என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை வாலிபர் கைது"

    • பயணிகள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
    • போலீசார் விரைந்துவந்து வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    பெங்களூரு:

    பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் சிலர் தனது உடைமைகளை இழந்துவிட்டதாக கூறியும், பர்சை தவற விட்டதாகவும் கூறி பணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இத்தகைய மோசடி நபர்கள் தற்போது விமான நிலையம்வரை வந்து விமான பயணிகளிடமும் கைவரிசை காட்ட தொடங்கிவிட்டனர்.

    பெங்களூரு தேவனஹள்ளியில் கெம்பேகவுட சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கு சம்பவத்தன்று ஒரு வாலிபர் எனது தந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம். அவருக்கு சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணம் கொடுத்து உதவுங்கள் என்று பலரிடம் பணம் வசூலித்தார்.

    அவரது நிலையை அறிந்த பலரும் அவரிடம் பணம் கொடுத்தனர். இந்த நிலையில் அவரது நடவடிக்கையில் சில பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் விமான நிலைய போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பதும், தந்தைக்கு உடல்நிலை சரியில்லை என பொய் சொல்லி பணம் வசூலித்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். மேலும் அவரை சோதனை செய்ததில் அவரது பர்சில் பல்வேறு வங்கிகளை சேர்ந்த 26 கிரெடிட் கார்டுகள் இருந்தன.

    சென்னைக்கு செல்வதற்கான முன்பதிவு டிக்கெட்டும் அவரிடம் இருந்தது. இதை தொடர்ந்து விக்னேசை போலீசார் கைது செய்தனர். பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த விக்னேஷ் கடந்த ஆண்டு சென்னை, ஐதராபாத், மும்பை விமான நிலையங்களிலும் இதுபோன்று பணம் வசூலில் ஈடுபட்டுள்ளார். ஆனால் யாரும் அதுபற்றி புகார் செய்யவில்லை.

    மேலும் பெங்களூரு விமான நிலையத்தில் ஏற்கனவே ஒரு பயணியிடம் வேலைக்கான இண்டர்வியூ செல்ல வேண்டும், எனது உடைமைகளை இழந்துவிட்டேன் என கூறி ரூ.8 ஆயிரம் மோசடி செய்துள்ளார். இதுபற்றி அந்த பயணி கொடுத்த புகாரில்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளான ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்களுக்கு கடந்த சில நாட்களாக சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவக்குமார் பேசுவதாக தொடர்பு கொண்டு ஒருவர் பேசி உள்ளார்.

    அப்போது அவர், உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் உங்கள் மீது புகார்கள் வந்துள்ளது.

    நீங்கள் சென்னை வந்து என்னை சந்திக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி மிரட்டினார்.

    இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

    அவரது செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அதுபோன்று யாரும் சென்னை தலைமை செயலகத்தில் வேலை செய்யவில்லை என்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் தி.மு.க. ஒன்றிய செயலாளரும், கணியம்பாடி ஒன்றிய குழு துணைத்தலைவர் கஜேந்திரன் என்பவரையும், கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு சென்னை வரும்படி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தி.மு.க. பிரமுகர் கஜேந்திரன், வேலூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னையில் பதுங்கி இருந்த நபரை கைது செய்தனர்.

    போலீசார் அவரை வேலூர் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர் சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த சுபாஷ் (வயது 29) என்பதும் இவர் போலியான செல்போன் எண் மூலம் பல பேரை மிரட்டி பணம் பறித்ததும் தெரிய வந்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.

    கோவை:

    கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் சென்னையில் தங்கி வேலை பார்த்தார். அவருக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வித்யாதரன் (வயது 33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சூலூர் பெண்ணை வித்யாதரன் காதலிப்பதாக கூறினார். அவரது காதலை இளம்பெண் ஏற்கவில்லை.

    இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை எப்படியோ அறிந்து கொண்ட வித்யாதரன், இளம்பெண்ணை பழிவாங்குவது என முடிவு செய்தார்.

    இதன் ஒரு பகுதியாக அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவற்றை திருமணம் நிச்சயித்த வாலிபருக்கு செல்போன் மூலம் அனுப்பி வைத்து உள்ளார். எனவே இளம்பெண்ணின் திருமணம் பாதியில் நின்று போனது. இந்த நிலையில் வித்யாதரன் மீண்டும் சூலூர் பெண்ணுக்கு காதல் வலைவீசினார். அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை.

