என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • பக்தர்கள் கஞ்சி கலயத்தை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.
    • கஞ்சி கலயத்தை அம்மனுக்கு படைத்து பாலாபிஷேகம் செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திருமருகல் அடுத்த திருக்கண்ணபுரத்தில் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் 10-ம் ஆண்டு ஆடிப்பூர கஞ்சி கலயம் எடுக்கும் விழா நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் ஆழ்வார் மண்டபத்தில் இருந்து கஞ்சி கலயத்தை சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர், வார வழிபாட்டு மன்றத்தில் கஞ்சி கலயத்தை வைத்து மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், மாணவ- மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும், நோயற்ற வாழ்வு வாழ வேண்டியும் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    பின், அவரவர் தலையில் மண்பானையை வைத்து சுமந்து வந்து கஞ்சி கலயத்தை அம்மனுக்கு படைத்து பாலாபிஷேகம் செய்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை மன்ற தலைவி கிருஷ்ணம்மாள் மற்றும் செவ்வாடை தொண்டர்கள் செய்தி ருந்தனர்.

    பின்னர், பக்தர்கள் அனை வருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது.

    • ஆஸ்பத்திரியில் ஒரு டாக்டர் மட்டுமே பணியாற்றி வருகிறார்.
    • இரவு நேரத்தில் டாக்டர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் வர்த்தக சங்கம் சார்பில் தலைவர் ஜெயபால்சங்கர், துணை த்தலைவர் காசிஅறி வழகன்,துணைச் செயலா ளர் முருகானந்தம் ஆகியோர் பல்நிகழ்ச்சி களில் பங்கேற்க நாகை வந்த மக்கள் நல்வாழ்வு த்துறை அமை ச்சர் மா.சுப்பி ரமணியன் கோரிக்கை மனுவை அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிப்பதாவது:-திருமருகலில் தலைமை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இதன் கட்டுப்பாட்டில் திட்டச்சே ரி,ஏனங்குடி, கணபதிபுரம், திருக்கண்ணபுரம், திருப்ப த்தாங்குடி உள்ளிட்ட ஊர்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்கள் செயல்படுகின்றன.

    இவற்றில் தற்போது எல்லா இடங்களிலும் மருத்துவர்கள் நியமிக்க ப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இருப்பி னும் இரவு நேரத்தில் எந்த அரசு மருத்துவமனையிலும் மருத்துவர்கள் தங்கி சிகிச்சை அளிப்பது இல்லை.

    குறிப்பாக இரவு நேரங்களில் பாம்பு,தேள் போன்ற விஷ பூச்சிகள் கடித்து பாதிக்கப்பட்டவர்களும், விஷம் அருந்தி உயிருக்கு போராடுபவர்களும் இப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றால் மருத்துவர்கள் பணியில் இருப்பதில்லை என்றும் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 6 மருத்துவர்கள் பணியாற்ற வேண்டிய நிலையில் 1 மருத்துவர் மட்டுமே பணியாற்றி வருகிறார் எனவும் கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது.
    • தண்ணீர் கிடைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தலைஞாயிறு பேரூராட்சியில் 15 வார்டுகளில் சுமார் 15,000 பேர் வசித்து வருகின்றனர் .இப்பகுதி பொதுமக்களுக்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் நாள்தோறும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தலைஞாயிறு பேரூராட்சிக்கு ஒவ்வொரு நாளும் 15 லட்சம் லிட்டர் தண்ணீர் தர வேண்டும்.

    ஆனால் தற்போது 4 லட்சம் லிட்டர் குடிநீர் மட்டுமே வருகிறது. வரும் குடிநீரை வைத்து ஒரு நாள் விட்டு ஒரு நாள்தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது பல நாட்கள் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்படுவதால் தண்ணீர்வராமல் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் முழு கொள்ளளவான 15 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தலைஞாயிறு பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும் .

    இது குறித்து பலமுறை குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் பேரூராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு போக்குவதற்காக பேரூராட்சித் தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சை யன்,செயல் அலுவலர் சரவணன் ஏற்பட்டின் பேரில் வேளாணிமுந்தல், பழையாற்றங்கரை, லிங்கத்தடி, ஓரடியம் புலம் ஜீவாநகர், பெருமாள் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களுக்கு டேங்கர் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து தலைஞாயிறு பொதுமக்களுக்கு குடிநீரை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்கான செலவினங்கள் வசூலிக்கப்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் (பொ) சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வருகிற 22-ந்தேதி காலை 8 மணி முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

    எனவே நாகை புதிய ஆர்ச் முதல் நாகூர் பாலம் வரை பிரதான சாலையில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள், விளம்பர தட்டிகள், பிளக்ஸ் பேனர்கள் மற்றும் மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பர தட்டிகள் அனைத்தையும் வருகிற 20-ந் தேதிக்குள் பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அகற்றி விட வேண்டும்.

    தவறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அதற்குண்டான செலவினங்கள் சம்பந்தப்பட்ட வர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.

    அகற்றப்பட்ட அனைத்து பொருட்களும் நகராட்சியால் கையகப்படுத்தப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் வழங்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    வேதாரண்யம்:

    காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் வழங்க வேண்டும், கால முறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்பாட்டத்திற்கு வட்ட தலைவர் செல்வ ராணி தலைமை தாங்கினார்.

