என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    வருகிற 1, 6-ந்தேதிகளில் தமிழகம் வரும் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #Vaiko #PMModi
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சுற்றுச்சூழல் போராளி மாயமானது குறித்து ரெயில்வே போலீஸ் வழக்குப் பதிவு செய்தது. பின்னர் அது சட்டம்-ஒழுங்கு போலீசாருக்கு மாற்றப்பட்டது. ஆனால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகார் வரவில்லை என்றும் முகிலன் குடும்பத்தினர் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி இருக்கிறார்.

    முகிலனின் மகன் கார்முகில், வக்கீல் ஹென்றி ஆகியோர் முகிலன் காணாமல் போனது குறித்து போலீசில் புகார் செய்து இருக்கிறார்கள். ஆனால் முதல்-அமைச்சர் புகார் வரவில்லை என்று கூறுவது ஏன் என்பது புரியவில்லை.

    முகிலன் காணாமல் போகும் முன்பு ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் காவல் துறை குறித்து குற்றம்சாட்டி இருக்கிறார். பல ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். அதன் பிறகு அவர் காணாமல் போய் இருப்பதால் பயம் ஏற்பட்டுள்ளது.

    முகிலனை கண்டு பிடித்து தர வேண்டும் என்ற கோரிக்கைக்காக நல்லக்கண்ணு தலைமையில் மனித சங்கிலி நடந்தது. ம.தி.மு.க. உயர்மட்டக்குழு கூட்டத்தை தள்ளி வைத்துவிட்டு அதில் நான் கலந்துகொண்டேன். நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டபோது, அவரை சந்திக்கச் சென்ற என்னை போலீசார் தடுத்தனர். அப்போது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் போராடிய நான் உள்பட 6 பேர் மீது போலீசார் பொய் வழக்கு போட்டனர். இது ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்கும் செயல். முகிலன் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்க வேண்டும்.

    பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது மின்னல் வேகத்தில் தாக்குதல் நடத்திய ராணுவ வீரர்களுக்கு 120 கோடி மக்களும் கடமைப்பட்டிருக்கிறார்கள். ம.தி.மு.க. சார்பில் ராணுவத்தினருக்கு எங்கள் வணக்கம்.

    தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுமா? என்பது குறித்து நான் கருத்து கூற முடியாது.



    பிரதமர் மோடி வருகிற 1, 6-ந்தேதிகளில் தமிழகம் வருகிறார். அவர் கட்சி கூட்டத்துக்கு, தேர்தல் பிரசாரத்துக்கு வந்தால் ஜனநாயகத்தை மதித்து எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன்.

    ஆனால் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி 100-க்கும் மேற்பட்ட துரோகங்களை செய்து இருக்கிறார். அரசு விழாக்களில் கலந்து கொள்வதற்காக மோடி வர இருக்கிறார். எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு வைகோ கூறினார். #Vaiko #PMModi
    காஞ்சிபுரம் அருகே பொம்மை துப்பாக்கியை காட்டி நகைக்கடை அதிபரிடம் ரூ.20 லட்சம் பணத்தை பறித்த சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றார்.

    இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரும் காஞ்சீபுரத்தில் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் 2 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அவருக்கு அவசரமாக பணம் தேவை இருப்பதால் பணத்தை உடனே கொடுத்தால் தங்கத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விடலாம் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய மணிகண்டன் ரூ.20 லட்சம் பணத்துடன் இருவருடன் காரில் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் சரவணவேல் (எ) சிங்காரவேல் என்பவர் இவர்களுடன் இணைந்துள்ளார்.

    காஞ்சீபுரத்தில் காரில் சுற்றி வந்து கொண்டிருந்த போது நகைகளை பற்றி மணிகண்டன் கேட்டதால், தங்க நகைகள் வாங்க வந்துள்ளோம். எனவே முதலில் கோவில்களை சுற்றிப்பார்த்து விட்டு வந்து பிறகு வாங்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    பின்னர் மாலையில் காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் பகுதியில் நகைகள் இருப்பதாகக் கூறி காரில் அங்கு இருந்து சென்றனர். சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி பைபாஸ் அருகே கார் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்து 3 பேரும் மணிகண்டனிடம் உள்ள பணத்தினை பறிக்க முயற்சி செய்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் ஓடும் காரில் இருந்து குதித்து தப்ப முயன்றுள்ளார். இதில் காரின் கண்ணாடி உடைந்தது.

    உடனே காரில் இருந்த 3 பேரும் துப்பாக்கியை காட்டி மணிகண்டனை மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தினை பறித்தனர்.