    அப்போது வித்யாதரன், உனக்கு நிச்சயித்த மணமகனுக்கு நான்தான் உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்தேன். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்ய விடமாட்டேன் என மிரட்டினார்.

    இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.

    இதையடுத்து வித்யாதரன் மீண்டும் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் இளம்பெண்ணிடம், நான் உன்னை இப்போதும் காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள் என்று மிரட்டி பார்த்தார். இளம்பெண் ஏற்கவில்லை.

    இதனால் வித்யாதரன் திருமணம் நிச்சயமான 2-வது வாலிபருக்கும் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் உடனடியாக திருமணத்தை பாதியில் நிறுத்தி விட்டார். எனவே பாதிக்கப்பட்ட இளம்பெண் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர். இதன்படி இளம்பெண் அந்த வாலிபருக்கு போன் செய்து, நான் உன்னை காதலிக்கிறேன். எனவே நீ உடனடியாக புறப்பட்டு கோவைக்கு வா என்று தெரிவித்து உள்ளார். அதன்படி வித்யாதரன் கோவைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    ஈரோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமியை கடத்தியதாக கைதான சென்னை வாலிபர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
    ஈரோடு:

    இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் பெரும்பாலும் சமூக வலைதளங்களான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் நேரத்தை செலவிடுகின்றனர். இதேப்போல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் சமூகவலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சில சமயம் இதில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

    இந்நிலையில் சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த அஜித் (வயது 21). பிரிண்டிங் பட்டறை தொழிலாளி. இவர் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை செலவிட்டு வந்துள்ளார். அப்போது ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இருவரும் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி பேசி வந்துள்ளனர். அப்போது சிறுமியிடம் அஜித் ஆசைவார்த்தை கூறி பழகியுள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 26-ந்தேதி சிறுமி திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கருங்கல்பாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அஜித் சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுமி மீட்கப்பட்டார்.

    அஜித் மீது கடத்தல், போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவுபடி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

    புதுவை அண்ணாசாலை யில் செல்போன் கடையில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 5 செல்போன்கள் மீட்கப்பட்டது.
    புதுச்சேரி:

    புதுவை முத்தியால்பேட் டையை சேர்ந்தவர் சதீஷ், இவர் அண்ணாசாலையில் செல்போன்கடை வைத்துள்ளார். கடந்த 19-ந் தேதி இரவு சதீஷ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவில் மர்ம மனிதர்கள் கடையின் மேற்கூரையை பிரித்து உள்ளே புகுந்தனர். கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்று விட்டனர். இந்த கொள்ளை குறித்து சதீஷ் பெரிய கடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரே கைகளை பதிவு செய்தனர்.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் 3 மர்ம மனிதர்கள் நடமாடியது தெரிந்தது. அதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது செல்போன் கடையில் திருடியது சென்னையை சேர்ந்த விஷ்ணு (21) உள்பட 3 பேர் என்பது தெரிய வந்தது.

    அதைத் தொடர்ந்து பெரிய கடை போலீசாரும், அதிரடிப்படை போலீசாரும் சென்னை சென்று தேடினர். அப்போது போலீசார் வருவதை அறிந்ததும் விஷ்ணு அங்கிருந்து தப்பி காலாப்பட்டு பகுதிக்கு வந்திருப்பது தெரியவந்தது. போலீசார் நேற்று இரவு காலாப்பட்டு பகுதியில் பதுங்கி இருந்த விஷ்ணுவை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடைய அவரது நண்பர்கள் 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.7 மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த சென்னை வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த சுரேஷ் என்ற பயணியை சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அவர் கொண்டு வந்த பையில் இரண்டு ஸ்பிக்கர்கள் இருந்ததை பார்த்த அதிகாரிகள் அதனை சோதனை செய்தனர்.

