என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்தது.
    • பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.

    மும்பை:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 2 முறை சாம்பியனான இங்கிலாந்து கத்துக்குட்டி அணியான நேபாளத்திடம் கடும் போராட்டத்துக்கு பிறகே வெற்றி பெற்றது.

    மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய நேபாளம் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 4 ரன்னில் வெற்றி பெற்றது.

    இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெறும் 4 ரன்களில் தோற்ற பின், 'இப்போட்டியில் இருந்து என்ன பாடம் கற்றீர்கள்?' என்ற கேள்விக்கு நேபாள் வீரர் நந்தன் யாதவ், மகேந்திர சிங் தோனி போல சில சிக்ஸர்கள் விளாச வேண்டும் என்பதே நாங்கள் கற்ற பாடம் என ஜாலியாக பதில் அளித்துள்ளார்.

    • வருவாய் பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும்.
    • இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது 2-வது கோரிக்கையாகும்.

    இஸ்லாமாபாத்:

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.

    இந்தப் போட்டியில் 20 நாடுகள் பங்கேற்றுள்ளன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன. 'ஏ' பிரிவில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் வருகிற 15-ந்தேதி கொழும்பில் மோதும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே 20 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவுடனான போட்டியை மட்டும் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானை ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) எச்சரித்து இருந்தது. ஆனாலும் பாகிஸ்தான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.

    வங்க தேசத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்ததாக அந்நாட்டு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

    இதற்கிடையே இந்தியாவுடன் விளையாட மறுக்கும் விவகாரம் தொடர்பாக பாகிஸ்தானுடன் ஐ.சி.சி. பேச்சுவார்த்தை நடத்தியது.

    ஐ.சி.சி. துணை தலைவர் இம்ரான் குவாஜா அசோசியேட் உறுப்பினர் இயக்குநரும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட்டின் பொதுச் செயலாளருமான முபாஷிர் உஸ்மானி ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின நக்வியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் வங்கதேச கிரிக்கெட் வாரியத் தலைவா் அமினுல் இஸ்லாமும் மோசின் நக்வியுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஐ.சி.சி. பாகிஸ்தான் இடையே பேச்சுவாா்த்தை நடத்தும் முன்பாக நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.

    இதே போல ஐ.சி.சி. துணைத் தலைவா், அமினுல் இஸ்லா முடனும் பேச்சுவாா்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.

    இந்தியாவுடனான போட்டி புறக்கணிப்பு முடிவை கைவிட ஐ.சி.சி.க்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் 3 நிபந்தனையை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.

    வருவாய் பகிர்வை அதிகரித்து தர வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும். இந்தியா-பாகிஸ்தான் இரு தரப்பு கிரிக்கெட் போட்டிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது நக்வியின் 2-வது நிபந்தனையாகும். மேலும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையாகும்.

    அதே நேரத்தில் பாகிஸ்தான் அரசின் முடிவே இறுதியானது என்றும் ஐ.சி.சி.யிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. மோசின் நக்வி இன்று பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கிறார். இந்த ஆலோசனைக்கு பிறகே முடிவு தெரிய வரும். 

    • பல பொருட்கள் கொண்டு செல்ல தடை.
    • மைதானத்திற்குள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

    2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. சென்னையில் உள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது.

    சேப்பாக்கம் மைதானத்திற்குள் "விசில்" எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளானது. சேப்பாகம் மைதானத்திற்குள் மதுபானம், சிகரெட், தண்ணீர் பாட்டில், டிரோன், லேப்டாப் என பல பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய போட்டியின் போது ரசிகர்கள் விசில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், மைதானத்திற்குள் ரசிகர்கள் விசில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாதது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் (TNCA) விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, "சேப்பாக்கம் மைதானத்திற்குள் விசில் தடை செய்யப்பட்டதற்கும் பிசிசிஐ, ஐசிசி மற்றும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. விசிலுக்கு தடை என்ற தகவலை மட்டும் போலீசார் எங்களிடம் தெரிவித்தனர்," என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

    • இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு நேரிடும்
    • பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை சந்தித்து ஐசிசி ஆலோசனை

    பாகிஸ்தான், 2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடுவோம் என்றும் ஆனால் பிப்.15-ல் கொழும்பில் நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான போட்டியை மட்டும் புறக்கணிப்போம் என்றும் தெரிவித்துள்ளது.

