என் மலர்
தேர்தல் செய்திகள்
பாராளுமன்றத்துக்கு வருகிற 12-ந்தேதி 59 தொகுதிகளில் 6-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
அதுபோல வருகிற 19-ந்தேதி 59 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இரு கட்ட தேர்தலுக்காக 118 தொகுதிகளில் தற்போது தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பிரதமர் மோடியும், பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இந்த 118 தொகுதிகளில் கணிசமான இடத்தை கைப்பற்ற வேண்டும் என்று வியூகம் அமைத்துள்ளனர்.
அதற்காக அவர்கள் இருவரும் இந்த 118 தொகுதிகளில் கூடுதல் பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளனர். அதன்படி பா.ஜனதா தலைவர் அமித்ஷா 11 கூட்டங்களில் பேச முடிவு செய்துள்ளார். தேவைப்பட்டால் கூடுதலாக 5 பேரணிகளை நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

பிரசாரம் செய்ய கடைசி நாளான 17-ந்தேதிக்குள் மேலும் 10 இடங்களில் அவர் பிரசாரம் செய்ய உள்ளார். மோடியும் இதே அளவுக்கு பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் காங்கிரஸ் தலைவர்களும் கூடுதல் இடங்களில் பேசுவதற்கு முடிவு செய்துள்ளனர். #Loksabhaelections2019 #BJP #NarendraModi
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. இந்த தேர்தலின் 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மீதமுள்ள தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பதிவாகும் 50% வாக்குகளை விவிபேட்டுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என 21 எதிர்க்கட்சிகள் மனு அளித்தது. இந்த மனுவை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், 21 எதிர்க்கட்சிகளின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. #VVPAT #Supremecourt
மதுரை:
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த 2 நாட்களாக பிரசாரம் செய்தார்.
நேற்று நாகமலை புதுக்கோட்டையில் பிரசாரத்தை தொடங்கிய அவர் பல்வேறு பகுதிகளுக்கும் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழகம் முழுவதும் தற்போது முக்கிய பிரச்சினையாக உள்ளது குடிநீர். இதனை தீர்க்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களுக்கு குடிநீர்தான் முக்கியம். குடிமராமத்து செய்யாமலேயே செய்ததாக கூறி ஆட்சியாளர்கள் கணக்கு காட்டுகின்றனர். மக்கள் மீது நேசம் இல்லாமல், அவர்கள் நலனில் அக்கறை இல்லாமல் ஆட்சி நடக்கிறது.
ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மழை அதிகமாக பெய்கிறது. இதை நான் சொல்லவில்லை. விஞ்ஞான ரீதியாக சொல்லப்படுகிறது. ஆனால் குடி நீருக்காக தண்ணீரை அரசு பாதுகாப்பதில்லை.

தமிழகத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றன. மக்களை விலைக்கு வாங்க வசதியாக அவர்களை ஏழைகளாகவே ஆட்சியாளர்கள் வைத்துள்ளனர்.
அ.தி.மு.க-தி.மு.க. ஆகிய இரு கார்ப்பரேட் நிறுவனங்களும் அழிய வேண்டும். அவர்களிடம் பணம் உள்ளது. எங்களிடம் இல்லை. மக்களாகிய நீங்கள்தான் தலைவர்கள். அரசியல்வாதிகள் உங்களது சேவகர்கள்.
மக்களை நம்பிதான் நான் களம் இறங்கி இருக்கிறேன். உங்கள் ஓட்டுகளை விலை கொடுத்து விடாதீர்கள். மக்கள் நினைத்தால் மாற்றம் உறுதியாக ஏற்படும். அதற்கான விதைகள் தூவுவோம். மக்களின் அன்பு எங்களுக்கு அதிகமாக உள்ளது.
உங்கள் குழந்தைகளுக்காக நான் பேசுகிறேன். அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை இப்போதிருந்தே செய்ய தொடங்குங்கள்.
இவ்வாறு அவர் பேசினார். #KamalHaasaan
மதுரை:
அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருப்பது சரியான தீர்ப்பு. சுப்ரீம் கோர்ட்டு விளக்கம் கேட்டுள்ளதால் சபாநாயகர், கொறடா சட்டப்படி சிக்கி உள்ளனர்.
ஏற்கனவே 18 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீசு அனுப்பியபோது இது போன்ற உத்தரவு வந்திருந்தால் தமிழக அமைச்சர்கள் சிறைக்கு சென்றிருப்பார்கள். இனி என்ன செய்தாலும் முதல்-அமைச்சர் பழனிசாமி ஆட்சியை தொடர முடியாது.

