என் மலர்
கிருஷ்ணகிரி
- முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
- சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகே டிராக்டர் மீது பளளி வாகனம் மோதிய விபத்தில் எல்கேஜி குழந்தை உள்பட இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னால் சென்ற டிராக்டர் மீது கார் மோதி முன்பகுதி முழுவதும் சிதைந்ததில் குழந்தைகள் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில், டிராக்டரில் இருந்த பெண், 8 குழந்தைகள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில், சிகிச்சை பெற்று வந்த ஒரு குழந்தை மற்றும் பெண் உயிரிழந்ததால் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது.
- கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
தளி:
கோடை காலம் தொடங்கி விட்டதால் உணவுப் பொருட்கள், பழங்கள் மற்றும் கூல்டிரிங்ஸ் ஆகிய பொருள்கள் பொது மக்களுக்கு தரம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா என சோதனைகளை மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதன் பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் வெங்கடேசன் மேற்பார்வையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓசூர், சூளகிரி, தளி கெலமங்கலம் போன்ற பகுதிகளில் உணவு பொருட்கள், பழங்கள் விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர்.
அதன் தொடர்ச்சியாக தேன்கனிக்கோட்டை பகுதியில் ஓசூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி முத்து மாரியப்பன் தலைமையில் அதிகாரிகள் பிரகாஷ் மற்றும் சந்தோஷ் மற்றும் உணவு பகுப்பு ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் இருந்த 3 கடைகளில் விற்பனை செய்த தர்பூசணி பழங்களில் ரசாயன நிறமூட்டிகளை கலந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த கடைகளில் இருந்து சுமார் 8 டன் அளவில் தர்பூசணி பழங்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, அதன் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.
- 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது70). விவசாயி. இவரது மனைவி தெரசாள் (65). இவர்களுக்கு சகாயராணி, விக்டோரியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சகாயராணிக்கு திருமணம் ஆகவில்லை. இளைய மகள் விக்டோரியாவிற்கு திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் லூர்துசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். மேலும், மகள் சகாயராணி வேலைக்கு சென்று இவர்களை பராமரித்து வந்தார். லூர்துசாமி மனைவி தெரசாள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மகள் சகாயராணி தாயாருடன் தங்கி அவரை கவனித்து வருகிறார்.
இதனால் தனிமையில் இருந்த லூர்துசாமியை கவனித்துக்கொள்ள அவரது மனைவி தெரசாளின் தங்கை எலிசபெத் (60) என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒன்னல்வாடிக்கு வந்து அங்கேயே தங்கி அவரை கவனித்து வந்தார்.
நேற்று மாலை, லூர்துசாமி, கொழுந்தியாள் எலிசபெத் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் லூர்துசாமி, எலிசபெத் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
தொடர்ந்து மர்ம கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. வீட்டில் புகை வந்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு லூர்துசாமி, எலிசபெத் ஆகியோர் கொலை செய்யப்பட்டு தீயில் கருகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எலிசபெத் காதில் அணிந்து இருந்த தோடு, கழுத்தில் அணிந்து இருந்த நகை திருட்டு போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்த மர்மகும்பலை பிடிக்க ஓசூர் டி.எஸ்.பி. சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.
- ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை என கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார்.
- வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொட்டமஞ்சு பகுதியைச் சேர்ந்தவர், 14 வயது சிறுமி. 7 ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (வயது29) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி பெங்களூருவில் திருமணம் நடந்தது. இதற்கு சிறுமியின் தாய் உதவியாக இருந்துள்ளார். நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை என கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என கூறியுள்ளார். தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் (38), மற்றும் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுகட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு துாக்கி சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்ற தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த தந்தை மற்றும் மல்லேஷ் மனைவி முனியம்மாள் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- மகராஜகடை பகுதியில் வேன் டிரைவர் கார்த்திக் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
- கார்த்திக்கை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொன்றது விசாரணையில் தெரிந்தது.
கிருஷ்ணகிரி அருகே மகராஜகடை பகுதியில் வேன் டிரைவர் கார்த்திக் எரித்துக்கொலை செய்யப்பட்டார். எரிந்த நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர்.
கடந்த ஞாயிறன்று கார்த்திக் என்ற இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தினேஷ், அவரது காதலி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக தினேஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், தனது காதலிக்கு தொந்தரவு கொடுத்ததால் கார்த்திக்கை கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.
காத்திக்குடனான காதலை முறித்து கொண்டு தினேஷ்குமாரை புவனா காதலித்து வந்த நிலையில் மீண்டும் தொந்தரவு செய்ததால் கொலை செய்துள்ளார்.
