என் மலர்
விழுப்புரம்
- பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது.
- அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அரசியலில் சில தவறுகள் செய்தது உண்டு, அதில் ஒன்று அன்புமணியை மத்திய அமைச்சராக்கியது. அருவருக்கத்தக்க வகையில் அன்புமணியின் செயல்பாடுகள் உள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியை நான் அமைதியாக நடத்திக்கொண்டிருந்த போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது. என்னோடு 5 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் 3 எம்எல்ஏக்கள் தற்போது அன்புமணி கும்பலோடு போய்விட்டனர்.
அய்யா என்று அன்போடு அழைத்தவர்கள் இப்போது அன்புமணியோடு சேர்ந்துகொண்டு சமூக வலைதளங்களில் திட்டுகின்றனர்.
தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள் இருந்தது. இப்போது 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு நான்தான் காரணம். பல்வேறு போராட்டங்களை வன்முறை இல்லாமல் நடத்தி உள்ளேன், என்னை எதிர்ப்பவர்களுக்கும் நாகரீகமாக பதிலடி கொடுப்போம்.
என்னுடன் இருந்தவர்களுக்கு பொறுப்புகள் கொடுத்து அன்புமணியும், அவரது மனைவியும் கோமாளி தனம் செய்கிறார்கள்.
அன்புமணி தரப்பு இன்னும் துப்பாக்கி மட்டுமே பயன்படுத்தவில்லை. அதையும் சீக்கிரம் பயன்படுத்திவிடுவார்கள்.
ஒரே கட்சியில் இருந்தவர்களை பிரித்து தன் பக்கம் வைத்துக்கொண்டு கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் அடிதடி செய்கிறார்கள்.
அன்புமணியிடம் இருப்பது அரசியல் கட்சி அல்ல, அது ஒரு கும்பல்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
- ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுடன் தி.மு.க. கூட்டணி தலைவர் சந்தித்து பேசினார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சமீபத்தில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோ பரிசோதனை செய்து கொண்டார்.
தைலாபுரம் தோட்டத்தில் சிறிது நாட்கள் ஓய்வெடுத்த அவர் பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார். கடந்த 2 நாட்களுக்கு முன் அவர் தர்மபுரி, சேலத்தில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த நிலையில் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாசை சந்திக்க தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நேற்று மாலை நேரில் வந்தார்.
அப்போது அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் மற்றும் பா.ம.க. உட்கட்சி விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது பா.ம.க. செயல் தலைவரும், டாக்டர் ராமதாசின் மகளுமான ஸ்ரீகாந்தி, நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
டாக்டர் ராமதாசை சந்தித்து விட்டு வெளியே வந்த ஈஸ்வரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் வெளியூருக்கு சென்று இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது பா.ம.க. நிறுவனர் ராமதாசை சந்திக்க முடியவில்லை.
இதனால் அவரை சந்தித்து நலம் விசாரித்தேன். பூரண குணமடைந்து உடல் நலத்துடன் ராமதாஸ் உள்ளார். அவர் ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
கருத்து வேறுபாடு இல்லாமல் வலிமையான சக்தியாக பா.ம.க. ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை ராமதாசிடம் தெரிவித்துள்ளோம். பா.ம.க. தொண்டர்களின் விருப்பமும் அதுதான். நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என மனதார விரும்புகிறோம்.
தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. வருவது குறித்து தி.மு.க. தலைவர் மற்றும் பா.ம.க. நிறுவனர் பேசக்கூடிய விஷயம். தி.மு.க. கூட்டணியில் நாங்கள் ஒரு அங்கம்.
கூட்டணி பேசும் அதிகாரம் எங்களுக்கு கிடையாது. ஜனவரியில் தான் கூட்டணி குறித்து ஆக்கப்பூர்வான பேச்சுவார்த்தை நடைபெறும்.
பீகாரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணியில் தவறுகள் நடைபெற்றுள்ளதால் தமிழகத்திலும் தவறுகள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் கூட்டியிருக்கும் அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தான் எங்களது நிலைப்பாடு. திருத்தப்பணி நடைபெறும் போது மக்கள் விழிப்புடனும், அரசியல் கட்சியினர் கூடுதல் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் கரூரில் உயிரிழந்த 41 பேரின் உறவினர்களை மகாபலிபுரம் அழைத்து விஜய் சந்தித்தது குறித்த கேட்ட போது,
விஜய் அன்றைய தினமே அல்லது ஒரு சில நாட்களிலே அவர்களை சந்தித்திருக்க வேண்டும். விஜய்யின் செயல் விரும்பக்கூடியது அல்ல. கண்டிப்பாக அவர் கரூரில் சென்று சந்தித்திருக்க வேண்டும் என்றார்.
தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்க காய்களை ராமதாஸ் நகர்த்தி வருவதாக கூறப்படும் நிலையில் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அவரை நேரில் சந்தித்து பேசி இருப்பது குறிப்பிடத் தக்கது.
- சங்கராபரணி ஆற்றில் செல்லும் நீர் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
- செஞ்சி பகுதியிலுள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் 2,411 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் நிமிடத்திற்கு செல்கிறது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன் பெய்த கனமழையின் காரணமாக சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருகரைகளையும் வெள்ள நீர் சூழ்ந்து ஆர்ப்பரித்து செல்கின்றன.
சங்கராபரணி ஆற்றில் செல்லும் வெள்ள நீரால் நெடிமோழியனூரில் உள்ள கலிங்கல் பகுதியில் ஆற்றின் நடுவே செல்லும் நீர் அருவி போல் கொட்டி செல்வதால் திண்டிவனம், விக்கிரவாண்டியை சேர்ந்த மக்கள் அந்த பகுதிகளுக்கு சென்று குளித்தும் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
செஞ்சியில் உருவாகும் இந்த ஆறானது வீடுர் வழியாக சென்று புதுச்சேரியில் கடலில் கலக்கின்றன. செஞ்சி பகுதியிலுள்ள ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டதால் 2,411 கன அடி நீர் சங்கராபரணி ஆற்றில் நிமிடத்திற்கு செல்கிறது.
சங்கராபரணி ஆற்றில் செல்லும் நீர் காண்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. இதே போன்று தென்பெண்ணை ஆற்றில் செல்லும் வெள்ள நீரால் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு பகுதியில் இருகரைகளையும் சூழ்ந்து ஆர்பரித்து செல்லும் வெள்ள நீரை காண பொதுமக்கள் வந்து அணைக்கட்டு மேல் நின்று செல்பி எடுத்து செல்கின்றனர்.
- தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
- கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் தமிழகத்தில் பரவலாக மழை கொட்டித்தீர்த்தது.
கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு தகுந்தாற்போல் நேற்று மாலை 5 மணி முதல் 10 மணி வரை கன மழை கொட்டித்தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது.
இதற்கிடையில் மிக கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட விழுப்புரம் மாவட்ட கலெக்டர் ஷேக்அப்துல்ரஹ்மான் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசர உதவிக்கு 04146-223265, 9498100485 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது.
- தைலாபுரம் வீட்டிற்கு விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. மேலும் டாக்டர் ராமதாசின் ஆதரவாளரான ஆடுதுறை சேர்மன் ம.க.ஸ்டாலினை கொலை செய்ய அவரது அலுவலகத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது.
இதனால் டாக்டர் ராமதாசிற்கு துப்பாக்கி ஏந்திய கூடுதல் போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும், தைலாபுரம் இல்லத்திற்கு மெட்டல் டிடெக்டர் வசதியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என டி.ஜி.பி. அலுவலகத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தரப்பினர் மனு அளித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை இ-மெயில் மூலம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக தகவல் வந்தது.
இதனையடுத்து விழுப்புரத்தில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படையினர் தைலாபுரம் வீட்டிற்கு விரைந்து சென்று மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- நேற்று முன்தினம் முதல் இன்று காலை 8 மணி வரை 65 ஆயிரத்து 500 வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றது.
- போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட இடங்களில மட்டும் சாலையை கடக்க வாகனங்களை அனுமதித்தனர்.
விக்கிரவாண்டி:
தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு நேற்று முன்தினம் முதல் செல்ல தொடங்கினர்.
இதனால் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை 4 மணி முதல் வாகனங்கள் அணிவகுத்து செல்ல தொடங்கியது.
விக்கிரவாண்டி சுங்க சாவடியில் 6 வழிகள் உள்ளது. தற்போது வாகனங்கள் அதிகம் வருவதை தொடர்ந்து சென்னை திருச்சி வழியில் மேலும் 2 வழிகள் திறக்கப்பட்டு 8 வழிகள் வாயிலாக வாகனங்கள் செல்கிறது.
