என் மலர்tooltip icon

    தேர்தல் செய்திகள்

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். #LokSabhaElections2019

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது அவர், பூந்தமல்லி பெரிய ஏரி சீரமைக்கப்பட்டு சுற்று சூழல் பூங்கா அமைக்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் க பாண்டியராஜன், இரா.மணிமாறன்,ஜி.திருநாவுக்கரசு, சி.ஒய்.ஜாவித்அகமத், கே.எஸ்.ரவிசந்திரன், பூவை.எம்.ஞானம்,டி.தேவேந்திரன், கே.ஹரிகுமார், சி.சார்லஸ், அந்தமான் முருகன், பூவை.எஸ்.கோபிநாத், பூவை.எச்.சாபி, சல்மான் ஜாவித் உள்பட நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்று வாக்குசேகரித்தனர். #LokSabhaElections2019

    தேனி தொகுதியில் தனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுவதாக தங்க தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

    தினகரன் கட்சியில் முக்கிய பிரமுகராக உள்ள இவர் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ.வாக இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இப்போது எம்.பி. தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார்.

    இந்த தொகுதியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத்குமார் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    3 பேருமே பிரபல நபர்கள் என்பதால் தமிழ்நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாக தேனி உள்ளது.

    தேர்தல் போட்டி தொடர்பாக தங்க தமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டது. அதுவும் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கட்சிக்கு மக்களிடம் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பொதுமக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் இப்போது எங்களையே ஆதரிக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத் கட்சியில் மிகவும் ஜுனியர். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் என்ற ஒரே காரணத்தினால் அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள்.

    நான் அ.தி.மு.க. பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை அ.தி.மு.க.வில் முக்கிய பிரமுகராக இருந்தவர். அவர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் சீனியர்.



    டி.டி.வி.தினகரனால் தான் ஓ.பன்னீர்செல்வம் அரசியலிலும், அரசிலும் முன்னுக்கு வந்தவர். இப்போது அவருக்கு எதிராகவே மாறி இருக்கிறார். இது அவருக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவை ஏற்படுத்தும்.

    இந்த தொகுதியில் உள்ள நிலைமை எனக்கு சாதகமாக இருக்கிறது. டி.டி.வி.தினகரன் இந்த தொகுதி எம்.பி.யாக இருந்து சிறப்பான சேவைகளை செய்தார். அவர் எல்லா தரப்பு மக்களின் பாராட்டையும் பெற்றார்.

    இப்போது இங்குள்ள நிலவரப்படி அ.தி.மு.க. தனது செல்வாக்கை இழந்து விட்டது. அவர்கள் எல்லாம் அ.ம.மு.க.வுக்கு ஆதரவாக மாறி விட்டார்கள். எனக்கும் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க. களத்திலேயே இல்லை.

    ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க.வை நாங்கள் தோற்கடித்தோம். அதுபோன்ற நிலை இங்கும் ஏற்படும். இந்த தொகுதியில் முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால் அவர்கள் ஓட்டு அ.தி.மு.க.வுக்கு கிடைக்காது. கடந்த தேர்தலில் 3 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றது. அதே வேட்பாளரை இப்போது ஏன் நிறுத்தவில்லை?

    ஓ.பன்னீர்செல்வம் குடும்ப அரசியலை எதிர்ப்பதாக கூறுகிறார். ஆனால் தனது மகனை வேட்பாளராக்கி இருக்கிறார். தனது தம்பியை ஆவின் சேர்மனாக்கி இருக்கிறார்.

    இவ்வாறு தங்க தமிழ்ச் செல்வன் கூறினார். #LokSabhaElections2019 #ThangaTamilselvan #ADMK #EVKSElangovan
    கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி என்று நடிகர் விசு கூறினார். #LokSabhaElections2019 #ADMK
    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து நடிகர் விசு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் நடக்கும் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கருத்துகணிப்புகள் கூறுவதாக சொல்கிறார்கள். நான் எத்தனையோ கருத்துக்கணிப்புகளை பார்த்தவன். கருத்துக்கணிப்புகளை கண்டு பயப்படப்போவதில்லை. கருத்துக்கணிப்புகளை வென்று பா.ஜனதா- அ.தி.மு.க. கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெறப்போவது உறுதி.

