவீதம் நடைபெறும். அடுத்த 4 அல்லது 5 தினங்களில் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கும் என்று நான் நினைக்கிறேன். நானும் இந்தப்போட்டியை பார்க்க விரும்புகிறேன்.
பாகிஸ்தான் நிதி இழப்பை சந்திக்க நேரிடும். ஒளிபரப்பு நிறுவனம் பெரும் தொகையை இழப்பார்கள். எனவே ஒரு சமரசம் ஏற்பட்டாக வேண்டும். ஐ.சி.சி.யின் அனைத்து உறுப்பினர்களும் இழப்புகளை சந்திப்பார்கள். பாகிஸ்தான் லீக் கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதற்கு ஐ.சி.சி. தடை விதிக்கலாம்.
இந்தியா-பாகிஸ்தான் பொதுவான மைதானத்தில் தான் மோதுகின்றன. எனவே மைதானம் குறித்த பிரச்சினை இல்லை. ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக விளையாடமாட்டேன் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறு அஸ்வின் கூறியுள்ளார்.
- அமெரிக்க அணிக்கு தேர்வான 15 வீரர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர்.
- ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளில் தலா 7 பேர் இந்திய பூர்வவாசிகள் இருக்கிறார்கள்.
டெல்லி:
விரைவில் தொடங்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் குட்டி அணிகளில் இந்தியாவை பூர்விகமாக கொண்ட வீரர்கள் நிறைய பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் தாய் மண்ணில் விளையாட ஆர்வமாக உள்ளனர்.
இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை வருகிற 7-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.
அமெரிக்க அணிக்கு தேர்வான 15 வீரர்களில் 9 பேர் இந்திய வம்சாவளியினர். கேப்டன் மோனங்க் பட்டேல் குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில் பிறந்தவர். 19 வயதுக்குட்பட்டோருக்கான குஜராத் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுடன் இணைந்து விளையாடி இருக்கிறார்.
2024-ம் ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பையில் அமெரிக்கா சூப்பர் ஓவரில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது. அதில் மோனங்க் பட்டேல் அரைசதம் அடித்து அசத்தினார். 32 வயதான மோனங்க் பட்டேல் கூறுகையில், நானும், பும்ராவும் இளம் வயதில் சிவப்பு மற்றும் வெள்ளைநிற பந்து போட்டியில் இணைந்து விளையாடி உள்ளோம். உண்மையிலேயே அவை சிறப்பான தருணங்கள். அது எனது கிரிக்கெட் பயணத்தின் ஆரம்ப கட்டம். அப்போது பும்ரா விளையாடிய விதத்தை பார்த்த போது, அவர் சிறப்பு வாய்ந்த பவுலராக உருவெடுப்பார் என்பது தெரியும். நிச்சயம் உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்துவார்' என்றார்.
நெட்ராவால்கர்
அமெரிக்க அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் சவுரப் நெட்ராவால்கர், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியவர். மும்பையைச் சேர்ந்த அவர் சாப்ட்வேர் என்ஜினீயர் ஆவார். அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்த பிறகு அந்த நாட்டு அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார். இப்போது தொடக்க ஆட்டத்தில் தனது முன்னாள் மும்பை வீரர் சூர்யகுமாருக்கு எதிராக களம் காணப் போகிறார்.
34 வயதான நெட்ராவால்கர் கூறுகையில், 'சொந்த ஊரில் அதுவும் சூர்யகுமாருக்கு எதிராக நான் எந்த மாதிரி உணர்வை வெளிப்படுத்துவேன் என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் உணர்வுபூர்வமாக இருக்கும். எனது கிரிக்கெட் வாழ்க்கை ஒரு முழுமையான வட்டத்தை நிறைவு செய்வது போன்றது. அதாவது நான் மும்பையில் தான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன். அதன் பிறகு கிரிக்கெட்டை கைவிட்டு அமெரிக்காவுக்கு சென்றேன். மீண்டும் நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. இப்போது பிறந்த ஊரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது' என்றார்.
ஜஸ்பிரீத் சிங்- ஆர்யன் தத்
இத்தாலி அணி, உலகக் கோப்பையில் அறிமுக அணியாக அடியெடுத்து வைக்கிறது. இதில் அந்த அணிக்காக ஆடும் 32 வயதான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் சிங் கவனத்தை ஈர்க்கிறார். இவர் பஞ்சாப் மாநிலம் பாக்வாராவில் பிறந்தவர். 2006-ம் ஆண்டு அவரது குடும்பம் இத்தாலிக்கு குடி பெயர்ந்தது. அங்கு கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய அவர் 2019-ம் ஆண்டில் சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆனார். பொருளாதார நெருக்கடியால் சிறிது காலம் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்த அவருக்கு ஐ.சி.சி. போன்ற பெரிய போட்டிகளில் கால்பதிப்பது கனவாகவே இருக்கும்.
நெதர்லாந்து அணியில் அங்கம் வகிக்கும் ஒரே இந்திய வம்சாவளியான சுழற்பந்து வீச்சாளர் ஆர்யன் தத்துக்கு ஏற்கனவே 2023-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய ரசிகர்கள் முன் விளையாடிய அனுபவம் உண்டு. 22 வயதான ஆர்யன் தத், இந்த உலகக் கோப்பையில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் நோக்குடன் தயாராகி வருகிறார். தத்தின் குடும்பம் 1980-களில் பஞ்சாப்பில் இருந்து நெதர்லாந்துக்கு சென்று விட்டது. என்றாலும் அவரது உறவினர்கள் இன்னும் பஞ்சாப்பில் இருக்கிறார்கள்.
