என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young Reacher"

    • கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும்.
    • 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

    கிளிமஞ்சாரோ சிகரமானது தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலையாகும்.

    இது ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் அனைத்திலும் மிக உயர்ந்ததாக இருக்கிறது. இயற்கை எழிலுடன் கூடிய இந்த சிகரத்தை தொடுவது ஒரு சாதனையாகவே கருதப்படுகிறது. பல கோடி செலவில் தயாரிக்கப்படும் ஒரு சில திரைப்படங்களிலும் இங்கு காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளன.

    இந்த சிகரத்தின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5,895 மீட்டர் (19,340 அடி) ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு 'உகுரு' என்று பெயர். கிளிமஞ்சாரோ மலையில் கிபோ, மாவென்சி, இழ்சிரா என மூன்று எரிமலை முகடுகள் உள்ளன.

    இதில், கிளிமஞ்சாரோ எந்தவொரு மலைத்தொடரையும் சாராத தனிமலையாக உள்ளது. இமயமலைத் தொடர்களில் உள்ள மலைகளை ஒப்பிடும் பொழுது கிளிமஞ்சாரோவின் உயரம் அதிகம் இல்லை.

    ஆனால் கிளிமஞ்சாரோதான் உலகில் உள்ள தனிமலைகளில் மிக உயரமான மலை ஆகும். இந்த கிளிமஞ்சாரோ மலைமீது ஏற பல்வேறு மலைவழிகள் உள்ளன.

    அதில் "மச்சாமே" என்பது சிறந்த பாதையாக கண்டறியப்பட்டுள்ளது. கிளிமஞ்சாரோ மலையில் ஏற முயல்பவர்கள் இதுபற்றி உரிய தகவல்களைச் சேகரித்து, தேவையான வசதிகளைத் தயார்படுத்திக் கொள்வதுடன் உடல் தகுதியையும் கொண்டிருத்தல் அவசியம். இதில் ஏறுவது எளிமையானதாக கருதப்பட்டாலும், உயரத்தினாலும், மிகக் குறைந்த வெப்பநிலை காரணமாகவும் கடினத்துடன், ஆபத்தானதாகவும் உள்ளது.

    மலையேறும் அனைவருமே மூச்சுவிடக் கடினம், உடல்வெப்பக் குறைவு, தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் நல்ல உடற்தகுதி கொண்ட இளையோரே "உகுரு" என்று அழைக்கப்படும் கொடுமுடியை அடைகிறார்கள்.

    குறிப்பிடத்தக்க அளவிலான மலையேறுவோர் அரை வழியிலேயே தமது முயற்சியைக் கைவிட்டுவிடுகிறார்கள்.

    இந்தநிலையில் இந்தியாவில் தமிழகத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் உள்பட 10 பேர் தங்களது பெற்றோர்களுடன் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.

    அதுபற்றிய விபரம் வருமாறு:-

    தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ் செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உகுரு சிகரம் (5,895 மீ.) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்துள்ளனர்.

    இதில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள பி.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (வயது 5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவையைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25) மற்றும் கடலூரைச் சேர்ந்த சக்திவேல் (32), காங்கயத்தை சேர்ந்த 40 வயதான அமர்நாத் ஆகியோர் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர்.

    மேலும், தாம்பரத்தை சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4,720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.

    உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு படைத்துள்ளார்.

    அதேபோல் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • செல்வம் தனது துறையில் உலகளாவிய அளவில் 99,567 இடங்களில் 1,053 இடத்தை பிடித்துள்ளார்.
    • இதனையடுத்து செல்வம் எட்டையபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    தூத்துக்குடி:

    அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம், மற்றும் எல்சேவியர் பதிப்பகம் வெளியிட்ட உலகின் தலை சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது ஆண்டாக, வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறையின் உதவி பேராசிரியர் செல்வம் இடம்பெற்றுள்ளார்.

    உலகளாவிய தரவரிசை பட்டியலில் இந்த வருடம் 84,658 இடத்தை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு 1,23,040 மற்றும் 2021-ல் 1,78,847 தரவரிசை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    36 வயதான இளம் விஞ்ஞானி செல்வத்தின் ஆய்வு கட்டுரைகள் 2013 முதல் 2022 வரை பூமி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சுற்றுச்சூழல் அறிவியல், புவி வேதியியல் மற்றும் புவி இயற்பியல் ஆகிய பல்வேறு பிரிவுகளில் செல்வம் வெளியிட்ட 87 ஆய்வுக் கட்டுரைகளை அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம், மற்றும் எல்சேவியர் பதிப்பகம் எடுத்துக் கொண்டது.

    செல்வம் தனது துறையில் உலகளாவிய அளவில் 99,567 இடங்களில் 1,053 இடத்தை பிடித்துள்ளார். நிலத்தியல் பிரிவில் தமிழ்நாட்டில் இருவர் இடம்பெற்றுள்ளார்கள் அதில் இவர் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எல்சேவியர் அனைத்து துறைகளிலிருந்தும் மொத்தம் 210,198 விஞ்ஞானிகளைத் தேர்ந்துஎடுத்துள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளில் 4,635 பேர் இந்தியாவைச் சேர்ந்த வர்கள். இந்தப் பட்டியல் ஆராய்ச்சியாளர்களை 22 அறிவியல் துறைகள் மற்றும் 174 துணைத் துறைகளாக வகைப்படுத்தியது என்பது குறிப்பிடதக்கது.

    இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலா ளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்ச ருமான கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், அரசு வக்கீல் ஆனந்த கபரியேல்ராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர் சரவணக்குமார், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், பகுதி பொருளாளர் உலகநாதன், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மற்றும் கருணா, மணி, உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×