என் மலர்
விளையாட்டு
- ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
- அந்த அணியின் டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.
டார்வின்:
ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து இறங்கிய தென் ஆப்பிரிக்காவில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் அணியின் வெற்றிக்காகப் போராடினார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன் தேவைப்பட்ட நிலையில் ரிக்கல்டன் இருந்ததால் அந்த அணிக்கு வெற்றி மேல் நம்பிக்கை இருந்தது.
கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்கவில்லை. 2-வது பந்தை ரிக்கல்டன் தூக்கி அடித்தார். சிக்சர் செல்லும் என நினைத்த நிலையில், பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மேக்ஸ்வெல் அதனை அந்தரத்தில் பாய்ந்து பிடித்தார். தரையில் கால் படும் முன் பந்தை பவுண்டரி எல்லைக்கு உள்ளே தூக்கி வீசிய அவர், தரை இறங்கியதும் பவுண்டரிக்கு வெளியே இருந்து தாவி அற்புதமாக கேட்ச் பிடித்தார். இது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் பிரிட்டன் வீரர் கேமரூன் நூரி 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்டனின் கேமரூன் நூரி நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றார்.
நேற்று நடந்த 2வது சுற்றில் பிரிட்டனின் கேமரூன் நூரி, ஸ்பெயின் வீரர் ராபர்டோ பவுடிஸ்டா உடன் மோதினார்.
இதில் கேமரூன் நூரி 4-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் தாய்லாந்தில் நடைபெறுகிறது.
- இந்திய அணி தனது கடைசி தகுதிச்சுற்று ஆட்டத்தில் மியான்மருடன் மோதியது.
யாங்கோன்:
ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் (20 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து தொடர் அடுத்த ஆண்டு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.
இதற்கான தகுதிச்சுற்று மியான்மரில் நடக்கிறது. இதில் இந்திய மகளிர் அணி டி பிரிவில், மியான்மர், இந்தோனேசியா, துர்க்மெனிஸ்தானுடன் இடம் பெற்றிருந்தது.
இந்தியா முதல் ஆட்டத்தில் இந்தோனேஷியாவுக்கு எதிராக சமனும் (0-0), 2-வது போட்டியில் துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக அபார வெற்றியும் (7-0) பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது.
இந்நிலையில், இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் மியான்மருடன் விளையாடியது. இதில் வெற்றி பெற்றால் ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் விளையாடிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் கோல் அடித்தது.
அதன்பின் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் மியான்மரை வீழ்த்தி ஆசிய கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அசத்தியது. இந்தியா தரப்பில் பூஜா வெற்றிக்குரிய அந்த கோலை அடித்தார்.
இந்திய அணி கடந்த 2006-ம் ஆண்டு ஜூனியர் (19 வயதுக்குட்பட்டோர்) ஆசிய கோப்பை கால்பந்து தொடரில் விளையாடி இருந்தது. அதன்பிறகு 20 ஆண்டு கழித்து தற்போதுதான் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் போலந்தின் இகா ஸ்வியாடெக் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதிபெற்றார்.
இன்று நடந்த 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷியாவின் அனஸ்தசியா பொடபோவா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இகா ஸ்வியாடெக் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். 11-ம் தேதி நடைபெறும் அடுத்த சுற்றில் இகா ஸ்வியாடெக், உக்ரைன் வீராங்கனை மார்ட்டா கோஸ்டியூக் உடன் மோதுகிறார்.
- முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 178 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 161 ரன்களை மட்டுமே எடுத்தது.
டார்வின்:
தென் ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
இந்நிலையில், ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.
தொடக்க ஆட்டக்காரரான ரிக்கெல்டன் தனி ஆளாகப் போராடினார். அரை சதம் கடந்து 71 ரன்னில் அவுட்டானார். ஸ்டப்ஸ் 37 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 161 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 17 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்திரேலியா சார்பில் ஜோஷ் ஹேசில்வுட், பென் துவார்ஷியூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது.
- ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார்.
- அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது.
சகோதர பாசத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தில் கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் தினத்தையொட்டி இன்று நாடு முழுவதும் பெண்கள் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி மகிழ்ந்தனர்.
நாடு முழுக்க ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில்,இந்திய கிரிகெக்ட் வீரர் முகமது சிராஜுக்கு பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் பேத்தி ஜனாய் போஸ்லே ராக்கி கயிறு கட்டி விட்ட வீடியோ இணையத்தில் வைரலானது.
