என் மலர்tooltip icon

    மதுரை

    • தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது.
    • புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

    கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

    இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது.

    அப்போது, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமின் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர். இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

    பின்னர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது.

    இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் நீதிமன்ற இணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமாரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

    • புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
    • முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர்.

    கரூரில் கடந்த 27-ம் தேதி இரவு த.வெ.க. பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல் குமார் மமுன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

    அப்போது, புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்தனர்.

    இதற்கிடையே, புஸ்ஸி ஆனந்த் மற்றும் காவல்துறை தரப்பு வாதங்கள் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.

    இந்நிலையில், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்துள்ளது.

    இன்றே உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளதால் நீதிமன்ற இணையதளத்தில் மாலை வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    • தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.
    • கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.

    உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. தவெக நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோர் முன் ஜாமீன் கோரிய வழக்கை ஒத்திவைக்க காவல்துறை தரப்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.

    விசாரணையின்போது," சொந்த கட்சி தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் இல்லை. கரூரில் நடந்தது விபத்து. திட்டமிட்ட செயல் அல்ல. விஜயை பார்க்க கூடியவர்களை காவல்துறை கட்டுப்படுத்தியிருக்க வேண்டும்.

    தொண்டர்களை கொல்ல வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு இல்லை.

    வேண்டுமென்றே காக்க வைத்து தாமதமாக வந்தது போல் சொல்கிறார்கள். 7 மணி நேரம் தாமதமாக வந்ததற்கு வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்...தாமதமாக வந்தது குற்றமா?

    போலீஸ் மீது பழி போவில்லை. குற்றம்தான் சுமத்துகிறோம். வேலுச்சாமிபுரம் சரியான இடம் இல்லை என நினைத்திருந்தால் அனுமதி மறுத்திருக்க வேண்டும். கூட்டத்திற்குள் ரவுடிகள் புகுந்துவிட்டனர். கூட்டம் நிற்கும் இடத்தில் ஏன் லத்தி சார்ஜ் நடத்த வேண்டும்.

    கூட்டம் குறித்து உளவுத்துறை கணித்திருக்க வேண்டாமா?"என்று புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம் செய்யப்பட்டது. 

    • கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநலனே முக்கியம்.
    • பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியது அவசியம் தானே.

    மதுரை:

    மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 27-ந்தேதி கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர்.

    நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய விஜய்யை பார்க்க கரூரில் வெகுநேரமாக மக்கள் கூடியிருந்து உள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்து உள்ளனர். சிறிது நேரத்தில் அந்த இடம் போர்க்களம் போல காட்சி அளித்தது.

    மயங்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும் சிசிக்சை பலனின்றி பலர் இறந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசார கூட்டம் நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் விஜய்க்கு போலீசார் அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் காவல்துறையினர் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் மக்கள் துயரத்தை சந்தித்ததாக பல்வேறு எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன. இருந்தபோதும் த.வெ.க.வின் முறையான திட்டமிடல் இல்லாமல் நடத்தப்பட்ட பிரசாரத்தின் காரணமாகவே பலர் இறந்து இருக்கின்றனர்.

    இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் என தமிழக முதலமைச்சர் நிவாரணத்தொகை அறிவித்து உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிவாரணத்தொகை போதுமானதாக இருக்காது.

    எனவே இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.50 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் வழங்க உத்தரவிட வேண்டும். தமிழக வெற்றிக்கழகத்தின் செயல்பாடுகள்தான் இத்தனை பேர் இறப்பதற்கு காரணம் என்பதால் அக்கட்சியின் பதிவை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    இதேபோல கரூர் மாவட்டம் தாந்தோணி மலையைச் சேர்ந்த வக்கீல் தங்கம் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது மிகப்பெரிய துயர சம்பவம். பொதுவாக மத விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், பேரணிகள், விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளில் அதிக அளவிலான மக்கள் பங்கேற்கிறார்கள். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எதிர்பாராத சூழ்நிலைகளை உருவாகக்கூடும். அதுபோலத்தான் கரூர் சம்பவமும் நடந்து உள்ளது.

