என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அரசு பள்ளியில் ஐம்பெரும் விழா
- வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- இதில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா தாணிக்கோட்டகம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற விழா விளையாட்டு விழா ஆண்டு விழா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா என ஜம்பெரும்விழாக்கள் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முரசொலி சிங்காரம் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் 100 சதவீதம் தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார் நிகழ்ச்சியில் டாக்டர் ரவிபெற்றோர் ஆசிரியர் கழக துணைத் தலைவர் அன்பழக பாண்டியன் பொருளாளர் சுடர் வழி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் ஒன்றிய குழு உறுப்பினர் வைத்தியநாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் வனிதாதேத்தாக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தொல்காப்பியன் அஞ்சுகம் முத்து வேளாளர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிங்காரவேலன்உள்ளத்தை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டனர்.