    மேலும்மணிகண்டனை சாலையோரம் தள்ளி விட்டு 3 பேரும் காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இது பற்றி பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.7 மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த சென்னை வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கொண்டு வந்த பையில் இரண்டு ஸ்பிக்கர்கள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.

    அதில் 200 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சுரேஷிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport
    மாமல்லபுரத்தில் போலீஸ் போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியை சேர்ந்த மோகனா. இவர் உறவினருடன் கோவளம் அருகே உள்ள மருத்துவமணைக்கு சென்று விட்டு ஷேர் ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டு இருந்தார். வரும் வழியில் கிருஷ்ணன்காரனை சாய்பாபா கோயிலுக்கு செல்ல பஸ் நிறுத்தத்தில் இருவரும் இறங்கினார்கள்.

    அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம வாலிபர் ஒருவர் தன்னை சாதாரண உடையில் ரோந்து சுற்றும் ரகசிய போலீஸ் என அவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டு வழிப்பறி கொள்ளை அதிகமாக நடக்கும் பகுதி இது. அதனால் நகைகளை பத்திரமாக கைபையில் வைத்து பாதுகாப்பாக எடுத்து செல்லுங்கள் என எச்சரிப்பது போல் கூறிவிட்டு சென்றான்.

    இதை நம்பிய மோகனா தனது 11பவுன் நகை மற்றும் செல்போனை கை பையில் வைத்து விட்டு நின்றார். அப்போது அதே வாலிபர் மின்னல் வேகத்தில் பைக்கில் வந்து மோகனாவின் கைப்பையை பறித்து தப்பி சென்று விட்டான்.

    தேமுதிக மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். #kamalHaasan
    ஆலந்தூர்:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு இன்று முதல் மார்ச் 5-ந்தேதி வரை விருப்ப மனு வழங்கப்படும்.

    எங்களுடன் ஒத்த கருத்துடையவர்கள் மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், தகுதி உள்ளவர்கள், அவர்களுக்கு தெரிந்த தகுதி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுக்கலாம்.



    விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அதனுடன் ரூ.10 ஆயிரம் செலுத்தி சமர்ப்பிக்க வேண்டும். நாங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுப்போம். தே.மு.தி.க., இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி பேசவில்லை. வேறு சிலபேர் எங்களை தொடர்புகொண்டு பேசி வருகிறார்கள். நல்லவர்கள் கூட நிற்பார்கள். எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #kamalHaasan
    அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK #DMDK
    ஆலந்தூர்:

    அமைச்சர் ஜெயக்குமார் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்திற்குச் சென்று வந்தேன். ஜி.எஸ்.டி.யால் தமிழ்நாட்டுக்கு பெரிய சுமை என்ற நிலைமை மாறி 90 சதவீதம் வரி குறைக்கப்பட்டுள்ளது.

    நிறுவனங்களை ஒருங்கிணைத்து கருத்து கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி சிறு குறு தொழில்களை உற்சாகப்படுத்த ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது

    ரியல் எஸ்டேட் தொழில் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது.

    அதைப்போல பல்வேறு பொருட்களுக்கான வரி குறைப்பு செய்ய மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    மக்களுக்கு இலவசம் தருவதை யாரும் கொச்சைப்படுத்தக்கூடாது. அ.தி.மு.க. அரசு மக்கள் நல அரசு, சமூக நீதிக்கான அரசு, கடந்த 2011-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை சுமார் 5 லட்சம் அரசு வேலைக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி இருக்கிறோம். அதேபோல் 3.5 லட்ச காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறோம்.

    எல்லோருக்கும் அரசு வேலை என்பது எந்த அரசாலும் கொடுக்க முடியாது. அதனால் பெண்கள், இளைஞர்கள் தொழில் முனைவோரை உற்சாகப்படுத்தும் விதத்தில் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம்.

    ஆதிதிராவிட மக்களுக்கு இலவச வீடு கட்டித்தருவது, பிற்படுத்தப்பட்டோர், மீனவர்கள், நெசவாளர்கள் போன்றவர்களுக்கு பல சலுகைகளை அரசு ஏற்படுத்தி தருகிறது. இது எல்லாம் தவறா? வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி தொகையாக 2,000 தருவது எந்தவிதத்திலும் தவறல்ல.

    தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில் தான் தேர்தல் கூட்டணி. அ.தி.மு.க.வின் மெகா கூட்டணியை பார்த்து ஸ்டாலின் விரக்தியின் உச்சகட்டத்திற்கு போய்விட்டார். அதனால் தான் அரசியல் நாகரீகங்களுக்கு அப்பாற்பட்டு எங்களை கண்டபடி திட்டுகிறார்.

    டி.டி.வி. தினகரன் ஒரு தனி மரம். இனி அவருடைய அரசியல் இங்கே எடுபடாது. அவர் ஒரு வெற்று காகிதம். அதைப்போல கமல்ஹாசனுக்கு மக்களிடம் செல்வாக்கு இல்லை. இந்த மூன்று பேருக்கும் அ.தி.மு.க. மெகா கூட்டணியை பார்த்து காய்ச்சல் வந்துவிட்டது.

    கிராமசபை, ஊராட்சி சபை ஏன் ஐ.நா. சபை நடத்தினாலும் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

    தே.மு.தி.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவது அந்த கட்சியினுடைய தனிப்பட்ட செயல். அதனால் கூட்டணி பேச்சு வார்த்தை முற்றுப்பெற்றது என்று சொல்லி விட முடியாது.



    ஸ்டாலின் விஜயகாந்தை சந்திக்கும்போது அரசியலும் பேசினார் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியிருக்கிறார். இதிலிருந்து உண்மை தெரிகிறது. ஸ்டாலினுக்கு தே.மு.தி.க. அ.தி.மு.க.வுடன் கூட்டணிக்கு போய்விடக்கூடாது என்ற எண்ணம்.

    தேர்தல் கூட்டணிக்காக தி.மு.க. எல்லோரது கால்களிலும் விழுகிறது. இதுதான் அவர்களின் நிலைமை. அ.தி.மு.க.வை பொறுத்தவரை இன்னும் கூட்டணிக்கான கதவு திறந்திருக்கிறது, பேச்சு வார்த்தை நடக்கும், விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே திருவான்மியூரில் உள்ள பள்ளியில் இன்று, காலை உணவு திட்டத்தை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, “அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்தால் மகிழ்ச்சி, வராவிட்டால் கவலை இல்லை.

    மு.க.ஸ்டாலின் கோபத்தின் விரக்தியில் இருக்கிறார். இது தலைவனாக இருப்பதற்கு அழகல்ல.

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரும் மனுவை கவர்னர் இதுவரை நிராகரிக்கவில்லை. 7 பேரையும் விடுதலை செய்வது பற்றி கவர்னர் முடிவு எடுக்க அரசு வலியுறுத்த முடியாது” என்றார். #MinisterJayakumar #ADMK #DMDK
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன் என்று துணை சபாநாயகர் தம்பித்துரை கூறியுள்ளார். #ThambiDurai #ADMK

    ஆலந்தூர்:

    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி. ஸ்டாலின் மனவிரக்தியில் உள்ளார். அதனால்தான் அவர் எங்களை குறை கூறுகிறார். அவர் கிராம பஞ்சாயத்துக்கு கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஸ்டாலின் எதை செய்தாலும் அவர் வெற்றி பெற முடியாது.

    பாராளுமன்றத்தில் தமிழகத்தின் நலனுக்காக குரல் எழுப்பி உள்ளோம். மத்திய அரசு அதற்கு செவி சாய்த்து உள்ளது. பரிசீலனையும் செய்கிறார்கள். எங்களது முக்கிய குறிக்கோளே தமிழகத்தின் நலன்தான்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த தொகுதியில் என்னை போட்டியிட சொன்னாலும் போட்டியிடுவேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் கட்சிக்காக பாடுபடுவேன்.

    மக்களின் ஆதரவு இருப்பதால்தான் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார்கள்.

    ஜெயலலிதாவின் கனவுப் படி எங்களது கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணிக்கு ஓட்டுப்போடும் மனநிலையில் மக்கள் உள்ளனர்.

    தி.மு.க.வின் சந்தர்ப்பவாத கூட்டணியை முறியடிக்கவே நாங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ThambiDurai #ADMK

    காஞ்சீபுரத்தில் ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றபோது அலாரம் ஒலித்ததால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் ரெயில்வே சாலை பழைய ரெயில் நிலையம் அருகே உள்ள மாமல்லன் நகரில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    அதிகாலை ஏ.டி.எம். மையத்தில் மர்ம நபர்கள் புகுந்து ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தினை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அலாரம் ஒலித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.

