என் மலர்
நாமக்கல்
- நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக கோடை மழை பெய்துள்ளது.
- மானாவாரியாக சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பயிரினை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் பரவலாக கோடை மழை பெய்துள்ளது. இம்மழையை பயன்படுத்தி மானாவாரியாக சித்திரை, வைகாசி பட்டத்தில் நிலக்கடலை பயிரினை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணெய் வித்து பயிர்களில் உற்பத்தியை அதிகபடுத்த பலவகை நலத்திட்டங்களை வேளாண்மை துறை மூலம் செயல்படுத்தி வருகின்றன.
நிலக்கடலையில் டி.எம்.வி-14, தரணி மற்றும் கே-1812 ஆகிய உயர் விளைச்சல் ரகங்களை இப்பட்டத்தில் சாகுபடி செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 80 கிலோ விதைகள் தேவைப்படும். நிலக்கடலை விதைகளை 30 செ.மீ-க்கு 10 செ.மீ இடைவெளியில் விதைத்து ஒரு சதுர மீட்டருக்கு 33 செடிகள் என்ற பயிர் எண்ணிக்கையினை பராமரிக்க வேண்டும்.
ஒரே மாதிரியான பொறுக்கு விதைகளை பயன்படுத்தி சரியான இடைவெளியில் விதைத்தால் பயிர் எண்ணிக்கை சீராக காணப்படும். இதனால் நல்ல மசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான அளவு நிலக்கடலை விதைகள் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவைப்படும் நிலக்கடலை ரகங்களை வேளாண்துறை அலுவலர்கள் மூலம் மானிய விலையில் பெற்று விதைப்பண்ணை அமைக்கலாம்.
நிலக்கடலையில் அதிக மகசூல் பெற ஏக்கருக்கு 5 மெட்ரிக் டன் மக்கிய தொழுவுரம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உரங்களை மண்ணில் போதிய ஈரம் இருக்கும் போது அடியுரமாக இட வேண்டும்.
இதே போன்று விதைகள் மூலம் பரவும் பூஞ்சான நோய்களை தடுக்கும் பொருட்டு, விதைப்பதற்கு 24 மணிநேரத்திற்கு முன்பு ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சுடோமோனஸ் புளோரசன்ஸ் அல்லது 4 கிராம் திரம் அல்லது 2 கிராம் கார்பன்டைசிம் பூஞ்சான விதை நேர்த்தியும் காற்றில் உள்ள தழைச்சத்தை கிரகித்து பயிர்க்கு கொடுக்கும் பொருட்டு விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு தேவையான விதையை ரைசோபியம் (நிலக்கடலை) 2 பாக்கெட் மற்றும் பாஸ்போ பேக்டரியா 2 பாக்கெட் ஆகியவற்றை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்த கலவையில் உயிர் உர விதை நேர்த்தி செய்து நிழலில் நன்கு உலர வைத்து பின்பு விதைக்க வேண்டும்.
மேலும் நிலக்கடலை நுண்ட்டச்சத்து 5 கிலோ வினை 20 கிலோ மணலுடன் கலந்து விதைத்தவுடன் மண்பரப்பில் தூவ வேண்டும். விதைத்த 40-45-ம் நாட்களில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சத்தினை மண்ணை கொத்தி இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சத்தில் உள்ள கால்சியம் மற்றும் கந்தகசத்து அதிக எண்ணெய் சத்து கொண்ட திரட்சியான மணிகள் அதிக அளவில் உருவாக உதவுகிறது.
மேலும் மானாவாரி நிலக்கடலை பயிரில் சுருள் பூச்சி, சிவப்பு கம்பளிபுழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்க வாய்ப்பு உள்ளதால் தேவையான பயிர் பாதுகாப்பு முறைகள் மேற்கொள்ள வேண்டும்.