    அந்த வகையில் கரூர் பிரசார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்ததில் இருதரப்பினரும் முறையாக ஆலோசிக்கவில்லை என்பது தெரிகிறது. இது போன்ற விபத்துகளை தவிர்க்க அதிக அளவில் கூடும் மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு என பொதுவான விதிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை.

    எனவே தமிழ்நாட்டில் நடக்கும் பொதுக்கூட்டங்களுக்கு கட்டுப்பாடுகளையும், விரிவான வழிகாட்டுதல்களையும், விதிகளையும் உருவாக்க தமிழக அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

    இதேபோல் செந்தில் கண்ணன் உள்பட மொத்தம் 7 மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதி ராமன் ஆகியோர் முன்பு பகல் 11.50 மணி அளவில் தொடங்கியது.

    இதில் மனுதாரர் தரப்பில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி எழுப்பப்பட்ட வாதத்திற்கு தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் தமிழக அரசு தரப்பில், இந்த தகவல் அறிந்த உடன் முதலமைச்சரும் உடனுக்குடன் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

    அன்றைய தினம் இரவில் சம்பவ இடத்துக்கு சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். கரூரில் 41 பேர் இறந்தது சம்பந்தமாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினர்.

    மேலும் உரிய வழிகாட்டுதல்களை டி.ஜி.பி. பிறப்பித்து இருந்தார். அதில் 25 நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதில் எதையுமே த.வெ.க.வினர் பின்பற்றவில்லை.

    பிரசாரம் செய்வதற்கு 12 மணிக்கு பதிலாக 7 மணி நேரம் தாமதமாக வந்த காரணத்தால் அந்தப்பகுதியில் திரண்டி ருந்த பொதுமக்களுக்கு ஏற்பட்ட சோர்வு உயிரிழப்புகளுக்கு காரணமாகி விட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. உடனே நீதிபதிகள் பிரசாரம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பகுதி மாநில சாலையா? அல்லது தேசிய நெடுஞ்சாலையா? எதன் அடிப்படையில் அந்தப்பகுதியில் அனுமதி வழங்கப்பட்டது?

    கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொதுநலனே முக்கியம். பிரசாரம் நடத்த அனுமதி வழங்கப்பட்ட பகுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டியது அவசியம் தானே. அரசின் பாதுகாப்பு அமைப்புகள் முறையாக செயல்பட வேண்டும். மக்கள் எந்த கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். பொதுமக்களின் உயிரை காப்பது அரசின் கடமை என்றனர்.

    இதற்கிடையே த.வெ.க.வினர் தங்கள் தரப்பில் கருத்துக்களை முன்வைக்கும்போது கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் பொறுப்பேற்க வேண்டும். எனவே இதனை கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என வாதாடினர்.

    கரூரில் பரப்புரை மேற்கொள்ள நாங்கள் கேட்ட இடத்தில் காவல்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இந்த கூட்டத்தில் குண்டர்கள் சிலர் புகுந்து ரகளை செய்தார்கள். காலணிகளும் வீசப்பட்டன. காவல்துறை தரப்பில் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று வாதிட்டனர்.

    அப்போது அரசு தரப்பில் விதிகளை வகுக்கும் வரை எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்றனர். இதையடுத்து குறுக்கிட்ட நீதிபதிகள் நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்தக்கூடாது. ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டதன் அடிப்படையில் கூட்டம் நடத்தலாம் என உத்தரவிட்ட னர்.

    இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் த.வெ.க. ஆதரவாளர் கே.எல்.ரவி, சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர். ஆரம்ப நிலையிலேயே சி.பி.ஐ. விசாரணைக்கு எப்படி மாற்ற முடியும்? விசாரணையில் திருப்தி இல்லையென்றால் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரலாம். மேலும் மனுத்தாக்கல் செய்தவர் பாதிக்கப்பட்டவரா? அவ்வாறு இல்லாத பட்சத்தில் எப்படி உத்தரவிட முடியும்?

    நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள். கரூர் துயர சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரை எண்ணிப்பாருங்கள் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் கரூர் கூட்ட நெரிசலில் பலியானோருக்கு இழப்பீடு மற்றும் இழப்பீடு அதிகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், த.வெ.க. தலைவர் விஜய் மற்றும் அரசு தரப்பில் இருந்து 2 வார காலத்திற்குள் பதில் அளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது.
    • கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம்.

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றுவது, இது போன்ற கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது போன்ற கோரிக்கைகள் கொண்ட 7 பொதுநல வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது.

    இவ்வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து, அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    அப்போது, கடந்த 27-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 10 மணி வரை அனுமதி கோரப்பட்டது. வேலுச்சாமிபுரம் பகுதியில்தான் அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல. Notified இடத்தில்தான் அனுமதி வழங்கப்பட்டது. அனைத்து கட்சிகளுக்கும் விதிமுறைப்படியே அனுமதி தரப்படுவதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    பொதுக்கூட்டத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்திற்கு இந்த உத்தரவு பொருந்தாது. யார் மீதும் குறிப்பிட்டு குற்றச்சாட்டுகளை முன் வைக்க வேண்டாம். கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது மக்களின் நலனே முக்கியம் என கூறிய நீதிபதிகள், பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு, சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளது. இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதை பாதிக்கும். அந்த மனுவுடன் இவற்றையும் சேர்க்கக்கோரி இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கில், போலீஸ் விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றாலாம். ஆனால், ஆரம்ப கட்டத்திலேயே சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றால் எப்படி?. நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம் என்று கூறிய நீதிபதிகள் சிபிஐ விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.

    இதையடுத்து, கரூர் கூட்ட நெரிசலில் இழப்பீடு தொடர்பான மனுக்களுக்கு பாதிக்கப்பட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், 2 வாரங்களில் அரசு பதிலளிக்க ஆணை பிறப்பித்துள்ளனர். 

    • பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர்.

    மதுரை:

    மகாத்மா காந்தியின் 157-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மதுரை காந்தி நினைவு அருங்காட்சியத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினர், பொதுமக்கள், காந்தியவாதிகள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பா.ஜ.க. சார்பில் மரியாதை செலுத்த வந்த கட்சியின் தமிழக மேலிடப் பார்வையாளர் அரவிந்த் மேனன் மற்றும் நிர்வாகிகள் காந்தி சிலைக்கு காவி துண்டை அணிவித்தனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

    இது குறித்து காந்தி மியூசிய செயலாளர் நந்தாராவ் கூறியதாவது:-

    மகாத்மா திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை, கதர் ஆடை அணிவித்து மரியாதை செய்கின்றனர். காங்கிரஸ் கட்சியினர் கதர் ஆடையும், பா.ஜ.க.வினர் காவித் துண்டும் அணிவித்தனர். அதனை உடனடியாக அப்புறப்படுத்தி விட்டோம் என்றார்.

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
    • இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது.

    மதுரை:

    சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் கூறியதாவது:-

    கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பின் உண்மை நிலையை மக்களிடத்தில் விளக்க வேண்டிய தார்மீக பொறுப்பில் இருந்து அரசு விலகிச் செல்கிறது என்கின்ற சந்தேகம், கவலையும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்படும் வகையில் அரசின் கருத்துக்கள், அதிகாரிகளின் கருத்துக்கள் அமைந்துள்ளதை நாம் கவனமாக பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.

    கரூர் துயர சம்பவத்திற்கு ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து உள்ளோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆணையத்தின் அறிக்கையை அடிப்படையாக வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார்.

    அதன்பிறகு மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், கூடுதல் டிஜிபி ஆகியோர் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்து அரசு நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

    இதற்கெல்லாம் மேலாக வருவாய் துறை செயலாளர், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர், டி.ஜி.பி. அரசின் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள்.

    அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு வீடியோ வெளியிட்டு இது தொடர்பாக கருத்துக்கள் கூறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கும் தொனியில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அவசர, அவசரமாக கருத்துக்களை தெரிவித்தார்.

    இதனை பார்க்கும் போது விசாரணை ஆணையத்தை அரசுக்கு வேண்டிய திசையிலே, அவர்கள் கருத்துக்கள் அடிப்படையில் வழி நடத்துகிறார்களோ என்ற நிலை தான் இன்றைக்கு வெட்ட வெளிச்சமாக அமைந்து வருகிறது.

    பொதுவாக விசாரணை ஆணையம் அமைந்த பிறகு அது தொடர்பான வாதங்கள், வீடியோக்கள் அரசு அதிகாரிகள் வெளியிடுவது ஆணையத்தின் விசாரணையை கேள்விக்குறியாக்கும் வகையில், அமையும். விசாரணை நடக்கும் போது அது தொடர்பான அறிக்கை தொடர்ந்து வெளியாகி வருவது விசாரணை நடுநிலையோடு, நம்பகத் தன்மையோடு நடைபெறுமா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

    திறமைமிக்க சேவையால் மக்களின் நம்பிக்கைத் தன்மையை பெற்றுள்ள அரசு உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை, திமுக அரசு தவறாக வழி நடத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    இன்றைக்கு ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதற்கு அடையாளமாக தற்போது கள நிலவரம் உள்ளது. ஆகவே அம்மா பேரவையின் சார்பில் நடைபெறும் 34 வது திண்ணைப் பிரசாரத்தில் மக்களிடத்தில் எடுத்து கூற வேண்டும். மீண்டும் 2026-ல் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆகியோரின் ஆட்சி எடப்பாடியாரின் தலைமையில் மலரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டன.
    • சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி?

    மதுரை:

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கரூரில் நடைபெற்ற த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது மிகுந்த மனவேதனையையும், வயிற்றெரிச்சல், ஐயத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    விஜய் இப்போதுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலைப் பொறுத்தவரை அவர் புதுமுகம். அதனால் அவரை ஆளாளுக்கு விமர்சனம் செய்யக்கூடாது. ஏற்கனவே கரூர் சம்பவத்தில் விஜய் மீது அதிகமாகவே விமர்சனங்கள் வந்துவிட்டன.

    கரூரில் த.வெ.க.வினர் கேட்ட இடத்தில் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. 10 ஆயிரம் பேர் கூடும் இடத்தில் 27 ஆயிரம் பேர் திரண்டதால் தான் இது போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது, இது வருத்தமாக உள்ளது.

    எனவே த.வெ.க. தலைவர் விஜய் மாவட்டந்தோறும் பஸ்சில் செல்லாமல் ஒவ்வொரு தொகுதி வாரியாக செல்ல வேண்டும்.

    கரூர் சம்பவத்தில் அப்பாவி பெண்களும், குழந்தைகளும் மரணம் அடைந்த துயரத்தில் இத்தனை உயிர்கள் பறிபோனதற்கு அரசியல் சதி இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். இத்தனை உயிர்களை காவு கொடுத்த நிகழ்வுக்கு யார் சதி செய்திருந்தாலும் அவர்கள் குடும்பம் விளங்காது.

    கரூரில் அதே இடத்தில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ய அனுமதி கேட்டபோது, அந்த இடத்தில் நெரிசல் ஏற்படும் என போலீசார் அனுமதி மறுத்தனர். பின்னர் அனுமதி கொடுத்தனர். அது போல த.வெ.க.வினர் கேட்டபோது அந்த இடத்தில் அனுமதியை மறுத்து வேறு அகலமான இடத்தை அவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். ஆனால் போலீசார் அப்படி செய்யவில்லை. மேலும் விஜய் காலதாமதமாக அந்த பகுதிக்கு வந்துள்ளார். அவரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. சம்பவம் நடந்தவுடன் உடனடியாக விசாரணை ஆணையத்தை தி.மு.க. அரசு நியமித்தது எப்படி?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியுள்ளது.
    • தீயானது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பரவி வெடிக்க தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றியது.

