என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் புதிய தேதி அறிவிப்பு
- வரும் 28ம் தேதி இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும்.
- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
டிஎன்பிஏஸ்சி சார்பில், ஒத்திவைக்கப்பட்டிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு மைய குளறுபடி காரணமாக நேற்று நடைபெறவிருந்த குரூப் 2, 2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், வரும் மார்ச் 15ம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
வரும் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 22ல் நடைபெறவிருந்த குடிமைப்பணிகள் தேர்வு தொகுதி-IIக்கான முதன்மை தேர்வு அதே தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






