என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
காவி உடை அணிவதால் என்னைப்பற்றி தவறான கருத்துக்கள் உள்ளன: யோகி ஆதித்யநாத்
Byமாலை மலர்3 April 2017 2:31 PM GMT (Updated: 3 April 2017 2:31 PM GMT)
காவி உடை அணிவதால் தன்னைப்பற்றி தவறான கருத்துகள் நிலவுவதாக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
புது டெல்லி:
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கட்சி 312 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து காவி உடை அணிந்த இளம் துறவி யோகி ஆதித்யநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரசு அலுவலகங்களில் பான் மசாலா மெல்லக்கூடாது, சட்டவிரோத இறைச்சிக்கூடங்கள் மூடல் என தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை யோகி ஆதித்யநாத் பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில், காவி உடை அணிவதால் தன்னைப்பற்றி தவறான கருத்துகள் நிலவுவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ என்னைப்பற்றி நிறைய தவறான கருத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. நான் காவி உடையில் இருப்பதாக நிறைய மக்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் நாட்டில் ஏராளமான பேர் காவி உடையை வெறுப்பவர்களாக உள்ளனர்.என்னுடைய வேலைத்திறமையால் அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வெல்வேன். உத்தர பிரதேசத்தை ஊழலற்ற அரசாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.
இன்னும் 14 தினங்களில் கரும்பு விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 முதல் 6 சர்க்கரை ஆலைகள் மாநிலம் முழுவதும் தொடங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்திருக்கிறார்.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க கட்சி 312 இடங்களைக் கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. இதனைத் தொடர்ந்து காவி உடை அணிந்த இளம் துறவி யோகி ஆதித்யநாத் அம்மாநில முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
அரசு அலுவலகங்களில் பான் மசாலா மெல்லக்கூடாது, சட்டவிரோத இறைச்சிக்கூடங்கள் மூடல் என தான் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை யோகி ஆதித்யநாத் பிறப்பித்து வருகிறார்.
இந்த நிலையில், காவி உடை அணிவதால் தன்னைப்பற்றி தவறான கருத்துகள் நிலவுவதாக யோகி ஆதித்யநாத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “ என்னைப்பற்றி நிறைய தவறான கருத்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. நான் காவி உடையில் இருப்பதாக நிறைய மக்கள் கூறுகிறார்கள். அப்படியென்றால் நாட்டில் ஏராளமான பேர் காவி உடையை வெறுப்பவர்களாக உள்ளனர்.என்னுடைய வேலைத்திறமையால் அனைத்து தரப்பு மக்களின் இதயங்களையும் வெல்வேன். உத்தர பிரதேசத்தை ஊழலற்ற அரசாக மாற்ற வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்றார்.
இன்னும் 14 தினங்களில் கரும்பு விவசாயிகளின் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 முதல் 6 சர்க்கரை ஆலைகள் மாநிலம் முழுவதும் தொடங்கப்படும் என்றும் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்திருக்கிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X