அனைத்து விவசாயி களும் அந்தந்த வட்டாரத்தில் உள்ள உதவி விதை அலு வலரை அணுகி கரு, ஆதார நிலை நிலக்கடலை விதை களை வாங்கி விதைப் பண்ணைகளை அமைத்து, அனைத்து தொழில் நுட்பங்களையும் கையாண்டு அதிக மகசூல் பெற்று தரமான விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு வழங்கி, அதன் மூலம் அதிக விலை பெற்று அதிக வருமானம் பெறலாம் என நாமக்கல் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சித்திரைச் செல்வி தெரிவித்துள்ளார்.
- பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
- இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் நகராட்சியில் உள்ள வார்டுகளில் சேரும் மட்கும் குப்பையை உரமாக்க, கோட்டக்காடு பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தில், நுண் உர மையம் ரூ.41 லட்சத்தில் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நகராட்சி ஆணையர் தாமரை தலைமையில் நேற்று நடந்தது. சேர்மன் செல்வராஜ் நுண் உர மையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் துணை சேர்மன் பாலமுருகன், மற்றும் நகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இந்த நுண் உர மையத்தில் 3 டன் அளவு மட்கும் குப்பையை அரைத்தி பதப்படுத்தி உரம் தயாரிக்கலாம் என்பது குறிப்பிடுதக்கது.
- கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கார் விற்பனைக்கு உள்ளதாக பிரபலமான ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் பார்த்தார்.
- காரை விலைக்குப் பேசி ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் செலுத்தி, மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை ஓட்டி வந்தார்.
நாமக்கல்:
நாமக்கல் நடராஜபுரத்தை சேர்ந்தவர் சேகர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் கார் விற்பனைக்கு உள்ளதாக பிரபலமான ஆன்லைன் நிறுவன விளம்பரத்தில் பார்த்தார். அதில் உள்ள தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டுள்ளார்.
அதன்பேரில் மதுரைக்குச் சென்று கார் விற்பனை நிறுவன உரிமை யாளர் சுதர்சன் என்பவரை சந்தித்துள்ளார். அவர் காட்டிய காரை விலைக்குப் பேசி ரூ.2 லட்சத்து 81 ஆயிரம் செலுத்தி, மதுரையில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அந்த காரை ஓட்டி வந்தார்.
அப்போது நடு வழியில் அந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. இதுகுறித்து காரை விற்பனை செய்த வருக்கு தகவல் தெரி வித்தபோது, அவர் ஒரு மெக்கானிக்கை அனுப்பி காரை எடுத்துச் சென்று விட்டார். காரை வாங்கிய சேகரையும், அவருடன் இருந்த இருவரையும் நாமக்கல் செல்லுமாறும், காரை ரிப்பேர் செய்து, நாமக்கல்லில் கொண்டு வந்து கொடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதனை நம்பி சேகரும் அவருடன் சென்றவர்களும் நாமக்கல் வந்துவிட்டனர்.
காரை வாங்கிய சேகர் பலமுறை காரை விற்ற சுதர்சனை தொடர்பு கொண்ட போதிலும், அவர் காரை சரி செய்து திருப்பி வழங்கவில்லை. இதனால் பாதிப்படைந்த சேகர், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2019-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்தார். கடந்த மாதம் விசாரணை முடிவுற்றிருந்த நிலையில், நுகர்வோர் கோர்ட் உறுப்பினர் ரத்தினசாமி முன்னிலையில் நீதிபதி டாக்டர் ராமராஜ் தீர்ப்பு வழங்கினார்.
அதில், பாதிக்கப்பட்ட சேகருக்கு அவர் செலுத்திய தொகை ரூ. 2 லட்சத்து 81 ஆயிரத்தை, 9 சதவீத வட்டி யுடனும், அவருக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடு ரூ. 1 லட்சமும், வழக்கின் செலவு தொகையாக ரூ.19 ஆயிரமும் காரை விற்பனை செய்த சுதர்சன் 4 வார காலத்துக்குள், சேகருக்கு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
- போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பா ளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகையில் பணிபு ரிந்து வந்த 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரியும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், வட மாநில தொழி லாளர்கள் பணிபுரியும் வெல்ல ஆலை கொட்ட கைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பஸ் போன்றவற்றிற்கு தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வந்தது.