    காஷ்மீரில் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் குண்டு போட்டது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் வருத்தம் தான் தெரிவித்தார். ஆனால் இப்போது நடந்த தாக்குதலுக்கு அடுத்த 15 நாளில் பதிலடி கொடுக்கப்பட்டது. ஆனால் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் அன்னிய சக்திகளின் கைக்கூலிகளாக மாறி நமது நாட்டையும், பிரதமரையும் விமர்சனம் செய்கிறார்கள் என்றால் இவர்களை ஏதோ ஒரு அன்னிய சக்தி இயக்குகிறது உறுதியாகி விட்டது. அடுத்து 5 ஆண்டுகளுக்கு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியா உலக அளவில் நம்பர் ஒன் நாடாக விளங்கும். எனவே நீங்கள் பா.ஜ.க.வை ஆதரியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #LokSabhaElections2019 #ADMK

    தேர்தல் விதிமுறைகளை நான் எந்த வகையிலும் மீறவில்லை. எனக்கு பிடித்தமான கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது என்று நடிகர் சுரேஷ்கோபி கூறினார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    திருவனந்தபுரம்:

    பிரபல மலையாள நடிகர் சுரேஷ்கோபி தற்போது பா.ஜனதா கட்சி சார்பில் டெல்லி மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.

    இதற்கிடையில் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக சுரேஷ்கோபி திருச்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தனது தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளார்.

    சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் இளம்பெண்களை சாமி தரிசனம் செய்ய அனுமதித்த விவகாரம் கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தேர்தல் பிரசாரத்தின் போது சுவாமி ஐயப்பன் பெயரையோ அல்லது வழி பாட்டுத்தலங்களை குறிப்பிட்டோ பிரசாரம் செய்யக் கூடாது என்று மாநில தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனா கூறியிருந்தார்.

    இந்த நிலையில் திருச்சூர் தேக்கின்காடு பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் சுரேஷ்கோபி கலந்து கொண்டு பேசினார். அப்போது சபரிமலை சுவாமி ஐயப்பன் மக்களின் உணர்வாக உள்ளார். சபரிமலை கோவில் விவகாரத்தில் பக்தர்களின் மனம் புண்பட்டு உள்ளது. அதில் நானும் ஒருவன். ஆனால் இந்த விவகாரத்தை நான் தேர்தலில் ஆயுதமாக பயன்படுத்த விரும்பவில்லை என்றார்.

    இது திருச்சூர் மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அனுபமா கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தேர்தல் விதிமுறைகளை மீறி சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தியதால் அதுபற்றி 48 மணி நேரத்திற்குள் விளக்கம் அளிக்கும்படி சுரேஷ் கோபிக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது.

    இதுகுறித்து நடிகர் சுரேஷ்கோபி கூறியதாவது:

    தேர்தல் விதிமுறைகளை நான் எந்த வகையிலும் மீறவில்லை. சுவாமி ஐயப்பன் பெயரை பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்யமாட்டேன் என்று அந்த கூட்டத்திலேயே நான் கூறினேன். எனக்கு பிடித்தமான கடவுளின் பெயரை வெளியே கூறி பேசக்கூடாது என்பதை ஏற்கமுடியாது. இதற்கு பொதுமக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். எனக்கு கலெக்டர் அனுப்பி உள்ள நோட்டீசுக்கு தகுந்த விளக்கம் அளிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #ThrissurConstituency #SureshGopi
    காலாப்பட்டில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 3/4 லட்சம் மதிப்புள்ள ஜவுளிகள், வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. #LokSabhaElections2019

    சேதராப்பட்டு:

    புதுவை பாராளுமன்ற மற்றும் தட்டாஞ்சாவடி சட்ட சபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட் களை கொடுப்பதை தடுக்க பறக்கும் படை மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.