    முன்னாள் தலைவா் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

    சங்க பொறுப்பாளா் செந்தமிழ்செல்வி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    இதில் சத்துணவு ஊழிய ர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் சத்துணவு அமைப்பாளா் உஷா நன்றி கூறினார்.

    • புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது.
    • வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் தி.மு.க.காரர் அல்ல.

    நாகர்கோவில்:

    ராமேஸ்வரத்தில் நடை பெற்ற மீனவர் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கான 10 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகுதான் மீனவர்கள் மீதான அடக்குமுறை அதிகமானது என்று கூறியதோடு பிரதமர் மோடி மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தினார். இதற்கு பதில் அளித்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக மீனவர்கள் மீது அக்கறை உள்ளது போன்ற முதலமைச்சரின் நடிப்பு, அவரது மகன் அமைச்சர் உதயநிதி நடிப்பை விஞ்சிவிட்டது. 2004 முதல் 2014 வரையிலான 10 ஆண்டுகளில், காங்கிரஸ் கூட்டணியில் பசையான துறைகளை வாங்கிக் கொண்டு, நாள்தோ றும் மீனவ சகோதரர்கள் தாக்கப்பட்டபோதும், கொல்லப்பட்டபோதும், அன்றைய வருமானக் கணக்கில் மட்டுமே முழு கவனத்தையும் வைத்திருந்த தி.மு.க.வின் நீலிக் கண்ணீரை எல்லாம் மக்கள் நம்பிய காலம் முடிந்து போய்விட்டது.

    உங்கள் கட்சிக் கூட்டத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளலாம். பொதுமக்கள் மத்தியில் அதே துண்டுச் சீட்டு இனியும் எடு படாது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

    புயலில் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடிக்கு பிரதமர் மோடி ஆட்சியில்தான் சூரிய ஒளி சக்தி மூலம் மின்சார வசதி வந்தது என்பதை மறந்து விடக் கூடாது.

    ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி ஏற்படுத்தியதும் பிரதமர் மோடி ஆட்சியில்தான். 1967-ம் ஆண்டிலிருந்து 6 முறை தமிழகத்தில் ஆட்சியில் இருந்தும், மத்திய அரசில் பல முறை மந்திரி பதவி வகித்தும், உங்களால் தனுஷ்கோடிக்கு அடிப்படை வசதிகளைக் கூடச் செய்து கொடுக்க முடியவில்லை. மத்திய அரசில், தொழில் துறை, கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரவை எல்லாம் கேட்டுப் பெறத் தெரிந்த உங்களுக்கு, 1964-ல், புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடி பற்றி ஞாபகம் வராதது அதிசயமே.

    பிரதமர் நரேந்திர மோடி , மீனவ சகோதரர்களுக்காக, தனி துறையை அமைத்து பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். கிசான் திட்டம், காப்பீடு திட்டங்கள், தமிழக மீனவர் நலன் காக்க ரூ.72,820 கோடிக்கும் அதிகமான நிதி, மீன்வளத் துறைக்கு செலவிடப்பட்டு உள்ளது.

    ஆனால் நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினீர்களா? மீனவ மக்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம், மீன்வளக் கல்லூரி அமைப்போம், குளிர்பதனக் கிடங்கு வசதி அமைப்போம் என கூறியதை நிறைவேற்றினீர்களா?

    பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும், உங்கள் கூட்டணியைப் போன்ற மக்கள் விரோத சக்திகளைத் தாண்டி, முழுமையாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ராமேஸ்வரமும் காசியைப் போல விரைவில், உலகப் புகழ்பெற்ற தலம் ஆகும். வாக்குறுதி கொடுத்து விட்டு மக்களை ஏமாற்ற அவர் தி.மு.க.காரர் அல்ல. அவரை விமர்சிக்க ஒரு தகுதி வேண்டும்.

    மண்டபத்தில் யாரோ என்னவோ எழுதிக் கொடுத்ததை அப்படியே படித்து விட்டுச் செல்வது அந்தத் தகுதி அல்ல, நீங்கள் வகிக்கும் பதவிக்கு அது அழகும் அல்ல. அடுத்த முறையாவது, துண்டுச் சீட்டை அப்படியே ஒப்பிக்கும் முன்பாக, அதில் இருப்பது தி.மு.க.வுக்கு எதிரான ஒப்புதல் வாக்குமூலமா என்பதைச் சரிபார்க்கவும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.  

    • தூய்மை பணியாளர்களுக்கு புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • ரூ1 கோடியே 67 லட்சம் மதிப்பில் புதிய வாகனங்கள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த போதிய வாகனங்கள் இல்லாததால் தூய்மை பணியாளர்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

    இந்நிலையில் தூய்மை பணியாளர்களின் சிரமத்தை போக்க நாகப்பட்டினம் நகராட்சி சார்பில் புதிய இலகுரக வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அவுரிதிடலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    இதைத் தொடர்ந்து ரூ1 கோடியே 67, லட்சம் ரூபாய் மதிப்பிலான 23, இலகுரக வாகனத்தின் சாவியினை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் ஆகியோர் நகராட்சி ஓட்டுநர்களிடம் ஒப்படைத்தனர்.

