என் மலர்
சென்னை
- வல்லுநர் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
- மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பாடத்திட்டங்கள் குறித்து இன்று ஆலோசனை.
மாநில கல்விக்கொள்கையின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வல்லுநர் குழுவுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்," 2026-27ம் கல்வி ஆண்டு முதல் படிப்படியாக பாடத்திட்டங்கள் மாற்றப்படும்" என்றார்.
மேலும் அவர்," புரிதலுடன் மாணவர்கள் படிப்பதற்கு தேவையான பாடத்திட்டங்கள் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்க போகிறோம் உள்ளட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது" என்றார்.
- தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது.
- தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ளது. வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை கொட்டி தீர்க்கும்.
அந்த வகையில் கடந்த மாதம் சென்னையில் நல்ல மழை பெய்தது. ஆனால் இந்த மாதம் வடகிழக்கு பருவமழை சென்னையில் ஏமாற்றம் அளிக்கும் வகை யிலேயே இருந்து வருகிறது. இது தொடர்பாக வானிலை ஆய்வாளர்கள் கூறும் போது, அடுத்தடுத்த நாட்களில் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளனர்.
கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான புயலும் சென்னையில் பெரிய அளவில் மழை தாக்கத்தை ஏற்படுத்தாமல் ஆந்திரா நோக்கி சென்று வங்கக்கடலில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய புயல் உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னர் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
கொமோரின் மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்காள விரிகுடா மற்றும் இலங்கைப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த மேலடுக்கு சுழற்சி இன்று காலை 5.30 மணிக்கு அதே பகுதியில் நிலை கொண்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை பகுதியில் உருவாக உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் புயல் சின்னமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.
தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழை நாளை வரையில் நீடிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வாளரான டெல்டா ஹேமச்சந்தர் கூறும்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பரவலாக விட்டு விட்டு கன முதல் மிக கனமழை பதிவாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார்.
மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகள், கடலோரத்தின் ஓரிரு இடங்களிலும் அதிகனமழை வரை பதிவாக வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களான அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, திண்டுக்கல் தேனி மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் மாலை, இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யலாம்.
வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழையையும் எதிர்ப்பார்க்கலாம். ஒட்டுமொத்தமாக 4-ம் சுற்று வடகிழக்கு பருவமழை தீவிரமடைய உள்ளது' என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
இதன் மூலம் தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். தென் மாவட்டங்களில் தொடர்ந்து பெய்யும் கனமழை கடும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடியில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் நேற்றும் கன மழை கொட்டியது. தூத்துக் குடி அரசு மருத்துவமனை, ரெயில் நிலையம், பழைய மாநகராட்சி உள்ளிட்ட நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதன் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ரெயில் வழித்தடத்தில் மழைநீர் தேங்கியதால் 3 மணி நேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி வ.உ.சி. சந்தை பகுதி வி.இ. ரோடு சாலையில் பெருமளவு தண்ணீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது.
தூத்துக்குடி சிப்காட், சண்முகபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இந்த பகுதியில் மட்டும் 2,500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளான ஜீவா நகர், ராஜ் கண்ணா நகர், குமாரபுரம், வீரபாண்டிய பட்டனம் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது.
மழை நீரை வெளியேற்ற முடியாத நிலையில் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் இந்த பகுதி மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
- சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தேர்தல் ஆணையத்தின், பா.ஜ.க. அரசின் கூட்டு சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மேலானது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளன.
இந்தநிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள்.
எஸ்.ஐ.ஆர். வேண்டாம் எனவும் இது குடியுரிமையை பறிக்கும் செயலாகும் என்றும் கண்டனம் முழக்கங்களை திருமாவளவன் வாசித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-
எல்லோரும் தேர்தல் காலத்தில் தீவிரமாக பம்பரம் போல் சுற்றி சுழன்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின், பா.ஜ.க. அரசின் கூட்டு சதியை அம்பலப்படுத்த வேண்டிய பொறுப்பு மேலானது.