    காலாப்பட்டு இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று இரவு புதுவை மாநில எல்லையான காலாப்பட்டு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். இன்று அதிகாலை 4 மணி அளவில் புதுவையில் இருந்து சென்னை நோக்கி கார் ஒன்று வேகமாக சென்றது. சந்தேகம் அடைந்த போலீசார் அந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். காரின் உள்ளே அட்டை பெட்டிகள் இருந்தன. அதனை பிரித்து பார்த்த போது ஜவுளிகள் மற்றும் வெள்ளி நகைகள் இருந்தது.

    இதைத் தொடர்ந்து காரை ஓட்டி வந்த சென்னை ராயபுரத்தை சேர்ந்த அப்துல் காதர் (வயது 45) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் புதுவையில் இருந்து சென்னைக்கு ஜவுளிகள் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும் இவைகளை கொண்டு செல்ல உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட ஜவுளிகள் மற்றும் வெள்ளி நகைகளின் மதிப்பு ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் ஆகும்.

    பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை வணிக வரித்துறையிடம் போலீசார் ஒப்படைத்தனர்.  #LokSabhaElections2019

    விவசாயக் கடனுக்கு வட்டி கிடையாது என்றும், அனைத்து விவசாயிகளுக்கும் நிதியுதவி திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. #LokSabhaElections2019 #BJPManifesto
    புதுடெல்லி:

    டெல்லியில் இன்று மக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியதாவது:-

    ஒவ்வொரு துறையிலும் குழு அமைத்து, விவாதிக்கப்பட்டு பாஜக தேர்தல் அறிக்கை உருவாகி உள்ளது. இந்த தேர்தல் அறிக்கை 130 கோடி மக்களுக்கும் திருப்தி அளிக்கும். புதிய பாரதத்தை நோக்கி பாஜக தேர்தல் அறிக்கை உள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில் 74 சிறப்பு அம்சங்கள் உள்ளன.

    பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் வரை மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்கும்.  தேசப் பாதுகாப்புக்கு மோடி அரசு முன்னுரிமை தரும்.

    கிராமப்புற வளர்ச்சிக்கு 25 லட்சம் கோடி ரூபாயில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.  விவசாய கடனுக்கு வட்டி கிடையாது.  5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டம் அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அதாவது, கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும்.

    நதிகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும். 60 வயதான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.



    நாடு முழுவதும் 75 புதிய மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும். 2022ம் ஆண்டுக்குள் தேசிய நெடுஞ்சாலைகள் இரு மடங்காக விரிவுபடுத்தப்படும். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #LokSabhaElections2019 #BJPManifesto
    முதல்முறையாக வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை ‘‘செல்பி’’ எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. #LokSabhaElections2019 #Voters

    கவுகாத்தி:

    இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மிசோரம் மாநிலத்தில் 7 லட்சத்து 2,189 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 63 சதவீதம் பேர் வாக்களித்தனர். பழங்குடி இன மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த தனித் தொகுதியில் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குப்பதிவு சுமாராகவே இருந்தது.

    எனவே இந்த தடவை ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. மிசோரமில் இந்த தடவை 83 வயது காங்கிரஸ் வேட்பாளர் ரூபா உள்பட 6 பேர் களத்தில் உள்ளனர்.

     


    கடந்த ஆண்டு (2018) மிசோரம் மாநில சட்ட சபைக்கு தேர்தல் நடந்த போது சுமார் 80 சதவீதம் வாக்குகள் பதிவானது. தற்போது பாராளுமன்ற தேர்தலில் 7 லட்சத்து 23 ஆயிரத்து 663 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேரை வாக்களிக்க வைக்க மிசோரம் மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஆசிஷ்குந்த்ரா முயற்சிகளில் ஈடுபட்டார்.

