என் மலர்
கோயம்புத்தூர்
- தாயாரையும், அவரது 2-வது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.
- விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரம் பகுதியில் ஒரு வீட்டை ஒரு குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்து இருந்தனர். எப்போதும் அவர்கள் அந்த வீட்டில் தங்கியிருப்பது இல்லை. சுற்றுலாவுக்கு வருவது போல் அவ்வப்போது அந்த வீட்டுக்கு வந்து சென்றனர்.
அப்படி வரும்போதும் பெண்களுடன் புது, புது ஆண்கள் வந்து சென்றனர். இதனால் அக்கம்பக்கத்தினருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர்கள் கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவத்தன்று அந்த வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கவே போலீசார் அதிரடியாகச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. அங்கு 2 பெண்கள் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் தாயும், மகளும் என தெரிவித்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தொடர்ந்து விசாரித்தனர்.
இவர்கள் சூலூர் அருகே உள்ள ராசிபாளையத்தில் வசித்து வந்துள்ளனர். தாயாருக்கு 42 வயதாகிறது. கணவரை பிரிந்த அவர் வேறு ஒருவரை 2-வது திருமணம் செய்து கொண்டு வசித்து வந்தார். அந்த பெண்ணுக்கு முதல் கணவர் மூலம் ஒரு மகள் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மகள், தனது கணவரை பிரிந்து தாயாரின் தயவை தேடி வந்தார். தாயார், அவரது 2-வது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வந்த மகள் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அப்போது கணவரை பிரிந்து வந்த மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தி பணம் சம்பாதிக்கலாம் என அவரது தாயாரிடம் 2-வது கணவர் ஆசைவார்த்தை கூறி உள்ளார். பணத்துக்கு ஆசைப்பட்டு தாயாரும் தனது மகளை விபசாரத்தில் தள்ளினார்.
ஊரில் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக கருமத்தம்பட்டி கிருஷ்ணாபுரத்தில் வாடகை வீடு எடுத்து அங்கு விபசார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 2-வது கணவர் புரோக்கராக இருந்து ஆள்பிடித்து வந்துள்ளார். அப்படி வாடிக்கையாளர் யாராவது சிக்கினால் தாயுக்கும், மகளுக்கும் தகவல் தெரிவித்து அவர்களை கிருஷ்ணாபுரம் வீட்டுக்கு வரச் செய்வாராம். அங்கு குடும்ப பெண்கள் போல் தாயும், மகளும் சென்றுள்ளனர். பின்னர் அந்த வீட்டில் மகளை அந்த பெண் விபசாரத்தில் தள்ளியுள்ளார். அதில் அதிக பணம் கிடைக்கவே அதனையே அவர்கள் தொழிலாக மாற்றி செய்து வந்துள்ளனர்.
தற்போது அக்கம்பக்கத்தினர் புகாரால் போலீசில் அவர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களில் தாயாரையும், அவரது 2-வது கணவரையும் போலீசார் கைது செய்தனர். விபசாரத்தில் தள்ளப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
- தங்க நகை தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
- தங்க நகை தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
தொழில் நகரான கோவை தங்க நகை தொழிலிலும் புகழ்பெற்று விளங்குகிறது.
தேசிய அளவில் தங்க நகை தயாரிப்பில் மும்பை, கொல்கத்தாவுக்கு அடுத்து 3-வது இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது. கோவையில் 25 ஆயிரம் பட்டறைகள், 45 ஆயிரம் பொற்கொல்லர்கள், முதன்மை நகை தயாரிப்பாளர்கள் என இந்த தொழிலில் நேரடியாக ஒரு லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
கோவையில் தயாரிக்கப்படும் தங்க நகைகள் சிங்கப்பூர், மலேசியா, லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல வெளிநாடுகளிலும் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.
