என் மலர்
ஈரோடு
- ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.
- சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர்.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர் மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் யானை, கரடி, புலி, சிறுத்தை என ஏராளமான வன விலங்குகள் உள்ளன.
இந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் புலி, சிறுத்தைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டை யாடி வருகிறது.
மேலும் சிறுத்தைகள் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராங்களில் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்று விட்டு அருகே உள்ள கல்கு வாரியில் பதுங்கி கொள்வது தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையடுத்து தாளவாடி அடுத்த ஓசூர் கிராமத்தின் அருகே உள்ள கல்குவாரில் பதுங்கிய சிறுத்தையை பிடிக்க வனத்துறை கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூண்டு வைத்தனர். கூண்டில் இறைச்சியை கட்டி வைத்து வந்தனர். ஆனால் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் போக்கு காட்டி வந்த அந்த சிறுத்தை கூண்டில் சிக்கிக் கொண்டது. இது குறித்து வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குனர் தேவேந்திர குமார் முன்னிலையில் மயக்க ஊசி செலுத்தப்பட்டு வேறு கூண்டுக்கு மாற்றப்பட்டது. அப்போது அந்த சிறுத்தை எதிர்பாராத விதமாக தப்பி ஓடியது.
சிறுத்தை ஓடுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் செய்வது அறியாமல் தலைதெறிக்க ஓடினார்கள்.
தொடர்ந்து வனத்துறையினர் தப்பிய சிறுத்தையை அந்த பகுதியில் உள்ள கல்குவாரியில் தேடினர். அப்போது கல்குவாரி கல்லுக்கு அடியில் சிறுத்தை படுத்து கிடந்தது தெரிய வந்தது.
பின்னர் மயக்க ஊசி செலுத்தி அந்த சிறுத்தையை பிடித்தனர். பின்னர் சிறுத்தையை சாக்கு பையில் மூட்டைகட்டி மீண்டும் கூண்டில் அடைத்தனர்.
இதையடுத்து நேற்று இரவு சிறுத்தையை வேனில் ஏற்றி பவானிசாகர் வன சரகத்துக்குட்பட்ட அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரஹடா மங்கள பட்டி கொண்டு சென்றனர். அங்கு கூண்டு திறந்து விடப்பட்டது.
இதையடுத்து அந்த சிறுத்தை அடர்ந்த வனப்பகுதிக்கு சென்றது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
- சிறுமி தான் எங்கு தங்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அது குறித்த தகவலை நீதிமன்றத்தில் அறிக்கையாக வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
- சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்த விவகாரத்தில் சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் சென்னையை சேர்ந்த உயர்மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு, சித்தோடு அருகே உள்ள ஆர்.என்.புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தன்னை பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு அந்த சிறுமி வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால் சட்ட சிக்கல் நிலவியதால் காப்பகத்திலேயே தொடர்ந்து சிறுமி தங்க வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறுமி தான் கழிவறை சுத்தப்படுத்த பயன்படுத்தும் அமிலத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் பதறிப்போன காப்பக ஊழியர்கள் உடனடியாக சிறுமியை ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் கடந்த 2 நாட்களாக சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுமிக்கு அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
இதையடுத்து சிறுமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் நேற்று காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். சிறுமி மன அழுத்தத்தில் உள்ளதால் அவருக்கு 'கவுன்சிலிங்' வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னும் 2 நாளில் அவருக்கு 'கவுன்சிலிங்' வழங்கப்பட உள்ளது. அதில் சிறுமி தான் எங்கு தங்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அது குறித்த தகவலை நீதிமன்றத்தில் அறிக்கையாக வழங்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி, போலி ஆவணங்களை தயாரித்துக்கொடுத்த ஜான் ஆகியோர் தற்போது சிறையில் உள்ளனர்.
இதில் சிறுமியின் தாய், பெண் புரோக்கர் ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் உள்ளனர்.
இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 4-ந் தேதி 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்துக்கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவின்படி மருத்துவப் பணிகள் குழு வரும் 4-ந் தேதி தனித்தனியே அந்தந்த சிறையில் குழுக்களாக பிரிந்து நேரடி விசாரணையில் ஈடுபட உள்ளனர்.
- கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை.
- இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
ஈரோடு:
ஈரோடு மூலப்பாளையம் தீரன் சின்னமலை தெருவை சேர்ந்தவர் முருகன். இவருக்கு திருமணமாகி சூர்யா என்ற மகனும், முத்துலட்சுமி (16) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் முத்துலட்சுமி சிறுவயதாக இருக்கும் போதே அவரது தாய் இறந்து விட்டார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு முத்துலட்சுமியின் தந்தையும் இறந்து விட்டார். இதையடுத்து முத்துலட்சுமியின் அத்தை சாந்தி முத்துலட்சுமியையும், அவரது அண்ணன் சூர்யாவையும் வளர்த்து வந்தார். முத்துலட்சுமி ஈரோட்டில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 பொதுத்தேர்வு எழுதி இருந்தார்.
