என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தலைமைப்பண்பு இல்லாதவர் அன்புமணி - நான் அமைப்பதே பா.ம.க. கூட்டணி: ராமதாஸ்
- அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
- அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
அ.தி.மு.க.வுடன் அன்புமணி கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பா.ம.க.வை பொறுத்தவரை தனிமனிதன் ஆரம்பித்த கட்சி, இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது.
* அன்புமணி செய்த தில்லுமுல்லு காரணமாகவே பா.ம.க.வை விட்டு நீக்கினேன்.
* கட்சியில் இருந்து நீக்கிய பின்னர் ஒரு கோஷ்டியை வைத்துக்கொண்டு இருக்கிறான். தமிழக அரசியலில் இதுபோன்று நடந்ததில்லை.
* கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லாதவர் அன்புமணி, பா.ம.க. தொண்டர்கள் என்னுடன் தான் இருக்கிறார்கள்.
* அன்புமணி நிறுத்தும் வேட்பாளருக்கு மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள்.
* அன்புமணி செய்த துரோகத்தை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் பொதுமக்களும் புரிந்து கொண்டுள்ளனர்.
* அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்னதாகவே தெரியாமல் போய்விட்டது.
* தந்தைக்கு துரோகம் செய்த கும்பலுக்காக வாக்களிக்க வேண்டும் என நினைத்து அன்புமணி தரப்புக்கு வாக்களிக்க மாட்டார்கள்.
* நான் அமைப்பதே பா.ம.க. கூட்டணி, அந்த கூட்டணியே சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.