வங்கதேசம், இலங்கை போன்ற நாடுகளுக்கு நேரடியாக ஏற்றுமதி செய்தால் அதிக வரி விதிக்கப்படும் என்பதால், துபாய் மூலம் அதிக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொழில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் தொழில் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் கோவையில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குறிச்சி தொழிற்பேட்டையில் ரூ.126 கோடி மதிப்பில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பானது தங்க நகை தொழில்துறையினர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் கூறியதாவது:-
கோவை மாவட்டத்தில் வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் விற்பனை பிரிவுகளில் தினமும் 200 கிலோ எடையிலான தங்கம் வர்த்தகம் நடைபெறுகிறது.
தமிழக முதலமைச்சரின் அறிவிப்பு இந்த தொழிலில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
தினமும் கோவை, பிற மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் தங்க நகை வர்த்தகம் தொடர்பான பணிகளுக்கு கோவை வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருவோருக்கு குடிநீர், ஓய்வறை, கழிப்பிடம் என அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை தமிழக அரசு சார்பில் ஏற்படுத்தி தர வேண்டும்.
கோவை குறிச்சியில் அமைக்கப்படும் தங்க நகை தொழில் பூங்கா திட்டத்தால் இந்த தொழில் மேலும் சிறப்பான வளர்ச்சியை பெறும். தினசரி வர்த்தகம் 250 கிலோவாக உயரும்.
வேலை வாய்ப்பு 20 சதவீதம் அதிகரிக்கும். கோவைக்கு தினமும் வர்த்தகம் செய்ய வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப பூங்கா செயல்பட தொடங்கிய பின் வளாகத்தில் வாங்குவோர் விற்போர் கண்காட்சி நடத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இதனால் தேசிய அளவில் மட்டுமின்றி துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் பலர் கோவைக்கு அதிக எண்ணிக்கையில் வந்து தங்க வணிகம் மேற்கொள்வார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- முதலமைச்சரை சந்திக்க செல்லும் போது பரீட்சைக்கு செல்லும் பிள்ளைபோல் தயாராவோம்.
- கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம்.
கவுண்டம்பாளையம்:
கோவை கவுண்டம்பாளையத்தில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 413 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பள்ளியில் தற்போது உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மார்ட்டின் குழுமம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கி, இந்த பள்ளியில் டிஜிட்டல் வகுப்பறைகள், புதிய கட்டிடங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இன்று பள்ளி திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற போது, அங்குள்ள பள்ளியின் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் நாங்கள் இதுவரை உங்களை டி.வி.யில் மட்டுமே பார்த்து இருந்தோம். தற்போது நேரில் பார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. உங்களை அப்பா என்று அழைத்து கொள்ளலாமா என கேட்டு அப்பா என்று அழைத்தது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இந்த நாள் மிகவும் நிறைவான நாள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நான் சொல்கிறேன். ஒவ்வொரு நாளுமே நிறைவான நாள் தான். ஏனென்றால் நம்முடைய தி.மு.க. ஆட்சியே நிறைவான ஆட்சியாக தான் இருக்கிறது. மக்கள் அனைவரும் அதை தான் சொல்கிறார்கள். பாராட்டுகிறார்கள்.
தமிழக முதல்-அமைச்சர் பள்ளிக்கல்வித்துறைக்கு என்று அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கல்விக்கு எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்யலாம். கல்வியில் செய்யும் செலவானது நல்ல சமுதாயம் என்ற வட்டியை தரும். பிள்ளைகள் படித்தால் சமுதாயம் பயன்பெறும்.
பள்ளிகளுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படும். மாணவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் படிப்பில் செலுத்த வேண்டும். படித்து முடித்து நல்ல நிலையை அடையும் போது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியை மறந்து விடாதீர்கள். நீங்கள் படித்த பள்ளிக்கு ஏதாவது ஒரு வகையில் நீங்கள் உதவி செய்ய வேண்டும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் படித்த பழைய மாணவர்கள் பலரை விழுதுகள் என்ற செயலியில் இணைத்துள்ளோம். அதில் 7 லட்சம் பழைய மாணவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை தங்கள் பள்ளிக்கு செய்து வருகிறார்கள்.