கார்த்திக்கை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொன்றது விசாரணையில் தெரிந்தது. கொலை செய்த பின்னர் கார்த்திக் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து மகராஜகடை பகுதியில் வீசி சென்றதாக அவர் தெரிவித்தார்.
- திருமணத்திற்கு சிறுமியின் தாயும் உதவியாக இருந்துள்ளார்.
- உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
தளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொட்டமஞ்சு மலை கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி, இவர் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.
இந்த சிறுமிக்கும் காளிக்குட்டை என்ற மலை கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மாதேஷ் (29) என்பவருக்கும் கடந்த 3-ந் தேதி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கட்டாய திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமணத்திற்கு சிறுமியின் தாயும் உதவியாக இருந்துள்ளார். பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்த சிறுமி திருமணம் பிடிக்கவில்லை எனக்கூறி கணவர் வீட்டிற்கு செல்ல மாட்டேன் என அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து சிறுமியை திருமணம் செய்த மாதேஷ் மற்றும் அவரது அண்ணன் மல்லேஷ் (38) ஆகியோர் உறவினர் வீட்டில் அழுதபடி இருந்த சிறுமியை குண்டுக்கட்டாக காளிக்குட்டை கிராமத்திற்கு தூக்கி சென்றுள்ளனர்.
சிறுமியை அவர்கள் தூக்கி செல்லும் காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியின் பாட்டியிடம் புகார் பெற்று இளம் வயதுள்ள சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த மாதேஷ், அவரது அண்ணன் மல்லேஷ் மற்றும் இந்த திருமணத்திற்கு உதவியாக இருந்த சிறுமியின் தாய் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த மாணவன் உயிரிழந்தார்.
- மாணவனை காப்பாற்ற சென்ற தலைமை ஆசிரியரும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஓசூரில் தனியார் குட்டையில் மூழ்கி உயிரிழந்த ள்ளி மாணவன், தலைமை ஆசிரியரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், "கிருஷ்ணகிரி மாவட்டம். ஒரூர் வட்டம், எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயின்றுவந்த மாணவன் நித்தின் என்பவர் இன்று (5.03.2025) பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் பள்ளிக்கு அருகிலுள்ள தனியாருக்குச் சொந்தமான பண்ணைக் குட்டையில் தவறி விழுந்த நிலையில் மாணவனைக் காப்பாற்ற முயன்ற பள்ளியின் தலைமையாசிரியர் திரு.கௌரிசங்கர் (வயது 53) ஆகிய இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
இச்சம்பவத்தில்,உயிரிழந்த பள்ளி மாணவன் நித்தின் மற்றும் தலையையாசிரியர் கௌரிசங்கர் ஆகிய இருவரின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த இருவரின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
- பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசுப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் 'மறுமலர்ச்சி' படத்தில் வரும் சாதியை குறிப்பிடும் பாடலுக்கு மாணவர்கள் பா.ம.க. துண்டுடன் நடனமாடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் மறைந்த காடுவெட்டி குரு, வீரப்பன் படம் பொறித்த டி சர்ட் பயன்படுத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
பா.ம.க. துண்டுடன் சாதி பாடலுக்கு நடனமாட செய்ததால் மாணவர்களின் பெற்றோர் ஆத்திரமடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தையடுத்து பள்ளியில் குவிந்த மாணவர்களின் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
- ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும்போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற 4 சக்கரங்கள் தடம் புரண்டன.
- பெங்களூருவில் இருந்து ரெயில்வே மீட்பு ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
கிருஷ்ணகிரி:
ஓசூர் வழியாக சேலத்திற்கு செல்ல இருந்த சரக்கு ரெயிலின் டேங்கர் பெட்டி தடம்புரண்டது. இதனால் அந்த பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு பனஸ்வாடி பகுதியில் இருந்து சேலத்திற்கு நேற்று மாலை 52 காலி டேங்கர்களுடன் சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரெயில் நிலையம் அருகில் தளி ஜங்ஷன் பக்கமாக நேற்று மாலை 4 மணி அளவில் வந்து கொண்டிருந்தது.
அந்த நேரம் ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும்போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற 4 சக்கரங்கள் தடம் புரண்டன. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. உடனடியாக என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார்.
சுமார் 300 மீட்டர் தூரம் சென்று ரெயில் நின்ற பிறகு டிரைவர் வந்து பார்த்தார். அப்போது 18-வது டேங்கரின் முன்புறமாக இருந்த சக்கரங்கள் தடம்புரண்டு இருந்தது. இதை பார்த்த என்ஜின் டிரைவர் ஓசூர் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். மேலும் பெங்களூருவில் உள்ள தென்மேற்கு ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து உடனடியாக பெங்களூருவில் இருந்து ரெயில்வே மீட்பு ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து 18-வது டேங்கருக்கு பின்னால் இருந்த 34 டேங்கர்களும் மாற்று என்ஜின் மூலமாக கர்நாடக மாநிலம் ஆனேக்கல் ரெயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ரெயில் தடம் புரண்டதால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் 18-வது டேங்கரில் இருந்த சக்கரங்கள் சரி செய்யப்பட்டு ரெயில் புறப்பட்டு சென்றது.
