என் மலர்tooltip icon

    சென்னை

    • பள்ளிக்கல்வியில் 19 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.
    • 8 லட்சம் மாணவிகள் புதுமை பெண்கள் திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * பள்ளிக்கல்வியில் 19 லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயன்பெறுகின்றனர்.

    * 8 லட்சம் மாணவிகள் புதுமை பெண்கள் திட்டத்தில் பலன் பெற்றுள்ளனர்.

    * தி.மு.க. அரசு கொண்டு வந்த மாடல் பள்ளிகளால் ஐ.ஐ.டி.யில் மாணவிகள் பயில்கின்றனர்.

    * கடந்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு சென்ற மாணவர்களின் கல்விச்செலவை அரசே ஏற்றுள்ளது.

    * 5 ஆண்டுகளில் பல குடும்பங்களின் தலையெழுத்தை தி.மு.க. அரசு மாற்றி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.
    • மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * என் மீது நீங்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகத்தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.

    * நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.

    * மீண்டும் தி.மு.க. ஆட்சி தான் அமையும். நீங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

    * தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரம் போல் உள்ளது இந்த பாராட்டு விழா.

    * கிராமப்புறங்களில் பள்ளி முடித்து மேற்படிப்பு படிக்க முடியாத சூழல் இருந்தது. இதனை புதுமைப்பெண் திட்டம் மாற்றியது.

    * புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் மேற்படிப்பு படிக்கும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    * மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.

    * அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    * சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.
    • இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது.

    சென்னையில் பறவைக் காய்ச்சல் காரணமாக காகங்கள் இறந்தத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் கோழிப்பண்ணைகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இறந்த காகங்களை பறவைக்காய்ச்சல் தாக்கி உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இது பறவைகளிடையே விரைவாகப் பரவக்கூடியது. பறவைக் காய்ச்சலை உருவாக்கும் எச்5என்1 வைரஸ் கிருமிகள் குறிப்பாக இடம் விட்டு இடம் பறக்கும் புறா, காகம், கொக்கு, நாரை போன்ற பறவைகளால் அதிகமாக பரப்பப்படுகிறது.

    தொற்றுநோய் பரவலைத் தடுக்க தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை, மாநிலம் முழுவதும் கண்காணிப்பை மேம்படுத்தவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது. மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை.

    * பறவைக்காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

    * இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது.

    * இறந்த கோழியை உண்ண வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?
    • ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பள்ளி வளாகத்தில் புகுந்த விஷப்பாம்பு கடித்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் , நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலத்தில் அரசுப்பள்ளியில் விஷப்பூச்சி கடித்து 3-ம் வகுப்பு மாணவி உயிரிழந்ததாகவும், வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

    அம்மாணவர்களின் தாய், தந்தையர்க்கும் குடும்பத்தினர்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    திமுக ஆட்சியில், அடிப்படைக் கட்டமைப்போ, சுகாதாரமோ கூட இல்லாத அரசுப்பள்ளிகளின் அவல நிலையால், மாணவர்கள் உயிர் போகும் அளவு சம்பவங்கள் நிகழ்வது என்பது கொடுமையின் உச்சம்.

    மேற்கூரை இடிந்து விழுந்து விடுமோ?

    சுவர் தன் மீது விழுந்துவிடுமோ?

    தரமற்ற உணவால் பாதிப்பு வருமோ?

    போன்ற அச்சங்களுக்கு நடுவே தான் மாணவர்கள் அரசுப்பள்ளிகளுக்கு செல்லவேண்டி இருக்கிறது.

    இதற்கு நடுவே, கள்ளகுறிச்சி, ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழத்தேனூர் அரசுப்பள்ளியில் உயர்நிலை நீர்தேக்கத் தொட்டியை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ததாக வருகின்ற செய்தி மேலும் அதிர்ச்சி அளிக்கின்றது…

    இதற்கு கூட ஆட்கள் நியமிக்க வக்கற்ற நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை இருக்கிறதா?