    இதற்காக அவர் இளைஞர்களுக்கும், முதன்முறையாக வாக்களிக்க உள்ளவர்களுக்கும் செல்பி போட்டி ஒன்றை அறிவித்துள்ளார். முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள ‘மை’யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

    வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #Voters

    காஞ்சி பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல்,இரும்புலி, தண்டலம், பருக்கல்,நெற்குனம், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். #LokSabhaElections2019 #ADMK

    திருப்போரூர்:

    காஞ்சி பாராளுமன்ற அ.தி. மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், சித்தாமூர் ஒன்றியத் திற்குட்பட்ட சரவம்பாக்கம், விளாங்காடு, புத்திரன்கோட்டை, இரும்புலி, தண்டலம், பருக்கல், பெருக்கரணை, நெற்குனம், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். பெண்கள் மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இப்பகுதி மக்களின் குறைகளை கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றுவேன் என கூறி வேட்பாளர் மரக தம்குமரவேல் வாக்குகள் சேகரித்தார்.

    வேட்பாளருடன் சித்தாமூர் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மருத்துவரணி டாக்டர். பிரவீன்குமார், பா.ம.க. பொன்.கங்காதரன், தேமுதிக ஒன்றியசெயலாளர் பகதூர்சேட்டு, பா.ஜ.க. மாவட்டதலைவர் செந்தமிழ்அரசு, த.மா.கா. புரட்சிபாரத உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #ADMK

    பாராளுமன்றத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய மந்திரியும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவருமான ராஜ்நாத் சிங் வெளியிட்டார். #LokSabhaElections2019 #BJPManifesto
    புதுடெல்லி:

    இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தேர்தலுடன் ஆந்திரா, அருணாச்சல பிரதேசம், ஒடிசா மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. இதற்கான களப்பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தேர்தல் அறிக்கைகள் மூலம், மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து, பிரசாரம் மேற்கொண்டுள்ளன.

    காங்கிரஸ் கட்சி கடந்த வாரம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில், வறுமை ஒழிப்பு, வேலைவாய்ப்பு, விவசாய கடன்கள் தள்ளுபடி, ஏழைகளுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மிஞ்சும் அளவுக்கு பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்கும் எனவும், நாட்டின் வளர்ச்சி, தேச பாதுகாப்பு, விவசாயிகளின் வருவாய், வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.


    முதற்கட்ட வாக்குப்பதிவு 11-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். உறுதிமொழி பத்திரம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்த தேர்தல் அறிக்கையில், பாஜக அரசின் 5 ஆண்டு கால சாதனைகள் பற்றிய தகவல்களுடன், பல்வேறு புதிய மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. நடைமுறையில் சாத்தியமாகும் வகையில் பாஜக தேர்தல் அறிக்கையை தயாரித்திருப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார்.

    நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் மற்றும்  மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, கடந்த 5 ஆண்டுகளாக ஏழைகளின் அரசாக மத்திய பாஜக அரசு செயல்பட்டதாகவும், பல்வேறு சாதனை திட்டங்களை நிறைவேற்றியிருப்பதாகவும் கூறினார். மோடியின் 5 ஆண்டு ஆட்சியில் எவ்வித ஊழல்களும் நடைபெறவில்லை என்றும் கூறினார். #LokSabhaElections2019 #BJPManifesto
    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறு முகம். தினமும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொது மக்களிடம் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார். #LokSabhaElections2019

    திருப்போரூர்:

    திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறு முகம். தினமும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று பொது மக்களிடம் தனது ஆதரவாளர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்குகள் சேகரித்து வருகிறார்.

    பி.வி.களத்தூர், ஆனூர், காட்டூர், கருமாரப்பாக்கம் கிராமங்களில் வேட்பாளர் எஸ்.ஆறுமுகம் பொது மக்களிடம் அதிமுக அரசின் சாதனைகளை விளக்கியும், இப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார்.

