என் மலர்
திண்டுக்கல்
- 4 துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக படகில் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது.
- அலங்கார அணிவகுப்பை கோட்டாட்சியர் சிவராமன் தொடங்கி வைத்தார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கடந்த 17ஆம் தேதி மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. இன்று கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் அரசுத்துறை சார்பாக படகு அலங்கார அணிவகுப்பு போட்டி நடைபெற்றது.
இதில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, தோட்டக்கலைத்துறை, சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை ஆகிய 4 துறைகளின் செயல்பாடுகளை விளக்கும் விதமாக படகில் அலங்காரம் செய்யப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் முதல் பரிசை உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித் துறை தட்டிச் சென்றது. 2வது பரிசை மீன்வளத்துறையும், 3வது பரிசை சுற்றுலாத்துறையினரும் பெற்றனர்.
அலங்கார அணிவகுப்பை கோட்டாட்சியர் சிவராமன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி ஆணையாளர் பாலகிருஷ்ணன், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், மாவட்ட சுற்றுலா அலுவலர் கோவிந்தராஜன், உதவி சுற்றுலா அலுவலர் சுதா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் காயத்ரி மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழகத்திலும் சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. இப்பகுதியில் படகு சவாரி, பசுமைநடை, மலையேற்றம், வியூபாயிண்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா பயணிகள் உள்ளன. கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இங்கு அவ்வப்போது களரி, கதக்களி, மோகினி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் அருகிலேயே வாகம்மன், ராமக்கால்மெட்டு, செல்லாறு, கோவில் மெட்டு உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளது. இங்கு வருடந்தோறும் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். மேலும் இடுக்கி மாவட்டத்தில் மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் பசுமை பள்ளத்தாக்குகள் பரந்து விரிந்து கிடக்கிறது. இங்குள்ள தேயிலை, ஏலக்காய் தோட்டங்கள், தவழந்து செல்லும் மேகங்கள், ஆண்டு முழுவதும் நிலவும் இதமான சீதோசனம் போன்றவை சுற்றுலா பயணிகளை சுண்டி இழுத்து வருகின்றன.
கேரளாவை பொறுத்தவரை அரசின் முக்கிய வருவாயாக ஆன்மீக தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்கள் விளங்கி வருகின்றன. இதனால் சுற்றுலா வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கைகளை அந்த அரசு மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தருவதுடன் அவர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதால் இப்பகுதிகளில் யாசகம் எடுக்கத்தடை விதித்து இதற்காக போலீசார் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தெரிவிக்கையில்,
மூணாறு, தேக்கடி உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகின்றனர். இவர்களிடம் யாசகம் கேட்பதால் நம் நாட்டினர் மீது மாறுபட்ட கருத்தியல் சூழல் நிலவுகிறது. மேலும் யாசகர் போர்வையில் வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. எனவே யாசகம் எடுப்பவர்களை கண்டறிந்து அவர்களை முகாமிற்கு அனுப்பி வருகிறோம். எங்களுடன் இணைந்து வியாபாரிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகளும் பணியாற்றி வருகிறோம்.
இதனால் கேரளாவில் உள்ள பெரும்பாலான சுற்றுலா தலங்களில் இதுபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என்றார். தமிழகத்திலும் பாரம்பரியமிக்க சுற்றுலா தலங்கள் உள்ள நிலையில் கேரளாவை பின்பற்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது.
- அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நகரின் மையப்பகுதியில் நுற்றாண்டுகள் பழமையான ராமலிங்க சவுடேஷ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்காக கொட்டக்குடி ஆற்றில் இருந்து அம்மன் பாதத்தில் வைக்கப்பட்டிருந்த கத்தியை அலங்கரிக்கப்பட்ட வெள்ளைக்குதிரை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கோவிலுக்கு கொண்டு வந்தனர். வரும் வழியில் பக்தர்கள் தங்கள் உடலின் மீது கத்தி போட்டு சென்றனர்.