என்னுடைய தலைமை ஆசிரியர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். நாங்கள் அவரை சந்திக்க செல்லும் போது, பரீட்சைக்கு தயாராகும் பிள்ளைபோல தயாராவோம். ஏனென்றால் எங்களை விட அவர் அதிகம் தெரிந்து வைத்து இருப்பார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, மார்ட்டின் குழுமத்தின் இயக்குனர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
- இந்த ஆண்டு 10-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியது.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் பி.ஏ.பி. பாசனத்தில் பொள்ளாச்சி ஆழியாறு அணை குறிப்பிடத்தக்க பங்களிப்பை உடையது. 3864 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய இந்த அணையில் மொத்தம் 120 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம்.
ஆழியாறு அணையில் தேக்கப்படும் தண்ணீர் ஆயக்கட்டு பாசனம், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி ஆழியாறு அணையில் 118.65 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அவ்வப்போது நீர்வரத்துக்கேற்ப மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது. இதன்காரணமாக 3 மதகுகள் வழியாகவும் வினாடிக்கு 600 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தது. மேலும் வினாடிக்கு 722 கனஅடிநீர் வரத்து உள்ளது. இதனால் ஆறு மற்றும் மதகுகள் வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 1006 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
நேற்று மதியம் 12 மணிக்கு 119.5 அடியாக நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு 900 கனஅடி நீர்வரத்தும் இருந்தது. மேலும் மேல்நீராறு, காடம்பாறை பகுதியில் இருந்து தண்ணீர்வரத்து அதிகம் இருந்ததால் 3 மதகுகள் மற்றும் ஆறு வழியாக வினாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்தாண்டு 10-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோவை மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கு நீர்மட்டம் ஒரே அளவில் நீடித்து வருகிறது. மேலும் தொடர்மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதால் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை நீடிக்கிறது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது.
- எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கோவை:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில், நான் திருச்சியில் வசித்து வந்தேன். எனக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருவண்ணாமலையை சேர்ந்த எழில் அரசன் என்பவர் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆனார்.
அவர் கோவையில் வேலை பார்த்து வருவதாக தெரிவித்தார். அப்போது அவர் என்னுடன் நட்புடன் இருக்க விரும்புவதாக தெரிவித்தார். நானும் அவரது நட்பை ஏற்றுக்கொண்டேன்.
இதையடுத்து நாங்கள் 2 பேரும் பேஸ்புக்கில் பேசி வந்தோம். சில வாரங்களில் எங்களது நட்பு காதலாக மாறியது. இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தோம். இதையடுத்து நான் திருச்சியில் இருந்து புறப்பட்டு, கோவைக்கு வந்தேன்.
இதையடுத்து எழிலரசனும், நானும், கோவை கணபதி அருகே லட்சுமணபுரத்தில் திருமணம் செய்யாமலேயே லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வசித்து வந்தோம்.
அப்போது எழிலரசன் என்னுடன் உடலுறவு கொண்டார். நானும், திருமணம் செய்து கொள்ள போகிறவர் தானே என அனுமதித்தேன்.
ஆனால் அதன் பிறகு எழிலரசனின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது. நான் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டேன். அதற்கு அவர் மறுத்து விட்டார்.
மேலும் என்னை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மிரட்டவும் செய்தார். எனவே என்னை திருமணம் செய்வதாக ஏமாற்றிய எழிலரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி, இளம்பெண்ணை ஏமாற்றிய எழிலரசன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- வனத்துறையினரும் யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- வீட்டின் வளாகத்திற்குள் 2 காட்டு யானைகள் நின்றிருந்தன.
கவுண்டம்பாளையம்:
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான ஆனைக்கட்டி, மாங்கரை, தடாகம், நஞ்சுண்டாபுரம், கணுவாய் போன்ற பகுதிகளில் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. வனத்துறையினரும் யானைகள் வராமல் இருக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
துடியலூரில் இருந்து பன்னிமடை செல்லும் பகுதியில் கதிர்நாயக்கன் பாளையம் சாலையில் லட்சுமி நகர் பேஸ் 3-பகுதியை சேர்ந்தவர் மணி.
இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்குள்ள தோட்டத்து வீட்டில் அவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இதுதவிர அங்கு மாடுகளையும் வளர்த்து வருகிறார்.
நேற்றிரவு வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானைகள், இந்த தோட்டத்து வீட்டிற்குள் புகுந்தன. யானைகள் வந்ததை பார்த்ததும் நாய்கள் குரைத்தன. நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு, வீட்டில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தனர்.
அப்போது வீட்டின் வளாகத்திற்குள் 2 காட்டு யானைகள் நின்றிருந்தன. மேலும் அங்கு கால்நடைகளுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த உணவு பொருட்களை யானைகள் தின்று ருசித்தன.
இதை பார்த்து அதிர்ச்சியான வீட்டில் இருந்தவர்கள் சம்பவம் குறித்து உடடினயாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இதனால் நேற்று இரவு முழுவதும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீண்டும் யானைகள் ஊருக்குள் வந்து சேதத்தை ஏற்படுத்தி விடுமா? என்று அச்சத்தில் இருந்தனர்.
- அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
- எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் "அமரன்." தீபாவளி பண்டிகையன்று வெளியான அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலையும் வாரி குவிக்கிறது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள், பொது மக்கள் மட்டுமின்றி திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் பாராட்டு தெரிவித்தனர். இந்த நிலையில், அமரன் படத்திற்கு தடை விதிக்கக் கோரி கோயம்புத்தூரில் எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமரன் திரைப்படம் சிறுபான்மையினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. திரையரங்கம் முன்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.
போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், போலீசார் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமரன் படத்தை தடை செய்யக்கோரி போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மு.க.ஸ்டாலினின் அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
- கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
கோவை:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டார்.
முதல் நாள் நிகழ்ச்சியில் விளாங்குறிச்சியில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், வீட்டு வசதி வாரியம் சார்பில் நிலம் விலக்கு அளிக்கப்பட்டவர்களுக்கு நில விடுவிப்பு ஆணைகளை வழங்கினார்.
நேற்று 2-வது நாளாக கள ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை காந்திபுரம் அடுத்த அனுப்பர் பாளையத்தில் சிறைச்சாலைக்கு சொந்தமான 6.98 ஏக்கர் நிலத்தில் ரூ.300 கோடி மதிப்பில் அமைய தந்தை பெரியார் நூலகம் மற்றும் அறிவியல் மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான செந்தில்பாலாஜியை வெகுவாக பாராட்டி பேசினார்.
செந்தில் பாலாஜி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தீவிர களப்பணியாற்றி வந்தார். அவருக்கு இடையில் சில தடைகள் வந்தன.
அந்த தடைகளை எல்லாம் உடைத்தெறிந்து தற்போது மீண்டும் கோவைக்கு கம்பேக் கொடுத்திருக்கிறார்.
மீண்டும் அதே உத்வேகத்துடன் கோவை மாவட்டத்தில் அரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க தீவிர களப்பணியாற்றுவார். அது உறுதி உறுதி என தெரிவித்து, அமைச்சர் செந்தில்பாலாஜியை பாராட்டி தள்ளினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னை பாராட்டியதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது:-
தடைகள் வந்தபோதெல்லாம் தாயுமானவராய் இருந்து என்னை தாங்கிய தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலினின் இந்த அளவற்ற அன்பிற்கு நான் எந்நாளும் கடமைப்பட்டுள்ளேன்.
முதல்-அமைச்சர் ஆணைக்கு இணங்க களப்பணியாற்றி நலத்திட்ட பணிகளை வேகப்படுத்தி கோவை மாவட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபடுவேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். அத்துடன் முதலமைச்சர் தன்னை பாராட்டிய பேசிய அந்த வீடியோவையும் அந்த பதிவுக்கு கீழே பகிர்ந்துள்ளார்.