    அதில் 200 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வந்திருப்பதை கண்டுபிடித்தனர். இதன் மதிப்பு ரூ.7 லட்சம் ஆகும். தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து சுரேஷிடம் விசாரனை நடத்தி வருகின்றனர். #ChennaiAirport
    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து 2 செல்போன் கடைகளில் கொள்ளையடித்த சென்னையைச் சேர்ந்த வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போச்சம்பள்ளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் கஜேந்திரன். இவர் போச்சம்பள்ளி வடமலம்பட்டி பகுதியில் செல்போன் கடை வைத்துள்ளார். இதே பகுதியில் ஊத்தங்கரையை சேர்ந்தவர் மணிமாறன். என்பவரும் செல்போன் கடை வைத்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி இவர்கள் இருவரும் வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் சிலர் செல்போன் கடைகளின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பின்னர் 2 கடைகளிலும் இருந்து மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

    இது குறித்து செல்போன் கடைகாரர்கள் போச்சம்பள்ளி போலீசாருக்கு தெரிவித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மணிமாறன் கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 3.30 மணியளவில் மர்ம கும்பல் காரில் வந்து கடையின் கதவை உடைக்க முயற்சி செய்தார். கதவை உடைக்க முடியாததால் கதவில் கயிறை கட்டி, அதனை காரிலும் கட்டி இழுத்தனர். அப்போது கதவு உடைந்ததும் கடைக்குள் புகுந்து செல்போன்களை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பி சென்றனர். இந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது.

    இதையெடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மகேஸ்குமர் உத்தரவின்பேரில், பர்கூர் டி.எஸ்.பி. தங்கவேல் அறிவுறுத்தலின்படி, போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் தனிப்படை அமைத்து சி.சி.டி.வி கேமராவின் பதிவுகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து வலைவீசி தேடிவந்தனர்.

    இந்த நிலையில், திருடப்பட்ட செல்போன்கள் சென்னை கண்ணகி நகரை அடுத்த பெரியார் நகரை சேர்ந்த சயாத்து என்பவரது மகன் சலாவூதின் (வயது 35) என்பவர் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து சலாவூதின் கைது செய்யப்பட்டு அவரிடம், போச்சம்பள்ளி கடைகளில் கொள்ளையடிக்கப்பட்ட செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

    மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்கள் எங்கு உள்ளனர். போச்சம்பள்ளியில் காரில் வந்த நபர் யார்? காரில் ஒருவர் மட்டும் இருந்தாரா? அல்லது கூட்டாக வந்தனரா? என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்ட சலாவூதினிடம் தொடர்ந்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
    கொச்சியில் இருந்து மலேசியாவுக்கு விமானத்தில் துணி பார்சலில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதை பொருளை கடத்த முயன்ற சென்னை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் கடம்பூரை சேர்ந்தவர் பிரசாந்தகுமார் (வயது 32). இவர் சென்னையில் வசித்து வருகிறார். சென்னையில் இருந்து தனியார் கூரியர் சர்வீஸ் மூலம் கொச்சிக்கு துணி பண்டல்களை பார்சல் செய்தார்.

    கொச்சிக்கு பார்சல் சென்றதும் அங்கு வந்து பார்சல்களை பெற்றுக்கொண்ட பிரசாந்தகுமார் அவைகளை மலேசியாவுக்கு அனுப்ப வேறொரு பார்சல் கூரியரை அணுகினார்.

    அப்போது பார்சல் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது. சென்னையில் இருந்து நேரடியாக மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்பலாமே? ஏன் சென்னையில் இருந்து இங்கு கொண்டு வந்து, இங்கிருந்து மலேசியாவுக்கு பார்சல்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டார். அதற்கு பிரசாந்தகுமார் முறையாக பதில் கூறவில்லை.

    இதனையடுத்து கூரியர் ஊழியர் எர்ணாகுளம் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட பார்சல்களை பிரித்து பார்த்தபோது ரூ.200 கோடி மதிப்புள்ள 32 கிலோ மெத்தடின் என்ற போதை பொருள் இருந்தது. இதனையடுத்து பிரசாந்தகுமார் தலைமறைவனார். அவரை கேரள போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் சென்னையில் வைத்து பிரசாந்தகுமாரை கேரள போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கொலையில் சென்னையை சேர்ந்த மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கருவம்பாளையம் அக்கரை தோட்டம் பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வந்தவர் ஜோநோபல் (வயது 35). இவர் கடந்த 5-ந்தேதி இவரது கம்பெனியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்பெனியில் வேலை பார்த்த 3 பேரை தேடி வந்தனர். கொலையில் தொடர்புடைய ஸ்டீபன்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை தேடி வந்தனர். 

    இந்நிலையில் கொலையியில் தொடர்புடைய சென்னை நெசபாக்கம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் சதீஸ் என்ற சலீம் (18) என்பவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சதீஸ் என்ற சலீமை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய லோகேஷ் என்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ×