என் மலர்tooltip icon

    விழுப்புரம்

    • தியாகிகளின் உயிர் தியாகம் வீண் போகவில்லை.
    • இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்தார்.

    திண்டிவனம்:

    வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பா.ம.க.வில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு அவரது நினைவிடங்களில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    தற்போது தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதன் ஒரு பகுதியாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு அங்குள்ள அரசியல் பயிலரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 21 பேரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    முன்னதாக பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காரல் மார்க்ஸ், அம்பேத்கர் ஆகியோரது சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேராசிரியர் தீரன், பு.தா அருள்மொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த ராமதாஸ், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு உயிர்நீத்த தியாகிகளின் 38-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தியாகிகளின் உயிர் தியாகம் வீண் போகவில்லை. தியாகிகளின் தியாகத்தால் பலர் பயன் பெற்று வருகின்றனர். 10.5 சதவீத இடஒதுக்கீட்டினை கண்டிப்பாக பெறுவோம் என தெரிவித்தார்.

    மேலும் இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை ராமதாஸ் தெரிவித்தார்.

    அதனைத் தொடர்ந்து சித்தணி, பாப்பம்பட்டு, பனையபுரம், கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தூண்களில் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்துகிறார்.

    • பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாள்.
    • ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள்.

    திண்டிவனம்:

    வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு 1987-ம் ஆண்டு செப்டம்பர் 17-ல் நடைபெற்ற போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 வன்னியர்களின் உருவப்படங்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் டாக்டர் அன்புமணி திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 21 தியாகிகள் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    இடஒதுக்கீடு போராட்டத்தில் 21 தியாகிகள் காவல் துறையினரால் கொடூரமாக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். ஆளும் தி.மு.க.விற்கு எதைப்பற்றியும் கவலை இல்லை. வன்னியர் சமூக மக்களின் வாக்கு மட்டும் அவர்களுக்கு வேண்டும். 15 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி டிசம்பர் மாதம் 17-ந் தேதி சிறை நிரப்பும் போராட்டம் அமைதியான முறையில் நடைபெறும்.

    தமிழக அமைச்சரையும், முதலமைச்சரையும் சந்தித்து இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கூறியும் எதுவும் செய்யவில்லை. சமூக நீதி பற்றி பேச தி.மு.க.விற்கு அருகதை கிடையாது. பெரியாரின் பிறந்த நாளான இன்று சமூக நீதி நாள். ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திவிட்டார்கள். ஆனால் தமிழகத்தில் நடத்தவில்லை. சமூக நீதி விரோதி தி.மு.க. தான். மக்கள் நிச்சயமாக தி.மு.க.வை புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அன்புமணி அஞ்சலி செலுத்தியதையொட்டி திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகம் பகுதி மற்றும் தனியார் திருமண மண்டபம் அருகே 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு வன்னியர் சங்க அலுவலகம் அருகே ராமதாஸ் தரப்பினர் மற்றும் அன்புமணி தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் வன்னியர் சங்க அலுவலகத்திற்குச் செல்லும் கேட் மூடப்பட்டு வருவாய் துறை முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    திண்டிவனத்தை தொடர்ந்து அன்புமணி சித்தணி, பாப்பம்பட்டு போன்ற பகுதிகளில் உள்ள நினைவு தூண்களில் மலர் தூவி அஞ்சலி செலுத்த உள்ளார்.

    • தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
    • தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    வன்னியர்களுக்காக தொடங்கப்பட்ட பா.ம.க.வில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு அவரது நினைவிடங்களில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ந் தேதி டாக்டர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

    தற்போது தந்தை, மகனுக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் இரு அணிகளாக சென்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதன் ஒரு பகுதியாக தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாஸ் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு அங்குள்ள அரசியல் பயிலரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள 21 பேரின் உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    முன்னதாக பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் தோட்டம் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையொட்டி தைலாபுரம் தோட்டம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணி, ராமதாஸ் மூத்த மகள் ஸ்ரீகாந்தி, பேராசிரியர் தீரன், பு.தா அருள்மொழி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    அதனைத் தொடர்ந்து சித்தணி, பாப்பம்பட்டு, பனையபுரம் , கோலியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவு தூண்களில் டாக்டர் ராமதாஸ் அஞ்சலி செலுத்துகிறார்.

    • அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது.
    • தலைவர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது.

    பாமக கட்சியின் கவுரவத் தலைவர் ஜி.கே. மணி இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் 28-5-2025-யுடன் முடிவடைந்து விட்டது. அவருக்கு பதவியே இல்லை. தலைவர் பதவியே இல்லாதவர் எப்படி மாமல்லபுரத்தில் பொதுக்குழுவை கூட்ட முடியும்?. கட்சியின் அமைப்பு விதி, நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லாமல் செயற்குழு, பொதுக்குழு என எந்த நடவடிக்கையும் செயல்படக் கூடாது எனக் கூறுகிறது.

    விதியை மீறி எப்படி பொதுக்குழுவை கூட்ட முடியும்?. மாமல்லபுரத்தில் கூட்டப்பட்ட பொதுக்குழு செல்லாது. அதில் நியமனம் செய்யப்பட்ட நிர்வாகிகளின் பதவியும் செல்லாது.

    தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியிருந்தாலும், பதவிக்காலம் முடிந்த பின்னர் அது செல்லாது. 29ஆம் தேதி நிர்வாகிகள் குழு கூடி ராமதாஸை தலைவராக்க வேண்டும் எனக்கூறி தேர்வு செய்யப்பட்டுள்ளார். நிர்வாகக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதால் ராமதாஸ் நிறுவனர் மற்றும் தலைவர் என அழைக்கப்படுகிறார். செயற்குழு நிர்வாகக்குழு எடுத்த முடிவை அங்கீகரிக்கிறது. அதன்பின் மாநில பொதுக்குழுவில் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு எடுத்த முடிவை முழுமையாக அங்கீகரிக்கிறது.

    தலைவர் என்று கடிதம் எழுதுவது மக்களை திசை திருப்புவதற்கான நாடகம். தேனாம்பேட்டையில் இருந்து தி.நகருக்கு முகவரி மாற்றி, தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இது மோசடி என வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இதன் மூலமாகவே தேர்தல் ஆணையம் கடிதம் அங்கு சென்றுள்ளது. அந்த கடிதத்தை வைத்து அன்புமணி ராமதாஸ் தலைவர், வடிவேல் ராவணன் பொதுச் செயலாளர், திலகபாமா பொருளாளர் எனக் கூறுவது மோசடி.

    இவ்வாறு ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.

    • ராமதாஸ் வீடு அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அன்புமணி ஆதரவாளர்கள் கொண்டாடினர்.
    • தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களை சந்தித்தபோது அன்புமணி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிற்கு 2 முறை அவகாசம் கொடுத்தும் அவர் எந்த ஒரு பதிலும் அளிக்காததால் அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் செயல் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக டாக்டர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார்.

    இதையடுத்து நேற்று பா.ம.க. மற்றும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டதாக டாக்டர் அன்புமணி தரப்பினர் திண்டிவனம் டாக்டர் ராமதாஸ் வீடு அருகே பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் அன்புமணி ஆதரவாளர்கள் கொண்டாடினர்.

    இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திப்பதற்கு முக்கிய நிர்வாகிகள் தற்போது தைலாபுரம் தோட்டத்திற்கு ஒவ்வொருவராக வர தொடங்கியுள்ளனர். இதனால் தைலாபுரம் தோட்டத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி, ஓடி உழைத்து 96,000 கிராமங்களுக்கு சென்று பா.ம.க.வை உருவாக்கி உள்ளேன்.
    • அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கூறிய போதும் அதனை அன்புமணி மதிக்கவில்லை.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் இருந்து டாக்டர் அன்புமணியை நீக்கி ராமதாஸ் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ் கூறுகையில்,

    * தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கமளிக்கவில்லை.

    * கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணியுடன் பா.ம.க.வினர் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது.

    * நான் இன்றி அன்புமணியும், அவரது ஆதரவாளர்களும் வளர்ந்திருக்க முடியாது.

    * பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட அன்புமணி தனியாக கட்சியை ஆரம்பித்து கொள்ளலாம்.