இதையடுத்து, ஜேடர்பா ளையம் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 13-ந் தேதி இரவு, வி.புதுப்பாளையம் பகுதியில் முத்துசாமி என்பவரது வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகையில் தூங்கிய வட மாநில தொழிலா ளர்கள் 4 மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றவர்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பரபரப்பு அடங்கு வதற்குள், நேற்று முன்தினம் இரவு ஜேடர்பா ளையம் பகுதியைச் சேர்ந்த முரு கேசன் என்ப வர் தோப்பில் இருந்த 600-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் மற்றும் சில பாக்கு கன்றுகளை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். வாழை தோப்பின் உரிமையாள ரான முருகேசன், முத்துசாமியின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை யிலான போலீசார் விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும் மொளசி மற்றும் ஜேடர்பா ளையம் பகுதிகளை சேர்ந்த, படுகொலை செய்யப்பட்டு இளம்பெண்ணின் சமூகத்தை சேர்ந்த 5-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து, போலீசார் ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு முதல் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே வட மாநில தொழிலாளர்கள் மீது தீ வைத்த சம்பவத்தன்று, நள்ளிரவு 2.30 மணி அளவில் கரப்பாளையம் பகுதியில் குடியிருக்கும் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் உறவினர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார், அங்கு தூங்கிக் கொண்டிருந்த வர்களை தட்டி எழுப்பி, அவர்களது கைகள், துணி, உடலை நுகர்ந்து பார்த்து சோதனை செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி யடைந்த அவர்கள், ஏன் எங்கள் சமூகத்தை மட்டும் குறி வைத்து இது போன்ற தேவையற்ற முறையில் தொந்தரவு செய்கிறீர்கள்? என்று போலீசாரிடம் கேட்டனர். ஆனால் போலீ சார் அதற்கு எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.
இப்பகுதியில் எந்த அசம்பாவித சம்பவங்கள் நடந்தாலும் படுகொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் சமூ கத்தை சேரந்தவர்களை மட்டும் குறிவைத்து சம்பந்தப்பட்ட வழக்கு களில் கைது செய்து சிறை யில் அடைத்து வருவதாக கரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் போலீசார் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி உண்மை யான குற்றவாளி களை கைது செய்ய வேண்டும் என ஜேடர்பா ளையம் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற தவறான செயல்பாடுகளால் பொதுமக்கள் போலீசார் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்து விடு கின்றனர். இதனால் தேவை யற்ற போராட்டங்களை போலீ சார் சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்றனர்.
- விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.
- ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை வட்டாரங்களில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், விதை ஆய்வு இணை இயக்குநர் செல்வமணி திடீர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல்கள் மற்றும் விற்பனைப் பட்டியல்கள் பராமரிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.
முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விதைகளை விற்பனை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தினார். விதை விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல்கள், முளைப்பு திறன் அறிக்கைகள், விதைகளின் இருப்பு விபரம் மற்றும் விற்பனை விலை பலகை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
விவசாயிகள் விதைகள் வாங்கும் போது, லைசென்ஸ் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் மட்டுமே விதை வாங்க வேண்டும். அதற்கான பில்களை கேட்டுப்பெற வேண்டும். விற்பனை பட்டியலில் விதைக் குவியல் எண் மற்றும் காலாவதி தேதியை உறுதி செய்தல் வேண்டும். மேலும் விதை விற்பனையாளர்களிடம் முளைப்புத்திறன் ஆய்வறிக்கையை சரிபார்க்க வேண்டும். இந்த நடைமுறைகளை கடைபிடிக்கும்போது விவசாயிகள் விதைகளின் தரத்தினை உறுதி செய்துகொள்ளலாம் என அவர் கூறினார்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்யப்பட்ட விதைக் குவியல்களுக்கு விதைகள் சட்டம் மற்றும் விதைக்கட்டுப்பாட்டு சட்டத்தின்கீழ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும் விதைகளின் தரத்தினை உறுதிப்படுத்த விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்விற்கு அனுப்பப்பட்டது. ஆய்வின்போது விதை ஆய்வாளர் சரண்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது.
- சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் சவுதாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேவூர் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு சேலம் மற்றும் சேர்வராயன் மலைப்பகுதியில் இருந்து வரும் தண்ணீர், திருமணிமுத்தாறு வழியாக வந்தடைகிறது.
சமீபத்தில் பெய்த கன மழையால் சேலம் பகுதியில் இருந்து தண்ணீர் வரத்து அதிகமாகி ஏரி நிரம்பிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
சேலத்தில் இருந்து வந்த தண்ணீரில் சாயக் கழிவு அதிக அளவில் வந்ததால் மீன்கள் செத்தனவா? அல்லது மர்ம நபர்கள் யாராவது ஏரி தண்ணீரில் விஷம் கலந்தனரா? என்று தெரியவில்லை. எப்படி மீன்கள் செத்தென என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செத்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
- சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
- தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.
ராசிபுரம்:
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை அலகில் செயல்பட்டு வரும் திட்டப்பணிகளை தணிக்கை செய்யும் பணி நடந்து வருகிறது.
இதில் ஒரு பகுதியாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம், ராசிபுரம் உட்கோட்டத்தைச் சேர்ந்த மல்லியக்கரை- ராசிபுரம்- திருச்செங்கோடு- ஈரோடு சாலை அகலப்படுத்தும் பணிகளை சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் அருள்மொழி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது, நாமக்கல் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் கோட்ட பொறியாளர் குணா, சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் நெடுஞ்சாலை அலகின் உதவி கோட்ட பொறியாளர் பரிமளா, நாமக்கல் நெடுஞ்சாலை தரக் கட்டுப்பாடு உட்கோட்ட அலகின் உதவி கோட்ட பொறியாளர் சோமேஸ்வரி, ராசிபுரம் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் உதவி கோட்ட பொறியாளர் ஜெகதீஷ் குமார், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். தார் கலவை, சாலையின் தடிமன், பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.
- சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
- மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.
பரமத்தி வேலூர்:
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசா யிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
தேங்காய்
இந்த வாரம் நடந்த ஏலத்தில் 72.16½ குவிண்டால் எடை கொண்ட 19 ஆயிரத்து 852 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.25.05-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.19.19-க்கும், சராசரி விலையாக ரூ.23.51-க்கும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்து 965-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 189.49½ குவிண்டால் எடை கொண்ட 408 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.06-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.74.30-க்கும், சராசரி விலையாக ரூ.82.69-க்கும் விற்பனையானது.
2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.77.86-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.39-க்கும், சராசரி விலையாக ரூ.73.16-க்கும் என மொத்தம் ரூ.13 லட்சத்து 57 ஆயிரத்து 532-க்கு விற்பனையானது.
எள்
அதேபோல் 388.31 குவிண்டால் எடை கொண்ட 518 மூட்டை எள் விற்பனைக்கு வந்தது.
இதில் கருப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.157.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.139.99-க்கும், சராசரி விலையாக ரூ.152.99-க்கும், சிவப்பு எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.155.00-க்கும், குறைந்த பட்ச விலையாக ரூ.140.99-க்கும், சராசரி விலையாக ரூ.151.99-க்கும் விலைபோனது.
வெள்ளை எள் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலை யாக ரூ.158.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.158.99-க்கும், சராசரி விலையாக ரூ.158.99-க்கும் என மொத்தம் ரூ.56 லட்சத்து 42 ஆயிரத்து 684-க்கு விற்பனையானது.
