search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Money flush"

    காஞ்சிபுரம் அருகே பொம்மை துப்பாக்கியை காட்டி நகைக்கடை அதிபரிடம் ரூ.20 லட்சம் பணத்தை பறித்த சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் அடகு நகைகளை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருகின்றார்.

    இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் முகமது ரியாஸ் ஆகிய இருவரும் காஞ்சீபுரத்தில் தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் 2 கிலோ தங்க நகைகள் இருப்பதாகவும் அவருக்கு அவசரமாக பணம் தேவை இருப்பதால் பணத்தை உடனே கொடுத்தால் தங்கத்தினை குறைந்த விலைக்கு வாங்கி விடலாம் எனக் கூறியுள்ளனர். இதனை நம்பிய மணிகண்டன் ரூ.20 லட்சம் பணத்துடன் இருவருடன் காரில் காஞ்சீபுரம் வந்தார். காஞ்சிபுரத்தில் சரவணவேல் (எ) சிங்காரவேல் என்பவர் இவர்களுடன் இணைந்துள்ளார்.

    காஞ்சீபுரத்தில் காரில் சுற்றி வந்து கொண்டிருந்த போது நகைகளை பற்றி மணிகண்டன் கேட்டதால், தங்க நகைகள் வாங்க வந்துள்ளோம். எனவே முதலில் கோவில்களை சுற்றிப்பார்த்து விட்டு வந்து பிறகு வாங்கலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    பின்னர் மாலையில் காஞ்சீபுரம் அடுத்த பாலுச்செட்டிசத்திரம் பகுதியில் நகைகள் இருப்பதாகக் கூறி காரில் அங்கு இருந்து சென்றனர். சென்னை - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலை கீழம்பி பைபாஸ் அருகே கார் சென்று கொண்டிருந்த போது காரில் இருந்து 3 பேரும் மணிகண்டனிடம் உள்ள பணத்தினை பறிக்க முயற்சி செய்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் ஓடும் காரில் இருந்து குதித்து தப்ப முயன்றுள்ளார். இதில் காரின் கண்ணாடி உடைந்தது.

    உடனே காரில் இருந்த 3 பேரும் துப்பாக்கியை காட்டி மணிகண்டனை மிரட்டி ரூ.20 லட்சம் பணத்தினை பறித்தனர்.

    மேலும்மணிகண்டனை சாலையோரம் தள்ளி விட்டு 3 பேரும் காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர்.

    அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் இது பற்றி பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    மார்த்தாண்டம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வங்கி மேலாளரை தாக்கி பணம் பறித்த 2 வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் பாலப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு சிங்(வயது24). இவர் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு வங்கியில் விற்பனை மேலாளராக பணியாற்றி வருகிறார்.

    நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து நல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது நல்லூர் பார்க் அருகே வரும் போது எதிரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஜெரால்டு சிங் மோட்டார் சைக்கிளை வழிமறித்து அவரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும் அவரது பையில் இருந்த ரூ.800 பணத்தை பறித்தனர். இதனை அவர் தடுத்தார். இதில் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் ஜெரால்டை சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் படுகாயம் அடைந்த ஜெரால்டு சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் அந்த 2 வாலிபர்கள் ஜெரால்டு சிங்குக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.

    படுகாயம் அடைந்த ஜெரால்டுசிங்கை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் சம்பவம் குறித்து மார்த்தாண்டம் போலீசில் ஜெரால்டு சிங் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சொர்ணலதா, சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரலிங் கம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெரால்டு சிங் கூறிய அடையாளத்தை வைத்து அந்த பகுதியில் உள்ள சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பெங்களூரில் குடும்ப நிகழ்ச்சிக்காக சென்ற சென்னை என்ஜினீயரை காரில் கடத்தி 8 மணி நேரம் அடித்து உதைத்து ரூ.45 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற கும்பலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெங்களூர்:

    பெங்களூரை சேர்ந்தவர் அனுராக் சர்மா. என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    அனுராக் சர்மா தனது குடும்ப நிகழ்ச்சிக்காக பெங்களூர் சென்றார். அதன் பிறகு சென்னை செல்ல தனியார் பஸ்சுக்காக இரவு 12 மணிக்கு பூம்மாசன்ட்ரா பஸ்நிலையத்தில் காத்து இருந்தார்.

