என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவு
- குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
- அனைத்து பணிகளையும் வழகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகள் 144 நகராட்சிகளில் மேற்கொள்ளப்படும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அடிப்படை பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடித்திடுமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளையும் விரைந்து முடிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
சாலைப்பணிகளை விரைந்து முடிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பணிகளையும் வழகிழக்கு பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே முடிக்க வேண்டும்.
பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பே மழைநீர் வடிகால்கள் சுத்தம் செய்து நீர் வெளியேற வழி ஏற்படுத்த வேண்டும்.
பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என தெரிவித்தார்.