    மதுரை:

    மதுரை மாநகர் மாட்டுத்தாவணி அருகே மேலூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் ஒன்றில் பல்வேறு பொருட்களை அட்டைப் பெட்டியில் எடுத்து செல்லப்பட்டன.

    இந்நிலையில் வாகனம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியுள்ளது. இதனால் வாகனத்தில் இருந்த பொருட்களிலும், அட்டை பெட்டிகளில் தீ மளமளவென எரிந்தது.

    வாகனத்தில் இருந்த பொருட்களில் தீ கொழுந்து விட்டு எரிந்ததால் சில பொருட்கள் வெடிக்க தொடங்கியதால் பின்னால் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் சாலையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் பதறியடுத்து அச்சத்தில் அங்கும் இங்கும் ஓடினர்.

    நல்வாய்ப்பாக தீ விபத்தில் இருந்து தப்பிய ஓட்டுநர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் தீயை தண்ணீர் பீய்ச்சியடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    மதுரையில் உள்ள பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதுகுறித்து மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    ஆயுத பூஜையை முன்னிட்டு மதுரை மாநகர் மீனாட்சி பஜார் பகுதியில் உள்ள செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் கடைகளில் பூஜைகள் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் பஜாரில் அமைந்துள்ள 184-ம் எண் கொண்ட செல்போன் விற்பனை கடையில் ஆயுத பூஜை முடிந்து விளக்கை அணைக்காமல் மாலை சென்றுள்ளனர்.

    இந்நிலையில் விளக்கில் தீயானது காற்றில் பரவ தொடங்கி கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பின்னர் தீயானது செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் பரவி வெடிக்க தொடங்கிய நிலையில் தீ மளமளவென பற்றியது.

    மேலும் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த மூன்று கடைகளில் பரவத் தொடங்கிய நிலையில் அங்கு கூடிய பொதுமக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் தீயை அணைக்க முயன்றனர்.

    பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு அளித்த தகவலை அளித்து பெரியார் பேருந்து நிலையம் மற்றும் தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் தீயை தண்ணீர் தெளித்து அணைத்தனர். பின்னர் தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

    இந்த தீ விபத்தில் 4 செல்போன் கடைகளில் வைத்திருந்த பல லட்சம் மதிப்பிலான செல்போன் மற்றும் எலக்ட்ரானிக்கல் பொருட்கள் முழுவதுமாக எரிந்து சேதம் அடைந்தன.

    இது குறித்து திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரையில் ஆயுத பூஜை கொண்டாடிவிட்டு விளக்கை அணைக்காமல் சென்றதால் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருள்கள் வீணாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    • எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சி கூட்டம்.
    • விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.

    த.வெ.க. பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க நிர்வாகிகளான கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    அப்போது, டி.எ.ஸ்.பி தரப்பில் த.வெ.க. நிர்வாகிகள் மீது அடுக்கக்கடுக்கான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை,

    * முனியப்பன் கோவில் பகுதியில் கேரவன் உள்ளே விஜய் சென்றுவிட்டார், அவரை பார்த்திருந்தால் கூட்டம் கலைந்திருக்கும்.

    * புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி தாமதத்தை ஏற்படுத்தியது.

    * பிரசார வாகனம் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் போதும் என்றேன், ஆனால் ஆதவ் இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்றார்.

    * கைது செய்யப்பட்டுள்ள த.வெ.க நிர்வாகிகள் இருவரும் விஜய் வாகனத்தை முன்னே செல்ல விடாமல் தாமதப்படுத்தினர்.

    * விஜய் வாகனம் ராங் ரூட்டில் சென்றது, நாங்கள் தடுத்தோம், ஆனால் 2-ம் கட்ட தலைவர்கள் பேருந்தை நிறுத்தவில்லை.

