என் மலர்
சென்னை
- ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.
- மழை தொடர்பாக வரும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் பற்றி அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.
சென்னை:
'மோன்தா' புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் விடிய விடிய மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் சேவை மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மழை தொடர்பாக வரும் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் பற்றி அங்கு பணியில் இருந்தவர்களிடம் கேட்டறிந்தார்.
- இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கும்.
- தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக்கடலில் உருவாகி உள்ள மோன்தா புயல் ஆந்திரா மசூலிப்பட்டினத்தில் இருந்து தெற்கு- தென்கிழக்கில் 230 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயலானது மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே இன்று மாலை அல்லது இரவுக்குள் தீவிர புயலாக கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணிவரை 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.
- மோன்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ளது.
- காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும்
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் முழுமையாக தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக சென்னையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
இதனால் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக சென்னையில் இன்று தொடர் மழை பெய்து வருகிறது.
மோன்தா புயல் நாளை ஆந்திராவின் காக்கிநாடா அருகே கரையைக் கடக்க உள்ள நிலையில் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (அக்டோபர் 28) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
அதேபோல, திருவள்ளூர் மாவட்டத்திலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலின் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையே வாக்காளர் பட்டியல்தான்.
- இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அதிமுக முழு மனதுடன் வரறே்கிறது என அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இந்தியாவின் சிறப்பே ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்துவது தான். அப்படி தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றால் அதற்கு அடிப்படையே வாக்காளர் பட்டியல்தான்.
ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்தியா முழுவதும் உள்ள வாக்காளர் பட்டியல் சரியானதா என்று சரிபார்க்க வேண்டும். குறிப்பாக, தமிழகத்தில் 2026-ல் சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீதம் முழுமையானதாகவும், சரியானவையாகவும் இருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் இடம் பெயர்ந்தவர்ளை நீக்குவதும், புதிதாக தகுதி உள்ளவர்களை சேர்ப்பதும் அவ்வப்போது சுருக்கத் திருத்தம் மற்றும் தீவிர திருத்தம் என்ற முறைகளை பின்பற்றி சரியான வாக்காளர் பட்டியலை உறுதிபடுத்துவது இயல்பான ஒரு நடைமுறை.
எனவேதான், வாக்களர் பட்டியல் சரிபார்ப்பு சம்பந்தமாக அனைத்து அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் கூட்டங்களில், தமிழ் நாட்டில் தற்போதுள்ள வாக்காளர் பட்டியல் 100 சதவீத சரிபார்ப்பு இல்லாமல் முழுமையானதாக இல்லை என்பதால், வாக்காளர் பட்டியலை முழுமையாக ஆய்வு செய்யுங்கள் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வந்துள்ளோம்.
குறிப்பாக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், எங்கள் கழகப்
பொதுச் செயலாளர் அண்ணன் எடப்பாடியார் அவர்களின் ஒப்புதலோடு இந்தியத் தேர்தல் ஆணையத்தின், மாவட்ட அளவில் நடைபெறும் கூட்டங்கள்; மாநில அளவில் சென்னையில் நடைபெறும் கூட்டங்கள் மட்டுமல்லாமல், டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டங்களிலும், தமிழகத்தில் வாக்காளர் பட்டியல்களில் உள்ள குளறுபடிகளை நாங்கள் உரிய ஆதாரங்களுடன் எடுத்து வைத்து, திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை கோரி வருகிறோம்.
உதாரணமாக, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலின்போது வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், அந்தத் தொகுதியில் வசிக்காத 40 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
அதேபோல், சுமார் 8 ஆயிரம் இறந்த வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இதற்கான ஆதாரங்களை கழகத்தின் சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகாராகக் கொண்டு சென்றும், அதைப்பற்றி தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. இடைத் தேர்தல் முடியும்வரை அப்பெயர்கள் நீக்கப்படவில்லை.