ஜனாய் போஸ்லே ஜனவரி மாதம் 16ம் தேதி அவர் தனது 23வது பிறந்தநாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் சிராஜ் கலந்துகொண்டது இணையத்தில் பேசுபொருளானது. ஒருவரும் காதலிக்கிறார்கள் என்று கிசுகிசு பரவியது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஜனாய் போஸ்லே முகமது சிராஜுக்கு ராக்கி கயிறு கட்டி விட்டுள்ளார்.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் மணீஷ் என்பவர் புதிய சிம் கார்ட் ஒன்றை வாங்கியுள்ளார்.
- மணீஷ் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து சிம் கார்டை திருப்பி அனுப்பினார்.
2025 ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஆர்.சி.பி. அணி கோப்பையை வென்றது. பெங்களூரு அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற பெருமையை ரஜத் படிதார் பெற்றார்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் மணீஷ் என்பவர் புதிய சிம் கார்ட் ஒன்றை வாங்கியுள்ளார். அவருக்கு கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாரின் பழைய ஃபோன் நம்பர் ஒதுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வீரர் ரஜத் படிதார் முந்தைய மொபைல் எண் 90 நாட்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்ததால், அந்த நம்பர் செயல் இழந்து புதிய நபருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, விராட் கோலி மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் ஆகியோர் ரஜத் படிதாரின் பழைய ஃபோன் நம்பருக்கு கால் செய்துள்ளனர்.
இதனை தெரிந்து கொண்ட ரஜத் படிதார் அந்த நபருக்கு போன் செய்து 'நான் ரஜத் படிதார் பேசுகிறேன்.. அந்த நம்பரை திருப்பி கொடுத்துவிடு' என கேட்டுள்ளார். இதனை நம்பாத அந்த நபர் 'அப்படியா நான் தோனி பேசுகிறேன்' என கிண்டலாக பேசியுள்ளார்.
இதனையடுத்து சில நிமிடங்களில் அவரது வீட்டுக்கு போலீசார் வந்து விசாரித்தபோதுதான் இது உண்மை என அவருக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் மணீஷ் அதிகாரிகளுடன் ஒத்துழைத்து சிம் கார்டை திருப்பி அனுப்பினார்.
- சிறப்பான திறமை இருந்தும் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை
- கம்பீர் கூறிய வார்த்தைகள் என் தன்னம்பிக்கையை அதிகமாக்கியது
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன், இந்திய அணிக்காக அறிமுகமாகி 9 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இதுவரை அவர் 50 சர்வதேச போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். சிறப்பான திறமை இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்று பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
இந்நிலையில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் குறித்து பேசிய சஞ்சு சாம்சன், "நான் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் டக்அவுட்டான பிறகு, டிரஸ்ஸிங் ரூமில் நான் மனச்சோர்வுடன் அமர்ந்திருந்தேன். அதைக் கவனித்த கவுதம் கம்பீர், என்ன நடந்தது? என்று கேட்டார்.
நான் அவரிடம் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் இரண்டிலும் ரன் அடிக்காமல் கோட்டைவிட்டுவிட்டேன் என்று கூறினேன் அதற்கு அவர், 'அதனால் என்ன? நீங்கள் 21 முறை டக்-அவுட்டானால் மட்டும் தான் நான் உங்களை அணியிலிருந்து நீக்குவேன்' என்று கூறினார். அவரின் வார்த்தைகள் என் தன்னம்பிக்கையை அதிகமாக்கியது" என்று தெரிவித்தார்.
- ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது.
- வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
டார்வின்:
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் ஆஸ்திரேலியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டார்வினில் இன்று நடக்கிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அண்மையில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்று அசத்திய கையோடு இந்த போட்டியில் களம் இறங்குகிறது.
ஆஸ்திரேலிய அணியில் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், மேக்ஸ்வெல், ஜோஷ் இங்லிஸ் என்று பெரிய பட்டாளமே இருக்கிறது. பந்து வீச்சில் ஹேசில்வுட், நாதன் எலிஸ், பென் துவார்ஷூயிஸ் மிரட்டக்கூடியவர்கள். தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் விளையாடுவார்கள் என்று ஆஸ்திரேலிய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அரங்கேறும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கான அணியை கட்டமைக்கும் முயற்சியை அந்த அணி இந்த தொடரில் இருந்தே தொடங்குகிறது.
தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தமட்டில் கடந்த ஜூன் மாதம் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது. அதன் பிறகு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்ற தென்ஆப்பிரிக்கா சமீபத்தில் ஜிம்பாப்வேயில் நடந்த 3 நாடுகள் பங்கேற்ற 20 ஓவர் போட்டியில் நியூசிலாந்திடம் 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவியது. அந்த தோல்வியில் இருந்து விடுபட்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்கு சிறப்பாக தயாராகும் ஆர்வத்தில் உள்ளது.
ஜிம்பாப்வேயில் நடந்த 20 ஓவர் போட்டியில் ஆடாத கேப்டன் மார்க்ரம், ரையான் ரிக்கெல்டன், வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபடா ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி இருப்பது தென்ஆப்பிரிக்க அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். மேலும் பேட்டிங்கில் டிரிஸ்டான் ஸ்டப்ஸ், லூஹான் டி பிரிட்டோரியஸ், பந்து வீச்சில் கார்பின் போஷ், லுங்கி இங்கிடி ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
உள்ளூர் சூழலை கச்சிதமாக பயன்படுத்தி ஆஸ்திரேலிய அணி தனது ஆதிக்கத்தை தொடர முனைப்பு காட்டும். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்டிங்கை கட்டுப்படுத்துவதை பொறுத்தே தென்ஆப்பிரிகாவின் வெற்றி வாய்ப்பு அமையும் எனலாம். வலுவான இரு அணிகளும் மல்லுக்கட்டும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இவ்விரு அணிகளும் இதுவரை சர்வதேச 20 ஓவர் போட்டியில் 25 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் ஆஸ்திரேலியா 17 ஆட்டங்களிலும், தென்ஆப்பிரிக்கா 8 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருக்கின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், கேமரூன் கிரீன், டிம் டேவிட், மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், பென் துவார்ஷூயிஸ், நாதன் எலிஸ், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
தென்ஆப்பிரிக்கா: மார்க்ரம் (கேப்டன்), ரையான் ரிக்கெல்டன், வான்டெர் டஸன், டிவால்ட் பிரேவிஸ், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், ஜார்ஜ் லிண்டே, பிரினெலன் சுப்ராயன், கார்பின் போஷ், ககிசோ ரபடா, நன்ரே பர்கர், லுங்கி இங்கிடி.
இந்திய நேரப்படி பிற்பகல் 2.45 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
- இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் வரும் 24-ம் தேதி தொடங்குகிறது.
இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட உள்ளனர்.
இந்நிலையில், இந்தப் போட்டியில் இருந்து உலக தரவரிசையில் 12-வது இடம் வகிக்கும் 27 வயது ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா காயம் காரணமாக விலகி இருக்கிறார்.
கடந்த ஜூன் மாதம் நடந்த விம்பிள்டன் போட்டியின் முதல் சுற்றில் தோல்வி அடைந்த படோசா, முதுகுவலி காரணமாக அதன் பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.
- இதில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
சின்சினாட்டி:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வருகிறது. இது அமெரிக்க ஓபனுக்கு முன்னோட்டமாக கருதப்படுகிறது. இந்தப் போட்டியில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
இதில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜானிக் சின்னர், சிட்சிபாஸ் ஆகியோர் நேரடியாக 2வது சுற்று ஆட்டத்துக்கு தகுதி பெற்றனர்.
இன்று நடந்த 2வது சுற்றில் இத்தாலியின் ஜானிக் சின்னர், கொலம்பியாவின் டேனியல் இலாஹி கலன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜானிக் சின்னர் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் ஹங்கேரியின் பேபியன் மாரோசானை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 49 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தரோபா:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டி கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 2-1 என கைப்பற்றி யது.
இந்நிலையில், பாகிஸ்தான்-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி தரோபாவில் உள்ள பிரையன் லாரா மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 49 ஓவரில் 280 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இவின் லீவிஸ் 60 ரன்னும், கேப்டன் ஷாய் ஹோப் 55 ரன்னும், ரோஸ்டன் சேஸ் 53 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய குடகேஷ் 18 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 281 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறஙகியது. ஹசன் நிவாஸ் 63 ரன்னும், கேப்டன் முகமது ரிஸ்வான் 53 ரன்னும், ஹூசைன் தலத் 37 பந்தில் 41 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 284 ரன் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.