வருகிற 23-ந்தேதிக்கு பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட வேண்டியதுதான். மத்தியில் பா.ஜனதா வெற்றி பெற்றாலும் அ.தி.மு.க.வுக்கு பலவீனமாகவே இருக்கும்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நகைச்சுவை நடிகரைபோல செயல்படுகிறார். முதல்-அமைச்சர் பழனிசாமி எப்படி பிரசாரம் செய்தாலும் திருப்பரங்குன்றத்தில் அ.தி.மு.க. டெபாசிட் இழப்பது உறுதி.
ஜெயலலிதா மரணத்தின் மர்மம், பொள்ளாச்சி, கொடநாடு விவகாரம் குறித்து அ.ம.மு.க. ஆட்சிக்கு வந்ததும் விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #ADMK #ThangaTamilselvan

அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றியபோது, 'ராஜீவ் காந்தி ‘மிஸ்டர் கிளீன்’ என காங்கிரஸ் கட்சியினரால் போற்றப்பட்டார். ஆனால் கடைசி காலத்தில் அவருடைய வாழ்க்கை ‘நம்பர்–1’ ஊழல்வாதியாக தான் முடிவடைந்தது' என கூறினார்.
மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும் இது தொடர்பாக நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் சிங்வி, ராஜீவ் சுக்லா, சல்மான் குர்ஷித் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்தனர்.
அப்போது, இந்திய கலாச்சாரத்துக்கு எதிராகவும், சட்டவிரோதமாகவும் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர் தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். #PMModi #Congress
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 29ம் தேதி தொடங்கிய பாராளுமன்ற தேர்தல் இன்று 2வது கட்டமாக நடைபெறுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் மே 12,19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

அதன் பின்னர் தனது மனைவி சாக்ஷியுடன் ராஞ்சி தொகுதியில் உள்ள ஜேவிஎம் ஷியாமலி பள்ளிக்கு சென்று வாக்களித்தார். மேலும் தோனி தனது மகள் சைவாவை தோளில் தூக்கி வந்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் தோனி பேசவில்லை. உடனடியாக அங்கிருந்து தனது குடும்பத்தாரை காண சிமாலியா பகுதிக்கு காரில் புறப்பட்டார். #MSDhoni #LSPolls2019
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக காங்கிரஸ் பலமுறை தேர்தல் கமிஷனில் புகார் அளித்து இருந்தது.
ஆனால் தேர்தல் கமிஷன் காங்கிரசின் இந்த புகார்களை நிராகரித்து தள்ளுபடி செய்தது. மோடியும், அமித்ஷாவும் தேர்தல் விதிமுறை மீறலில் ஈடுபடவில்லை என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இந்த நிலையில் மோடி, அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷனுக்கு எதிராக இன்று முறையிட்டது.
அசாம் மாநிலம் சில்சார் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுஷ்மிதாதேவ் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

அமித்ஷா பேசிய அதே விஷயத்தை மற்றொரு நபர் பேசி இருக்கிறார். ஆனால் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது. அதே சமயம் அமித்ஷா தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. ஒருதலைபட்சமாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி தீபக்குப்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ஏ.எம். சிங்கி ஆஜரானார். அப்போது மோடி, அமித்ஷா மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வில்லை என்று குற்றம் சாட்டினார்.
அப்போது ஆதாரங்களை தாக்கல் செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த அப்பீல் மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 8-ந்தேதி விசாரிக்கிறது. #PMModi #Amitshah
பாராளுமன்ற தேர்தல் 5வது கட்டமாக இன்று நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள், ராஜஸ்தானில் 12, மத்திய பிரதேசம், மேற்கு வங்காளத்தில் தலா 7, பீகாரில் 5, ஜார்கண்டில் 4, காஷ்மீரில் 2 என 7 மாநிலங்களில் மொத்தம் 51 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று ஓட்டு போட்டனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சரவணணை ஆதரித்து நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-
பிரதமர் மோடி இந்தியாவில் சர்வாதிகார ஆட்சி நடத்துகிறார். நீட் தேர்வு ரத்து, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம், மாநில பட்டியலில் கல்வி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக கொடுத்துள்ளது.
மோடியின் நடவடிக்கையால் விவசாயம், சிறுதொழில் உள்ளிட்டவைகள் அழிந்து விட்டது. நாட்டின் வளர்ச்சி 5 ஆண்டுகள் பின்னால் சென்று விட்டது. நாட்டில் பிரிவினையை ஏற்படுத்துவது ஜனநாயகமல்ல.
தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். அதே சமயத்தில் தேர்தல் முடிவுக்கு பின் அ.தி.மு.க. பல அணிகளாக பிரிந்து சிதறி விடும். அதிகாரத்திற்காகவும், பணத்திற்காகவும் அவர்கள் கூட்டணி. ஆனால் நமது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. தேர்தலில் அனைத்து இடங்களிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.

பாதுகாப்புப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து வாரணாசி தொகுதியில் கடந்த மாதம் தேஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் தேஜின் வேட்பு மனுவை நிராகரித்தது.






