என் மலர்
சென்னை
- குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
- குழந்தை கடத்தல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
செங்குன்றம்:
சென்னையில் குழந்தைகளை கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக சமீபத்தில் ஒரு ஆடியோ வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தன. இதனை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளதாக வித்யா என்ற இளம்பெண்ணை புழல் போலீசார் கைது செய்தனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குழந்தைகளை கடத்தி குழந்தை இல்லாத தம்பதிகளிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை பேரம் பேசி விற்பனை செய்து வந்தது தெரிந்தது.
வித்யாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி அம்பத்தூர், ஒடகடம் பகுதியில் கடத்தி வைக்கப்பட்டு இருந்த 2 குழந்தைகளை போலீசார் அதிரடியாக மீட்டனர்.
இந்த குழந்தை கடத்தல் பெரிய கும்பலாக பல நாட்களாக செயல்பட்டு வந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக பிடிபட்ட வித்யாவிடம் குழந்தை கடத்தல் தொடர்பில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் முழு தகவல்கள் கிடைக்கும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.
- முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?
- திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நாமக்கல் விசைத்தறி தொழிலார்களுக்கு நடந்தது "கிட்னி திருட்டு இல்லை, முறைகேடு"; இதைச் சொல்வது தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்கள்.
ஒருவரின் ஏழ்மையை பயன்படுத்தி அவரின் உடல் உறுப்புகளை திருடுவதை முறைகேடு என்று சொல்வதா? இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா?
சரி, நீங்கள் சொல்லும் இந்த முறைகேட்டில் இடைத்தரகராக செயல்பட்ட திமுக நிர்வாகி திராவிட ஆனந்தன் இன்றுவரை கைது செய்யப்படாமல் இருப்பது ஏன்?
கிட்னி திருட்டில் தொடர்புடைய திமுகவின் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் நடத்தும் மருத்துவமனை மீது ஏதோ கண்துடைப்பு நடவடிக்கை எடுத்துவிட்டால் போதுமா?
இது தான் நீங்கள் ஆட்சி நடத்தும் லட்சணமா? என்று வினவியுள்ளார்.
- ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் தூத்துக்குடியில் வைகோ பேச உள்ளார்.
- ஆகஸ்டு 18-ந்தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பேசுகிறார்.
சென்னை:
பாராளுமன்றத்தில் 30 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் 8 இடங்களில் மாநில வாழ்வாதாரங்களை பாதுகாக்க பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளார்.
அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந்தேதி தூத்துக்குடியில் அவரது இந்த பிரசாரம் தொடங்குகிறது. ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் அவர் தூத்துக்குடியில் பேச உள்ளார்.
ஆகஸ்டு 10-ந்தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும், கூட்டாட்சியும் என்ற தலைப்பிலும், 11-ந்தேதி கம்பத்தில் முல்லை பெரியாறும், நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், 12-ந்தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் பேச உள்ளார்.
ஆகஸ்டு 13-ந்தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும் மீத்தேனும் என்ற தலைப்பிலும், 14-ந்தேதி நெய்வேலியில் நிலக்கரி நிறுவனம் பற்றியும் பேசுகிறார். ஆகஸ்டு 18-ந்தேதி திருப்பூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பேசுகிறார்.
ஆகஸ்டு 19-ந்தேதி சென்னை திருவான்மியூரில் சமூக நீதியும், திராவிட இயக்கமும் என்ற தலைப்பில் பேசுகிறார். அவருடன் அனைத்து கூட்டங்களிலும் ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
- மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று சுவாசத்தை சீராக்க ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு எந்த குறைபாடும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் மேலும் சில தினங்கள் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள். அதன் பேரில் அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
இன்று காலை அவரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சரின் சகோதரி செல்வி, சகோதரர் மு.க.தமிழரசு சந்தித்து பேசினார்கள். சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, தா.மோ.அன்பரசன், முன்னாள் அமைச்சர் பொன்முடி, ஏ.கே.விஜயன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து சென்றனர்.
- அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை இன்னும் வழங்கப்படவில்லை.
- விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு?
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஜூலை மாதமே முடியவிருக்கும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 332 ஆசிரியர்களுக்கு ஜூன் மாத சம்பளத்தை வழங்கக்கூட அரசிடம் பணம் இல்லையா? அல்லது மனம் இல்லையா?