    தகவல் அறிந்து வந்த காஞ்சீபுரம் தாலுக்கா போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    காஞ்சீபுரம் நகருக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில் காஞ்சீபுரம் நகரப் பகுதியில் ஏராளமான ஏ.டி.எம். மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் போதிய காவலர்கள் நியமிக்கப்படாததே இது போன்ற சம்பவங்கள் நடக்கக் காரணமாகின்றன என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து போலீசார் கூறுகையில், “காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமான் மாவட்டத்தில் உள்ள வங்கி அலுவலர்களை அழைத்து வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தியுள்ளார். ஆனால் முழுமையான அளவில் ஏ.டி.எம். மையங்களில் காவலாளிகள் நியமிக்கப்படாததாலேயே இது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன என தெரிவித்தனர். #tamilnews
    போரூர் அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர் நகர் கங்கை கொண்ட சோழன் குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கார்த்திகேயனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று கார்த்திகேயன் குடிப்பதற்காக வீட்டில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்து சென்று விட்டார். இதில் மனம் உடைந்த லட்சுமி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர்களுக்கு திருமணம் முடிந்து 5 ஆண்டுகளே ஆவதால் கிண்டி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தர விடப்பட்டுள்ளது.

    நெற்குன்றத்தில் மது குடித்து வந்த தகராறில் கணவர் மீது வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்பட்டார்.

    போரூர்:

    நெற்குன்றம் மந்தை வெளி தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ். லாரி டிரைவர். இவரது மனைவி விமலா. ரமேஷ் தினமும் மது குடித்து விட்டு விமலாவை அடித்து உதைத்து வந்தார். கடந்த 18ந் தேதி குடிபோதையில் வந்த ரமேஷ்-விமலா இடையே தகராறு ஏற்பட்டது.

    அப்போது விமலாவை கடுமையாக தாக்கினார். அப்போது விமலா அடுப்பில் கொதித்து கொண்டு இருந்த வெந்நீரை ரமேஷ் மீது ஊற்றினார்.

    இதில் உடல் வெந்து அலறி துடித்த ரமேசை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து வழக்குபதிவு செய்து கோயம்பேடு இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் இன்று விமலாவை கைது செய்தனர்.

    மாமல்லபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அமீர் அகமது சென்னை கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு இன்ஜினியரிங் படித்து வருகிறார். இவரது நண்பர் மிர்சாஅலி ஓ.எம்.ஆரில் உள்ள கம்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக உள்ளார்.

    இவர்கள் 10-க்கும் மேற்பட்ட நண்பர்களுடன் சென்னை அரும்பாக்கத்தில் தனி வீடு எடுத்து தங்கி உள்ளனர். நேற்று இருவரும் மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு சென்று நண்பர் ஒருவரை சந்தித்து விட்டு சென்னை திரும்பி கொண்டிருந்தனர்.

    மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி இருளர்கள் காலனி அருகே வந்தபோது சென்னையில் இருந்து பாண்டிச்சேரி சென்ற அரசு பஸ் நேருக்கு நேர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அமீர் அகமதும் மிர்சா அலியும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.

    மிர்சா அலி இன்னும் ஓரிரு மாதத்தில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல இருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MaduranthakamAccident
    மதுராந்தகம்:

    மன்னார்குடியை சேர்ந்தவர் பத்மாவதி (வயது 50). சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது உறவினர் வீட்டு திருமணம் மன்னார்குடியில் நடந்தது.

    இந்த திருமணத்தில் பங்கேற்பதற்காக பத்மாவதி, சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்தார்.

    அவரை அழைத்து செல்வதற்காக மன்னார்குடியில் இருந்து பத்மாவதியின் மகன் மணிகண்டன் (25), மருமகன் வேல்முருகன் (35), பேத்தி திரிஷா (12) ஆகியோர் காரில் வந்தனர்.

    விமான நிலையத்துக்கு வந்து பத்மாவதியை 3 பேரும் காரில் ஏற்றிக் கொண்டு மன்னார்குடி நோக்கி சென்றனர். காரை வேல் முருகன் ஓட்டினார். மதுராந்தகம் அடுத்த திருநாகலூர் பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது வேல்முருகன் திடீரென்று கண் அயர்ந்தார்.

    அப்போது கார் தறிகெட்டு ஓடத் தொடங்கியது. பின்னர் அந்த கார் சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரை இடித்துக் கொண்டு சாலையின் மறுபுறம் ஓடியது. அப்போது எதிரே வந்த தனியார் ஆம்னி பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் மீது கார் வேகமாக மோதியது.

    இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த பத்மாவதி, மணிகண்டன், வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். திரிஷா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உயிருக்கு போராடிய திரிஷாவை மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #MaduranthakamAccident
    ×