இந்த ஆட்சியாளர்கள் உள்நோக்கத்தோடுதான் இதை கையாளுகிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த ஆர்ப்பாட்டத்தால் எஸ்.ஐ.ஆர். என்ற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்தி விட முடியுமா? என்றால் முடியாது. எஸ்.ஐ. ஆர். என்பது எவ்வளவு தீவிரமான உள்நோக்கம் கொண்ட ஒரு நடவடிக்கை என்பதை மக்களுக்கு அம்பலப்படுத்துவதே இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம்.
எஸ்.ஐ.ஆர்.-ஐ நிறுத்த வேண்டும், தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தடை செய்ய வேண்டும் என்று கோரி நமது கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருக்கிறோம். தேர்தல் வரப்போகிறது வாக்காளர் பட்டியலில் நமது பெயர்கள் இடம் பெற்றால்தான் வாக்களிக்க முடியும். நம்முடைய வாக்குகளை பறிகொடுத்துவிட்டு நடுத்தெருவில் நிற்க முடியாது.
எனவே நாமும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையில் இறங்கித்தான் ஆக வேண்டும். அப்படி ஒரு நெருக்கடியை பா.ஜ.க. அரசு அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
தேர்தல் நேரத்தில் இதை அறிவித்தால் இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் பெரிதாக எதுவும் செய்து விட முடியாது. கட்டாயம் அவர்கள் விமர்சனங்களை செய்து கொண்டே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுத்தான் ஆக வேண்டம். நான் கூட என் பெயரை பதிவு செய்துதான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. தேர்தலில் நான் ஓட்டு போட்டே ஆக வேண்டும்.
இதுவரை நாடாண்டவர்களுக்கும், இப்போது நாடாண்டு கொண்டு இருக்கும் பா.ஜ.க.வினருக்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. இவர்கள் வழக்கமான சராசரியான அரசியல்வாதிகள் இல்லை. மோடி, அமித்ஷா, அவர்களை வழி நடத்தக்கூடிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் வெறுமனே தனி நபர்களுக்கான அதிகார வெறியர்களாக இருக்கிறார்கள் என்று கணக்கு போட்டு விடக்கூடாது.
அதிகாரத்தை பயன்படுத்தி இந்திய தேசத்தையே அடியோடு புரட்ட பார்க்கிறார்கள். அதிகாரத்தை தக்க வைப்பதற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து செய்கிறார்கள். எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவது, காங்கிரசே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, இடது சாரிகளே இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்குவது, திராவிட அரசியல் பேசக் கூடிய கட்சிகளே இல்லை என்கிற நிலையை எதிர்காலத்தில் உருவாக்குவது என்பதெல்லாம் பா.ஜ.க.வின் அரசியல் செயல் திட்டங்களில் ஒன்றாகும்.
இந்தியாவில் ஒரே மதம்தான் இருக்க வேண்டும், இந்தியாவில் ஒரே மொழிதான் ஆள வேண்டும், இந்தியாவில் மனுதர்மம் தான் ஆட்சியியல் கோட்பாடாக இருக்க வேண்டும் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த அவர்கள் விரும்பும் இந்தியாவை படைக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அம்பேத்கர் கனவை சிதைப்பதே பா.ஜ.க.வின் திட்டம் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 50% வரை திரும்பப் பெறப்பட்டுள்ளன.
- சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழகத்தில் நடைபெறும் SIR பணிகள் குறித்து தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்களில் 6.16 கோடி வாக்காளர்களுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் 50% வரை திரும்பப் பெறப்பட்டுள்ளன.
எந்த விசாரணையும் இன்றி வாக்காளர் பட்டியலில் இருந்து யாரையும் நீக்க முடியாது.
68,647 BLO-க்கள் உள்ளிட்ட 2.45 லட்சம் நபர்கள் SIR பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அதிகப்படியான BLO-க்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
SIR பணிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் 83 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் 96 சதவீதம் அளவுக்கு SIR படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டுள்ளன.
SIR படிவங்களை பூர்த்தி செய்து அளிப்பதற்கான காலக்கெடு டிச.4 அதனை நீட்டிக்க வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கடலூக்கும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 29-ந் தேதி மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திற்கு 30-ந் தேதியும் ஆரஞ்சு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் விழுப்புரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, கடலூக்கும் 29-ந் தேதி ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வரும் 30-ந் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதை தவிர 26,27-ந் தேதிகளில் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
- இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இன்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறேன்.