கடந்த 27-ந் தேதி பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த தேர்வில் முத்துலட்சுமி தேர்ச்சி பெறவில்லை. இதனால் அவர் கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்து வந்துள்ளார். முத்துலட்சுமிக்கு அவரது அத்தை சாந்தி ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று சாந்தியும், முத்துலட்சுமியின் அண்ணனும் வெளியே சென்று விட்டனர். வீட்டில் முத்துலட்சுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். பின்னர் மாலை சாந்தி வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. சாந்தி கதவை பலமுறை தட்டியும் பதில் ஏதும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது முத்துலட்சுமி வீட்டின் ஒரு அறையில் தூக்குப்போட்டு தூங்கிக்கொண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிடைந்தார். உடனடியாக அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முத்துலட்சுமி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
- கருமுட்டை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈரோடு:
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் தலைவர் செந்தில்குமார் தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் சிவகாமி மகேஸ்வரன் நிர்வாகிகளுடன் வந்து மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 16 வயது சிறுமிக்கு சட்டவிரோதமாக கருமுட்டை எடுத்தது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர், போலி ஆதார் ஆவணங்களை தயாரித்தவர் என 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.
இந்நிலையில் பாதிக்க ப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி மேற்கொண்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்கிற செய்தியை கேட்டு நாங்கள் அதிர்ச்சி அடைந்து ள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய பாதுகாப்பும், அவரின் மறுவாழ்வுக்கு உதவ தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் வேறு எங்கும் நடக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கருமுட்டை தொடர்பாக போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும் கருமுட்டை தான செயல்முறைக்கு என புதிய விதிமுறைகளை இயற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்ட விதிமுறைகளை தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.
அப்போது கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம், பொதுச்செயலாளர்கள் எஸ். எம்.செந்தில், ஈஸ்வரமூர்த்தி, வேதா னந்தம், வக்கீல் அணி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட தலைவர்கள் சின்னத்துரை, குணசேகரன், பட்டியல் அணி மாநில செயலாளர் அய்யாசாமி,
தொழில் பிரிவு மாவட்ட தலைவர் கார்த்திக், செயலாளர் பாலமுரளி, சக்தி சுப்பிரமணி, செல்வமணி, இந்திரகுமார், ஊடகப்பிரிவு தலைவர் அண்ணாதுரை, அமைப்புசாரா தொழிலாளர்கள் பிரிவு தலைவர் ஏ.ஜே.சரவணன், துணைத் தலைவர் ரவீந்திரன் உள்பட பா.ஜனதா கட்சி பிரிவு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
- பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் பெரிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும்
சென்னிமலை:
சென்னிமலை அருகே பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு முத்தூர் - கொடுமுடி - காங்கேயம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தினமும் 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
சமீபத்தில் குடிநீர் பாதையில் ஏற்பட்ட குழாய் உடைப்பு காரணமாக பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு தொடர்ந்து 15 நாட்கள் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் இருந்தது.
குடிநீருக்கு மாற்று ஏற்பாடுகளை ஊராட்சி நிர்வாகம் எதுவும் செய்ய–வில்லை எனக்கூறி நூற்றுக்கணக்கான பொது–மக்கள் காலி குடங்களுடன் கடந்த 23-ந் தேதி சென்னிமலை-ஊத்துக்குளி ரோட்டில் ஆலமரம் என்ற இடத்தில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து வருவாய் மற்றும் உள்ளாட்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம், ஊராட்சி பகுதிக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. மேலும் தெருவிளக்குள் எதுவும் எரிவதில்லை. அதனால் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என கோரிக்கை விடுத்தனர்.
கோரிக்கைகள் குறித்து பேசி நல்ல முடிவு எடுத்து கொள்ளலாம் என அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் தரப்பில் பேச்சு–வார்த்தை நடத்துவதற்காக ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த அமைதி பேச்சுவார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி சென்னிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், மாவட்ட ஊராட்சிகள் இயக்குநர் ஆர்.சூர்யா, பெருந்துறை தாசில்தார் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அப்போது ஒன்றியக்குழு தலைவர் டி.காயத்ரி இளங்கோ கூறுகையில், பாலதொழுவு ஊராட்சி பகுதி மக்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் பெரிய குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு நிரந்த தீர்வு காணப்படும் என்றும், அதுவரை மாற்று ஏற்பாடுகள் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோல் தெருவிளக்கு பிரச்சனைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சரி செய்யப்படும் என உறுதியளித்தார்.
