

தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் நடைபெற்ற பாஜக-ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூட்டுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை தரப்பின் புகாரால் இந்த முடிவு எனவும் தேர்தல் வரை அப்பதவியை கூட்டு தலைமையின் கீழ் கொண்டு வரவும் முடிவு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் கேசவ விநாயகத்துக்கு புதிய பதவி வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
கேசவ விநாயகம் 2015-ம் ஆண்டு முதல் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பதவியில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.