    • இதே பிரிவில் மற்றொரு மாணவி 11-ம் இடம் பிடித்துள்ளார்.
    • நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவி ஜோதிகா பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

    இதே பிரிவில் புவனேஸ்வரி என்ற மாணவியும் 11-ம் இடம் பிடித்துள்ளார்.

    இந்நிலையில், தங்கப்பதக்கம் வென்ற மாணவி ஜோதிகாவுக்கு, கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரி முதல்வர் காமராஜ் தலைமை தாங்கினார்.

    துணை முதல்வரும், தமிழ் துறை பேராசிரியருமான குமரேசமூர்த்தி முன்னிலை வகித்தார். தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு கல்லூரி முதல்வர் புத்தகம் பரிசாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் ராஜா, பிரபாகரன், அறிவுச்செல்வன், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
    • பேரணியானது தலைஞாயிறு பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக இளநிலை உதவியாளர் குமார் அனை வரையும் வரவேற்றார்.

    ஊர்வலமானது தலைஞாயிறு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி சின்ன கடற்கரை, மேலத்தெரு அக்ரஹரம், பஸ் நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலகம் சென்றடைந்தது.

    இதில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    இதில் ஏராளமான பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோடியக்காட்டில் உள்ள சுந்தரம் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி தலைவர் தமிழ்மணி தலைமை தாங்கினார்.

    முன்னதாக தலைமை ஆசிரியர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் ஊராட்சி துணைத்தலைவர் சரவணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சதக்கத்துல்லா, முன்னாள் ஊராட்சி தலைவர் பவானி, மீனவர் சங்க தலைவர் பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளர் சுபா, கிராம நிர்வாக அலுவலர் இளங்கோவன் மற்றும் பெற்றோர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    விழாவில் பொதுத்தேர்வி ல் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும், மாவட்ட அளவிலான தூய்மை பாரத எழுத்தறிவு போட்டியில் முதல் பரிசு பெற்ற மாணவி கிருத்திகாஸ்ரீ-க்கும், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் மாவட்ட அளவில் சிறந்த மையமாக தேர்வு செய்யப்பட்டு மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் வழங்கிய சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ், பதக்கம் பெற்றதற்காக தலைமை யாசிரியர் நீலமேகத்திற்கும், தன்னார்வலர் மீனாம்பாள் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்ட தேர்வின் போது மனைவி இறந்த நிலையிலும் தேர்வு எழுதிய நாகரத்தினத்திற்கு சால்வை அணிவித்து, அவரிடம் மதுரையில் வழங்கப்பட்ட சுழற்கோப்பையை நாகாரத்தினத்திடம் வழங்கி பாராட்டினர்.

    மேலும், போட்டி தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு, கலை நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் வந்த மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள், நினைவு பரிசுகள் வழங்கபட்டது.

    மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தலைமையாசிரியர் நீலமேகம் பரிசு வழங்கினார்.

    முடிவில் பள்ளி ஆசிரியர் கவிதா நன்றி கூறினார்.

    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
    • இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா விளையாட்டு விழா ஆண்டு விழா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என ஜம்பெரும்விழாக்கள் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

    நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரசொலி சிங்காரம் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார் நிகழ்ச்சியில் டாக்டர் ரவிபெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அன்பழக பாண்டியன் பொருளாளர் சுடர் வழி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனிதாதேத்தாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் அஞ்சுகம் முத்து வேளாளர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காரவேலன்உள்ளத்தை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.

    • 10 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் வந்து சிகிச்சை அளித்தனர்.
    • முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    சுதந்திர தினவிழாவை முன்னிட்டு, நாகூரில் ஆயுர்வேத மருத்துவ முகாம்ம னசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளை மற்றும் தஞ்சாவூர் டாக்டர் ஆர் வெங்கடசுப்பிரமணியன் ஆயுர்வேத மருத்துவர் இணைந்து இலவச ஆயுர்வேத பொது மருத்துவ முகாம், நாகூர் - தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடை பெற்றது.

    மனசாட்சி நட்புகரங்கள் அறக்கட்டளையின் நிறு வனத் தலைவர் சம்பத்கு மார் வரவேற்றார். இந்நிக ழ்ச்சியில்,தலைமை சட்ட ஆலோசகர் வைரவநாதன் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் நாகை மாலி எம்.எல்.ஏ. மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்.இதில் சிறப்பு அழைப்பா ளர்களாக நாகூர் தேசிய மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நிஜாமுதீன், நாகப்பட்டினம் நகராட்சி நகர மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், நாகூர் தர்கா மேனேஜிங் டிரஸ்டி . செய்யது முகமது காஜி ஹீசைன் சாகிப் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். வெங்கட சுப்பி ரமணியன் தலைமையில்,10 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். ரூபாய் 2 லட்சத்துக்கான மெடிசின்கள் (டானிக், மாத்திரைகள்) இம்மருத்துவ முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

    இதில்,அறங்காவலர்கள் மாநில மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×