    அரசுப்பள்ளிக்கு மாணவர்கள் படிக்க வந்தார்களா? அல்லது, உங்களுக்கு வேலை செய்ய வந்தார்களா?

    மாணவர்களின் பாதுகாப்பை Compromise செய்து இப்படிப்பட்ட ஆபத்தான பணிகளில் ஈடுபடுத்துவது குற்றம் என்பதை இந்த விடியா திமுக அரசு உணருமா?

    இந்த நிலைக்கு அரசுப்பள்ளிகளைத் தள்ளிவிட்ட திமுக அரசு, "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" என ஆடம்பர மேடை அமைத்து, போலியான சுய விளம்பரம் செய்துகொள்வது வெட்கக்கேடானது.

    பள்ளிகளின் பராமரிப்பை, சுகாதாரத்தை உறுதிசெய்ய வேண்டிய தனது தலையாய பணியை தூக்கி எறிந்துவிட்டு, ரீல்ஸ் எடுப்பது, கார் ஓட்டுவது, வாக்கிங் போவது என போட்டோஷூட் எடுப்பது மட்டுமே இருக்கும் ஒருவர், Group II போன்ற அதிமுக்கிய தேர்வுகளைக் கூட முறையாக நடத்த தெரியாதவர், தமிழ்நாட்டுக்கு முதல்வராக வாய்த்திருப்பது சாபக்கேடு.

    விஷப் பூச்சி, பாம்புக் கடியால் உயிரிழந்த பள்ளி மாணவர்களின் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் உடனடியாக வழங்கிட வலியுறுத்துகிறேன்.

    • 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.
    • கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு ஆட்டோ-கால் டாக்சி ஓட்டுனர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டம் இன்று நடைபெற்றது.

    ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும், டூரிஸ்ட் கேப் , மேக்ஸி கேப் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை அரசு செலவில் பொருத்த வேண்டும், ஓலா, உபர், ராபிடோ, போர்ட்டர் போன்ற வாகனங்களை அக்ரிகேட்டர் சட்டத்தின் கீழ் முறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடந்தது.

    சென்னையில் 30 ஆயிரம் பேர் இந்த வேலை நிறுத்தத் தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கூட்டமைப்பு சங்கங்களின் தலைவர் ஜாகிர் உசேன் கூறியதாவது:-

    13 ஆண்டுகளாக மீட்டர் கட்டணத்தை உயர்த்தாமல் அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மாற்றி அமைக்காமல் இருப்பது வேதனையானது.

    எனவே கட்டணத்தை மாற்றி புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்ய வேண்டும், இத்தொழிலில் ஈடுபட்டுள்ள வாகனங்களை முறைப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பிரதான கோரிக்கையாகும்.

    இவற்றை உடனடியாக இந்த அரசு செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொது வேலை நிறுத்தம் நடக்கிறது. மாலை 4 மணி அளவில் கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொள்கிறார்கள் என்றார். 

    • கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.
    • கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக காங்கிரஸ் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டமும் பயிற்சி முகாமும் டெல்லியில் நடக்கிறது. கூட்டணி பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கிறது.கூட்டணியில் இழுபறி எதுவும் கிடையாது. பேசிக் கொண்டு இருக்கிறோம்.

    தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி பற்றி எடப்பாடி பழனிசாமிக்கு என்ன கவலை இருக்கிறது. அ.தி.மு.க. கட்சியை விட்டு விடாமல் பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லுங்கள். பா.ஜ.க ஆக்டோபஸ் மாதிரி எல்லா கட்சிகளையும் விழுங்கி இருக்கிறது. அடுத்து விழுங்க போக இருக்கிற கட்சி அ.தி.மு.க. தான். அ.தி.மு.க.வை முக்கால் வாசி விழுங்கி விட்டது.இன்னும் கொஞ்சம் இருக்கும் கட்சியை விட்டு விடாமல். எடப்பாடி பழ்னிச்சாமி பாதுகாப்பாக வைத்து கொள்வதே பெரிய விசயம்.