    மறுபக்கம் இந்தியா பாகிஸ்தான் உடன் விளையாட தயாராக இருக்கிறது என அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடுவதா? இல்லையா? என பாக்., கிரிக்கெட் வாரியம் 24 மணி நேரத்தில் முடிவெடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ரத்தானால் பெரும் பொருளாதார இழப்பு நேரிடும் என்பதால் லாகூரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரை சந்தித்து ஐசிசி தரப்பில் நேற்று சுமார் 5 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது.

    இதையடுத்து பாகிஸ்தான் அரசை சுலந்தாலோசித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது முடிவை அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது.

    • டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.
    • நேபாளம் அணி 180 ரன்கள் அடித்து தோல்வியடைந்தது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.

    அடுத்து ஆடிய நேபாளம் இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் அணி 4 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.

    நேபாள அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு இங்கிலாந்து கேப்டன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டி20 உலக கோப்பையில் இங்கிலாந்தை கதிகலங்க வைத்த நேபாள் அணிக்கு, தனது சேவைகள் தேவைப்பட்டால் வழங்கத் தயாராக உள்ளதாக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    • இந்திய அணி அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
    • வரும் 12 ஆம் தேதி டெல்லியில் நமீபியா அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

    இதையடுத்து, வரும் 12 ஆம் தேதி டெல்லியில் நமீபியா அணியை எதிர்த்து இந்தியா விளையாடவுள்ளது.

    இந்நிலையில், டி20 உலக கோப்பையில் பங்கேற்றுள்ள இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு டெல்லியில் உள்ள தனது வீட்டில் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் விருந்தளித்தார். இது தொடர்பான வீடியோ இனியாயத்தில் வைரலாகியுள்ளது. 

    • டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 184 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் பெத்தேல், ஹாரி புரூக் ஆகியோர் அரை சதம் கடந்தனர்.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 5வது லீக் ஆட்டம் மும்பையில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவரில் 184 ரன்கள் குவித்தது. பெத்தேல், ஹாரி புரூக் அரை சதம் கடந்தனர்.

    அடுத்து ஆடிய நேபாளம் இலக்கை எட்டிப்பிடிக்கும் வகையில் சிறப்பாக விளையாடியது. கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்ட நிலையில் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் அணி 4 ரன்னில் வெற்றியை பறிகொடுத்தது.

    நேபாள அணியினரின் சிறப்பான ஆட்டத்துக்கு இங்கிலாந்து கேப்டன் உள்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் போட்டிக்கு பிறகு நேபாள அணி கேப்டன் ரோகித் பவுடல் பேசியதாவது:

    எங்களது வீரர்கள் தங்களது முழு முயற்சியையும் களத்தில் காட்டினர். அவர்களை நினைத்துப் பெருமிதம் கொள்கிறேன்.

    நாங்கள் உலகக் கோப்பைக்கு நம்பிக்கையுடன் தான் வந்துள்ளோம். வெறுமனே பங்கேற்றுவிட்டு செல்வதற்காக இங்கு வரவில்லை.

    முயற்சி என வரும்போது பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் 100 சதவீத பங்களிப்பை வழங்கினோம்.

    கடைசி ஓவரை சாம் கர்ரன் உண்மையிலேயே சிறப்பாக வீசினார்.

    எங்களை நினைத்து நேபாள ரசிகர்கள் பெருமைப்படுவார்கள். நாங்கள் எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். அதேபோல், மற்ற அணிகளும் எந்த அணியையும் சாதாரணமாக நினைக்க மாட்டார்கள். இந்த ஆட்டம் உணர்த்திய செய்தி இது தான் என தெரிவித்தார்.

    • ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது.
    • கலப்பு இரட்டையரில் இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றார்.