அதேபோல் மாவட்ட ஊராட்சிகளின் இயக்குநர் ஆர்.சூர்யா, பெருந்துறை தாசில்தார் குமரேசன் ஆகியோர் பேசுகையில், குடிநீர் பிரச்சனைகள் விரைவில் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதற்காக ஊராட்சி நிர்வாகத்தினர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதேபோல் பொதுமக்கள் பாதிக்கும் வகையில் சாலைமறியல் போன்ற போராட்டங்கள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமலதா, குணசேகரன், ஒன்றியக்குழு துணை தலைவர் பன்னீர்செல்வம், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்கவேல் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- ஈரோடு மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறை வேற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்துகின்ற சூழ்நிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்து ள்ளார்கள்.
- தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்க ளுக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமையில், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. முன்னிலையில், அமைச்சர் சு.முத்துசாமி ரூ.3.23 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற புதிய திட்டப்பணிகளை திறந்து வைத்து, புதிய வளர்ச்சி திட்டப்பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் முத்துசாமி நிருப ர்களிடம் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் பல திட்டங்கள் நிறை வேற்றுவதற்கு அரசின் அனுமதி வழங்கப்பட்டு ள்ளது. அதனை சிறப்பாக செயல்படுத்துகின்ற சூழ்நிலையினை தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஏற்படுத்தி கொடுத்து ள்ளார்கள்.
இந்த ஓராண்டு காலகட்டத்தில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அத்திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல திட்டங்களின் பணிகள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், மணியகாரன்புதூரில் உள்ள அரசு உயர்நிலைப்ப ள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் ரூ.36.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகம் மற்றும் நூலக கட்டிடம்,
சிறுவலூர் ஊராட்சியில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியாக ரூ.10.75 லட்சம் என ரூ.70.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் சுய உதவிக்குழு கட்டிடம்,
கொளப்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண்.8 நம்பியூர் சாலை பகுதியில் 15-வது நிதிக்குழுமானியத் திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் கோபிசெட்டி பாளையம் நகராட்சி வார்டு எண்.2 ராமர்விரிவாக்க பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா என மொத்தம் ரூ.1.66 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற புதிய திட்டப்பணிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், கூச்சிக்கல்லூர் குறிச்சிபிரிவு அருகில் தனியார் இடத்தில் புதிய கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடங்கி வைக்க ப்பட்டுள்ளது. மேலும், பூனாச்சி ஊராட்சி செம்படாம் பாளையம் சாலை முதல் நத்தமேடு சாலை வரை சித்தார் ஓடைபள்ளம் குறுக்கே நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.57 கோடி மதிப்பீட்டில் மேல்மட்ட பாலம் அமைக்கும் பணியினை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி பொதுமக்களிடமிருந்து அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில்,கோபி செட்டிபாளையம் நகர்மன்றதலைவர் நாகராஜ், கொளப்பலூர் பேரூராட்சி தலைவர் அன்பரசு, கோபிசெட்டிபாளையம் நகராட்சி ஆணையாளர் பிரேம் ஆனந்த், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) சுந்தரமூர்த்தி, நகராட்சி பொறியாளர் சுப்பிரமணி, கொளப்பலூர் பேரூராட்சி செயல் அலுவலர் மஞ்சுநாத், தாசில்தார்கள் ஆயிஷா (கோபிசெட்டிபாளையம்), விஜயகுமார் (அந்தியூர்), முத்துகிருஷ்ணன் (பவானி) மற்றும் கோபிசெட்டி பாளையம் மற்றும் அம்மா பேட்டைவட்டார வளர்ச்சி அலவலர்கள் உள்பட உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் தொடர்புடையதுறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- பவானி அருகே தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பவானி:
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தேவராஜ் (46) கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.தனது தாயாருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தாயார் இறந்து போனார். இந்நிலையில் தேவராஜுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்துள்ளது. தாயார் இறந்த பின்பு குடிப்பழக்கம் அதிகமானது.