அதேபோல், 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் இரட்டை வாக்குகள், இறந்தவர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் வாக்களர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலர்களிடமும், இந்திய தேர்தல் ஆணையத்திடமும் புகார்கள் கொடுக்கப்பட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
2024-ஆம் ஆண்டு, சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில், இரட்டை வாக்குகள், முகவரி மாற்றம் மற்றும் இறந்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் நீக்கப்படவில்லை என்றும்; இப்படி சுமார் 44 ஆயிரம் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று சென்னையில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரியிடம் உரிய ஆதாரங்களுடன் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அதைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உத்தரவுப்படி, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்து, ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டும் இன்றுவரை
சுமார் 31 ஆயிரம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பெயர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தபோது, கழகத்தின் சார்பில் சென்னை மாநகர் முழுவதும் இதுபோன்று பல்லாயிரக்கணக்கான பெயர்கள் வாக்களர் பட்டியலில் முறைகேடாக இடம் பெற்றுள்ளது என்று நாங்கள் தெரிவித்தோம். தொடர்ந்து, தியாகராயநகர், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம் ஆகிய தொகுதிகள் உள்பட பல தொகுதிகளின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு, மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் சரிபார்ப்பினை நடத்தி வருகிறது.
எங்களது கழகப் பொதுச் செயலாளர் `புரட்சித் தமிழர்' எடப்பாடியார் அவர்கள் `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்று ஆளும் விடியா திமுக ஸ்டாலினின் ஃபெயிலியர் மாடல் அரசின் தோல்விகளை தழிழகம் முழுவதும் எடுத்துக்கூறும் புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தின் போது, பல தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் நீக்கப்படாத இரட்டை வாக்குகள், இறந்தவர் வாக்குகள், முகவரி மாற்றம் உள்ளிட்ட குளறுபடிகளை சுட்டிக்காட்டி, வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் ஆய்வு செய்து திருத்திய வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி வருகிறார்.
வாக்காளர் சரிபார்ப்பு கோரிக்கையை சென்னை மட்டுமல்லாது, டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் உரிய ஆதாரங்களுடன் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
எனவே, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ளு.ஐ.சு எனப்படும் 'சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை' அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் இந்த சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாகவும், வெளிப்படையாகவும் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்தப் பணிகளையெல்லாம் மாநில அரசின் கீழுள்ள அலுவலர்கள்தான் செய்யப்போகிறார்கள் என்பதால், தேர்தல் ஆணையம் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
தற்போதுள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கும் குளறுபடிகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு, 100 சதவீதம் வாக்காளர்கள் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, தங்களுக்கான தலைவர்களை தேர்ந்தெடுக்கக் கூடிய உரிமை, உண்மையான வாக்காளர்களுக்குத் தான் வழங்கப்பட வேண்டும் என்பதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி கொண்டுள்ளது.
கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காக எந்தவித நலத் திட்டங்களையும் செயல்படுத்தாமல், எங்களது ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட பணிகளை ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைப்பது; இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதன்மை மாநிலமாக விளங்குவது; வாங்கும் கடனையெல்லாம் வருவாய் செலவினங்களுக்கே செலவிட்டுவிட்டு, விளம்பர ஆட்சி நடத்தி வரும் விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஃபெயிலியர் ஆட்சியில், மக்கள் படும் துன்பங்களுக்கு 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்; அத்தேர்தலில் திமுக தோல்வியுறுவது உறுதி, என்று தெரிந்தவுடன் இப்போதே அதற்கான காரணங்களைத் தேடும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள்,
இனியாவது தங்களது தவறுகளை திருத்திக்கொண்டு, எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுவதை நிறுத்திவிட்டு, மீதமுள்ள ஒருசில மாதங்களுக்காவது தமிழக மக்களுக்கு நல்லதைச் செய்ய வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார்.
- அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனையில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வைகோ, தங்கபாலு, வேல்முருகவ், வீரபாண்டியன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்நிலையில், SIR தொடர்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டிலும் SIR: வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்! வாக்குத் திருட்டை முறியடிப்போம்!
தேர்தலுக்கு மிக நெருக்கத்தில், அதுவும் பருவமழைக் காலமான நவம்பர், டிசம்பர் மாதங்களில் #SIR மேற்கொள்வது நடைமுறைச் சவால்கள் நிறைந்தது. அவசரகதியில் செய்யப்படும் SIR நடவடிக்கை மக்களின் வாக்குரிமையைப் பறித்து, பா.ஜ.க.வுக்குச் சாதகமாகத் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சதியாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே, பீகாரில் பெண்கள், சிறுபான்மையினர், பட்டியல் - பழங்குடியின மக்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் வாக்காளர் பட்டியிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், இந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததும் சேர்ந்து, கடும் ஐயத்தை அனைவரது மனதிலும் எழுப்பியிருக்கிறது.
தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் SIR மேற்கொள்ளப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசியிருக்கிறோம். அதனடிப்படையில் வரும் நவம்பர் 2 அன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கக் கூட்டம் நடத்தப்படும்.
மக்களின் வாக்குரிமைதான் ஜனநாயகத்தின் அடிப்படை. அதனைப் பறிக்கத் துணியும் ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
- அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வாக்காளர் பாட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை நடத்தினார்.
முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனையில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வைகோ, தங்கபாலு, வேல்முருகவ், வீரபாண்டியன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.
வாக்காளர் பட்டியல் இன்றிரவே முடக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து முதல்வர் அவசர ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், இந்த அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதில்," SIR என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சதித்திட்டத்திற்கு எதிராக போராட வேண்டும்.
SIR-க்கு எதிராக போராட வேண்டும்" என்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளது.
இதனால், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆலோசிக்க வரும் நவம்பர் 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
- அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
- வாக்காளர் பட்டியல் இன்றிரவே முடக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் வாக்காளர் பாட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக முதலமைச்சர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனையில் காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், வைகோ, தங்கபாலு, வேல்முருகவ், வீரபாண்டியன், பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியல் இன்றிரவே முடக்கப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை அடுத்து முதல்வர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
- சமூக வலைதளங்களில் உள்ள புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
- வடசென்னையில் 5 முதல் 8 செ.மீட்டர் மழை பதிவாகும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது.
ராயபுரம்:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் வடசென்னையில் உள்ள பக்கிங்காம் கால்வாய், கேப்டன் கால்வாய் மற்றும் மணலி சாலையில் உள்ள இணைப்பு கால்வாய்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் இன்று காலை கொட்டும் மழையில் வியாசர்பாடி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள பக்கிங்காம் கால்வாயில் மேற்கொள்ளப்படும் கால்வாய் தூர்வாரும் பணி, 36-வது வார்டிற்கு உட்பட்ட அழகேசன் தெரு டான் பாஸ்கோ பள்ளி அருகில் உள்ள கேப்டன் காட்டன் கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணி, 37-வது வார்டிற்கு உட்பட்ட கொடுங்கையூர் குப்பை சேகரிக்கும் மையத்தில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி மற்றும் 41 -வது வார்டிற்கு உட்பட்ட மணலி சாலையில் உள்ள இணைப்பு கால்வாயில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:-
எவ்வளவு மழை வந்தாலும் தயார் நிலையில் தமிழக அரசு உள்ளது. சமூக வலைதளங்களில் உள்ள புகார்களில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வடசென்னையில் 5 முதல் 8 செ.மீட்டர் மழை பதிவாகும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் வட சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி ஆய்வு செய்கிறோம். வடசென்னையில் 18 கால்வாய்கள், 13 குளங்கள்,331 கி.மீட்டர் தூர்வாரப்பட்டு 3 ½ லட்சம் டன் கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ராஜன், மாநகர ஆணையாளர் பரமகுரு, வட்டார துணை ஆணையாளர் கட்டா ரவி தேஜா, வடசென்னை எம்.பி. கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி, தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துவிட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.
- ரோடு ஷோ நடத்துவதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கரூரில் த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக மூச்சு திணறி பலியாகினர்.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு முன்பாக விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகளை போலீசார் விதிப்பதாகக் கூறி, த.வெ.க. தரப்பில் ஏற்கனவே ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டு, தனி நீதிபதி முன்பு விசாரணை நிலுவையில் இருந்தது. இந்த வழக்கும், தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்பட மாட்டாது என்று கூறினார்.
அதற்கு தலைமை நீதிபதி இந்த நிகழ்ச்சி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வகுத்துவிட்டதா ? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கூடுதல் அட்வகேட் ஜெனரல் அந்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் நடவடிக்கையில் அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இதுகுறித்து அரசு, கட்சி நிர்வாகிகள் உடன் கலந்து ஆலோசனை செய்து வருகிறது என்றார்.