    அப்போது கார் ஒன்று வந்தது. அதில் இருந்த 2 பேர் அனுராக் சர்மாவை திடீரென்று காருக்குள் தூக்கி போட்டு கடத்தி சென்றனர். பின்னர் பஸ் நிலையத்தில் இருந்த மேலும் 2 பேர் காருக்குள் ஏறிக் கொண்டனர். அவர்கள் அனுராக் சர்மாவை சரமாரியாக அடித்து உதைத்தார்கள்.

    இரும்பு கம்பியால் அவரது காலில் தாக்கினார்கள். பின்னர் அவரது கண்களை துணியால் கட்டி இரவு முழுவதும் அடித்து உதைத்தனர்.

    காலை 9 மணி அளவில் அனுராக் சர்மாவிடம் இருந்த ஏ.டி.எம். கார்டை பறித்தனர். அதன் ரகசிய எண்ணை சொல்லும்படி அவரிடம் கேட்டனர். ஆனால் அவர் சொல்ல மறுத்ததால் மீண்டும் சரமாரியாக தாக்க தொடங்கினார்கள்.

    இதனால் அனுராக் சர்மா ஏ.டி.எம். ரகசிய எண்ணை கொள்ளை கும்பலிடம் தெரிவித்தார். இதையடுத்து அந்த கும்பல் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று அனுராக் சர்மா கார்டில் இருந்து ரூ.45 ஆயிரத்தை எடுத்தனர். பின்னர் அவரை சந்திரபுரா பகுதியில் காரில் இருந்து தள்ளிவிட்டு தப்பினர்.

    படுகாயத்துடன் தவித்த அனுராக் சர்மா அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்தார். இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்தார். போலீசாரிடம் அவர் கூறும்போது, கொள்ளை கும்பலை சேர்ந்தவர்கள் அடிக்கடி ராகுல், உமேஷ் என்ற பெயர்களை உச்சரித்தப்படி இருந்தனர் என்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து போலீஸ் அதிகாரி பூராலிங்கயா கூறும்போது, “குற்றவாளிகளை 2 நாட்களில் பிடித்து விடுவோம். கொள்ளை தொடர்பாக துப்பு கிடைத்துள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து விட்டோம்” என்றார். #tamilnews
    மதுரையில் வாலிபரை தாக்கி 3 பவுன் நகை மற்றும் பணத்தை ஷேர்ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் பறித்து சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்தவர் உதயகுமார் (வயது30). பிரசவத்திற்காக இவரது மனைவியை மதுரை நெல்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்.

    நேற்று இரவு ஊரில் இருந்து மதுரை எம்.ஜி.ஆர். பஸ் நிலையம் வந்து இறங்கிய உதயகுமார் ஆஸ்பத்திரி செல்வதற்காக ஷேர் ஆட்டோவில் ஏறினார். நள்ளிரவு என்பதால் அவர் மட்டுமே பயணம் செய்தார்.

    இந்த நிலையில் ஷேர் ஆட்டோ நெல்பேட்டைக்கு செல்லாமல் செல்லூர் பகுதியில் உள்ள மீனாட்சி புரம் விலக்கு சென்றது. அங்கு ஆட்டோ டிரைவர் தனது கூட்டாளிகள் 2 பேருடன் சேர்ந்து கொண்டு உதயகுமாரை தாக்கினர்.

    தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன், 2½ பவுன் நகை, ரூ.30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து செல்லூர் போலீசில் உதயகுமார் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை -பணத்தை பறித்த 3 பேரை தேடி வருகிறார்கள்.

    ×