என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கொலை"

    திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கொலையில் சென்னையை சேர்ந்த மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் கருவம்பாளையம் அக்கரை தோட்டம் பகுதியில் பனியன் கம்பெனி நடத்தி வந்தவர் ஜோநோபல் (வயது 35). இவர் கடந்த 5-ந்தேதி இவரது கம்பெனியில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

    இது குறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்பெனியில் வேலை பார்த்த 3 பேரை தேடி வந்தனர். கொலையில் தொடர்புடைய ஸ்டீபன்ராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருந்த மேலும் 2 பேரை தேடி வந்தனர். 

    இந்நிலையில் கொலையியில் தொடர்புடைய சென்னை நெசபாக்கம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த பாபு என்பவரின் மகன் சதீஸ் என்ற சலீம் (18) என்பவர் திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சதீஸ் என்ற சலீமை கைது செய்தனர். கொலையில் தொடர்புடைய லோகேஷ் என்பரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    ×