search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    இளம்பெண் திருமணத்தை 2 முறை நிறுத்திய சென்னை வாலிபர் கைது
    X

    கைதான வித்யாதரன்.

    இளம்பெண் திருமணத்தை 2 முறை நிறுத்திய சென்னை வாலிபர் கைது

    • வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.

    கோவை:

    கோவை சூலூரை சேர்ந்த இளம்பெண் சென்னையில் தங்கி வேலை பார்த்தார். அவருக்கு அதே நிறுவனத்தில் டிரைவராக வேலைபார்த்த சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த வித்யாதரன் (வயது 33) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    அவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சூலூர் பெண்ணை வித்யாதரன் காதலிப்பதாக கூறினார். அவரது காதலை இளம்பெண் ஏற்கவில்லை.

    இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனை எப்படியோ அறிந்து கொண்ட வித்யாதரன், இளம்பெண்ணை பழிவாங்குவது என முடிவு செய்தார்.

    இதன் ஒரு பகுதியாக அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அவற்றை திருமணம் நிச்சயித்த வாலிபருக்கு செல்போன் மூலம் அனுப்பி வைத்து உள்ளார். எனவே இளம்பெண்ணின் திருமணம் பாதியில் நின்று போனது. இந்த நிலையில் வித்யாதரன் மீண்டும் சூலூர் பெண்ணுக்கு காதல் வலைவீசினார். அந்த பெண் ஒப்புக்கொள்ளவில்லை.

    அப்போது வித்யாதரன், உனக்கு நிச்சயித்த மணமகனுக்கு நான்தான் உன் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்தேன். என்னை தவிர வேறு யாரும் உன்னை திருமணம் செய்ய விடமாட்டேன் என மிரட்டினார்.

    இது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் சென்னையில் இருந்து கோவைக்கு வந்து விட்டார். இந்த நிலையில் சூலூர் பெண்ணுக்கு வேறு ஒரு வாலிபருடன் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.

    இதையடுத்து வித்யாதரன் மீண்டும் கோவைக்கு புறப்பட்டு வந்தார். அப்போது அவர் இளம்பெண்ணிடம், நான் உன்னை இப்போதும் காதலிக்கிறேன். என்னை திருமணம் செய்து கொள் என்று மிரட்டி பார்த்தார். இளம்பெண் ஏற்கவில்லை.

    இதனால் வித்யாதரன் திருமணம் நிச்சயமான 2-வது வாலிபருக்கும் இளம்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அனுப்பினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணமகன் உடனடியாக திருமணத்தை பாதியில் நிறுத்தி விட்டார். எனவே பாதிக்கப்பட்ட இளம்பெண் சூலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இளம்பெண் தனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தார்.

    இதனை தொடர்ந்து வித்யாதரனை சாதுர்யமாக கைது செய்வது என்று போலீசார் முடிவு செய்தனர். இதன்படி இளம்பெண் அந்த வாலிபருக்கு போன் செய்து, நான் உன்னை காதலிக்கிறேன். எனவே நீ உடனடியாக புறப்பட்டு கோவைக்கு வா என்று தெரிவித்து உள்ளார். அதன்படி வித்யாதரன் கோவைக்கு வந்து சேர்ந்தார். அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    Next Story
    ×