நேற்று முன்தினம் முதல் இன்று காலை 8 மணி வரை 65 ஆயிரத்து 500 வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு சென்றது. இன்று காலை சற்று போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. வாகனங்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றது.
சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரிப்பதையொட்டி போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கையாக குறிப்பிட்ட இடங்களில மட்டும் சாலையை கடக்க வாகனங்களை அனுமதித்தனர்.
தேவையற்ற மற்ற இடங்களில் சாலையின் குறுக்கே வாகனங்கள் கடந்து விபத்து ஏற்படாத வகையில் பேரிகார்டு வைத்து அடைத்து சாலையில் பாதுகாப்பை ஏற்படுத்தினார்கள்.
விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சரவணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ், லோகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆங்காங்கே மேம்பால பணிகள் நடைபெறுவதை கருத்தில் கொண்டு சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் கனரக வாகனங்களை கும்பகோணம் சாலை வழியாக பண்ருட்டி, மடப்பட்டு வழியாக திருச்சி செல்ல மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.
இன்று சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் தென்மாவட்டங்களுக்கு செல்லும் என எதிர்பார்க்கபடுவதாக சுங்கசாவடி ஊழியர்கள் தெரிவித்தனர்.
- நான் ஐ.சி.யூ.வில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன்.
- பா.ம.க.வை தோற்றுவித்தது, அதற்கு சொந்தக்காரன் நான் தான்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இதய பரிசோதனைக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை நடைபெற்றது. பின்னர் அவர் வீடு திரும்பினார்.
தைலாபுரம் வீட்டில் சில நாட்கள் ஓய்வில் இருந்த டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மருத்துவ பரிசோதனைக்காக நானே சென்று மருத்துவமனையில் சேர்ந்தேன். 12 வருடத்திற்கு முன்பு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து இருந்தேன். அதனை சரி பார்க்க சென்றேன். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்து விட்டு வீடு திரும்பிவிட்டேன்.
நான் மருத்துவமனையில் இருந்தபோது கட்சி, சாதி, மத பேதமின்றி அனைவரும் என்னை நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்தார்கள். வர முடியாத ஒரு சிலர் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்கள். இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்கள் நன்றாக இருக்கிறது. உடல் நலனில் எந்த பிரச்சனையும் இல்லை என டாக்டர்கள் கூறி இருக்கிறார்கள்
நான் ஐ.சி.யூ.வில் இல்லை. சாதாரண சிகிச்சை பிரிவில் தான் இருந்தேன். ஒரு மணி நேரம் ஐ.யூ.சி.வில் இருப்பார். அதன்பிறகு அறைக்கு வந்து விடுவார். நான் மருத்துவரிடம் பேசி விட்டேன். இன்னும் 2 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வு எடுக்க வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்ததாக ஒரு கும்பல் கூறியுள்ளது. அவர் பேசிய பேச்சுகள், தமிழ்நாட்டில் உள்ள அனைவரையும் உலுக்கி இருக்கும்.
டாக்டர் ராமதாசிற்கு ஏதாவது ஆச்சினா நான் சும்மா இருக்க மாட்டேன். தொலைத்து விடுவேன் என பேசி இருக்கிறார்கள். யார் யாரோ வந்து பார்த்து விட்டு போய் கொண்டிருக்கிறார்கள். இது என்ன கண்காட்சியா? எனவும் பேசி இருக்கிறார்கள்.
படிக்காத மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படிபட்ட சொற்களை கொட்டி இருக்க மாட்டான். அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என ஏற்கனவே நிர்வாக குழு கூட்டத்தில் கூறினேன். இது அன்புமணியின் பேச்சு மூலம் உறுதியாக தெரிய வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரைவில் குணமடைய வேண்டுமென கட்சி தலைவர்கள் வாழ்த்து கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. தொற்று அறிகுறி அளவிற்கு எனக்கு வியாதி இல்லை.
பா.ம.க.வை தோற்றுவித்தது, அதற்கு சொந்தக்காரன் நான் தான். வியர்வையை சிந்தி இயக்கத்தை வளர்த்தேன். அந்த கட்சியை என்னுடைய கட்சி என அன்புமணி கூற கூடாது. தேர்தல் ஆணையத்தில் சந்திப்போம். கட்சி ஆரம்பிக்கும்போது இப்படி எல்லாம் நடக்கும் என எனக்கு தெரியாது.