உடனடியாக, மாவட்டப் பொறுப்பு அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரனை தொடர்புகொண்டு, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளேன். விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன்.
இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினர்க்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன்.
- சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாரா?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
நீர்நிலைகள் நிறைந்து, உழவர்கள் கடும் உழைப்பைச் செலுத்தி நெடுவயல் நிறையக் கண்டபோது, கொள்முதல் நிலையங்களை அதிகரித்து நாம் காத்திருந்தோம். ஆனால், அதிகப்படியான மழைப்பொழிவால், நெல்மணிகள் ஈரமாயின.
உடனே, "சாகுபடிக் காலத்திற்கு முன்னதாகவே ஏன் அறுவடை செய்யவில்லை?" என்றெல்லாம் அதிமேதாவித்தன அரசியல் செய்தார், பச்சைத்துண்டு போட்டு பச்சைத் துரோகம் செய்தவரான எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்.
நெல்லின் ஈரப்பதத்தை 22 விழுக்காடாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பிரதமர் மோடிக்கு நான் கடிதம் எழுதினேன். அந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது. இதோ, கழனியில் பாடுபட்ட உழவர்கள் களத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போராடும் எங்களுக்குத் துணைநிற்க யாரிடம் அனுமதி பெற வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அவர்கள் காத்திருக்கிறார்?
கூட்டணி அமைத்தால், அதனால் தமிழ்நாட்டுக்கு நன்மைகளைப் பெற்றுத்தர வேண்டும். சுயமரியாதையையும் உரிமைகளையும் அடகு வைக்க மட்டும்தான் கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறாரா?
மூன்று வேளாண் சட்டங்களை மண்டி போட்டு ஆதரித்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், ஒருமுறையாவது தலையைச் சற்று நிமிர்த்தி நமது உழவர்களின் கோரிக்கைகளைக் கேட்கச் சொல்லியாவது சொல்வாரா?
உழவர்கள் நலன் காக்கத் தமிழ்நாடு ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும் என்பதால்தான் இத்தனையும் கேட்கிறேன். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி உழவர்கள் உழைத்த உழைப்பு வீணாகக் கூடாது!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் அருந்ததியர்களையும் சேர்த்து பட்டியலினத்தில் உள்ள 76 சமூகங்களுக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
- 16 மாதங்களாகியும் அந்தத் தீர்ப்பை திமுக அரசு செயல்படுத்த மறுக்கிறது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் பட்டியலின மக்களில் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின் தங்கிய நிலையில் உள்ள மக்கள் தொடர்ந்து அதே நிலையிலேயே இருக்கிறார்கள்; அவர்களின் நிலையை முன்னேற்றவும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் பயன்களை அவர்கள் வென்றெடுக்கவும் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க மத்திய, மாநில அரசுகள் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நீதியரசர் பி.ஆர்.கவாய் கூறியிருக்கிறார். இது தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பை பெரும்பாலான மாநிலங்கள் செயல்படுத்தியுள்ள நிலையில், அத்தீர்ப்பை திமுக அரசு சற்றும் மதிக்காதது கண்டிக்கத்தக்கது.
தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையொட்டி ஊடகங்களுக்கு நேர்காணல் அளித்திருக்கும் நீதியரசர் கவாய், சமூக, கல்வி, பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையை அடிப்படையாகக் கொண்டு பட்டியலின மக்களுக்கு சமூகநீதி வழங்கப்பட வேண்டும் என்பதற்காகத் தான் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்ற தீர்ப்பை தாம் இடம்பெற்றிருந்த 7 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டு அளித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். ஆனால், அந்தத் தீர்ப்பின் நோக்கங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் ஒன்றாம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், முதல் மாநிலமாக தெலுங்கானம், கடந்த மார்ச் மாதம் பட்டியலினத்தவருக்கான 15% இட ஒதுக்கீட்டை முறையே 1%, 9%, 5% என 3 பிரிவுகளாக பிரித்து சட்டம் இயற்றியது. அதேபோல், கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என 3 பிரிவுகளாக உள் இட ஒதுக்கீடு வழங்கி அம்மாநில அரசு ஆணையிட்டுள்ளது.