    அ.தி.மு.க. ஒன்றியசெயலாளர் விஜயரங்கன், ஒன்றிய பொருளாளர் அரிதாஸ், பா.ம.க மாவட்டசெயலாளர் காரணை ராதா, தேமுதிக ஒன்றிய செயலாளர் பிரகாஷ், உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் அவருடன் வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி ரூ.40 ஆயிரம் கோடியை தி.மு.க. வீணடித்து விட்டதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    சிவகங்கை:

    சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் எச்.ராஜா, மானாமதுரை சட்டசபை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் நாகராஜன் ஆகியோரை ஆதரித்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:-

    அண்ணா தி.மு.க. மெகா கூட்டணி. வெற்றி கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறது. தி.மு.க. கூட்டணி சுயநல சந்தர்ப்பவாத கூட்டணி. இந்த தேர்தலில் நீங்கள் தான் எஜமானர்கள். யார் நல்லது செய்தார்கள் என்று எண்ணிப்பார்த்து தீர்ப்பு வழங்க வேண்டும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மந்திரி சபையில் தி.மு.க. இடம் பெற்றிருந்தது. 10 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்தார்கள். தமிழகத்துக்கு ஏதாவது செய்தது உண்டா? மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த தி.மு.க. என்ன செய்தது. நல்ல திட்டங்களை கொண்டு வந்தது உண்டா? மத்தியில் 9 தி.மு.க.வினர் அமைச்சர்களாக இருந்தார்கள். அப்படி இருந்தும் தமிழகத்துக்கு என்ன பிரயோஜனம்? தமிழகத்தில் இருந்து ரூ.1 லட்சம் கோடி மத்திய அரசுக்கு வரியாக சென்றது. அதில் நல்ல திட்டங்களை தமிழகத்துக்கு கொண்டு வந்தது உண்டா?

    சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றப்போவதாக சொல்லி பல ஆயிரம் கோடி வீணானது தான் மிச்சம். அத்திட்டம் சரி வராது.

    ஆனால் தி.மு.க. அடம் பிடித்து அத்திட்டத்தை நிறைவேற்றுவதாக கூறி 40 ஆயிரம் கோடியை பாழடித்தது தான் மிச்சம். கடலில் போட்டார்களோ? அல்லது அவர்கள் எடுத்துக் கொண்டார்களோ என்று தெரியவில்லை. இப்படி உருப்படியில்லாத காரியங்களைத் தான் தி.மு.க. செய்ததே தவிர வேறு எதையும் செய்யவில்லை. தமிழக ஜீவாதார உரிமைகளை விட்டு கொடுத்தது தி.மு.க.

    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்தது. இதனை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த அம்மா கூறினார். மத்தியில் கூட்டணி ஆட்சியில் தி.மு.க. இருந்தது. ஆனால் அவர்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் அதனை வெளியிட்டிருக்க முடியும். ஆனால் அதனை செய்யவில்லை.



    அம்மா தான் சட்ட போராட்டம் நடத்தி மத்திய அரசிதழில் வெளியிட செய்தார். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை அம்மா நிறைவேற்றி தந்தார். மக்களுக்காக பார்த்து பார்த்து திட்டங்களை கொண்டு வந்தார்.