    புதுடெல்லி:

    ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள கர்னிசிங் ரேஞ்சில் நடந்து வருகிறது. சீனியர், ஜூனியர், இளையோர் பிரிவில் நடைபெறும் இந்தப் போட்டியில் 20 நாடுகளைச் சேர்ந்த 311 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 118 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

    இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் சிறப்பாக செயல்பட்ட

    இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பாபுடா ஜோடி 505 புள்ளிகள் குவித்து தங்கம் வென்றது.

    கொரியா ஜோடி வெள்ளியும், ஜப்பான் ஜோடி வெண்கலமும் வென்றன.

    • டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • நேற்று முன்தினம் நடந்த லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    வாஷிங்டன்:

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மும்பையில் நடந்த லீக் போட்டியில் அமெரிக்க அணி இந்திய அணியுடன் மோதியது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பையில் விளையாடி வரும் அமெரிக்க அணிக்கு அந்நாட்டு அதிபர் டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு எனது வாழ்த்துகள். அமெரிக்க கிரிக்கெட் அணி வலுவாக இருக்கிறது. உங்கள் வெற்றிக்காக அமெரிக்கா காத்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.

    • அஜர்பைஜான் சர்வதேச பேட்மிண்டன் தொடர் அந்நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்றது.
    • இந்திய வீராங்கனை தேவிகா சிஹாக் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றார்.

    பாகு:

    அஜர்பைஜான் சர்வதேச பேட்மிண்டன் தொடர் அந்நாட்டு தலைநகர் பாகுவில் நடைபெற்றது.

    இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் தேவிகா சிஹாக், சக நாட்டு வீராங்கனை நவ்யா கந்தேரி உடன் மோதினார்.

    இதில் சிறப்பாக ஆடிய தேவிகா சிஹாக் 21-10, 21-13 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    தேவிகா சிஹாக் கடந்த வாரம் தாய்லாந்து ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஞ்சி கோப்பை தொடரின் காலிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
    • முதல் காலிறுதி போட்டியில் உத்தரகாண்ட் அணி வெற்றி பெற்றது.

    ஜாம்ஷெட்பூர்:

    ஜாம்ஷெட்பூரில் நடந்த முதல் அரையிறுதியில் ஜார்க்கண்ட், உத்தரகாண்ட் அணிகள் மோதின. டாஸ் வென்ற உத்தரகாண்ட் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆதித்யா சிங் 83 ரன்னிலும், கேப்டன் விராட் சிங் 47 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    உத்தராண்ட் சார்பில் ஜென்மெஜாய் ஜோஷி 4 விக்கெட்டும், ஆதித்யா ராவத், மயங்க் மிஸ்ரா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, முதல் இன்னிங்ஸ் ஆடிய உத்தரகாண்ட் அணி 371 ரன்கள் குவித்தது. ஜெகதீஷ் ச்சித் 70 ரன்னும், குனால் சண்டேலா 68 ரன்னும், அவ்னீஷ் சுதா 64 ரன்னும், அபய் நேகி 47 ரன்னும் எடுத்தனர்.

    136 ரன்கள் பின்தங்கிய நிலையில் ஜார்க்கண்ட் அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது. முதல் இன்னிங்ஸ் போல் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கேப்டன் விராட் சிங் 55 ரன்னும், குமார் குஷாரா 34 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், ஜார்க்கண்ட் அணி 2-வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உத்தரகாண்ட் அணி அரையிறுதிக்கும் தகௌதி பெற்றது.

    உத்தரகாண்ட் சார்பில் மயங்க் மிஸ்ரா 5 விக்கெட்டும், அபய் நேகி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்

    • டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய இலங்கை 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 6-வது லீக் போட்டியில் இலங்கை, அயர்லாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. குசால் மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கமிந்து மெண்டிஸ் 19 பந்தில் 44 ரன்கள் குவித்தார்.

    தொடர்ந்து ஆடிய அயர்லாந்து 19.5 ஓவரில் 143 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இலங்கை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    இலங்கை சார்பில் ஹசரங்கா, தீக்ஷனா தலா 3 விக்கெட்டும், பதிரனா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×