என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் மேற்படிப்பு படிக்கும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது - மு.க.ஸ்டாலின்
    X

    புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் மேற்படிப்பு படிக்கும் எண்ணிக்கை உயர்ந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

    • நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.
    • மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மகளிர் கிறிஸ்துவக் கல்லூரியில் நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * என் மீது நீங்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடாகத்தான் இந்த நிகழ்ச்சியை பார்க்கிறேன்.

    * நானும் MCC பள்ளியின் பழைய மாணவன் தான்.

    * மீண்டும் தி.மு.க. ஆட்சி தான் அமையும். நீங்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

    * தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் தேர்தல் பிரசாரம் போல் உள்ளது இந்த பாராட்டு விழா.

    * கிராமப்புறங்களில் பள்ளி முடித்து மேற்படிப்பு படிக்க முடியாத சூழல் இருந்தது. இதனை புதுமைப்பெண் திட்டம் மாற்றியது.

    * புதுமைப்பெண் திட்டத்தால் பெண்கள் மேற்படிப்பு படிக்கும் எண்ணிக்கை 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    * மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு என்பது நாம் போராடிப்பெற்ற உரிமை.

    * அரசு பள்ளி மாணவர்களுக்கு பொறியியல், விவசாயம், கால்நடை படிப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

    * சிறுபான்மையினருக்கான எஞ்சியுள்ள கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி தருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×