அப்படி என்றால் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை அரசியல் கட்சிகளுக்கு ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாது என்ற முடிவு அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமைகளை பாதிப்பதாக இருக்காதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
"ரோடு ஷோ நடத்துவதற்கு மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை எதுவும் இருக்கவில்லை. அரசியல் கட்சிகளையும் தடுக்கவில்லை என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் விளக்கம் அளித்தார்.
மேலும், இந்த ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் வரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி வழங்கப்படாது என்று ஐகோர்ட்டில் ஏற்கனவே அரசு உத்தரவாதம் கொடுத்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், "அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், பேரணி, ஊர்வலம் உள்ளிட்டவைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி 10 நாட்களுக்குள் அரசு ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
அதே நேரம் தற்போது பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவர்களுக்கு அரசியல் கட்சிகள் அனுமதி கோரி ஏதாவது விண்ணப்பம் செய்திருந்தால் அந்த விண்ணப்பத்தை பரிசீலிக்க இந்த உத்தரவு அரசுக்கு தடையாக இருக்காது. இந்த வழக்கு விசாரணையை வருகிற அடுத்த மாதம் (நவம்பர்) 11-ந்தேதிக்கு தள்ளி வைக்கிறோம்" என்று கூறினார்கள்.
- ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி கனமழைக்கான ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதையடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த 24-ந்தேதி புதிய காற்ற ழுத்த தாழ்வு பகுதி உருவானது.
அது மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் கடந்த 25-ந்தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த 'மோன்தா' என்று பெயரிடப்பட்டுள்ளது. 'மோன்தா' புயல் நாளை (செவ்வாய்க்கிழமை) தீவிர புயலாக மாறுகிறது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்ட லம், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வலுப்பெற்று நேற்று அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்தது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு 11.30 மணி யளவில் 'மோன்தா' புயலாக வலுவடைந்தது.
இந்த 'மோன்தா' புயல் இன்று காலை நிலவரப்படி சென்னையில் இருந்து கிழக்கு-தென்கிழக்கு பகுதியில் 560 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநிலம் காக்கிநாடா வில் இருந்து, தெற்கு-தென்கிழக்கு திசையில் 620 கி.மீ. தொலைவிலும், விசாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 650 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. இந்த 'மோன்தா' புயல் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு திசையில் ஆந்திரா கடற்கரை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த புயல் ஆந்திர மாநில கடலோர பகுதிகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலையில் தீவிர புயலாக மாறுகிறது. பின்னர் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடா அரு கில் தீவிர புயலாகவே நாளை இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் கரையை கடக்கும் போது 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக இன்று முதல் வருகிற 2-ந்தேதி வரை வட தமிழகம் மற்றும் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'மோன்தா' புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடா்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) திருவள்ளூா் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால் ஆழ் கடலில் மீன்பிடிக்க சென்று உள்ள மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வங்கக்கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே விசாரிக்க முடிவு செய்தது.
- வழக்குகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம் என ஒரு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை:
கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே விசாரிக்க முடிவு செய்தது.
இந்த வழக்குகள் எல்லாம், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் இன்று காலையில் முதல் வழக்குகளாக விசாரணைக்கு வந்தன.
முதல் வழக்காக கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமின் கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்த மனுவை மனுதாரர் தரப்பு வக்கீல் வாபஸ் பெறுவதாக கூறியதை ஏற்று, அந்த மனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
அதேபோல, கரூர் சம்பவம் காரணமாக, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, த.வெ.க. தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த வழக்கு, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரத்தின்போது, டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பது, தீ விபத்து தடுப்பு கண்காணிப்பு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோது, நேபாளம், இலங்கை போல், தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு, வன்முறையை தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, த.வெ.க. தேர்தல் பிரசார பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வழக்கு, கரூர் துயர சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா? என்பதை முடிவு செய்யும் வழக்கு என்று பல வழக்குகள் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்குகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம் என ஒரு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை எல்லாம் 3 வாரத்துக்கு தள்ளிவைத்தும், அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திற்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