    அ.தி.மு.க. கூட்டணி மேடை ஏறிவிட்டார்கள் என்கிறீர்கள். கார்ல் மாக்ஸ் சிலை திறப்பு விழாவில் தி.மு.க. கூட்டணி தலைவர்களும் கைகோர்ந்து இருந்தோம். 18-ந் தேதி எல்லாரும் சேர்ந்து மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த உள்ளோம். எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

    பா.ம.க.வை சேர்ப்பது குறித்து முதலமைச்சர் தான் முடிவு செய்வார். பிற கட்சிகளின் பிரச்சினைகளில் காங்கிரஸ் மூக்கை நுழைக்காது. இதை தவறாக பதிவு செய்து உள்ளனர். ஆனால் அதுபோல் எதுவும் சொல்லவில்லை. கூட்டணிக்கு தமிழ்நாடு தலைவராக உள்ள முதலமைச்சர் தான் முடிவு எடுப்பார்.

    நாடாளுமன்றத்தில் தான் ஜனநாயகம் பிறக்கிறது. நாடாளுமன்றத்தில் விவாதங்கள் செய்ய அனுமதிக்க வேண்டும். பேசவிட மாட்டோம் என்பது சர்வாதிகாரம். நாடாளுமன்ற பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தந்து உள்ளனர்.100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.கூட்டணிக்காக அதிகாரத்தை காங்கிரஸ் கட்சி மேலிடத்திற்கு தந்து உள்ளோம். கட்சி மேலிடம் பேசி கொண்டு இருக்கிறது. கொஞ்சம் பொறுத்திருங்க்ள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரே வரும் 16-ந்தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
    • எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில்ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் நிலவி வரும் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்குக் காரணமான மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் செயல்படுத்தாமல் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் தி.மு.க. அரசு மற்றும் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிடவும், மானாமதுரை அரசு மருத்துவமனையில் நிலவி வரும் நிர்வாக சீர்கேடுகளை உடனடியாக சரிசெய்திட வலியுறுத்தியும், அ.தி.மு.க. சார்பில் வருகிற 16-ந்தேதி (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில், மானாமதுரை நகராட்சி அலுவலகம் எதிரில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார், தலைமையிலும்; சிவகங்கை மாவட்டக் செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், முன்னிலையிலும் நடை பெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.வினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.
    • முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.

    சென்னையில் இரண்டாம் கட்டமாக 3 வழித்தடங்களில் ரெயில்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் மெரினா கடற்கரை கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பைபாஸ் சாலை வரை 26 கி.மீ. தொலைவு ரெயில் பாதை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    இந்த தடத்தில் வடபழனி - பூந்தமல்லி இடையேயான 16 கி.மீ. தூர மெட்ரோ ரெயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளன.

    இந்நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரெயில் இயக்குவதற்கான இறுதி ஆய்வை நாளை ரெயில் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்கிறது. நாளை முதல் 3 நாட்களுக்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி ஆய்வு மேற்கொள்கிறார்.

    முதல் 2 நாள் பிரேக்கிங் தொழில்நுட்பம், தண்டவாளத்தின் தரம், ரெயில் பெட்டிகள் வசதி, பயணிகள் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொள்கிறார். 3-வது நாள் 80 முதல் 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்கிறது. 10 ரெயில் நிலையங்களிலும் ஆய்வுகள் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மாலை ஆலோசனை நடத்த உள்ளார்.
    • தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி ஜீவிதா நாச்சியாரை கட்சியை விட்டு பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நீக்கினார். சசிகலாவை சந்தித்ததால் கட்சியின் முக்கிய நிர்வாகியை நீக்கும் அளவுக்கு சசிகலா - தினகரன் இடையேயான பனிப்போர் உச்சம் அடைந்துள்ளது.

    எடப்பாடி பழனிசாமியை மிக தீவிரமாக எதிர்த்து வந்த டி.டி.வி. தினகரன், தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டார். தீவிர அரசியலில் சில காலம் ஒதுங்கியிருந்த சசிகலா, தற்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக வரும் சட்டசபை தேர்தலில் களமிறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் சசிகலா இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

    சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் சசிகலா தனது ஆதரவாளர்களுடன் மாலை 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.