கேப்டன்கள்
கனடா அணியில் 11 பேர் இந்திய நறுமணம் உடையவர்கள். இவர்களில் கேப்டன் தில்பிரீத் பஜ்வாவும் ஒருவர். ஜூனியர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளை பஞ்சாப்பில் விளையாடினாலும் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. 2020-ம் ஆண்டு கனடாவுக்கு இடம் பெயர்ந்த அவர் இன்று அந்த அணியின் கேப்டனாக உயர்ந்துள்ளார். ஆல்-ரவுண்டரான 23 வயதான தில்பிரீத் ஏற்கனவே 2024-ல் உலகக் கோப்பையில் விளையாடி இருக்கிறார். 2 ஆண்டு கழித்து இப்போது பிறந்த மண்ணில் இன்னொரு உலகக் கோப்பையில் கால்பதிக்கிறார்.
இதே போல் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளில் தலா 7 பேர் இந்திய பூர்வவாசிகள் இருக்கிறார்கள். தில்பிரீத் போலவே பஞ்சாப்பில் பிறந்தவரான ஜதிந்தர் சிங்கும் தான் தேர்வு செய்த நாட்டின் அணியை வழிநடத்தும் கவுரவத்தை பெற்றுள்ளார். ஓமன் அணியின் கேப்டனான அவர் 10 ஆண்டுக்கு மேலாக விளையாடி வருகிறார். இதுவரை 133 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஓமன் அணியின் அனைத்து லீக் ஆட்டங்களும் (ஜிம்பாப்வே, இலங்கை அயர்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன் மோத வேண்டும்) இலங்கையில் நடக்கிறது. அந்த அணி லீக் சுற்றை தாண்டுவது குதிரை கொம்பு என்பதால் சொந்த மண்ணில் உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறுவது கடினமே.
- அடுத்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்திய ரைபிள் சங்கத்துக்கு, ஆசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அளித்துள்ளது.
- இந்தியாவில் நடைபெறும் இந்த இரு போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான 20 இடங்களை வசப்படுத்தலாம்.
புதுடெல்லி:
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ரைபிள், பிஸ்டல், ஷாட்கன்) டெல்லியில் உள்ள கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் தளத்தில் அடுத்த ஆண்டு (2027) ஏப்ரல் 21-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது.
2028-ம் ஆண்டு லாஸ்ஏஞ்சல்சில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றான இந்த உலக கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான 12 ஒதுக்கீடு (கோட்டா) இடங்களை பெற முடியும்.
இந்த நிலையில் அடுத்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் (ரைபிள், பிஸ்டல்) போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்திய ரைபிள் சங்கத்துக்கு, ஆசிய துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் அளித்துள்ளது. இந்த போட்டியும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தகுதி சுற்றாகும். இந்த போட்டியில் நிர்ணயிக்கப்படும் இலக்கினை எட்டிப்பிடிப்பவர்கள் ஒலிம்பிக் போட்டிக்கான 8 இடங்களை (கோட்டாவை) கைப்பற்றலாம். இந்தியாவில் நடைபெறும் இந்த இரு போட்டியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான 20 இடங்களை வசப்படுத்தலாம்.
இது குறித்து இந்திய ரைபிள் சங்க பொதுச்செயலாளர் பவன்குமார் சிங் கூறுகையில், 'இரண்டு ஒலிம்பிக் கோட்டா போட்டிகளை இந்தியா நடத்துவது இதுவே முதல்முறையாகும். இதற்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியை அடுத்த ஆண்டு (ஏப்ரல் 21-30) டெல்லியில் நடத்துகிறோம். ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியும் அடுத்த ஆண்டு டெல்லியில் நடைபெறும். ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் முக்கிய போட்டிகளை நடத்துவதில் எங்களது திறமை மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது துப்பாக்கி சுடுதல் விளையாட்டில் இந்தியாவின் செல்வாக்கு வளர்ந்து வருவதையும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையையும் காட்டுகிறது. இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வார்கள். மேலும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியின் போது பிடித்த 22 இடங்களை மிஞ்சி, ஒருநாட்டுக்குரிய அதிகபட்சமான 24 இடங்களை பிடிப்பதே இலக்காக கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்' என்றார்.
இதற்கிடையே, இந்த ஆண்டுக்கான ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் இன்று தொடங்குகிறது. 13-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 20 நாடுகளை சேர்ந்த 300 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
- இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆடாது என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
- பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா வர மறுத்ததால் வங்காளதேச அணி நீக்கப்பட்டது.
கொழும்பு:
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 7-ந்தேதி முதல் அடுத்த மாதம் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி இந்தியா வர மறுத்ததால் வங்காளதேச அணி நீக்கப்பட்டு ஸ்காட்லாந்து சேர்க்கப்பட்டது குறித்தும், இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஆடாது என்று அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்து இருப்பது பற்றியும் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து மிட்செல் மார்ஷ் கூறுகையில், 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி தொடரில் பங்கேற்பது தொடர்பாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் முடிவுகள் குறித்து கருத்து தெரிவிக்க என்னிடம் எதுவுமில்லை.
உலகக் கோப்பையை வெல்லும் நோக்குடன் இந்த போட்டி தொடருக்கு செல்கிறோம். அதில் மட்டுமே நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆஸ்திரேலிய அணியின் பாதுகாப்பை உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாட்டிலுள்ள மக்கள் பார்த்து கொள்வார்கள் என்று நம்புகிறோம் என்றார்.






