என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசத்தின் தெற்கே 130 கி.மீ. தொலைவிலும் கொல்கத்தாவின் தென்கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
- காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேச கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
வடக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேசத்தின் தெற்கே 130 கி.மீ. தொலைவிலும் கொல்கத்தாவின் தென்கிழக்கே 170 கி.மீ. தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கதேச கடற்கரையை அடுத்த 24 மணி நேரத்தில் கடக்க வாய்ப்பு உள்ளது.
மேற்கு வங்கம் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா மற்றும் ஜார்கண்ட் வழியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