இதனால் அந்த பாதையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
பெங்களூரு பனஸ்வாடியில் இருந்து சேலத்திற்கு இந்த சரக்கு ரெயில் சென்றுள்ளது. இந்த ரெயில் சேலம் ஐ.ஓ.சி.யில் இரந்து பெட்ரோல் நிரப்பி வருவதற்காக 52 காலி டேங்கர்களுடன் சென்றுள்ளது.
அந்த நேரம் ரெயில் பெட்டிகள் தண்டவாளம் மாறும் போது திடீரென்று 18-வது டேங்கரில் இருந்த முன்புற பழுதான நிலையில் இருந்த 4 சக்கரங்கள் திடீரென்று தடம் புரண்டன.
தற்போது மீட்பு பணிகள் முடிவடைந்து ரெயில்கள் சீராக செல்கின்றன என்றார்.
இதனால் ஓசூர்-பெங்களூரு ரெயில்வே பாதையில் சென்ற பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரெயில்கள் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன.
ரெயில் வலது புறமாக தடம்புரண்டது. இடது புறமாக தடம் புரண்டு இருந்தால், பெரும் விபத்தை இது ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில், இருப்புப் பாதை அருகே, இடது புறத்தில், ஏராளமான வணிக நிறுவனங்களும், குடியிருப்பு பகுதிகளும் அமைந்துள்ளன. எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்ட டிரைவர், தடம் புரண்டு சுமார் 150 மீட்டர் அளவில், ரெயிலை விரைவாக செயல்பட்டு நிறுத்தியுள்ளார். அவர், சரியான நேரத்தில், சரியான முடிவை, விரைவாக எடுத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- இன்ஸ்டாகிராம் காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
- மனைவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட பெரியண்ணன் போச்சம்பள்ளி அழைத்து வந்தார்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த நெடுங்கல் அருகே உள்ள ஒட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரது மகன் பெரியண்ணன் (வயது23).
இவர் கடந்த 2023-ம் ஆண்டு அக்னிபாத் மூலம் ராணுவத்தில் பணியில் சேர்ந்தார்.
தற்போது இவர் மத்திய பிரதேசம் மாநிலம் ஜெப்பல்பூர் என்ற பகுதியில் ராணுவ வீரராக பணி செய்து வருகிறார்.
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அடுத்த வடமலம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவன் என்பவரது மகள் அனுப்பிரியா (22) என்பவருடன் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்தார்.
இந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது. காதலர்கள் இன்ஸ்டாகிராம் மூலமாகவே தங்களது அன்பை ஆன்லைன்னில் பரிமாறிக் கொண்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் காதலர்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளனர்.
இந்நிலையில் அனுப்பிரியாவின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது. இந்த நிலையில் இதுகுறித்த தகவலை அனுப்பிரியா இன்ஸ்டாகிராமில் தனது காதலன் பெரியண்ணனுக்கு தெரிவித்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், தங்களது காதலுக்கு பெற்றோர்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்தனர்.
இதைத்தொடர்ந்து பெரியண்ணன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ராணுவத்திலிருந்து விடுமுறை பெற்று 15 நாள் விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார்.
சொந்த ஊருக்கு வந்தவுடன் போச்சம்பள்ளிக்கு சென்று கடந்த 28-ந்தேதி அனுப்பிரியாவை அழைத்துக்கொண்டு அவரது நண்பர் உதவியுடன் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சென்று அங்கு உள்ள ஒரு கோவிலில் திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.
திருமணம் முடிந்த கையுடன் தேன்நிலவு கொண்டாடுவதற்காக தனது காதல் மனைவியுடன் பெரியண்ணன் ஊட்டிக்குச் சென்று அங்கு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக தெரிகிறது.
பின்னர் தேன் நிலவையும் கொண்டாடிய காதல் தம்பதியினர் 4 நாட்கள் முடிந்த நிலையில் தனது மனைவியை பெரியண்ணன் ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.
இதற்கிடையே அனுப்பிரியா வீட்டில் மாயமான விவகாரம் தெரியவந்து, அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அனுப்பிரியாவை தேடிவந்தனர்.