- கோவையில் அமையவுள்ள பெரியார் நூலகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
கோவையில் பெரியார் பெயரில் அமையவுள்ள நூலகம் 8 தளங்களுடன் 1,98,000 சதுர அடி பரப்பில் கட்டப்படவுள்ளது என்றும் 2026ம் ஆண்டு திறக்கப்படும் என்று
அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியின் போது கூடியிருந்த கல்லூரி மாணவர்கள் "கடவுளே அஜித்தே" என கூச்சலிட்டுள்ளனர். மாணவர்கள் கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
சமீப காலங்களில் அஜித் ரசிகர்கள் கூடும் இடங்களில் "கடவுளே - அஜித்தே" என்று கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2021 ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியுள்ளேன்.
- கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை சென்றார். கோவையில் பொதுமக்களை நேரில் சந்தித்து கள ஆய்வு மேற்கொண்டார்.
அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சிப்பணிகள் முறையாக மக்களை சென்றடைகிறதா? என்பதை ஆய்வு செய்து அதிகாரிகளுடனும் ஆலோ சனை நடத்தினார்.
நேற்றைய நிகழ்ச்சிகள் முடிந்ததும் இரவு கோவை ரேஸ்கோர்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கினார்.
இன்று 2-வது நாளாக அவர் தனது கள ஆய்வை தொடர்ந்தார். காந்திபுரம் மத்திய ஜெயில் அருகே உள்ள மைதானத்தில் செம்மொழி பூங்கா கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அந்த பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பணிகள் எந்தளவு முடிந்துள்ளது. இன்னும் என்னென்ன பணிகள் எஞ்சியுள்ளன என கேட்டறிந்தார். பணிகளை விரைந்து முடிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து கோவை காந்திபுரம் திறந்த வெளி சிறைச்சா லையின் ஒரு பகுதியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.300 கோடி மதிப்பில் 8 தளங்களுடன் மிகப்பெரிய நூலகம் மற்றும் அறிவியல் மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடந்தது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அடிக்கல் நாட்டி நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள், தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கோவையில் அமைய உள்ள நூலகத்துக்கு தந்தை பெரியார் பெயர் சூட்டப்படுவதாக அறிவித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
கோவையில் இங்கு குழுமியுள்ள மாணவ செல்வங்களை சந்திக்கும்போது எனக்கு ஒரு புதிய உணர்ச்சியை, ஆற்றலை ஏற்படுத்தி உள்ளது. சில மாதத்துக்கு முன்பு தமிழ்புதல்வன் திட்டத்தை கோவையில் தொடங்கி வைத்தேன். இன்று நூலக அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றதில் மகிழ்சசி பெருமையடைகிறேன்.
2021 ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கு பயணித்து நலத்திட்ட உதவிகளை வழங்கும் திட்டத்தை நடத்தியுள்ளேன். கோவைக்கு 3 முறை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். அப்போது மாவட்டத்திற்கான திட்டங்களை தொடங்கியும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளேன். புதிய திட்டங்களையும் அறிவித்துள்ளேன்.
2023 தொடக்கத்தில் அந்த திட்டங்கள் நிலை குறித்து மண்டல வாரியாக ஆய்வு கூட்டங்களையும் நடத்தி உள்ளேன். இந்த ஆண்டு தொடக்கத்தில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் முடிந்ததும் அமைச்சரவை கூட்டம் நடத்தி கடந்த 3 ஆண்டுகளில் நாம் அறிவித்த திட்டங்களின் நிலை குறித்து அமைச்சர்கள் துறை ரீதியாக ஆய்வு செய்ய சொன்னேன். நான் தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க பயணம் சென்றேன். அதை முடித்து அமைச்சர்களை சந்தித்து துறை ரீதியான ஆய்வுகளை கோட்டையில் நடத்தி கொண்டிருந்தேன்.