அதன்பின் அம்மனின் கத்தி கருவறைக்குள் சென்று வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் உடலில் கத்தி போட்டு ஆடி வந்த பக்தர்கள் ஆமணக்கு முத்துக்குவியல் வைக்கப்பட்டிருந்த பானை மீது புனித நீர்த்தங்களை ஊற்றி நிற்க வைத்தனர். அப்போது எந்தவித பிடிமானமும் இன்றி கத்தி பானை மீது அந்தரத்தில் நின்றது. இதனை பக்தர்கள் மெர்சிலிர்க்க கண்டு ரசித்தனர்.
இந்த திருவிழாவை காண சுற்றுப்புற கிராம மக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.
- திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது
- இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் காட்டாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் கிராமத்தை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கினர்.
தொடர் மழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோடை விழாவின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் படகு போடி நடப்பது வழக்கம்.
இன்று நடைபெறுவதாக இருந்த படகு போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட படகு போட்டி மீண்டும் மே 25-ம் தேதி நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
- பக்தர்கள் வருகையால் அடிவாரம், மலைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது.
- அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர்.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3ம் படை வீடான பழனிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில, வெளி நாடுகளிலிருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருவதால் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இன்று விடுமுறை தினம் மற்றும் வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தம் என்பதால் பழனியில் கூட்டம் அலைமோதியது.
அடிவாரம் பகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் விஷேசங்கள் நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். முகூர்த்த நாட்கள் மற்றும் விஷேச தினங்களில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். தாராபுரம் மணக்கடவு வீரக்குமார் சுவாமி கோவில் காளையை அலங்கரித்து கிரிவீதியில் வலம் வர செய்தனர். பக்தர்கள் வருகையால் அடிவாரம், மலைப்பாதை, படிப்பாதை, மின்இழுவை ரெயில் நிலையம், ரோப்கார் நிலையம் ஆகியவற்றில் கூட்டம் அலைமோதியது. மேலும் மலைக்கோவிலில் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். நேற்று பழனியில் கனமழை பெய்த நிலையில் இன்று காலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருந்த போதும் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வருடம் தோறும் மே மாதம் கோடை விழா மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு பிரையண்ட் பூங்காவில் 61-வது மலர் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொடைக்கானலில் பகலில் இதமான சீதோஷ்ணம் இருந்தது.
அதனைத் தொடர்ந்து பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலாப்பயணிகள் குடைகளை பிடித்து கொண்டு பூங்காவில் பூத்துள்ள வண்ணமலர்களை கண்டு ரசித்தனர். மேலும் பூங்கா வளாகத்திற்குள் கோடை விழாவும் நடைபெற்றது. கோடை விழாவில் முரசு கொட்டப்பட்டது. இதனையடுத்து இசைக்கு ஏற்றவாறு சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாக நடனமாடினர்.
கொடைக்கானலில் குளுமையான சூழல் நிலவி வருகிறது. மேலும் மலர் கண்காட்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் பூத்து குலுங்குகிறது. 2500 வகையான மலர்களை சுமார் 6 ஆயிரம் பேர் கண்டு ரசித்தனர். மேலும் டிராகன் உள்ளிட்ட பல்வேறு உருவங்களில் மலர்கள் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதன் முன்பு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போலீசார் சீரமைத்தனர். இதே போல் மேல்மலை கிராமங்களுக்கும் சென்று மன்னவனூர், எழும்பள்ளம் ஏரி உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என்பதால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- வாகனத்தின் எண்ணை வைத்து உரிமையாளரின் செல்போனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
- திருடிய சமயத்தில் இருந்த மோட்டார் சைக்கிளின் கலரை மாற்றி அந்த ஆசாமி வேறு கலருடன் சுற்றி வருகிறார்.