இந்த நிலையில், மனைவியை பெரியண்ணன் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது பெரியண்ணன் உறவினர்கள் இவர்களது திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல், அனுப்பிரியவை அவரது வீட்டில் விட்டுவிட்டு வரும்படி கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் மனைவியை அழைத்துக்கொண்டு அவரது வீட்டில் விட்டுவிட பெரியண்ணன் போச்சம்பள்ளி அழைத்து வந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அனுப்பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இருவரையும் மீட்டு போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்து அனுப்பிரியா பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், ராணுவ வீரர் பெரியண்ணன் காதல் திருமணம் செய்து கொண்ட அனுப்பிரியாவுடன் வாழ முடியாது என்று போலீஸ் நிலையத்தில் அடாவடியுடன் கூறியுள்ளார்.
இருவருக்கும் திருமணம் நடந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு காதல் ஜோடி பெரியண்ணன்-அனுப்பிரியா ஆகியோரை போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் ஆன்லைன் மூலம் பழகி காதலாகி, திருமணத்தில் முடிந்த அந்த பெண்ணின் வாழ்க்கை தற்போது ஆப்லைனில் முடிந்த நிலையில், வாழ்க்கையை தொலைத்த பெண்ணின் நிலை குறித்து பரிதாபமாக பெற்றோர் வருத்தத்துடன் காணப்பட்டனர்.
இது போன்று பல இளம்பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை நம்பி தங்களது வாழ்க்கையை பலரும் இழந்து வருகின்றனர் என்பது மிகவும் வேதனைக்குரியதாக உள்ளது.
- ஒரு சேவல் தானாக வந்து, சிவலிங்கத்தை 45 நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது.
- நிகழ்வு ஆன்மீக ரீதியாக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
ஊத்தங்கரை:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ராமகிருஷ்ணபதி ஊராட்சியில் ஒரு புதிய சிவன் கோவில் கட்டுமானம் நடந்து வருகிறது. இந்த கோவில் கட்டுமானத்தின் போது, அங்கு இருந்த பழைய கற்கால சிவலிங்கம் அருகிலுள்ள ஒரு கூரை கொட்டாயில் தற்காலிகமாக வைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. இந்த இடத்தில் ஒரு விந்தையான நிகழ்வு நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தினந்தோறும் மதியம் 12 மணிக்கு, ஒரு சேவல் தானாக வந்து, சிவலிங்கத்தை 45 நிமிடங்கள் அசையாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது. இந்த நிகழ்வு கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. சேவலின் இந்த தெய்வீக தரிசனம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், இன்பத்தையும், ஆன்மீக உணர்வுகளையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வு, கோவில் கட்டுமானம் முடிந்து கருவறை உருவாகும் வரை தொடரும் என்று மக்கள் நம்புகின்றனர். குறிப்பாக, கருவறை வெளியில் இருக்கும் இந்த கற்கால சிவலிங்கத்தை நோக்கி ஒரு பறவை இனமான சேவல் தினசரி வந்து தரிசனம் செய்வது, அதன் உண்மையான ஆன்மீக சக்தியை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இந்த விந்தையான நிகழ்வு ராமகிருஷ்ணபதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இதை ஒரு தெய்வீக அடையாளமாகக் கருதி, கோவில் கட்டுமானம் விரைவாக முடிக்கப்பட வேண்டும் என விரும்புகின்றனர். இந்த நிகழ்வு ஆன்மீக ரீதியாக மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது.
- நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்.
- என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? நான் ஆஜராவதாக ஏற்கனேவ கூறிவிட்டேன்.
என் மீது தீவிரம் காட்டும் போலீசார் பொள்ளாச்சி போன்ற சம்பவங்களில் தீவிரம் காட்டாதது ஏன் ? என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
சீமான் வீட்டில் ஒட்டப்பட்டசம்மன் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் காவலாளி, உதவியாளரை போலீசார் அழைத்து சென்றதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்.
சம்மன் ஒட்டி விசாரணைக்கு அழைப்பதால் எனக்கு அசிங்கமில்லை.
என்னை அசிங்கப்படுத்துவதாக நினைத்து திமுக அரசு தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்கிறது.
நாளை தருமபுரியில் கலந்தாய்வு கூட்டம் உள்ளதால் போலீஸ் விசாரணைக்கு ஆஜராக மாட்டேன்.
என்னை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன ? நான் ஆஜராவதாக ஏற்கனேவ கூறிவிட்டேன்.
சம்பந்தப்பட்ட பெண்ணையும், என்னையும் ஒரே இடத்தில் அமர வைத்து விசாரிக்க வேண்டும்.
என் மீது புகாரளித்த பெண்ணிடம் குற்றத்திற்கான சான்றை கேட்க வேண்டும், அந்த நாடகத்தை காண காத்திருக்கிறேன்.
பெரியார் விவகாரத்தில் என்னை சமாளிக்க முடியாமல் இந்த பெண்ணை வைத்து முயற்சிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






