என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
ராஜஸ்தான் மாநில முதல்வர் வேட்பாளராக மீண்டும் வசுந்தரா ராஜே முன்னிருத்தப்படுவார் - அமித் ஷா
Byமாலை மலர்22 July 2018 12:01 AM GMT (Updated: 22 July 2018 12:01 AM GMT)
அடுத்து நடைபெற உள்ள ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக வசுந்தரா ராஜே சிந்தியா மீண்டும் முன்னிருத்தப்படுவார் என பா.ஜ.க தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜெய்பூர் :
ராஜஸ்தான் மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கு தயாராகும் விதமாக அம்மாநில பா.ஜ.க செயற்குழு கூட்டம் ஜெய்பூரில் நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தின் நிறைவு நாளான நேற்று பா.ஜ.க தலைவர் அமித் ஷா கலந்துகொண்டார்.
பா.ஜ.க நிர்வாகிகள் முன்னிலையில் பேசிய அமித் ஷா, ராஜஸ்தான் மாநிலத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையில் பா.ஜ.க தேர்தலை சந்திக்கும், வசுந்தரா, அருதிப்பெரும்பான்மையுடன் மீண்டும் முதல்வராக வருவார். சத்தீஷ்கர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்.
பா.ஜ.க தொண்டர்களும், நிர்வாகிகளும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி பா.ஜ.க.வை வெற்றி வாகை சூட வைக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X