திண்டுக்கல்:
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் ரியாஸ் அகமது. இவரது மனைவி வண்டலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 01.10.2020ம் ஆண்டு அலுவலகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் பணிக்கு சென்றார். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிள் திருடுபோனது. இதுகுறித்து வண்டலூர் போலீஸ் நிலையத்தில் ரியாஸ் அகமது புகார் அளித்தார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து முதல் தகவல் அறிக்கைக்கான ரசீது ரியாஸ் அகமதுக்கு வழங்கப்பட்டது. அதன் பின்பு பலமுறை போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது பைக் சிக்கவில்லை என கூறிவந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் திருடுபோன பைக்குடன் ஒருவர் சென்றுள்ளார். அந்த பைக்கை போக்குவரத்து காவலர்கள் நிறுத்த முயன்ற போது அவர் நிறுத்தாமல் சென்றுவிட்டார். இதனை தொடர்ந்து அவரது வாகனத்தின் எண்ணை வைத்து உரிமையாளரின் செல்போனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதில் ரூ.3 ஆயிரம் அபராதம் கட்டச்சொல்லி ரியாஸ் அகமதுக்கு குறுந்தகவல் வந்துள்ளது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வண்டலூர் போலீஸ் நிலைத்தில் விபரம் கேட்டறிந்தார். பின்னர் ஒட்டன்சத்திரம் போலீசாரிடம் அவர்கள் கேட்டபோது சம்மந்தப்பட்ட பைக் திருடு போய்விட்டது என்றால் அதுகுறித்து உடனடியாக கணினியில் ஏற்றப்பட்டு விடும். அந்த சமயத்தில் உரிமையாளருக்கும், அந்த வாகனத்திற்கும் எந்த தொடர்பும் இருக்காது. அவ்வாறு உள்ள சூழ்நிலையில் திருட்டு போன மோட்டார் சைக்கிள் விதிமீறளுக்காக எவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது என கேட்டனர்.
அந்த வாகனம் கடந்த சில நாட்களாக திண்டுக்கல் மாவட்டத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் சுற்றி வருவதால் விரைவில் அதனை பிடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுமட்டுமின்றி திருடிய சமயத்தில் இருந்த மோட்டார் சைக்கிளின் கலரை மாற்றி அந்த ஆசாமி வேறு கலருடன் சுற்றி வருகிறார். ஏதேனும் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டாலும் உரிமையாளருக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் இருப்பதால் உடனடியாக அவரை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
- ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.
10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, குதிரை சவாரி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. இதனால் கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
இந்த நிலையில், இன்று மதியம் கொடைக்கானல் வத்தலகுண்டு மலை சாலையில் மூளையார் என்ற இடத்தில் கர்நாடகா மாநிலத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் வந்த கார் மீது எதிரே வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை.
இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
- 10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா இன்று காலை 8 மணிக்கு கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது.
மலர் கண்காட்சியில் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளை சுற்றுலா, பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசகன் தொடங்கி வைத்தார். வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுற்றுலா ஆணையர் சமயமூர்த்தி, தோட்டக்கலை இயக்குனர் குமாரவேல் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் பூங்கொடி, போலீஸ் சூப்பிரண்டு பிரதீப், டி.ஐ.ஜி. அபினவ்குமார், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக லட்சக்கணக்கான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தன. அதில் பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் காண்போரை கவரும் வகையில் இடம் பெற்றிருந்தது. இது தவிர மலர்களால் ஆன மயில், கரடி, விலங்குகளின் உருவம் ஆகியவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தது.
இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கோடை விழாவை முன்னிட்டு கடந்த 2 நாட்களாகவே கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.
10 நாட்கள் நடைபெறும் கோடை விழாவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் விதவிதமான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக படகு அலங்கார போட்டி, சைக்கிள் போட்டி, குதிரை சவாரி, வாத்து பிடிக்கும் போட்டி, நாய் கண்காட்சி உள்ளிட்டவை நடைபெற உள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
இது தவிர இந்த ஆண்டு கோடை விழாவில் தினந்தோறும் கலையரங்கில் விதவிதமான கலை நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கலை நிகழ்ச்சிகளை திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்த நாள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களின் பாரம்பரிய கலை, பண்பாட்டு, வீரவிளையாட்டு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் தங்கள் திறமையை கொண்டு வர அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே சாரல் மழை பெய்து வரும் நிலையில் அதனையும் பொருட்படுத்தாது சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
சாரல் மழையில் நனைந்து கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியை காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் கொடைக்கானலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகளும், தொழிலாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொடைக்கானலுக்கு வருபவர்கள் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான சுற்றுலா பயணிகள் எவ்வித சிரமமுமின்றி இ-பாஸ் பெற்று வருகின்றனர். ஒருசிலர் இ-பாஸ் இல்லாமல் வந்தாலும் அவர்களுக்கு சோதனைச் சாவடிகளில் உடனுக்குடன் அவர்களது செல்போனிலேயே இ-பாஸ் பெறப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
கோடை விழாவை முன்னிட்டு கொடைக்கானலில் அனைத்து சுற்றுலா இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
- மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது.
