என் மலர்tooltip icon

    சென்னை

    • பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது!
    • காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!

    பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    எத்தனை பதிவுகளை இட்டு, பூசி மெழுக முயன்றாலும், உண்மை வரலாற்றை எவராலும் அழிக்க முடியாது, மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே! அப்படியானதை நான்கு கருப்பு-வெள்ளை புகைப்படங்களால் நீங்கள் அழிக்க நினைப்பது வேடிக்கையாக உள்ளது!

    கர்ம வீரர் காமராஜரை அவமானப்படுத்த திமுக பரப்பிய அவதூறுகளையும், பொய் பிரச்சாரங்களையும், கேலிச் சித்திரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் காங்கிரஸ் கட்சி மறந்திருக்கலாம், ஆனால் தமிழக மக்களின் நினைவில் இவையெல்லாம் நீங்கா ரணங்களாக இன்றளவும் இருக்கின்றன!

    உங்கள் துணைப் பொதுச் செயலாளர் திரு. திருச்சி சிவா அவர்கள், பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்திப் பேசவில்லை என நீங்கள் மழுப்பலாம். உங்கள் அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி

    அவர்கள், "காமராஜருக்குக் கல்லறை கட்டியதே நாங்கள் தான்" என்று கூறவில்லை என உண்மையைத் திரிக்கலாம்.

    ஆனால், இதோ முரசொலி இதழிலேயே மிகவும் கொச்சையாகவும், கீழ்த்தரமாகவும் நீங்கள் காமராஜரை இழிவுபடுத்திய காட்சிகள்.

    இதை உங்களால் மறுக்க முடியுமா, அல்லது இன்று நியாயப்படுத்திப் பேச முடியுமா?

    ஆகவே, பசப்பு வார்த்தைகளால் இதைக் கடந்துவிட முடியாது! காமராஜரை இழிவுபடுத்துவதே திமுகவின் நோக்கம் என்பது ஊரறிந்த விஷயம்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மீனவர்கள் வாக்கை பெறுவதற்காக தந்திரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.
    • மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக முயற்சிக்கிறது.

    மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் இ.பி.எஸ். சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன்படி, மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் அதிமுக தொண்டர்கள் மற்றும் மக்கள் திரண்டு இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பின்னர் எடப்படி பழனிசாமி பேசியதாவது:-

    கச்சத்தீவை தாரை வார்த்தபோது மத்தியில் காங்கிரசும் மாநிலத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தது.

    ஆனால், தற்போது கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசியல் செய்வதாக திமுக பொய் கூறி வருகிறது.

    16 ஆண்டு காலம் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் திமுகவினரின் கண்ணுக்கு தெரியவில்லை.

    திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது கச்சத்தீவை மீட்டு மீனவர்களை காப்பாற்றியிருக்கலாமே?

    மீனவர்கள் வாக்கை பெறுவதற்காக தந்திரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்.

    மத்திய அரசு மீது பழிபோட்டு, மீனவர்களின் வாக்குகளைப் பெற திமுக முயற்சிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
    • சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 22-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று சென்னை உள்பட 26 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, திருவள்ளூர், காஞ்சிப்புரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கடலூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, சேலம், கரூர் மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரியிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
    • அனைத்து பணிகளையும் வழகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அடிப்படை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    அப்போது, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

    குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

    அனைத்து பணிகளையும் வழகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும்.

    பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்து நீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.

    பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.

    • திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு.
    • வருகிற 25ஆம் தேதி எம்.பி.யாக பதவி ஏற்க உள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வருகிற 25ஆம் மாநிலங்களவை எம்.பி.யாக பதவி ஏற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    மக்கள் நீதி மய்யம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. 2024 மக்களவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம் பிடித்தது. மக்களவை தொகுதி ஏதும் பெறாமல் தேர்தல் பிரசாரம் மட்டும் மேற்கொண்டது. இதற்குப் பதிலாக ஒரு மாநிலங்களவை எம்.பி. இடம் வழங்கப்படும் என திமுக தெரிவித்தது. அதன்படி ஒரு இடத்தை வழங்கியது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.

    • புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றில் சில இருண்ட காலகட்டங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது.
    • உடனடியாக பாடப் புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய கல்விக் கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் கீழ் பள்ளிக் கல்விக்கான புதிய புத்தகங்களை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது.