    தேர்தல் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஆதரவாளர்கள் அனைவரும் தனது இல்லத்திற்கு வருமாறு சசிகலா தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    வரும் சட்டசபை தேர்தலில் தென்மாவட்டங்களை குறிவைத்து சசிகலா களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டசபை தேர்தலில் போட்டியிட தயாராக இருக்கிறீர்களா? என ஆதரவாளர்களிடம் சசிகலா கேட்டு வருவதாகவும், தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்ததை சசிகலா தரப்பு ஏற்கவில்லை என தெரிய வந்துள்ளது.

    • வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.
    • வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் உயர்ந்து புதிய உச்சத்தில் விற்பனையாகிறது. காலை, மாலை என இருவேளைகளிலும் விலை உயர்ந்து அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

    வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது. கிராமுக்கு 230 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,650-க்கும் சவரனுக்கு 1,840 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,17,200-க்கும் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,16,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 300 ரூபாய்க்கும் பார் வெள்ளி ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200

    08-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    07-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,360

    06-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

    05-02-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-02-2026- ஒரு கிராம் ரூ.300

    08-02-2026- ஒரு கிராம் ரூ.285

    07-02-2026- ஒரு கிராம் ரூ.285

    06-02-2026- ஒரு கிராம் ரூ.280

    05-02-2026- ஒரு கிராம் ரூ.300

    • ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.
    • முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது.

    ரெயில்களில் சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செல்போன் செயலி வருகிற 1-ந் தேதி முதல் பயன்பாட்டில் இருந்து நீக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ரெயில்வே துறையில் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தி வருகிறது. ஒரு காலத்தில் ரெயில் நிலையத்திற்கு நேரில் சென்று டிக்கெட் எடுக்கவும், வரிசையில் காத்திருந்து முன்பதிவு செய்யும் நிலை இருந்தது. தற்போது அனைத்தும் செல்போனில் இருந்தபடி மேற்கொள்ளும் வகையில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஒவ்வொரு முறையும் நவீன தொழில்நுட்பம் ரெயில்வேயால் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற தானியங்கி டிக்கெட் வினியோகம் செய்யும் எந்திரங்கள் ரெயில் நிலையங்களில் வைக்கப்பட்டன. பின்னர் யூ.டி.எஸ். என்ற செல்போன் செயலி மூலம் டிக்கெட் பெறும் வசதி வந் தது. பயணம் செய்யும் ரெயில் எந்த ரெயில் நிலையத்தில் உள்ளது. எங்கு வந்து கொண்டுள்ளது என்பதை அறிவதற்காக என்.டி.இ.எஸ். என்று சொல்லப்படும் தேசிய ரெயில் விசாரணை சேவை இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கான புகார்கள் குறித்து டிக்கெட் பரிசோதகர் அல்லது ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டரிடம் புகார் அளிக்கும் நிலை இருந்தது. தற்போது ரெயில் மதாத் எனப்படும் இணைய தளம், செல்போன் செயலி மூலம் ஆன்லைனில் புகார் அளிக்கும் வசதி கொண்டு வரப்பட்டது. ரெயில்களில் பயணம் செய்யும்போது உணவு ஆர்டர் செய்ய வசதி இல்லாமல் இருந்தது.

    தற்போது டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே அந்த சேவையையும் பெற முடியும். இவ்வாறாக பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில், முன்பதிவு டிக்கெட், சாதாரண டிக்கெட், குறைகளை பதிவு செய்ய, புகார் தெரிவிக்க, இருந்த இடத்திலேயே உணவு பெற, சலுகை கட்டண டிக்கெட் ஆகிய அனைத்து சேவைகளும் ரெயில் ஒன் என்ற செயலி மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இந்த செயலி கடந்த ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பயணிகளுக்கான அனைத்து சேவைகளும் இந்த செயலி மூலம் வழங்கப்படுகிறது.