பா.ம.க. கட்சிக்கும், கொடிக்கும் அன்புமணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அன்புமணி தனிகட்சி ஆரம்பித்து கொள்ள வேண்டும். அது அன்புமணிக்கும், அவரை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது.
புதிய கட்சி தொடங்கினால் பொறுப்புகள் தான் கிடைக்கும். சட்டமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவி கிடைக்காது. மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அது ஒரு போலியான அமைப்பாக தான் இருக்கும்.
பா.ம.க. கட்சி கொடி, பெயரை அன்புமணி பயன்படுத்த கூடாது. என்னுடைய பெயரின் தலைப்பெழுத்தினை மட்டுமே அன்புமணி பயன்படுத்தி கொள்ள வேண்டும். தனி மனித உழைப்பினால் 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று காடுமேடு அலைந்து திரிந்து உருவாக்கப்பட்டது பா.ம.க.
பா.ம.க. சட்டபேரவை தலைவர் கொறடாவை மாற்ற முடியாது. சபாநாயகர் மட்டுமே இதனை செய்ய முடியும். தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள், பிற கட்சியில் உள்ளவர்கள் தந்தையும், தாயையும் காப்பாற்றாத மகனாக அன்பு மணி உள்ளதாக தெரிவிக்கும் கருத்தாக உள்ளது.
கரூர் சம்பவத்திற்கு உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. அந்த சி.பி.ஐ. விசாரணை காலம் தாழ்த்துமா? என்பது சோழி போட்டு தான் பார்க்க வேண்டும். டிசம்பரில் பொதுக்குழு கூடும் அதில் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். இந்த முறை கூட்டணி முடிவு சரியாக இருக்கும்
இவ்வாறு அவர் கூறினார்.
- மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான்.
- மருத்துவமனையில் இருந்தபோது என்னை தலைவர்கள் வந்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
அப்போது , ராமதாசை வைத்து அவருடன் இருப்பவர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி விமர்சித்தார். நான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். அய்யாவுக்கு ஏதாவது நடந்தால் சும்மா இருக்க மாட்டேன், தொலைத்து விடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில் அய்யாவிற்கு ஏதாவது ஆனால் தொலைத்துவிடுவேன் என பேசிய அன்புமணிக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
* அய்யாவை பார்த்துக்கொள்ள துப்பு இல்லை.
* மாடு மேய்க்கும் பையன் கூட இப்படி ஒரு பேச்சை பேச மாட்டான்.
* மருத்துவமனையில் இருந்தபோது என்னை தலைவர்கள் வந்து சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- குழந்தை கழிவறை கோப்பையில் அமுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது.
- போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை பிரசவ வார்டு பின்புறம் கழிவறை உள்ளது.
இந்த கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன தொப்புள் கொடி கூட அறுக்கப்படாத ஆண் குழந்தை கழிவறை கோப்பையில் அமுக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தது.
இதனை கழிவறைக்கு சென்ற ஒருவர் பார்த்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விக்கிரவாண்டி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையை கழிவறை கோப்பைக்குள் அழுத்தி கொலை செய்த கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? கள்ளக்காதலில் பிறந்ததால் குழந்தையை கொன்றாரா? என்ற பல்வேறு கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை கழிவறை கோப்கைக்குள் அமுக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் விக்கிரவாண்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார்.
- எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது.
விழுப்புரம்:
தமிழகம் முழுவதும் கடந்த 2-ந் தேதி காந்தி ஜெயந்தியொட்டி நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
விழுப்புரம் மாவட்டம், கொண்டாங்கி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது ரேவதி என்ற பெண்ணிடம் அவர் கலந்துரையாடினார்.
அப்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தாயுமானவர் திட்டத்தில் ஊராட்சியில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள். அதே போல் முதியவர்கள் ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே வழங்கும் திட்டத்தில் எத்தனை பேர் பயன்பெறுகிறார்கள் என கேட்டறிந்தார். அதற்கு அப்பெண் 24 பேர் இத்திட்டத்தில் பயன் பெறுகின்றனர் என கூறினார்.