பழனி:
தமிழ் கடவுள் முருகனின் 3-ம் படை வீடான பழனிக்கு வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் திருவிழா கொண்டாடப்படுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகம் பிரசித்தி பெற்றதாகும். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக இன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு வேல், சேவல், மயில் உருவம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உட்பிரகாரமாக வலம் வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலை 9 மணியளவில் சிறப்பு பூஜைகளுடன் கோவில் கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது. அப்போது வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி-தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசாமி ரத வீதிகளில் தங்க மயில், தந்த பல்லக்கு, காமதேனு, ஆட்டுக்கிடா, சப்பரம், வெள்ளியானை, வெள்ளி மயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் வருகிற 21ந் தேதி மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் நடைபெறுகிறது.
மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான வைகாசி விசாகத் தேரோட்டம் 22ந் தேதி நடக்கிறது. அன்று காலை 11.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிம்ம லக்கனத்தில் தேரேற்றம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறும்.
10 நாட்களும் பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி, நடனம், கிராமிய பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ் தலைமையிலான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
- கோடை சீசனில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு குளு சீசன் களைகட்டி உள்ளது.
- மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
கொடைக்கானல்:
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்ததை போலவே கொடைக்கானலிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து மழை பெய்து வருகிறது.
குறிப்பாக தினந்தோறும் 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவெளி விட்டு விட்டு ஒரு சில இடங்களில் கன மழையாகவும், ஒரு சில இடங்களில் சாரல் மழையாகவும் பெய்து வருகிறது.
இதனால் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக தண்ணீர் குறைந்து காணப்பட்ட நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது பெய்த மழையால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டி வருகிறது. இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப்பயணிகள் மழையில் நனைந்தபடி அருவியை கண்டு ரசித்ததுடன், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதேபோல் பாம்பார் அருவி, பியர்சோழா உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது பெய்து வரும் மழையால் குடிநீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கோடை சீசனில் மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் குளு குளு சீசன் களைகட்டி உள்ளது.
வருகிற 17ந் தேதி கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற உள்ள நிலையில் தற்போதே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
- நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.
- கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இ-பாஸ் நடைமுறை அமுல்படுத்தியதைத் தொடர்ந்து சுற்றுலாப்பயணிகளின் வருகை முற்றிலும் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வார விடுமுறையான நேற்றும் இன்றும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநில சுற்றுலாப்பயணிகளின் வருகை காலை முதலே அதிகரித்து காணப்பட்டது. உகார்த்தேநகர், சீனிவாசபுரம், மூஞ்சிக்கல், ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றுலாப்பயணிகளின் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து சாலையில் காத்திருந்து தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் வாகனங்கள் ஊர்ந்தப்படி சென்றன.
மேலும் இந்த போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் இடம், மற்றும் மாற்று சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் வாகனங்களின் சூட்டை தணிக்க ஒதுங்கி நிற்கக்கூட இடம் இல்லாத நிலை உள்ளது.
வாகனங்கள் அதிக சூடாகி ரேடியேட்டர் பழுதானாலும் வாகனங்களை சாலையோரத்தில் நிறுத்தக்கூட இடமில்லாத நிலையும், ஒரே சீராக நெடுஞ்சாலையில் பயணிக்க முடியாத அளவில் நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்பு நிலவி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோடை சீசன் தொடங்கிய நிலையிலும் கடந்த சில தினங்களாக சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதி தற்போது சுற்றுலாப்பயணிகள் வருகையால் களைகட்ட துவங்கியுள்ளது. ஆனால் கோடை சீசன் முடியும் காலம் நெருங்கி உள்ள நிலையில் இதுவரை அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் அலட்சியம் காட்டி வருவதும் வேதனைக்குரியதாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர்.
ஒவ்வொரு சீசன் காலங்களிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தவறும் நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருவதை எதிர்வரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் தவிர்க்கும் நிலை உருவாகி வருகிறது. கொடைக்கானல் சுற்றுலாவை மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் சுற்றுலாத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.