    * கஞ்சியோ, கூழோ குடித்து 45 ஆண்டுகள் ஓடி, ஓடி உழைத்து 96,000 கிராமங்களுக்கு சென்று பா.ம.க.வை உருவாக்கி உள்ளேன்.

    * அப்பா சொல்லை கேட்டு நடக்க வேண்டும் என்று மூத்தவர்கள் கூறிய போதும் அதனை அன்புமணி மதிக்கவில்லை.

    * பல்வேறு தரப்பினர் கூறியும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை அன்புமணிக்கு இல்லை.

    * பிள்ளையாகவே இருந்தாலும் எனது கட்சிக்கு உரிமை கொண்டாட முடியாது.

    * அன்புமணி ஆதரவாளர்களை மன்னிக்க தயாராக இருக்கிறேன்.

    * இரா. என்ற இன்சியலை தவிர ராமதாஸ் என்ற பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது.

    * அன்புமணியை பா.ம.க.வில் இருந்து நீக்கியது கட்சிக்கு பின்னடைவு இல்லை.

    * என்னோடு 40 முறை பேசியதாக கூறியது பொய், அன்புமணி பேசுவதெல்லாம் பொய் என்றார்.

    • விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம்.
    • இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.

    அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அனுப்பிவைக்கப்பட்ட நோட்டீசுக்கு உரிய விளக்கம் அளிக்க ராமதாஸ் அளித்த கெடு நேற்றுடன் முடிவடைந்துள்ளதால் இன்று அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் கட்சி விரோத நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ்,

    * இருமுறை நோட்டீஸ் அனுப்பியும் இதுவரை அன்புமணி விளக்கம் அளிக்கவில்லை.

    * தன் தரப்பில் எந்த நியாயமும் இல்லை என்பதால் தான் அன்புமணி விளக்கமளிக்கவில்லை.

    * விளக்கமளிக்காததால் அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம்.

    * இதுவரை எவரும் கட்சியில் செயல்படாத வகையில் தான்தோன்றித்தனமாக அன்புமணி செயல்பட்டுள்ளார்.

    * ஒழுங்கு நடவடிக்கை குழு அறிக்கையில் அடிப்படையில் பா.ம.க. செயல்தலைவர் பதவி உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அன்புமணியை நீக்குகிறேன் என்றார்.

    • பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் நேற்று முன்தினம் கூடியது
    • மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார்.

    திண்டிவனம்:

    பா.ம.க.வில் அதன் நிறுவன தலைவரான டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது. இருவரும் கட்சியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    ராமதாசுக்கு எதிராக அன்புமணி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். இது தொடர்பாக விவாதிக்க பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு கூடியது. இதில் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது சுமத்தப்பட்டது.

    இதற்கு கடந்த 31-ந் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என அன்புமணிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அன்புமணி தரப்பில் இருந்து எந்த பதிலும் அளிக்கவில்லை.

    இதனை தொடர்ந்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் நேற்று முன்தினம் கூடியது. அதில்அன்புமணி மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை சீலிட்ட கவரில் டாக்டர் ராமதாசிடம் வழங்கினார்கள்.

    இந்த குழுவின் பரிந்துரைகளை கட்சியினருடன் ஆலோசனை நடத்தி தனது முடிவை அறிவிக்க ராமதாஸ் திட்டமிட்டார்.

    அன்புமணி மீதான நடவடிக்கை குறித்தான விவரங்களை நாளை (வியாழக்கிழமை) அறிவிப்பதாக டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். எனவே நாளை நடைபெறும் நிருபர்கள் சந்திப்பில் டாக்டர் ராமதாஸ் அதிரடி முடிவுகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நேற்று நடைபெற்றது.

    மாவட்ட தலைவர்கள், செயலாளர்களுடன் டாக்டர் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் அன்புமணி மீது என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் பா.ம.க. நிர்வாக குழு உறுப்பினரும், ராமதாசின் மூத்த மகளுமான ஸ்ரீகாந்தியும் பங்கேற்றார்.

