search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள்.

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் வழங்க வேண்டும்.
    • காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    வேதாரண்யம்:

    காலை உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளரிடம் வழங்க வேண்டும், கால முறை ஊதியத்தை அமல்படுத்த வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியா்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்பாட்டத்திற்கு வட்ட தலைவர் செல்வ ராணி தலைமை தாங்கினார்.

    முன்னாள் தலைவா் ராமமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

    சங்க பொறுப்பாளா் செந்தமிழ்செல்வி கோரிக்கை விளக்க உரையாற்றினார்.

    இதில் சத்துணவு ஊழிய ர்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    முடிவில் சத்துணவு அமைப்பாளா் உஷா நன்றி கூறினார்.

    Next Story
    ×