என் மலர்
விருதுநகர்
- கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும்.
- 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
கிளிமஞ்சாரோ சிகரமானது தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலையாகும்.
இது ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் அனைத்திலும் மிக உயர்ந்ததாக இருக்கிறது. இயற்கை எழிலுடன் கூடிய இந்த சிகரத்தை தொடுவது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. பல கோடி செலவில் தயாரிக்கப்படும் ஒரு சில திரைப்படங்களிலும் இங்கு காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.
இந்த சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன.
இதில், கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலையாக உள்ளது. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை.
ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும். இந்த கிளிமஞ்சாரோ மலைமீது ஏற பல்வேறு மலைவழிகள் உள்ளன.
அதில் "மச்சாமே" என்பது சிறந்த பாதையாக கண்டறியப்பட்டுள்ளது. கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இதுபற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். இதில் ஏறுவது எளிமையானதாக கருதப்பட்டாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் கடினத்துடன், ஆபத்தானதாகவும் உள்ளது.
மலையேறும் அனைவருமே மூச்சுவிடக் கடினம், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" என்று அழைக்கப்படும் கொடுமுடியை அடைகிறார்கள்.
குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.
இந்தநிலையில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் உள்பட 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
அதுபற்றிய விபரம் வருமாறு:-
தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ் செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உகுரு சிகரம் (5,895 மீ.) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளனர்.
இதில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (வயது 5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25) மற்றும் கடலூரைச் சேர்ந்த சக்திவேல் (32), காங்கயத்தை சேர்ந்த 40 வயதான அமர்நாத் ஆகியோர் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர்.
மேலும், தாம்பரத்தை சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4,720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.
உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு படைத்துள்ளார்.
அதேபோல் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு நாள்தோறும் பக்தர்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மாலை 4 மணிக்குள் திரும்பி வர வேண்டும், இரவில் தங்கு வதற்கு அனுமதி இல்லை.
கடந்த சில தினங்களாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் கடந்த 17-ந்தேதி முதல் இன்று வரை பக்தர்கள் கோவிலுக்கு மலை ஏறி செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த 18-ந்தேதி ஐப்பசி மாத சனி பிரதோஷம், நேற்று தீபாவளி திருநாள், இன்று ஐப்பசி மாத அமாவாசை திருநாள் வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இன்று சில பக்தர்கள் மட்டும் அனுமதி உண்டா எனக் கேட்டனர். ஆனால் வனத்துறையினர் அனுமதி வழங்காததால் தாணிப்பாறை வனத்துறை கேட் பகுதியில் கற்பூரம் ஏற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இன்று அதிகாலையில் இருந்து சதுரகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் ஓடையிலும் தண்ணீர் கூடுதலாக வருகிறது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளையும் அனுமதி மறுக்கப்படும் என்று கூறப்படுகிறது. பக்தர்கள் இன்றி சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுவாமிகளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம், சிறப்பு பூஜை நடைபெற்றது.
- நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
- கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன.
விருதுநகர்:
விருதுநகர் வணிகச் சந்தையில் வாரந்தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. இதில் இந்த வாரம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விற்கப்படும் எண்ணெய் வகைகளின் விலை நிலவரம் வருமாறு:-
நல்லெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 4,300 ரூபாய், கடலை எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,600 ரூபாய், தேங்காய் எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 6,500 ரூபாய், ரீபைண்ட் ஆயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,400 ரூபாய் , விளக்கெண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,550 ரூபாய், பாமாயில் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,030 ரூபாய் , கடுகு எண்ணெய் 15 கிலோ டின் ஒன்றுக்கு 2,700 க்கு விற்கப்படுகிறது.
சில்லறை விலையில் எண்ணெய் வகைகள் விலை நிலவரம் :-
நல்லெண்ணெய் ஒரு கிலோ 290 ரூபாய்க்கும் கடலை எண்ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும், ரீபைண்ட் ஆயில் ஒரு கிலோ 170 க்கும், தேங்காய் எண்ணெய் ஒரு கிலோ 460 ரூபாய்க்கும், விளக்கெண் ணெய் ஒரு கிலோ 190 ரூபாய்க்கும் , பாமாயில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கும், கடுகு எண்ணெய் ஒரு கிலோ 190 க்கும் விற்கப்படுகிறது.
நெய் 15 கிலோ டின் ஒன்றிற்கு ரூ.10,500, சில்லறை விலையில் ஒரு கிலோ ரூ.660-க்கும் விற்கப்படுகிறது.
கடந்த வாரம் விற்ற விலையிலேயே மாற்றமின்றி எண்ணெய் விலைகள் தொடர்கின்றன. தீபாவளி வரை இந்த நிலையே தொடரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
- பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு:
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியுள்ள நிலையில், மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் மழை காரணமாக இம்மாவட்டங்களில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே, மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் சதுரகிரி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மலைப் பகுதியில் மழை பெய்து திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்படும் என்ப தால், மழை பெய்யும் நேரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையேறிச் சென்று கோவிலில் வழிபடுவதற்கு வனத்துறையினர் தடை விதிப்பது வழக்கம்.
இந்நிலையில், ஐப்பசி மாத சனி பிரதோஷம் மற்றும் அமாவாசை முன்னிட்டு நாளை (17-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. எனினும் இப்பகுதியில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக, பக்தர்கள் மலையேறிச் சென்று கோவிலில் வழிபட வனத்துறை தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் யாரும் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு வர வேண்டாம் என வனத்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
- இருவரும் சாப்பிட்டதற்கு பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி உள்ளார்.
- விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியப்பட்டி பகுதியில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த இருவர் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா ஆர்டர் செய்த நிலையில் சால்னா ஊற்றி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சால்னா குழம்பில் ஏதோ மிதப்பது போல தெரியவர பரோட்டா சாப்பிட்டவர்கள் அதனை எடுத்து பார்த்த போது வெட்டுக்கிளி பூச்சியொன்று குழம்பில் செத்து மிதந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் காண்பித்து நடந்ததை கூறிய போது வழக்கம் போல ஓட்டல் ஊழியர்கள் பாத்திரங்களை மூடாத காரணத்தால் ஒன்றிரண்டு பூச்சி விழுந்திருக்கலாம் எனவும் அது ஒன்றும் செய்யாது எனவும் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
இதற்காக இருவரும் சாப்பிட்டதற்கு பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி உள்ளார். எனினும், இருவரும் சாப்பிட்டதற்கு பணம் செலுத்தி விட்டு ஓட்டலை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேய ஒவ்வாமை ஏற்பட்டு இருவரும் அடுத்தடுத்து வாந்தி எடுக்க ஆரம்பித்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ம.ரெட்டியாபட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஓட்டல் சம்பவம் குறித்து வந்த புகாரையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில் அங்கு விரைந்து சென்ற திருச்சுழி உணவு பாதுகாப்பு அலுவலர் வீரமுத்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுகள் மேற்கொண்டதில் சுகாதார குறைபாடு மற்றும் உணவு தயாரிப்பில் அலட்சியம் காரணமாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையென தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இயங்கிய உணவகத்தை உடனடியாக மூட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
- பிளவக்கல் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு, கோவிலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
வத்திராயிருப்பு:
வடக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் அதி கன மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரமான விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலும், மாலை நேரங்களில் கன மழையும் பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக வத்திராயிருப்பு, கூமாபட்டி, மகாராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
அந்த வகையில் வத்திராயிருப்பை அடுத்த பிளவக்கல் பகுதியில் அமைந்துள்ள பெரியாறு, கோவிலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. 47.56 அடி கொள்ளளவு கொண்ட பெரியாறு அணையில் நேற்று வரை 18 அடி தண்ணீர் மட்டுமே இருப்பில் இருந்தது.
நேற்று பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 6 அடி உயர்ந்து தற்போது 24 அடி தண்ணீர் உள்ளது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 212 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அந்த பகுதியில் மட்டும் நேற்று 26 மி.மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது.
இதேபோல் கோவிலாறு அணை பகுதியில் 37.8 மி.மீட்டரும், வத்திராயிருப்பில் 12 மி.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.
- பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
- தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தீபாவளியை ஒட்டி, பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் அருகில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
- கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார்.
- கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கரூர் சம்பவத்தில் ஒரு அமைச்சர் தேம்பி தேம்பி அழுகிறார். அவருக்கு ஆஸ்கர் தரலாம்.
* அமைச்சருக்கு ஆஸ்கர் வழங்க பரிந்துரைப்பேன்.
* நீதிமன்றம் முழுமையான விசாரணை குழு அல்லது கமிஷனை நியமித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
- நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதன் உண்மைநிலை வெளிவர வேண்டும்.
* நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
* கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.
* உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார்.
- நண்பராக நயினார் நாகேந்திரன் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.
விருதுநகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழ்நாட்டிற்கு பெருமையும் மகிழ்ச்சியும் சேர்க்கின்ற விஷயம். அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் மட்டும் அல்ல, அவர் ஒரு நேர்மையான நல்ல மனிதர். அவர் வெற்றி பெற்றது உண்மையிலேயே மகிழ்ச்சி.
தனிப்பட்ட முறையில் எனக்கு நல்ல நண்பர் நயினார் நாகேந்திரன். கூட்டணியில் இருந்து நான் வெளியேறும்போது எல்லா காரணங்களையும் சொன்னேன். தனிப்பட்ட முறையில் எனக்கும் அவருக்கும் எந்தவிதமான மனவருத்தமும் கோபமும் கிடையாது. ஒரு நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்.
அண்ணாமலை கட்சியை அரவணைத்து செல்கிறார். செங்கோட்டையனின் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் என்பது அம்மாவின் தொண்டர்கள் அனைவரின் விருப்பம். அவரது முயற்சி கண்டிப்பாக வெற்றி அடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
- மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
சாத்தூர்:
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர், தாயில் பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் அனைத்து ஆலைகளிலும் பட்டாசு தயாரிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாத்தூர் அருகில் உள்ள கீழத்தாயில்பட்டி கிரா மத்தில் சிவகாசியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குயில் பட்டாசு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த பட்டாசு ஆலை நாக்பூர் உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அறைகளில், சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலக்கும் பணியில் ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு அறையில் மேற்கூரை மட்டும் இடிந்து தரைமட்டமாகி சேதம் அடைந்துள்ளது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக தொழிலாளர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த வெடிவிபத்து பற்றி குறித்து தகவல் அறிந்த வெம்பக்கோட்டை மற்றும் சாத்தூர் தீயணைப்பு மீட்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெடிவிபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் யாரேனும் காயம் அடைந்துள்ளனரா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
- திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என உறுதி அளித்தார்.
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தில் நேற்று இரவு விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, திருச்சுழி தொகுதி வளம் பெற அ.தி.மு.க. ஆட்சியில் காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவோம் என காரியாபட்டியில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.
இதனிடையே, கூட்டத்தின் நடுவே சென்ற தி.மு.க. நிர்வாகியின் கார் கண்ணாடி அடித்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க. சேர்மனின் சகோதரர் ஓட்டி சென்ற காரை சுற்றி வளைத்து கண்ணாடியை உடைத்து அவர்களை அ.தி.மு.க.வினர் விரட்டி அடித்துள்ளனர்.
முன்னதாக, திருச்சி அருகே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்ற கூட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தாக்கப்பட்டது கடும் கண்டனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.