    இந்நிலையில் முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுக்கான யூ.டி.எஸ். செயலி வருகிற 1-ந் தேதி முதல் செயலிழக்கப்பட உள்ளது. அதாவது யூ.டி.எஸ். செயலி ஒவ்வொரு கட்டமாக செயலிழக்க செய்யப்பட உள்ளது. முதலில் புதிதாக சீசன் டிக்கெட் பெறுவது, சீசன் டிக்கெட் புதுப்பித்தல், புதிய பதிவு ஆகியன 1-ந் தேதிக்கு பின்னர் செய்ய முடியாது. தொடர்ந்து பிளாட்பாரம் டிக்கெட் பெறுவது, ஆர்-வாலட் என்று சொல்லப்படும் பதிவு செய்த பயணியின் கணக்கில் உள்ள தொகையை ரீ-சார்ஜ் செய்வது ஆகியன நிறுத்தப்படும். படிப்படியாக மேற்கொள்ளப் டும் இந்த மாற்றங்கள் முழுமையடையும் வரை பிளே ஸ்டோரில் இந்த செயலி செயல்பாட்டில் இருக்கும்.

    ஆர்-வாலட்டை பொறுத்தமட்டில், மின்சார ரெயில்கள், பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தினமும் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக முன்கூட்டியே ஒரு குறிப்பிட்ட தொகையை பிரிபெய்ட் போல ரீ-சார்ஜ் செய்யும் வசதி உள்ளது. யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலிக்கு மாறும் போது அவர்கள் கணக்கில் உள்ள ஆர்-வாலட் தொகை அப்படியே இருக்கும். அந்த தொகையை பயணிகள் ரெயில் ஒன் செயலியில் பயன்படுத்தி கொள்ள முடியும். எனவே அனைத்து பயணிகளும் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தற்போது வரை 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.
    • சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த அக்டோபர் 27-ந்தேதி நிலவரப்படி 6.41 கோடி வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு தீவிர திருத்த பணிகளை முன்னிட்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 5.43 கோடி பேர் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். மொத்தம் 97.37 லட்சம் வாக்களர்களின் பெயர்கள் அதில் நீக்கப்பட்டு இருந்தன.

    இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட டிசம்பர் 19-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்வதற்கான அவகாசம் வழங்கப்பட்டது.

    இதில் பெயர் சேர்க்க 17.10 லட்சம் பேரும், நீக்கம் செய்யக் கோரி 1.84 லட்சம் பேரும், திருத்தம் கோரி 5.51 லட் சம் பேரும் என மொத்தம் 24.47 லட்சம் வாக்காளர்கள் அதற்குரிய படிவங்களை பூர்த்தி செய்து வழங்கியிருந்தனர்.

    இணையதளம் வழியாக வாக்காளர் பெயர் சேர்க்க 5.74 லட்சம், நீக்கம் கோரி 15,935, திருத்தம் கோரி 4.38 லட்சம் என 10.28 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆக மொத்தம் 34 லட்சத்து 75 ஆயிரத்து 717 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த விண்ணப்பங்களை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மூலம் சரி செய்யும் பணி இன்று நிறைவு பெறுகிறது.

    வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டன. அதில் உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரடடை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

    நிரந்தரமாக குடி பெயர்ந்தவர்கள் என்று கணக்கிடப்பட்ட 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்திருந்தது.

    66 லட்சம் பேர் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள் என்று நீக்கப்பட்ட நிலையில் தற்போது வரை 22 லட்சத்து 70 ஆயிரத்து 500 பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

    அதன்படி பார்த்தால் சுமார் 44 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கவில்லை. இவர்களில் பெரும்பாலானவர்கள் இரட்டை பதிவுகளை வைத்திருக்கலாம் என்று தேர்தல் கமிஷன் நம்புகிறது.

    அதன்படி கணக்கிடும்போது தமிழகத்தில் 5 கோடியே 65 லட்சம் என்ற அளவில் வாக்காளர்கள் எண்ணிக்கை இருக்கும் என்று நம்பப்படுகிறது. அதன் அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 17-ந்தேதி வெளியிடப்பட உள்ளது. 

    ×