என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awareness"

    • மாநிலம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியினை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் உத்தரவுக்கிணங்க மாநிலம் முழுவதும் சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சாவூர் மாநகராட்சி மைதானத்தில் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புத்துறை சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தஞ்சை வல்லம் செல்வி கிராமிய தெம்மாங்கு ஆடல் பாடல் இன்னிசை குழுவினரின் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் மாவட்டம் நிர்வாகம் சார்பில் சாலை விபத்துகளை குறைத்து உயிரிழப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சாலையினை விபத்தில்லா பகுதியாக மாற்றுவதற்கு வட்டார போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல் திட்டம் வகுத்து வருகிறார். சாலையில் போக்குவரத்து விதிமுறைகளை 100 சதவீதம் அமல்படுத்தப்பட்ட அனைத்து துறைகளும் கூட்டாக செயல்பட உள்ளதாகவும், பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து விபத்தில்லா மாவட்டமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும். என்றும் அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகன், ஆய்வாளர் ஆனந்த், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
    • பேரணியானது தலைஞாயிறு பள்ளியில் இருந்து தொடங்கி பேரூராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

    ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

    முன்னதாக இளநிலை உதவியாளர் குமார் அனை வரையும் வரவேற்றார்.

    ஊர்வலமானது தலைஞாயிறு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி சின்ன கடற்கரை, மேலத்தெரு அக்ரஹரம், பஸ் நிலையம் வழியாக பேரூராட்சி அலுவலகம் சென்றடைந்தது.

    இதில் மாணவ- மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    இதில் ஏராளமான பொதுமக்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.
    • கண்தானம் குறித்து அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டாக்டர் அகர்வால் கண் வங்கி மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து தேசிய கண்தான விழிப்புணர்வு இருவார விழா கடந்த 25-ந்தேதி முதல் வருகிற 8-ந் தேதி வரை கடைபிடித்து வருகிறது. அதன்படி கண்தானம் பற்றிய விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை கடந்த 25-ந்தேதி டவுன் சரக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பையா தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு

    இதில் நெல்லை அண்ணா பல்கலைக்கழகம், பாளை சாராள் தக்கர் பெண்கள் கல்லூரி, வள்ளியூர் நேரு நர்சிங் கல்லூரி, ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி, டாக்டர் அகர்வால் ஆப்டோமெட்ரி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மேலும் கண்தானம் குறித்து அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டியும் கல்லூரி மாணவ, மாணவி களுக்கு கவிதைப் போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து மாநகரில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் கண்தானம் குறித்தான பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

    கண்தானம்

    நேற்று நிறைவு நாள் நிகழ்ச்சியில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ராணி லட்சுமி வரவேற்று பேசினார். டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மண்டல மருத்துவ இயக்குனர் டாக்டர் டி. லயனல்ராஜ் கருவிழி மாற்று அறுவை சிகிச்சையில் உலகிலேயே நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆற்றிய சாதனைகள் பற்றியும் கண் தானத்தின் பயன்கள், கண் தானத்தின் அவசியத்தைக் குறித்து பேசினார்.

    விழாவில் தலைமை விருந்தினராக ரோட்டரி கவர்னர் முத்தையா பிள்ளை மற்றும் சிறப்பு விருந்தினராக நெல்லை இந்திய மருத்துவ சங்க நிதிச்செயலாளர் டாக்டர் பிரபுராஜ், ரோட்டரி மாவட்ட பொதுச் செயலாளர் ஆறுமுக பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டு கண் தானம் அளித்த குடும்பத்தி னர் மற்றும் கண்தானம் நடை பெறுவதற்கு உறுதுணையாக இருக்கும் இயக்கத்தின் தலைவர்கள், உறுப்பினர்கள், தன்னார்வ லர்கள் மற்றும் போட்டி களில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கவுரவித்தனர்.

    நிகழ்ச்சியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கண்தான இயக்க உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டுனர். முடிவில் மேலாளர் கோமதிநாயகம் நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை கருவிழிப் பிரிவு மருத்துவர் டாக்டர் ராணிலட்சுமி, கண்வங்கி மேலாளர் ஜெகதீஷ் மற்றும் மருத்து வமனை மருத்து வர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×