இதனால் தனியே வசித்து வந்த தேவராஜ் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி பொங்கி யண்ணன் 43 அவரிடம் நான் வாழ விரும்பவில்லை என்றும் இனிமேல் வாழ எனக்கு என்ன இருக்கிறது என்று சொல்லி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து விட்டதாக சொல்லி மயங்கி விழுந்தார். மயங்கி கீழே விழுந்தவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் இறந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
- தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
- ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரோடு:
பேரறிஞர் அண்ணா அவர்களால் தாய்த்தமிழ் நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நாளான ஜூலை 18-ம் நாள் இனிய தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
இதன்படி வருகின்ற 18-ந் தேதி தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் வரும் 6-ந் தேதி (புதன்கிழமை) கலைமகள் கல்வி நிலையத்தில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ள விரும்பும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் பரிந்துரை கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியில் இருந்து ஒரு போட்டிக்கு 2 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
போட்டிக்கள் தமிழ்நாடு உருவான வரலாறு, மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும், தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள், பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் தந்தைபெரியார், மொழிவாரிமாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி, சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு, எல்லைப்போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நடைெபறுகிறது.
இப்போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம் மற்றும் 3-ம் பரிசு ரூ.5 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.
போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும், ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.
- சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
- பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 வாரத்திற்கும் மேலாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக மேலும் ஒரே நாளில் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 795 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் சிகிச்சையில் இருந்த 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 993 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
தற்போது மாவட்ட–த்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 23 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 119 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இதையடுத்து மாவட்ட சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். எனினும் பொதுமக்கள் இன்னமும் அலட்சியமாக முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் சென்று வருகின்றனர். பொதுமக்கள் முறையாக முக கவசம் அணிந்து வர வேண்டும் என சுகாதாரத்துறையினர் வலியுறுத்துள்ளனர்.
இதேபோல் மாவட்ட–த்தில் தினசரி மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா பரிசோதனை எண்ணி–க்கை–யை மேலும் அதிகப்படுத்தி தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
- இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.
நம்பியூர்:
ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் வருகிற 2 மற்றும் 3-ந் தேதிகளில் மேற்கு மண்டல அளவிலான சீனியர் (ஆண்கள்) கைப்பந்து போட்டி நடைபெற்ற உள்ளது.
தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கத்தால் நடத்தப்படும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து சீனியர் (ஆண்கள்) சேம்பியன்ஷிப் போட்டிகள் ஈரோடு, கோவை, தர்மபுரி, கரூர், நீலகிரி, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த முதல் மற்றும் இரண்டாம் இடங்களைப் பெற்ற அணிகள் பங்கேற்று விளையாட உள்ளனர் .
ஈரோடு மாவட்ட கைப்பந்து சங்கத்தின் பரிந்துரைப்படி குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி–க்கான ஏற்பாடுகளை பள்ளியின் செயலாளர் டாக்டர் அரவிந்தன், பள்ளியின் முதல்வர் மஞ்சுளா, துணைமுதல்வர் வசந்தி, உடற்கல்வி ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் செய்து வருகின்றனர்.
இத்தகவலை குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தெரிவித்தார்.
- இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம், சிந்தன் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (42). பழைய இரும்பு வியாபாரி. இவருக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வெங்கடேஷ் தற்கொலை செய்து கொண்டார். இது பற்றிய தகவல் கிடைத்ததும் கருங்கல்பாளையம் போலீசார் அங்கு விரைந்து சென்று வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை வெங்கடேசன் உறவினர்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் குவிந்தனர். நேற்று மதியம் திடீரென வெங்கடேசன் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள ஈ.வி.என். ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரிடம் அவர்களது உறவினர்கள் கூறும்போது,
சம்பவத்தன்று இரவு வெங்கடேசன் தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது உறவினர் மாரிமுத்து என்பவர் மது குடிப்பதற்கு அவரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளார். பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததால் அவரைப் பற்றியும், அவரது குடும்பத்தை பற்றியும் மாரிமுத்து தரக்குறைவாக பேசியுள்ளார்.
அதன் பின் வெங்கடேசன் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டிற்கும் வந்த மாரிமுத்து மீண்டும் தரகுறைவாக பேசி உள்ளார். இதனால் மன உளைச்சலில் வெங்கடேஷ் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனவே சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இதையடுத்து மாரிமுத்துவை பிடிக்க 2 தனிப்படை அமைக்க ப்பட்டது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த மாரிமுத்துவை கருங்கல்பாளையம் போலீசார் கைது செய்தனர். வெங்கடேசனை தற்கொ–லைக்கு தூண்டியதாக மாரிமுத்து மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
- அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
- அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
அந்தியூர்:
அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் சுப்பராயன் எம்.பி. முன்னிலையில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, தலைமை டாக்டர் விஸ்வேஸ்வரன், டாக்டர்கள் செல்வம், சுரேந்திரன், விஜயா, கலைவாணி, ஆத்மாதன், ராம்குமார், தலைமை செவிலியர் மலர்விழி, அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுதபாணி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா, வட்டாரத் தலைவர் பழனிமுத்து, நகர தலைவர் ஜலாலுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.






