என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Byமாலை மலர்19 Aug 2018 7:48 PM GMT (Updated: 19 Aug 2018 7:48 PM GMT)
இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். #AsiansGames2018 #PMModi
ஜகர்த்தா :
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தம் மற்றும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா பதக்கங்களை வென்றுள்ளது.
இதனால், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ட்விட்டர் மூலமாக பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதலில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டிலா இணை வெண்கலப் பதக்கம் வென்றது.
இதைத்தொடர்ந்து, மல்யுத்தத்த போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவை பாராட்டியும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளின் இரண்டாம் நாளில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் மங்கோலியா மற்றும் தாய்லாந்துடன் 9-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.#AsiansGames2018 #PMModi
ஆசிய விளையாட்டு போட்டிகள் இந்தோனேசியாவில் நடைபெற்று வருகிறது. இன்றைய 2-வது நாளில் மல்யுத்தம் மற்றும் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா பதக்கங்களை வென்றுள்ளது.
இதனால், பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ட்விட்டர் மூலமாக பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கலப்பு இரட்டையர் துப்பாக்கி சுடுதலில் இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டிலா இணை வெண்கலப் பதக்கம் வென்றது.
வெண்கலம் வென்று இந்தியாவின் பதக்க எண்ணிக்கையை முதலில் துவத்தி வைத்த ரவி குமார் மற்றும் அபுர்வி சண்டிலா இணைக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
Our talented shooters give us our first medals at the @asiangames2018.
— Narendra Modi (@narendramodi) August 19, 2018
Well done @apurvichandela and Ravi Kumar for bagging the Bronze medal in the 10m Air rifle mixed team event. #AsianGames2018pic.twitter.com/p6pQLhgR1b
இதைத்தொடர்ந்து, மல்யுத்தத்த போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ எடை ப்ரீஸ்டைல் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியாவை பாராட்டியும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
ஆசிய விளையாட்டு போட்டிகளின் இரண்டாம் நாளில் இந்தியா ஒரு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் மங்கோலியா மற்றும் தாய்லாந்துடன் 9-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது.#AsiansGames2018 #PMModi
Congratulations @BajrangPunia for the memorable victory in the 65 kg freestyle wrestling. This win is even more special because it is India's first Gold in the @asiangames2018. Best wishes for your future endeavours. #AsianGames2018
— Narendra Modi (@narendramodi) August 19, 2018
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X