    இந்த கூட்டத்தில் பா.ம.க. கவுரவத் தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ., அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் தீரன், பொது செயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், வன்னியர் சங்க தலைவர் பு.தா. அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், ஆசிரியர் சங்க நிர்வாகி பரந்தாமன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

    இந்த நிலையில் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர் மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள்ஸ்ரீகாந்தி உள்பட 22 மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தின் பரிந்துரை மற்றும் மாவட்ட செயலாளர்கள் அன்புமணி விவகாகரம், கட்சி வளர்ச்சிக்காக தெரிவித்த பல்வேறு ஆலோசனைகள் சம்பந்தமாக ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார்.

    இந்த கூட்டத்தில் அன்புமணியை சஸ்பெண்டு செய்வதா? அல்லது மேலும் அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து வருகிறார்.

    இதனை தொடர்ந்து நாளை டாக்டர் ராமதாஸ் நிருபர்களை சந்திக்கிறார். அப்போது அவர் அன்புமணி மீதான நடவடிக்கை குறித்து கூறுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
    • முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியலின சமூகத்தை சேர்ந்த முனியப்பன் பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 28-ந்தேதி நகராட்சி அலுவலகத்திற்கு வந்த 20-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் ரம்யா ராஜா என்பவர் தனது பகுதியில் நடந்த பணிகளுக்கான நிதி சம்பந்தமான கோப்பினை கேட்டுள்ளார்.

    அப்போது இளநிலை உதவியாளர் முனியப்பன் சரியாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ரம்யா ராஜா அவரிடம் ஏன்? இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

    இதுதொடர்பாக நகரமன்ற உறுப்பினரிடம் புகார் அளித்து, முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.

    இதையடுத்து நகராட்சி ஆணையர் இல்லாதபோது அவரது அறைக்கு முனியப்பனை வரவழைத்து, அங்கிருந்த நகரமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் முனியப்பனிடம் பல்வேறு கேள்விகளை கேட்டுள்ளனர்.

    முனியப்பனை ரம்யா ராஜாவிடம் மன்னிப்பு கேட்க கூறியபோது, மன்னித்து விடுங்கள் என்று அவர் கூறி உள்ளார்.

    மன்னிப்பு கேட்டால் போதுமா? என்று கேட்டதால் முனியப்பன் தானாகவே சென்று ரம்யா ராஜாவின் காலில் விழுந்து மன்னித்து விடுங்கள் என்று கதறி அழுதுள்ளார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    குறிப்பிட்ட கவுன்சிலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பா.ம.க.வின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு உள்ளது.
    • இதற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படங்களுடன் பெயர் இடம் பெற்று இருக்கும்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தீவிரமாகி உள்ளது. டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது வைக்கப்பட்ட 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் அளிக்காததால் அவர் மீதான நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் நாளை(வியாழக்கிழமை) எடுப்பார் என்று கட்சியினர் கூறி வருகிறார்கள்.

    இந்த சூழலில் விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.

    கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் ஸ்ரீகாந்தி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், பேராசிரியர் தீரன் உள்பட பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும், தொடர்ந்து கட்சிக்கும், நிறுவனர், தலைவரான டாக்டர் ராமதாசுக்கும் எதிராக செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது, 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

    கூட்டம் முடிந்து வெளியே வந்த, புதுச்சேரி மாநில அமைப்பாளர் கணபதி நிருபர்களிடம் கூறுகையில், 2026 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும், தேர்தல் பணியை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் எங்களிடம் தெரிவித்தார் என்றார்.

    இதனிடையே தைலாபுரம் இல்லத்தில் பா.ம.க.வின் உறுப்பினர் அடையாள அட்டை மற்றும் உறுப்பினர் படிவம் அச்சிடப்பட்டு அங்கு வைக்கப்பட்டு இருந்தது. அதில் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படம், பெயர் இடம்பெறவில்லை.

    இதற்கு முன்பு டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாசின் புகைப்படங்களுடன் பெயர் இடம் பெற்று இருக்கும். ஆனால் தற்போது டாக்டர் ராமதாஸ் படம் மற்றும் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    டாக்டர் அன்புமணி ராமதாஸ் மீது எந்த மாதிரியான நடவடிக்கையை டாக்டர் ராமதாஸ் எடுக்க உள்ளார் என்று பலரும் எதிர்நோக்கி இருக்கிறார்கள். இந்த சூழலில் உறுப்பினர் படிவம் மற்றும் அடையாள அட்டைகளில் அவரது படம் நீக்கம் செய்யப்பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக ஆலோசனை.
    • கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார்.