தொடர்ந்து அவர் சுயஉதவி குழுவில் நான் உறுப்பினராக உள்ளேன். இக்குழுவானது ஊராட்சி அளவில் தொழில் கடனாக ரூ.1.50 லட்சம் வழங்கியது. அதில் நான் 2 தையல் எந்திரம் வாங்கி கடை நடத்தி வருகிறேன். அதில் இருந்து வரும் வருமானத்தில் எனது குடும்ப செலவிற்கும், குழந்தைகள் படிப்பு செலவிற்கும் பயனுள்ளதாக உள்ளது. என்னை போல் உள்ள 2 மகளிருக்கு இந்த தொழிலை கற்று கொடுத்து அவர்களையும் வேலைக்கு வைத்துள்ளேன். என்னாலும் 2 பேருக்கு வேலை வழங்கி சம்பளம் வழங்கி வருவதை பெருமையாக தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து 3 கோரிக்கைகளை அவர் தெரிவித்தார். அதில் எங்கள் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதுடைந்துள்ளது. அதனை புதுப்பித்து தர வேண்டும். அதேபோல், கொண்டாங்கியில் இருந்து ஈச்சத்திரம் சாலையில் மின்விளக்கு அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன். மேலும் கொண்டாங்கி முதல் தொகைப்பாடி வரை சாலை பகுதியில் தடுப்பு சுவர் கட்டி தர வேண்டி கேட்டு கொள்கிறேன் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவர் எங்கள் மகளிர் குழு கொரோனா காலத்தில் ரூ.7 லட்சம் கூட்டுறவு சங்கத்தில் வங்கி கடன் வாங்கி இருந்தோம். தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் எங்களுக்கு அந்த கடனை தள்ளுபடி செய்தீர்கள் அதற்கு எங்கள் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்ற தெரிவித்தார்.
- பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளேன்.
- கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளார்.
திண்டிவனம்:
தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* பா.ம.க. இளைஞர் சங்கத் தலைவர் பதவியை தமிழ்குமரனுக்கு வழங்கியுள்ளேன். அவர் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று வாழ்த்துவோம்.
* கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை சொல்லி உள்ளேன்.
* கரூர் கூட்ட நெரிசல் போன்ற துயரச் சம்பவங்கள் ஏற்படாமல் அரசியல் கட்சிகள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
* ஒரு உயிர் கூட பலியாகக்கூடாது. அந்த அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு காவல்துறை வழிகாட்ட வேண்டும்.
* கரூர் துயர சம்பவத்தில் முதலமைச்சர் என்ன செய்ய வேண்டுமோ, அதனை செய்துள்ளார் என்றார்.
இதனிடையே, கரூர் விவகாரத்தில் விஜய் வீடியோ வெளியிட்டது தொடர்பான கேள்விக்கு, முதலமைச்சர் எப்படி காரணமாக முடியும்? என்றார்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்தார்.
- நியமன கடிதத்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினார்கள்.
திண்டிவனம்:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்த நிலையில் அன்புமணியை கட்சி பதவியில் இருந்து டாக்டர் ராமதாஸ் அதிரடியாக நீக்கி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் தனது ஆதரவாளர்களுக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கி வருகிறார். ஏற்கனவே அன்புமணி தலைவராக இருக்கும்போது இளைஞரணி செயலாளராக தமிழ்குமரனுக்கு பதவி வழங்கப்பட்டது. அப்போது அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து வானூர் அருகே நடைபெற்ற பா.ம.க. பொதுக்குழுவில் டாக்டர் ராமதாசின் பேரன் முகுந்தனுக்கு இளைஞர் சங்க பொறுப்பு வழங்கப்பட்டது. இதனால் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கும் இடையே பொதுக்கூட்ட மேடையில் மோதல் போக்கு உண்டானது. அப்போது ராமதாஸ் நான் சொல்பவர்கள் கட்சியில் இருந்தால் இருக்கட்டும். இல்லையென்றால் வெளியே போகட்டும். இது நான் ஆரம்பித்த கட்சி என்று பேசினார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பில் இருந்து முகுந்தன் ராஜினாமா செய்தார். இதனையடுத்து மீண்டும் தமிழ்குமரனுக்கு பா.ம.க. இளைஞரணி தலைவர் பொறுப்பை டாக்டர் ராமதாஸ் தற்போது வழங்கி உள்ளார்.
திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கும் போது, தமிழ்குமரனை நியமித்து உத்தரவிட்டார். அதற்கான நியமன கடிதத்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மூத்த மகள் ஸ்ரீகாந்தி ஆகியோர் தமிழ்குமரனிடம் வழங்கினார்கள். பா.ம.க. இளைஞர் சங்க தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்குமரன் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே. மணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