    இந்த தேர்தலுடன் அண்ணா தி.மு.க. காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் கூறிவருகிறார். இந்த இயக்கத்தை 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உருவாக்கினார். இது தொண்டர்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் 27 ஆண்டு காலம் பொது செயலாளராக இருந்து அம்மா கொடுத்த இயக்கத்தை வழி நடத்தி 1½ கோடி தொண்டர்கள் உள்ள இயக்கமாக உயர்த்தினார். இது யாரும் அசைக்க முடியாத எக்கு கோட்டை. எப்படி காணாமல் போகும். இந்த இயக்கம் ஒரு ஆலமரம். 1½ கோடி தொண்டர்கள் விழுதுகளாக இருந்து தாங்கி பிடித்திருக்கிறார்கள். புயல், பூகம்பம், சுனாமி என எது வந்தாலும் அசைக்க முடியாது. தி.மு.க. என்றாலே வன்முறை தான். கடைக்கு போய் பிரியாணி சாப்பிட்டால் காசு கொடுக்கணுமா, இல்லையா? தி.மு.க.வினர் பிரியாணி கடையில் போய் சாப்பிட்டு விட்டு பணமும் கொடுக்காமல், ஊழியர்களையும் உரிமையாளரையும் தாக்கி அடித்து உதைக்கிறார்கள். அழகு நிலையத்துக்குச் சென்று பெண்களை தாக்கி இருக்கிறார்கள். செல்போன் கடைக்கு சென்று தாக்கி இருக்கிறார்கள். இது தான் தி.மு.க. ஆட்சியில் இல்லாத போதே இப்படி ஆடுகிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் என்ன ஆகும்?

    எனவே மக்களுக்கு நல்லது செய்ய தமிழகம் தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழவும், மத்தியில் நாட்டை பாதுகாப்பாக வைக்க பிரதமர் மோடி மீண்டும் பிரதமராகவும், அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு அளியுங்கள்.

    இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

    அமைச்சர் பாஸ்கரன் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #LokSabhaElections2019 #OPanneerSelvam
    பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய வளர்ச்சி நிதி கிடைக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #BJP #TTVDhinakaran

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் நெல்லை பாராளுமன்ற தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் மைக்கேல் ராயப்பனை ஆதரித்து கீழப்பாவூர், ஆலங்குளம், பேட்டை, நெல்லை, மேலப்பாளையம், நாங்குநேரி, வள்ளியூர், பணகுடி பகுதியில் பிரசாரம் செய்தார்.

    நெல்லை டவுனில் நடந்த கூட்டத்தில் டி.டி.வி. தினகரன் பேசும் போது கூறியதாவது:-

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு தான் மக்கள் வாக்களித்தனர். பா.ஜ.க.வுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை. அந்த கோபத்தில் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழக மக்களை கடந்த 5 ஆண்டுகளாக வாட்டி வதைக்கிறது. மக்கள் மீது பல்வேறு வரி சுமைகளை ஏற்றியது.

    தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை. வளர்ச்சி திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு மக்கள் வாக்களித்த ஒரே காரணத்தால் மத்திய அரசு தமிழக மக்களை வஞ்சித்தது. அந்த அரசுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சமரசம் செய்துள்ளது.


    மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக அரசு மாறிவிட்டது. ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்த மத்திய அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிப்பது எந்த விதத்தில் நியாயம். அதனால் தான் நாங்கள் அதை துரோகிகள் கூட்டணி என்று சொல்கிறோம். இந்த தேர்தலில் துரோகிகளின் கூட்டணிக்கு பாடம் புகட்ட வேண்டும். அதற்கு நீங்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அவர்கள் ஏற்கனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி, தேசிய முற்போக்கு கூட்டணிகளில் இடம் பெற்றிருந்தனர். அதாவது, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். பா.ஜ.க. கூட்டணியிலும் இடம் பெற்றிருந்தனர். அதனால் தான் நாங்கள் அந்த கூட்டணியை சந்தர்ப்பவாத கூட்டணி என்கிறோம். எங்கள் கட்சி ஒருபோதும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்காது. இதேபோல் மு.க.ஸ்டாலின் சொல்வாரா? அவர் சொல்லமாட்டார். ஏனென்றால், தி.மு.க. பதவி, ஆட்சி அதிகாரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள். இந்த தேர்தலில் சந்தர்ப்பவாத கூட்டணிக்கும் பாடம் புகட்ட வேண்டும்.

    பா.ஜ.க. மதத்தின் பெயரால் நாட்டை பிரித்து ஆள நினைக்கிறார்கள். அமைதி பூங்காவான நமது நாட்டுக்கு மத சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். நாங்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலாக இருப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.  #BJP #TTVDhinakaran

    ×