    8-ம் வகுப்பு புதிய பாடப் புத்தகம் இந்த வாரம் வெளியிடப்பட்டது. சமூகத்தை ஆராய்தல், இந்தியா மற்றும் அதற்கு அப்பால் என்ற தலைப்பில் வந்துள்ள இந்த புத்தகத்தில் டெல்லி சுல்தான்கள், முகாலயர்கள், மராத்தியர்கள் மற்றும் காலனித்துவ சகாப்தத்தை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய என்.சி.இ. ஆர்.டி.யின் பாடத் திட்டத்தில் முதலாவதாகும்.

    புத்தகத்தின் தொடக்கத்தில் வரலாற்றில் சில இருண்ட காலகட்டங்கள் பற்றிய குறிப்பு என்ற தலைப்பில் ஒரு பகுதி உள்ளது. போர் மற்றும் ரத்தக் களரியை முதன்மையாக கொண்ட உணர்வு பூர்வமான மற்றும் வன் முறை நிகழ்வுகள் குறித்த செய்திகள் இடம்பெற்று உள்ளன. 13 முதல் 17ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய வரலாற்றை உள்ளடக்கிய அத்தியாயம் இந்தியாவின் அரசியல் வரைபடத்தை மறுவடிவமைத்தல், டெல்லி சுல்தான்களில் எழுச்சி மற்றும் வீழ்ச்சி, விஜயநகர பேரரசு, முகலாயர்கள், சீக்கியர்களின் எழுச்சி குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

    பாடப்புத்தகத்தில் பாபர் நகரங்களில் முழு மக்களையும் கொன்று குவித்த ஒரு மிருகத்தனமான மற்றும் இரக்கமற்றவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. அவுரங்கசீப் கோவில்களையும், குருத்வா ராக்களையும் அழித்த ராணுவ ஆட்சியாளர் என்றும், அக்பரின் ஆட்சி கொடூரமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ. ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே, உடனடியாக பாடப் புத்தகங்களில் இருந்து இத்தகைய கருத்துக்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.
    • காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

    கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் பெரும் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    கர்மவீரர் காமராஜர் மறையும் தருவாயிலான நிகழ்வுகள் வரலாற்றுக் குறிப்பாக உள்ள போதே, காமராஜர் கருணாநிதியின் கையைப் பிடித்துப் புகழ்ந்தார் என்பது எவ்வளவு பெரிய பச்சைப்பொய்? திமுக-வின் வரலாற்றுத் திரிப்புக்கு ஒரு அளவே இல்லையா?

    பெருந்தலைவர் காமராஜர் பற்றி ஸ்டாலினும், திமுக-வும் பேசுவதெல்லாம் நகைமுரண்.

    பெருந்தலைவர் குறித்து சர்ச்சையான விவாதங்கள் நடப்பது சரியல்ல என்றால், அந்த சர்ச்சையை ஆரம்பித்தது யார்? உங்கள் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர், திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா தானே?

    அதை வைத்து, சமூக ஊடகங்கள் முழுக்க ஐயா காமராஜர் குறித்த அவதூறுகளை அள்ளி வீசிக் கொண்டிருப்பது உங்கள் திமுக கொத்தடிமைகள் தானே?

    காமராஜர் குறித்த கருணாநிதியின் பழைய முரசொலி சித்திரங்களை எல்லாம் யாரும் மறந்துவிடவில்லை. அப்படி கர்மவீரர் காமராஜர் மீது பன்னெடுங்காலமாக கருணாநிதி வகையறா கொண்டிருந்த வன்மத்தை, இப்படி ஒரு சர்ச்சை உருவாக்கி, அதன் மூலம் காமராஜர் புகழை மழுங்கடிக்கத் துடிக்கும் அற்ப அரசியலை செய்வது திமுக தானே?

    இவரே வெடிகுண்டு வைப்பாராம்..

    இவரே அதை எடுப்பது போல் நடிப்பாராம்! நடிக்காதீங்க மு.க.ஸ்டாலின்.

    அவதூறான பேச்சை திரித்து பேசும் போதே தெரிகிறது, உங்களுடைய நோக்கம் என்னவென்று!

    ஒன்றைத் தெளிவாக சொல்கிறேன்- உங்களாலோ, உங்கள் அடிப்பொடிகாளோ, ஒருபோதும் மக்களுக்காக உழைத்த பெருந்தலைவர் காமராஜரின் புகழைத் துளியும் குறைத்துவிட முடியாது!

    வாழ்க கர்மவீரரின் புகழ்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.
    • தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

    சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    * மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.

    * 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை.

    * வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.

    * தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடம்பாக்கம், தி.நகர், அரும்பாக்கம் மற்றும் தி. நகர் பஸ் வழித்தடங்களுக்கு புதிய பஸ் நிலையம் ஒரு முக்கிய மையமாக திகழும்.
    • பல்வேறு வசதிகள் செய்யப்படுவதால் 5 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட பஸ் முனையமாக விரைவில் செயல்பட தொடங்கும்.