தினமொருமுறை ஞாபகப்படுத்தினால் தான் ஆசிரியர்களின் நலனை திராவிட மாடல் அரசு கண்டுகொள்ளும் என்றால் அதை செய்யவும் எங்கள் தமிழக பா.ஜ.க. தயாராக உள்ளது! விழித்துக்கொள்ளுமா விடியல் அரசு? என்று வினவியுள்ளார்.
- எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்காக 72,743 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
- போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் மருத்துவப்படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 30-ந்தேதி தொடங்கும் நிலையில் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்காக 72,743 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டை விட கூடுதலாக 29,680 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 4,062 மாணவர்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வில் பங்கேற்க போலி ஆவணம் மூலம் 25 பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
போலி ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் 25 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக 20 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் 5 மாணவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- நேற்று சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,040-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.75 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வகையில் வரலாறு காணாத உச்சம் என்ற இலக்கையும் எட்டி பிடித்தது.
அதனை தொடர்ந்து நேற்று தங்கம் விலை உயரும் என எதிர்பார்த்த நிலையில், கிராமுக்கு 125 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,255-க்கும் சவரனுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.74,040-க்கு விற்பனையானது.
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,210-க்கும் சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.73,680-க்கு விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,360 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 128 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
24-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,040
23-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,040
22-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,280
21-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,440
20-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,360
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
24-07-2025- ஒரு கிராம் ரூ.128
23-07-2025- ஒரு கிராம் ரூ.129
22-07-2025- ஒரு கிராம் ரூ.128
21-07-2025- ஒரு கிராம் ரூ.126
20-07-2025- ஒரு கிராம் ரூ.126
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசத்தின் தெற்கே 130 கி.மீ. தொலைவிலும் கொல்கத்தாவின் தென்கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேச கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசத்தின் தெற்கே 130 கி.மீ. தொலைவிலும் கொல்கத்தாவின் தென்கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேச கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்கம் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மற்றும் ஜார்கண்ட் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
- பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன.
சென்னை:
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் படிக்கக் கூடிய மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கராத்தே, ஜூடோ, தேக்வோண்டோ, சிலம்பம் போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அளிக்கக் கூடிய பயிற்சிகள் வாயிலாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்படுவதுடன் அவர்களுடைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகின்றன.
அந்த வகையில் இந்த பயிற்சிகளை வழங்குவதற்காக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. 6,045 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கும் வகையில் ரூ.7 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், 5,804 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ரூ.8 கோடியே 23 லட்சத்து 56 ஆயிரம் என மொத்தம் ரூ.15 கோடியே 48 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி விவரம், தற்காப்பு கலை பயிற்சிகள் விவரம், பயிற்சியாளர் விவரம் ஆகியவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். வாரத்தில் 2 நாட்கள் வீதம் 3 மாதங்களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும் இந்த தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
- பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று தனது 87-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், ராமதாசுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
நீண்ட ஆயுளோடு, தங்களது பொதுவாழ்க்கைப் பயணம் தொடர வேண்டுமென விழைகிறேன் என்று கூறியுள்ளார்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஒடிசா கடலோர பகுதி நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று கூறியிருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 5 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, நெல்லை, தேனி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- தூத்துக்குடி விமானநிலைய திறப்பு விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது.
- தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓபிஎஸ் கடிதம்.
தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடி மதிப்பில் சர்வதேச தரத்திற்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. விரிவாக்கப்பணி காரணமாக தூத்துக்குடிக்கு இரவிலும் விமானங்கள் வந்து செல்லும். விரிவாக்கம் செய்யப்பட்ட இந்த விமானநிலைய திறப்பு விழா நாளை மறுநாள் (26-ந்தேதி) நடைபெறுகிறது. அதனை பிரதமர் மோடி இரவு 8 மணிக்கு திறந்து வைக்கிறார்.
இந்நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது தொகுதியுடன் தொடர்புடைய மதுரை-போடிநாயக்கனூர் ரெயில் பாதையின் மின்மயமாக்கல் உட்பட பல முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்க தூத்துக்குடிக்கு வருவீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த முக்கியமான சந்தர்ப்பத்தில் தூத்துக்குடி விமான நிலையத்தில் உங்களை வரவேற்கவும், வழியனுப்பவும் எனக்கு அனுமதி கிடைத்தால் அது ஒரு தனி மரியாதை மற்றும் பாக்கியமாக கருதுவேன்
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