மாவட்டங்கள் வாரியாக நான் நேரடியாக ஆய்வு செய்யலாம் என்று சொல்லி நான் தொடங்கிய பயணத்தில் முதல் மாவட்டமாக தேர்ந்தெடுத்தது இந்த கோவை மாவட்டத்தை தான். நேற்று காலை இங்கு வந்ததில் இருந்து பல்வேறு பணிகளை ஆய்வு செய்துள்ளேன். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளேன். மாவட்டம் முழுவதும் மக்களுக்கு தேவையான கோரிக்கைகளையும் கேட்டுள்ளேன். அதில் ஒரு கட்டமாக மாபெரும் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன்.
கோவை மாவட்டத்திற்கு அரசு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த கம்பேக் கொடுத்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி. அவரது சிறப்பான வேகமான செயல்பாட்டை பார்த்து, நடுவில் சில தடைகளை ஏற்படுத்தினார்கள். அந்த தடைகளை உடைத்து மீண்டும் வந்திருக்கிறார். கோவைக்காக சிறப்பாக செயல்பட வந்திருக்கிறார். அது உறுதி.
கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாக தான் மதுரையில் மாபெரும் நூலகத்தை அமைத்தோம். பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். அதேபோன்று கோவையிலும் கலைஞர் பெயரிலும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வந்தது. கோவையில் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்தேன். அடுத்த ஆலோசனையில் அறிவியல் மையமும் அமைக்கலாம் கருத்துக்கள் வந்தது.
அது வந்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது தந்தை பெரியார். சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் இருக்கு. அதனால் கோவையில் அவர்கள் 2 பேரையும் உருவாக்கிய தந்தை பெரியார் பெயரில் நூலகம், அறிவியல் மையம் அமைவது தான் பொருத்தமாக இருக்கும்.
தொண்டு செய்து பழுத்த பழம் தான் தந்தை பெரியார். 80 ஆண்டுகளுக்கு முன்பே வரும் உலகம் எப்படி இருக்கும் என கனவு கண்ட பகுத்தறிவு ஆசான். இந்த இளைய சமுதாயம் வாழ தந்தை பெரியார் நூலகமும், அறிவியல் மையமும் கோவையில் கம்பீரமாக மிக சிறப்பாக அமைய உள்ளதை மகிழ்ச்சியாக தெரிவிக்கிறேன்.
அடிக்கல்நாட்டு விழாவில் இந்த நூலகத்தின் திறப்பு விழா தேதியையும் அறிவிக்கிறேன். 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தநூலகம் திறக்கப்படும். திராவிட மாடல் அரசு சொன்னதை செய்யும். கோவையில் புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டிடத்தை திறந்து வைத்தேன்.
கோவையின் அடையாளமாக மாற உள்ள செம்மொழி பூங்கா பணிகளையும் பார்வையிட்டுள்ளேன். ரூ.133 கோடி மதிப்பில் நடக்கும் அந்த பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு ஜூன் மாதம் அது திறக்கப்பட உள்ளது.
தி.மு.க ஆட்சியில் திட்டத்தை அறிவித்தால் அதனை குறிப்பிட்ட காலத்திற்கு திறந்து வைப்போம். உயர்தர சிறப்பு மருத்துவமனை, கலைஞர் நூற்றாண்டு நூலகம், ஜல்லிக்கட்டு அரங்கம், வரலாற்றை எடுத்துக்காட்டும் கீழடி அருங்காட்சியகம். அந்த வரிசையில் இந்த பெரியார் நூலகம் இடம் பெற போகிறது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் நில எடுப்பு நடவடிக்கையில் விலக்கு அளிக்கப்படட நில உரிமையாளர்களுக்கு விடுவிப்பு ஆணைகளை வழங்கினேன். இது 35 ஆண்டு கால பிரச்சனை. பாராளுமன்ற தேர்தலுக்கு பிரசாரத்துக்கு வந்தபோது என்னிடம் மனு கொடுத்தனர். நான் அமைச்சர் முத்துசாமியிடம் கொடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என சொன்னேன். நேற்று மட்டும் 10 ஆயிரம் குடும்பங்கள் பயனடையும் வகையில் அந்த ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஊருக்கும், மக்களுக்கும் தேவையான திட்டங்கள் என்ன. வட்டார மக்களின் எதிர்பார்ப்பு என்ன என அறிந்து அந்த திட்டங்களை செயல்படுத்துகிறோம். என்னை பொறுத்தவரை ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் ஒவ்வொரு நாளையும் மக்களுக்கு நன்மை செய்யும் நாளாக பயன்படுத்தி வருகிறோம். ஒவ்வொரு தனி மனித கவலையையும் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்களால் மக்களுக்கு நன்மை செய்கிறோம்.