    திண்டிவனம்:

    பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் பா.ம.க.தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு அதற்கு காலக்கெடு வைக்கப்பட்டது.

    அந்தக் காலக்கெடு நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் நேற்று ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டம் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் பா.ம.க. தலைவர் அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் ரகசியமாக பரிந்துரை செய்து அதற்கான கடிதத்தை டாக்டர் ராமதாசிடம் வழங்கினர்.

    இன்னும் 2 நாட்களில் டாக்டர் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது சம்பந்தமாக டாக்டர் ராமதாஸ் தெரிவிப்பார் என நேற்று அருள் எம்.எல்.ஏ. தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது மற்றும் கருத்து கேட்பது சம்பந்தமாக பா.மக. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

    அதற்காக ஒவ்வொரு மாவட்ட செயலாளராக தற்போது தைலாபுரம் தோட்டம் வந்தனர்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பா.ம.க.மாவட்ட செயலாளர்கள் 108பேரும், மாவட்டத் தலைவர்கள் 108பேரும், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் 111பேரும், மாவட்ட தலைவர்கள் 111 பேரும் கலந்து கொள்ள ஒவ்வொருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இந்த கூட்டத்தில் டாக்டர் ராமதாசின் மூத்த மகளும் நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்திமதி கலந்து கொண்டார். 

    • நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.
    • கார்/வேனுக்கு ஒருமுறை சென்று ரிட்டன் வருவதற்கு 155 ரூபாய்க்கு பதில் 160 ரூபாய் வசூலிக்கப்படும்.

    சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி சுங்கச்சாவடி மிகவும் பிசியாக இயங்கும் சுங்கச்சாவடிகளில் ஒன்று. நாள் ஒன்றிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும். அதேபோல் திருச்சியில் இருந்து சென்னைக்கு வரும். இந்த நிலையில் வருகிற 1ஆம் தேதி முதல் (நாளைமறுநாள்), அதாவது திங்கட்கிழமை முதல் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு ரூ.5 முதல் ரூ.20 வரையும், மாத கட்டணம் ரூ.70 முதல் ரூ.395 வரையும் உயருகிறது.

    கார்/ பயணிகள் வேன்- ஒரு முறை செல்ல 105 ரூபாய் (பழைய கட்டணம் 105 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 160 ரூபாய் (பழைய கட்டணம் 155 ரூபாய்). மாதந்திர பாஸ் 3170 ரூபாய் (பழைய கட்டணம் 3100 ரூபாய்) ஆகும்.

    லைட் கமர்சியல் வாகனங்கள்- ஒருமுறை செல்ல 185 ரூபாய் (பழைய கட்டணம் 185 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 275 ரூபாய் (பழைய கட்டணம் 270 ரூபாய்). மாதந்திர பாஸ் ரூ. 5545 (பழைய கட்டணம் 5420 ரூபாய்) ஆகும்.

    டிரக்/பஸ்- ஒரு முறை செல்ல 370 ரூபாய் (பழைய கட்டணம் 360 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 555 ரூபாய் (பழைய கட்டணம் 540 ரூபாய்). மாதாந்திர பாஸ் ரூ. 11085 (பழைய கட்டணம் 10845 ரூபாய்).

    மல்டிபிள் ஆக்சில் வாகனங்கள் (இரண்டு ஆக்சிலுக்கு மேற்பட்டவை)- ஒருமுறை செல்ல 595 ரூபாய் (பழைய கட்டணம் 580 ரூபாய்). திரும்பி வருவதாக இருந்தால் 890 ரூபாய் (பழைய கட்டணம் 870 ரூபாய்). மாதாந்திர பாஸ் 17820 ரூபாய் (பழைய கட்டணம் 17425 ரூபாய்).

    பள்ளி பேருந்துகளுக்கு கிடையாது. மாதாந்திர பாஸ் 1000 ரூபாய் ஆகும் (பழைய கட்டணம் 100 ரூபாய்).

    ×