    சென்னை மாநகரில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் ஒன்று தி.நகராகும். பல்வேறு ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள் என தி.நகரில் ஏராளமான தொழில் சார்ந்த கடைகள் வரிசை கட்டி நிற்கின்றன. இதன் காரணமாக மாம்பலம் பகுதிக்கு ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்கிறார்கள்.

    ஆனால் அங்கு பயணிகளுக்கும் மாநகரப் போக்குவரத்து கழக டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கும் போதுமான வசதிகள் செய்து கொடுக்கப்படாமலேயே உள்ளன.

    பஸ் நிலையத்தில் போதிய இட வசதி இல்லாததால் பஸ் நிலையத்துக்கு வெளியேயும் மாநகரப் பஸ்களை நிறுத்த வேண்டிய நிலையே நீடித்து வருகிறது.

    இதன் காரணமாக தி.நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்து வருகிறது.

    இதனை குறைக்கும் வகையிலும், பயணிகளுக்கு சிறந்த வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தி.நகரில் ஒரு புதிய ஒருங்கிணைந்த பஸ் முனையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தை நிறைவு செய்து அதன் பிறகு பணிகளை தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த புதிய பஸ் முனையம் சுமார் 1.97 ஏக்கர் பரப்பளவில், ரூ.254 கோடியில் தி.நகரில் உள்ள சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் தற்போதைய பணிமனையிலேயே அமைக்கப்பட உள்ளது. விசாலமாக கட்டப்பட உள்ள புதிய பஸ் நிலையத்தில் 97 பஸ்கள் மற்றும் 235 வாகனங்களை நிறுத்தும் அளவுக்கு இட வசதி செய்து கொடுக்கப்பட இருக்கிறது.

    இது தவிர, தினமும் 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட மினி பஸ்களையும் கையாளும் திறன் கொண்டதாக இந்த புதிய பஸ் நிலையம் செயல்பட இருப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

    கோடம்பாக்கம், தி.நகர், அரும்பாக்கம் மற்றும் தி. நகர் பஸ் வழித்தடங்களுக்கு புதிய பஸ் நிலையம் ஒரு முக்கிய மையமாக திகழும். பல்வேறு வசதிகள் செய்யப்படுவதால் 5 மாடிகளை கொண்ட பிரம்மாண்ட பஸ் முனையமாக விரைவில் செயல்பட தொடங்கும்.

    தரைத்தளத்தில் பஸ்களை நிறுத்தி வைப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. மேல் தளங்களில் கடைகள், அலுவலகங்கள், மருத்துவ மையங்கள், உணவகங்கள், குழந்தைகள் பராமரிப்பு மையங்கள், காத்திருப்பு பகுதிகள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்படுகிறது. ஒரு தளத்தில் 50,471 சதுர அடியில் வாகன நிறுத்துமிடமும் பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட இருக்கிறது.

    இந்த முனையத்தில் 75 பஸ்களுக்கான நிறுத்தம் மற்றும் 9 அடுக்குகள் கொண்ட 945 நான்கு சக்கர வாகன நிறுத்தம் மற்றும் 1.09 ஏக்கரில் 60 அடுக்குகள் கொண்ட 87 இருசக்கர வாகன நிறுத்தம் ஆகியவையும் இருக்கும்.

    தற்போது தி.நகரில் 60-க்கும் மேற்பட்ட பஸ் வழித்தடங்கள் உள்ளதால், இங்குள்ள பஸ் முனையங்கள் மற்றும் சாலைகள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. புதிய முனையம் அமைப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணம் உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இந்த முனையத்தில் வாகன நிறுத்தம், டிக்கெட் கவுண்டர்கள், தகவல் மையங்கள், பயணிகள் காத்திருப்புப் பகுதிகள், உணவகங்கள், மருத்துவ மையங்கள், மருந்தகங்கள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு வசதிகள் போன்ற பல்வேறு வசதிகளும் ஒரே இடத்தில் ஏற்படுத்தப்படுவதால் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இந்த மையம் மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்.

    புதிய முனையம் கட்டி முடிக்கப்பட்ட பிறகு வணிகம் மற்றும் பார்க்கிங் வருவாய் மூலம் ஐந்து ஆண்டுகளில் ரூ.29.52 கோடி வருவாய் ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதிய பஸ் நிலையம் மூலம் போக்குவரத்து வசதிகள் மேம்படுவதுடன், வணிக ரீதியாகவும் கணிசமான வருவாய் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தற்போதைய தி.நகர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. புதிய முனையம் இந்த நெரிசலை முழுமையாக சரிசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    போக்குவரத்து கழக ஊழியர்கள் நீண்ட நேரம் பணிபுரிவது ஒரு சவாலாக உள்ளது. புதிய முனையம் இது போன்ற பிரச்சனைகளை குறைப்பதுடன் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயன் அடைவார்கள் என்பதும் அதிகாரிகளின் நம்பிக்கையாக உள்ளது.