மக்களின் வாழ்க்கையோடு, திராவிட மாடல் அரசு இரண்டற கலந்துள்ளது. வாக்களித்தவர்கள், வாக்களிக்க மறந்தவர்கள், வாக்களிக்க மனமில்லாதவர்கள் என எந்த வேறுபாடும் இல்லாமல் அனைத்து மக்களுக்குமான அரசாக நாம் செயல்பட்டு வருகிறோம். அதனால் தான் மக்கள் நம்மை தொடர்ந்து ஆதரிக்கின்றனர். இன்னும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறார்கள். கடந்த சட்டமன்ற தேர்தலை விட நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது தான் நம்மை பலரும் விமர்சிக்க காரணம். எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் மக்களுக்கான எங்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருப்போம்.
இன்றைக்கும் நாம் பார்க்கும் நவீன தமிழ்நாட்டை உருவாக்கியது திராவிட முன்னேற்ற கழக ஆட்சி. எங்களுக்கு ஒரு மிஷன் இருக்கும். அதனை செயல்படுத்துவதற்காக மிஷன் தான் ஆட்சி அதிகாரம். 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வடமாநிலமும், தமிழ்நாடும் எப்படி இருந்தது என்று பாருங்கள். இப்போது அதே வடமாநிலத்தோடு, தமிழ்நாட்டை ஒப்பிட்டு பாருங்கள். அது உங்களுக்கே புரியும்.
தமிழ்நாடு இந்தியாவிலேயே 2-வது பொருளாதார மாநிலம். அதிக நகரமயமான மாநிலம். ஐ.நாவின் வளர்ச்சி இலக்கை செயல்படுத்துவதில் முதல் மாநிலம். இந்தியாவின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு தமிழகத்தில் தான் உள்ளது. தொழிற்சாலைகள் குறியீட்டில் 48 விழுக்காடு மேற்கொண்டது தமிழ்நாடு தான். தெற்காசியாவில் சுற்றுலாவில் முதல் மாநிலம் தமிழ்நாடு.
வறுமையின்மை, பட்டினி விழிப்பு, தரமான கல்வி, பாலின சமத்துவம், குடிநீர், வேலை வாய்ப்பு, குறைந்த விலைவாசி, பொருளாதார குறியீடு, தொழில், அமைதி, உற்பத்தி என எந்த புள்ளி விவரத்தை எடுத்தாலும் தமிழகம் தான் முன்னணி மாநிலமாக இருக்கும்.
இதுசாதாரணமாக நடக்கவில்லை. கொள்கையும், லட்சியமும் கொண்டு அதை அடைவதற்கான தொலைநோக்கு பார்வை, செயல்திட்டங்கள் கொண்ட மக்களுக்கான அரசை நடத்துவதால் இது சாத்தியமாயிற்று. இதை இன்னும் எளிதில் சொல்ல வேண்டும் என்றால், இந்த இயக்கத்தை தொடங்கும்போது பேரறிஞர் அண்ணா வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்றார். ஆனால் இன்றைக்கு நாங்கள் தெற்கை வளர்த்திருக்கிறோம். இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டும் என்றால் வடக்கிற்கும் தெற்கு தான் வாரி வழங்குகிறது. அது தான் உண்மை நிலை. அதை யாரும் மறுக்க முடியாது. என்னை பொறுத்த வரை கோட்டையில் இருந்து பணியாற்றுவது இல்லாமல் களத்தில் பணியாற்றுபவன் இந்த ஸ்டாலின் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
வரலாற்றில் நிலைத்து இருக்க கூடிய திட்டங்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும் திட்டங்களை செயல்படுத்தியவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். உங்களுக்கு ஆற்ற வேண்டிய கடமையும், பணியும் ஏராளம் இருக்கிறது. உங்களது ஆதரவு எங்களுக்கு வேண்டும். அது எங்களை வேலை செய்ய தூண்டும். ஆகவே உங்களுக்காக உங்களில் ஒருவனாக நான் இருப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து காந்திபுரத்துக்கு காரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சரும் பதிலுக்கு மக்களை பார்த்து கைகூப்பி வணங்கியும், கைகளை அசைத்தபடியும் சென்றார்.
விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, முத்துசாமி, செந்தில்பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மு.பெ. சாமிநாதன், கயல் விழி செல்வராஜ், தலைமை செயலாளர் முருகானந்தம், கணபதி ராஜ்குமார் எம்.பி., கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மேயர் ரங்கநாயகி உள்பட பலர் பங்கேற்றனர்.
- முதல்வர் கோயம்புத்தூருக்கு வருவது மூலமாக நிறைய திட்டங்கள் கிடைத்துள்ளது.
- ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் கலந்துகொண்டேன்.
கோவை மாவட்டம் அனுப்பர்பாளையத்தில் ரூ.300 கோடியில் மாபெரும் நூலகத்திற்கும், அறிவியல் மையத்திற்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டார்.
இதைத்தொடர்ந்து அவர் முதலமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்து உரையாற்றினார்.
இதுதொடர்பாக கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கோயம்புத்தூரில் எனது தொகுதி தொடர்பாகவும், கோயம்புத்தூர் மெட்ரோ, விஷ்வ கர்மா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். முதல்வர் பரிசீலிப்பதாய் தெரிவித்துள்ளார்.
முதல்வர் கோயம்புத்தூருக்கு வருவது மூலமாக நிறைய திட்டங்கள் கிடைத்துள்ளது. சாலைகள் எல்லாம் கிடைக்கிறது என்று நன்றி தெரிவித்தேன். திரும்பவும் கோவைக்கு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது திமுக கட்சி நிகழ்ச்சி அல்ல. இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி. அதுமட்டுமல்ல இது எனது தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சி. ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் நான் கலந்துகொண்டேன்.
என்னை பொறுத்தவரை தொகுதி மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். அவர்களுக்கான சில கோரிக்கைகளை நான் நிறைவேற்ற வேண்டி உள்ளது.
எதிர்க்கட்சி என்றாலும் அவர்கள் ஆளும் அரசாங்கத்தில் இருக்கின்றபோது அந்த விதத்தில் தான் அணுகுகிறேனே தவிர கட்சி ரீதியாக பார்க்கவில்லை என்று கூறினார்.
- Leopard movement is currently increasing in residential areas, குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
- தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின.
வால்பாறை:
வால்பாறை பகுதியில் பொதுவாக பனிக்காலம் தொடங்கும் நிலையில் அங்கு சிறுத்தைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். மேலும் வனப்பகுதியில் இருந்து வெளியேறி ஊருக்குள் வரும் சிறுத்தைகள் அங்குள்ள வீடுகளில் வளர்க்கப்படும் நாய், கோழி, ஆடு போன்றவைகளை வேட்டையாடி தின்றுவிட்டு தப்பி செல்வது வழக்கம்.
வால்பாறை கூட்டுறவு காலனி, துளசிங்க நகர், காமராஜர் நகர், அண்ணா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளில் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய 2 சிறுத்தைகள் தேயிலைத்தோட்டத்தில் இருந்து குடியிருப்புக்குள் நுழைந்தன. பின்னர் அங்குள்ள சாலையில் சிறிது நேரம் படுத்து ஓய்வெடுத்தன. தொடர்ந்து 2 சிறுத்தைகளும் தங்களுக்குள் செல்ல சண்டை போட்டு விளையாடின. பின்னர் அவை மீண்டும் குடியிருப்பில் இருந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன.
இந்த காட்சிகள் அங்குள்ள வீட்டில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.