ஆந்திரமும் பட்டியலின மக்களுக்கான 15% இட ஒதுக்கீட்டை முறையே 6.5%, 7.5%, 1% என 3 பிரிவுகளாக பிரித்து உள் இட ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் வலியுறுத்தலைத் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டில் அருந்ததியர்களுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக்கீட்டுக்குப் பிறகு, வேறு எவருக்கும் இன்று வரை உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் அருந்ததியர்களையும் சேர்த்து பட்டியலினத்தில் உள்ள 76 சமூகங்களுக்கு 18% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அவர்களில் பெரும்பாகான சமூகங்களுக்கு இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவில்லை. அதைக் கருத்தில் கொண்டு தான் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அதன்பின் 16 மாதங்களாகியும் அந்தத் தீர்ப்பை திமுக அரசு செயல்படுத்த மறுக்கிறது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நீதியரசர் பி.ஆர்.கவாய் இடம் பெற்றிருந்த அமர்வு தான் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டு ஆணையிட்டது. அதன்பின் இன்று வரை 1335 நாள்களாகியும் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதற்காக ஏராளமான நடவடிக்கைகளை எடுத்தும், போராட்டங்களை நடத்தியும் கூட எந்த பயனும் ஏற்படவில்லை.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை வன்னியர்களாக இருந்தாலும், பட்டியலினத்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு சமூகநீதி வழங்கக்கூடாது என்பது தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திமுக அரசின் கொள்கையாக உள்ளது. தமிழ்நாட்டின் இரு பெரும் சமூகங்களுக்கு அநீதி இழைக்கும் திமுக அரசுக்கு அந்த சமூகங்கள் வரும் தேர்தலில் மறக்க முடியாத பாடத்தை புகட்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
- தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று தெரிவித்துள்ளது.
- நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும் ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
- வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 18-ந்தேதி குறைந்து, 19-ந்தேதி உயர்ந்த நிலையில், 20-ந்தேதி விலை சரிந்தது. இதன் தொடர்ச்சியாக 21-ந்தேதியும் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது.
21-ந்தேதி நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 460-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
இதனை தொடர்ந்து 22-ந்தேதி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 170 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,630-க்கும் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்றும் ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும் ஒரு சவரன் ரூ.93,040 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 குறைந்து ரூ.92 ஆயிரத்து 160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ரூ.11,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
22-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.93,040
21-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.91,680
20-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,000
19-11-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.92,800
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-11-2025- ஒரு கிராம் ரூ.172
22-11-2025- ஒரு கிராம் ரூ.172
21-11-2025- ஒரு கிராம் ரூ.169
20-11-2025- ஒரு கிராம் ரூ.173
19-11-2025- ஒரு கிராம் ரூ.176
- கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- துவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுப்பெற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக 15 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், ராமநாதபுரம், திருவாரூர், தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினம், கரூர், மதுரை, கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கனமழை காரணமாக புதுவை, காரைக்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு.
- நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். மேலும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இது குறித்து கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்திய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தது.
அதற்கு பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த உத்தரவுக்கு நாய் பிரியர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று சென்னையில் தெருநாய்களுக்கு ஆதரவாக பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் நடிகை நிவேதா பெத்துராஜ் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய நிவேதா பெத்துராஜ், "நாய் கடித்தால் அதை பெரிய விசயமாக்கி பயத்தை உருவாக்கக் கூடாது. தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடுவது தான் ஒரே தீர்வு. நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறுவது தீர்வு அல்ல. நாய்களை காப்பகங்களில் அடிப்பதை விட தடுப்பூசி போடுவது தான் சரியான தீர்வாக இருக்கும். கண் முன்னே நிறைய விலங்குகளுக்கு எதிரான சம்பவங்கள் நடக்கிறது; அதை தட்டிக் கேட்க யாரும் இல்லை. " என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 5.25 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