    இதை தொடர்ந்து புதிய முனையம் அமைக்கும் முடிவை அவர்கள் வரவேற்றுள்ளனர். இது தங்களுக்கு சிறந்த ஓய்வு மற்றும் பணிச்சூழலை வழங்கும் என நம்புகிறார்கள்.

    இந்த புதிய திட்டம் தி.நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதோடு, சென்னை மாநகர வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை ஏற்படுத்துவதாகவே அமையும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    • இக்கொடூரச்செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.
    • தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிபாளையம், குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் ஏழைத்தொழிலாளர்களை குறிவைத்து அவர்களின் வறுமையை பயன்படுத்தி வெறும் 3 இலட்சத்திற்கு அவர்களின் கிட்னி எடுப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இக்கொடூரச்செயலில் ஈடுபடுபவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

    ஏழை மக்களின் உடல் உறுப்புகளை விற்பனைக்கான பொருளாக பயன்படுத்துவது மனித உரிமையை முற்றிலும் இழிவுப்படுத்தும் செயல். இன்றைய சமூகத்தில் சில மனித உறுப்புகள், குறிப்பாக 'கிட்னி', ஒரு வியாபாரப் பொருளாக மாறிவிட்டது என்பது வருத்தத்துக்குரியது.

    சட்டப்படி தானம் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருக்க, சிலர் அதனைத் தாண்டி, லாப நோக்கத்தோடு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது குற்றமாகவே பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு, காவல்துறை மற்றும் மருத்துவ நிறுவனங்கள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • மனிதர்கள் உயிர்வாழத் தேவையான முதன்மையான உடல் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று.
    • தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரப்பாளையம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் விசைத்தறிகளில் பணியாற்ற வரும் ஏழைத் தொழிலாளர்களை ஏமாற்றி, அவர்களின் சிறுநீரகங்களை சில கும்பல்கள் பறித்துச் செல்வதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி அவர்களின் சிறுநீரகங்கள் கொள்ளையடிக்கப்படுவதும், அதை தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை.

    நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் தொழிலாளர்களை சந்திக்கும் கும்பல், அவர்களின் சிறுநீரகங்களுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணம் தருவதாகக் கூறி விலை பேசுவதாகவும், ஒப்புக்கொள்பவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கோவை, சேலம், திருச்சி, கரூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று அவர்களிடமிருந்து சிறுநீரகங்கள் எடுக்கப்படுவதாகவும், அவை ஆந்திரம், கர்நாடகம், தெலுங்கானம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த பணக்காரர்களிடம் ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு பொருத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

    நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை வழங்கியவர்களில் சிலருக்கு, முன்பணம் போக மீதமுள்ள தொகை வழங்கப்படாத நிலையில், அவர்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து தான் இந்த மோசடி வெளியுலகத்திற்கு தெரியவந்துள்ளது. ஊடகங்களில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து தான் இது குறித்து விசாரணை நடத்தப்போவதாக நாமக்கல் மாவட்ட மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

    மனிதர்கள் உயிர்வாழத் தேவையான முதன்மையான உடல் உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. ரூ.1 லட்சத்திற்காக சிறுநீரகத்தையே மக்கள் விற்கத் துணிகிறார்கள் என்றால் அவர்களின் வாழ்க்கை நிலை எந்த அளவுக்கு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். இதையெல்லாம் கூட அறியாமல் தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு நடப்பதாக சில ஆண்டுகளுக்கு முன் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து தொடர் கண்காணிப்பை தமிழக அரசு மேற்கொண்டிருந்தால், இத்தகைய சிறுநீரகத் திருட்டுகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், தமிழக அரசு நீண்டகாலமாக உறங்கிக் கொண்டிருந்து விட்டு இப்போது துறை சார்ந்த விசாரணை நடத்தப்போவதாக கூறுகிறது. அதில் நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.
    • பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 355 பஸ்களும், சனிக்கிழமை 350 பஸ்களும் இயக்கப்படும்.

    சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) 55 பஸ்களும், சனிக்கிழமை 55 பஸ்களும், பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும், மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் சனிக்கிழமை 20 பஸ்களும் என மொத்தம் 1,035 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    மேலும், ஞாயிற்றுக்கிழமை (20-ந்தேதி) சொந்த ஊா்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×