    * கரூர் பாலத்தில் இருந்து வேண்டுமென்றே தாமதமாக வந்ததாகவும் தன்னை மீறி ராங் ரூட்டில் சென்றதாகவும் டி.எஸ்.பி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

    இதனை தொடர்ந்து, மைதானம் போன்ற பகுதியை ஏன் கேட்கவில்லை என நீதிபதி பரத் குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு த.வெ.க. சார்பில், சனிக்கிழமை சம்பள நாள் என்தால் யாரும் கூட்டத்திற்கு வரமாட்டார்கள் என கணித்ததாக என தெரிவித்தனர்.

    இதையடுத்து நீங்கள் கேட்ட 3 இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வாரவிடுமுறை நாள் என்றபோதும், மக்கள் ஏன் குறைவாக வருவார்கள் என்று எப்படி கணக்கிட்டீர்கள்?

    * அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?

    * விஜயை பார்க்க 10ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எதை வைத்து கூறினீர்கள்? என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி,

    * எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சி கூட்டம்.

    * விஜயை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள்.

    * குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள்.

    * அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.

    அதற்கு, இவ்வளவு பெரிய கூட்டம் வருமென்று நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அனுமதி பெறும்போது வேலுச்சாமிபுரம் இடம் திருப்தியாக உள்ளது என புஸ்ஸி ஆனந்த் கூறினார். அப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டியது தானே என காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

    இவ்வாறு நீதிமன்றத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது. 

    • அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
    • கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகனை நேற்று கைது செய்தனர். மேலும் ஒரு த.வெ.க. நிர்வாகி இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை இன்று போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து த.வெ.க. முக்கிய பிரமுகர்களான பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்வதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர்.

    புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதே போன்று நிர்மல் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    இந்நிலையில் முன்ஜாமின் கோரி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில்,

    அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான போலீசார் சம்பவ இடத்தில் இல்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டுமே ஈடுபட்டனர்.

    கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் யாரும் இன்றி ஆம்புலன்ஸ் விஜய் பிரசார கூட்டத்திற்குள் வந்ததாக புஸ்ஸி ஆனந்த் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    • த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம்.
    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது.

    கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என வலியறுத்தி த.வெ.க. வக்கீல் பிரிவினர் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய வந்தனர்.

    அப்போது த.வெ.க. வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கரூரில் நடந்த விஜய் பிரசாரத்தின்போது காவல்துறை கடமையாற்ற தவறி உள்ளது. பொதுமக்கள் கூடும் இடங்களில் பாதுகாப்பு வழங்க வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

    விஜய் பிரசாரத்தின்போது கூடி இருந்தவர்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் இறந்தது தொடர்பாக தடயங்களை அழிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.

    த.வெ.க. தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் சோக சம்பவத்துக்கு காரணம். கூட்டத்தில் விஜய் பேசியபோது மர்ம நபர்கள் செருப்பு வீசினார்கள். இந்த சம்பவத்தில் த.வெ.க. தலைவர் விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி வலை பின்னப்படுகிறது. உயிரிழப்பிற்கு போலீசாரின் தடியடிதான் காரணம்.

    த.வெ.க. கூட்டத்தில் குண்டர்கள் பலர் கல்வீச்சிலும், செருப்புகளையும் வீசி தொண்டர்களை தாக்கியுள்ளனர். சதி திட்டம் தீட்டி இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர் இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்துள்ளனர் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மருத்துவமனையில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது முன்கூட்டியே ஆம்புலன்ஸ்களை நிறுத்தி வைத்திருந்ததும் சதி திட்டத்திற்கான ஆதாரங்களாக அமைந்துள்ளன. தமிழக வெற்றிக் கழக தலைவர் மக்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் போதுமான காவலர்களை பணியமர்த்தாததும் முன்னேற்பாடுகளை செய்யாததும் இந்த சம்பவத்துக்கு காரணமாகும்.

    எனவே இந்த விபத்து குறித்து சிபிஐ விசாரணை நடத்தினால்தான் உண்மை வெளிப்படும். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

    தொடர்ந்து எங்கள் தரப்பு நியாயங்களை தெரிவித்து வாதாடி மேற்கண்ட குற்றத்துக்கு காரணமானவர்களை வெளிக் கொண்டு வருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×