இதன்படி, சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 71 லட்சத்து 55 ஆயிரத்து 181-க்கு விற்பனையானது.
- நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
- 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.
நாமக்கல்:
நாமக்கல் மண்டலத்திற்கு உள்பட்ட நாமக்கல், சேலம் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
இந்த பண்ணைகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்ப டுகின்றன. இந்த கறிக்கோ ழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோ சனை கூட்டம் நேற்று பல்லடத்தில் நடந்தது. கூட்டத்தில் கறிக்கோழி தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதனால் ரூ.120 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.122 ஆக உயர்ந்தது. கடந்த 16-ந் தேதி ரூ.116 ஆக இருந்த கறிக்கோழி விலை, 17-ந் தேதி ரூ.120 ஆக உயர்ந்த நிலையில், நேற்று மீண்டும் ரூ.2 உயர்த்தப்பட்ட தால் கறிக்கோழி விலை 3 நாளில் ரூ.6 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடும் வெயிலால் கறிக்கோழியின் எடை குறைந்துள்ளதாலும், தேவை அதிகரித்து உள்ளதா லும் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரி வித்துள்ளனர். இதேபோல முட்டை உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. முட்டை கோழி விலை எந்த மாற்றமும் செய்யாமல் 94 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. முட்டை விலையும் 470 காசுகளாக நீடிக்கிறது.
- பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.
- பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா தண்ணீர் பந்தல், கபி லர்மலை, நகப்பா ளையம், செல்லப்பம்பா ளையம், அண்ணா நகர், ஆனங்கூர், பாகம்பாளை யம், கழுவன் காடு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் குண்டு மல்லிகை, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, செவ்வந்தி, ரோஜா, அரளி உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.
இங்கு விளைவிக்கப்ப டும் பூங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியா பாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் 2 தினசரி பூக்கள் ஏலம் மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வரு கின்றனர்.
பூக்களை ஏலம் எடுப்பதற்கு கரூர் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.
கடந்த சில வாரங்களாக பூக்கள் விலை ஏற்ற, இறக்க மாக இருந்து வருகிறது. தற்போது கோடை காலம் தொடங்கி, வெயில் அதி கரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரம் குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.300-க்கும், முல்லைப் பூ ரூ.250-க்கும், ரோஜா ரூ.150-க்கும், அரளி ரூ.100-க்கும் சம்பங்கி ரூ.50-க்கும் விற்பனையானது.
நேற்று குண்டு மல்லிகை ஒரு கிலோ ரூ.400-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், ரோஜா ரூ.220-க்கும், அரளி ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.100-க்கும் விற்பனையானது.
இன்று அமாவாசை என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். பூக்கள் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
- இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன.
ராசிபுரம்:
கோடை வெயில், கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல முடியாத அளவிற்கு வாட்டி வதைத்தது. இந்த நிலையில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். காற்று வீசிய சிறிது நேரத்தில் கனமழையும் பெய்தது.
மழையுடன் காற்று வீசியதால் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
மின்கம்பங்கள் சாய்ந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். மழை பெய்ததன் காரணமாக மாலையில் குளிர்ந்த சீதோஷணம் நிலவியது.
அதேபோல் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதி களில் நேற்று மழை பெய்தது.
- சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும்.
- மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சத்தான உணவு
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உண வுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளி கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி நாமக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதக மண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவி களுக்கான விளை யாட்டு விடுதி நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
தேர்வு
மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளை யாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்க ளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்கு வதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடை பெறும். இதற்கான மாவட்ட அளவி லான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் நடைபெற உள்ளது.
மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபாடி மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்கு வாஷ், மற்றும் வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து , கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், ஹாக்கி, டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, டென்னிஸ், ஜீடோ ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.
முன்னூரிமை
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். விளை யாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16-ந்தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தவறா மல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






