என் மலர்
சென்னை
- கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் கட்டப்பட்ட பாலங்களின் திட்டச் செலவை விட இந்தப் பாலத்தின் செலவு கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது.
- மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை 3.2 கி.மீ தொலைவுக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.621 கோடி மதிப்பீடு செய்யப்பட்டிருப்பதாகவும், சராசரியாக ஒரு கி.மீக்கு ரூ.195 கோடி செலவாவதாகவும் தமிழக அரசால் கணக்குக் காட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
வழக்கமாக இத்தகைய மேம்பாலங்களை அமைப்பதற்கான செலவை விட திட்ட மதிப்பீடு 50 சதவீதம் கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதை ஏற்க முடியாது.
சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில், தேனாம்பேட்டை தொடங்கி சைதாப்பேட்டை வரை மொத்தம் 3.21 கி.மீ தொலைவுக்கு 4 வழி உயர்மட்டச் சாலை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த பாலம் அமைப்பதற்கான திட்டச் செலவு ரூ.621 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு மிகவும் அதிக மதிப்பீடு ஆகும். இந்த மதிப்பீடு பல வகையான ஐயங்களை எழுப்புகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் சென்னையில் கட்டப்பட்ட பாலங்களின் திட்டச் செலவை விட இந்தப் பாலத்தின் செலவு கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது. 2021-ம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் முன்பாக கட்டப்பட்ட பாலத்திற்கு கி.மீக்கு ரூ.95 கோடியும், 2022-ம் ஆண்டு மேடவாக்கத்தில் கட்டப்பட்ட பாலத்திற்கு கி.மீக்கு ரூ.101 கோடியும் மட்டும் தான் செலவாகியுள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் கட்டப்படும் மேம்பாலங்கள் மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் கட்டப்படும் மேம்பாலங்களை விட தரத்திலும் வடிவமைப்பிலும் சிறப்பானதாக இருக்கும் என்பதால் அவற்றின் கட்டுமானச் செலவு சற்று அதிகமாகவே இருக்கும்.
ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மூலம் கட்டப்பட்ட மதுரை-நத்தம் மேம்பாலம் சராசரியாக கி.மீக்கு ரூ.100 கோடி செலவில் தான் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலம் அதை விட 95 சதவீதம் கூடுதல் செலவில் கட்டப்பட்டு வருவது ஏன்? என்பது தான் வினா.
தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் மூலம் கிளாம்பாக்கம்-மறைமலை நகர், மதுரவாயல்-சென்னை வெளிவட்டச்சாலை இடையேயும், திருப்பெரும்புதூர்-சென்னை வெளிவட்டச் சாலை ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்படவுள்ளன. தலா 6 வழிப்பாதையும், 3 இடங்களில் மேம்பாலத்தில் ஏறி, இறங்கும் வசதிகளும் கொண்ட இந்த மேம்பாலத் திட்டங்களுக்கு முறையே கி.மீக்கு ரூ.188 கோடி, ரூ.175கோடி, ரூ.155 கோடி தான் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அவற்றை விட குறைவாக 4 வழிப் பாதையாக கட்டப்படும் தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை பாலத்திற்கு அதிக செலவாவது நியாயமல்ல.
சென்னை அண்ணா சாலைக்கு அடியில் மெட்ரோ ரெயில் பாதை அமைந்துள்ள நிலையில், அதன் மீது தூண்களையும், பாலத்தையும் அமைக்க நவீன தொழில்நுட்பங்கள் தேவை என்பதிலும், அப்பகுதியில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதிலும் ஐயமில்லை. அதற்காக இயல்பை விட அதிக செலவாகும் என்பதிலும் ஐயமில்லை.
ஆனால், அந்தக் கூடுதல் செலவு இயல்பை விட 50 சதவீதம் அதிகம் என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிலர் லாபமடைய வேண்டும் என்பதற்காகவே திட்ட மதிப்பு உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அதுமட்டுமின்றி, தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பீடு 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.482 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அடுத்த ஓராண்டில், அதாவது 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் திட்ட மதிப்பீடு ரூ.43 கோடி மட்டும் அதிகரிக்கப்பட்டு ரூ.525 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், அடுத்த ஓராண்டுக்குள்ளாக திட்ட மதிப்பீடு 18சதவீதம், அதாவது ரூ.96 கோடி அதிகரிக்கப்பட்டு, ரூ.621 கோடியாக்கப்பட்டுள்ளது. திட்ட மதிப்பீடு இரு ஆண்டுகளில் 29 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கப்பட்டதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதன் பின்னணி என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் ஒரு ரூபாய் கூட சுரண்டப்படுவதை அனுமதிக்க முடியாது. தேனாம்பேட்டை-சைதாப்பேட்டை உயர்மட்ட மேம்பாலத்திற்கான திட்ட மதிப்பு இயல்பை விட 50சதவீத்துக்கும் கூடுதலாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டது குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே.
- திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும்.
குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-மந்திரிகள், அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த புதிய மசோதாவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே. அப்போதுதான் ஒழுங்கு இருக்கும். இதுபோன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை.
* திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அ.தி.மு.க வுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணமானது.
- சிறுபான்மை சமுதாய மக்களுக்கு எப்போதும் தி.மு.க. துணை நிற்கும்.
சென்னை:
மறைந்த முன்னாள் தி.மு.க அமைச்சர் ரகுமான் கான் எழுதிய 5 நூல்கள் மற்றும் இடி முழக்கம் சட்டமன்ற பேரூரைகள் நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் இந்த நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் பெற்றுக்கொண்டார்.
ரகுமான் கான் பேச்சுக்கு ரசிகன் நான். அவர் சட்டமன்றத்தில் பேசியதை எவ்வளவோ சொல்ல முடியும். ரகுமான் கானின் பேச்சு சட்டமன்றத்தில் இடி முழக்கமாகவும், தமிழ்நாடு முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலித்தது.
தலைவர் கலைஞரை பொறுத்தவரை ஒரு திறமைசாலியை கண்டார் என்றால் அவர்களை அரவணைத்து வளர்த்திடுவார். அந்த வகையில் ரகுமான் கான் இறுதி மூச்சு வரை கழக காவலராக இருந்தவர்.
இன்றைக்கும் நமது நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன்னுடைய கட்சிக்கு வருமாறு ரகுமான்கானை அழைத்தார். ஆனால் சின்ன சஞ்சலம் கூட இல்லாமல் கொள்கை உறுதியோடு தி.மு.க.வில் ரகுமான்கான் இருந்தார். சட்டமன்றத்தில் ரகுமான் கான் எப்படியெல்லாம் செயல்பட்டார் என இன்றைக்கு தெரிந்து கொள்ள வேண்டும். எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த சமயங்களில் சட்டமன்றத்தில் கழகத்தை காப்பாற்றிய எம்.எல்.ஏ.க்களில் முக்கியமான 3 பேரை சொல்ல வேண்டுமானால் துரைமுருகன், சுப்பு, ரகுமான் கான் ஆகிய மூவரை இன்றைக்கும் வரலாறு சொல்லும்.
இந்த 3 பேரையும் இடி, மின்னல், மழை என சொல்லலாம். இந்த 3 பேரும் கேள்வி எழுப்பினால் சட்டமன்றமே அதிரும். அ.தி.மு.க. ஒரு விஷயத்தில் அப்போது இரட்டை நிலைப்பாட்டை எடுத்தது.
எப்போதுமே அ.தி.மு.க வுக்கு இரட்டை நிலைப்பாடு என்பது சாதாரணமானது. இது பற்றி ரகுமான் கான் சட்டமன்றத்தில் என்ன சொன்னார் என்றால் சின்னம் இரட்டை இலை. அதனால் இரட்டை போக்கு என்று சொன்னார். அதற்கு அப்போது யாராலும் பதில் சொல்ல முடியவில்லை
நேற்று பாராளுமன்றத்தில் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய ஒரு கருப்பு சட்டத்தை உள்துறை அமைச்சர் கொண்டு வந்து இருக்கிறார்.
இதற்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம், வக்பு திருத்த சட்டம் என்று சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தனர்.
அப்போதெல்லாம் தி.மு.க. சார்பில் அந்த சட்டங்களை எப்படி கடுமையாக எதிர்த்தோமோ அதே மாதிரி இந்த கருப்பு சட்டத்தையும் எதிர்ப்போம்.
இதையெல்லாம் இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றால் மக்கள் பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புகிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திசை திருப்ப அல்ல. நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்ப இப்படி செய்கிறார்கள்.
உறுதியாக சொல்கிறேன் தி.மு.க இருப்பது உங்களுக்காக தான். இந்த சமுதாயத்திற்காக தான். குறிப்பாக சிறுபான்மை சமுதாய மக்களுக்கு எப்போதும் தி.மு.க. துணை நிற்கும்.
விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர் சுபேர் கான் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளது.
- இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான்.
சென்னை அண்ணா சாலையில் முன்னாள் அமைச்சர் ரகுமான் கான் எழுதிய 5 நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* ரகுமான் கானின் பேச்சுக்கும் எழுத்துக்கும் நான் ரசிகன்.
* தொகுதி மக்கள் மத்தியில் ரகுமான் கானுக்கு மிகுந்த அன்பு உள்ளது.
* ஒரு திறமைசாலியை கண்டு கொண்டால் அவர்களை அரவணைக்கும் பழக்கம் கலைஞரிடம் இருந்தது.
* கலைஞரின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் ரகுமான் கான்.
* ரகுமான் கானை அ.தி.மு.க.வுக்கு வரச்சொல்லி எம்.ஜி.ஆர். அழைத்தபோதும் அவர் செல்லவில்லை.
* ரகுமான் கான் மீது வெடிகுண்டு வீசப்பட்ட போதிலும் அவர் அஞ்சவில்லை.
* மாநாடுகளில் ரகுமான் கான் பேச எழுந்தாலே கூட்டம் ஆர்ப்பரித்து விடும்.
* என்னுடைய உடல்நிலை குறித்து அக்கறையுடன் நலம் விசாரித்தார் ரகுமான் கான்.
* இன்றைக்கும் நம் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் ரகுமான் கான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோவை வடக்கு-காரமடை இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.
- நீலகிரி அதிவிரைவு ரெயில் கோவை-மேட்டுப்பாளையம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கோவையில் நிறுத்தப்படும்.
சென்னை:
கோவை வடக்கு-காரமடை இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை சென்டிரலில் இருந்து வரும் 26, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இரவு 9.05 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையம் செல்லும் நீலகிரி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்.12671), கோவை-மேட்டுப்பாளையம் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, கோவையில் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- வெள்ளி விலை உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 26ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
இந்த மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.9 ஆயிரத்து 235-க்கும், சவரன் ரூ.320 குறைந்து ரூ.73 ஆயிரத்து 880-க்கும், நேற்று கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு ரூ.9 ஆயிரத்து 180-க்கும், சவரன் ரூ.440 குறைந்து ரூ.73 ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9.230-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 73,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 126 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 26ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,440
19-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 73,880
18-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
17-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
16-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
20-08-2025- ஒரு கிராம் ரூ.125
19-08-2025- ஒரு கிராம் ரூ.126
18-08-2025- ஒரு கிராம் ரூ.127
17-08-2025- ஒரு கிராம் ரூ.127
16-08-2025- ஒரு கிராம் ரூ.127
- பொதுமக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது.
- வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பெருநகர சென்னை மாநகராட்சியில் வளர்ப்பு நாய்கள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் குறித்த புகார்கள் வருகின்றன.
செல்லப்பிராணிகளின் உரிமையார்கள் கட்டாயம் பெருநகர சென்னை மாநகராட்சியின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
செல்லப்பிராணிகளுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தியும், முறையாக உணவு, தண்ணீர் மற்றும் இருப்பிடம் முதலியவற்றை வழங்கி பராமரிக்கவும், பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் பொழுது கழுத்துப்பட்டையுடன் சங்கிலி இல்லாமல் கொண்டு செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாய்களை வீடுகள், தெருக்கள், பூங்காக்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் முகமூ இன்றி திரியவிட்டாயோ / அழைத்து சென்றாலோ உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அவ்வாறான நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்களுக்கு அச்சம் மூட்டும் வகையில் ஆக்ரோஷமான தன்மை கொண்ட நாய்களை வளர்க்கக்கூடாது. மேலும் பொது இடங்களுக்கு ஒரே நேரத்தில் ஒரு செல்லப்பிராணியை மட்டுமே அதன் உரிமையாளர்கள் எடுத்து செல்ல வேண்டும்.
ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அந்த செல்லப் பிராணியை அழைத்து செல்லும் பொழுது மற்றவர்கள் பாதுகாப்பை கருதி அதன் வாயை மூடியிருக்க (Muzzle) செய்தும், கட்டாயம் கழுத்துப்பட்டையுடன் சங்கிலியால் கட்டி வைத்திருக்கவும் வேண்டும்.
சென்னை மாநகராட்சியில் உரிமம் மற்றும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட நாய்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு அழைத்து செல்ல அனுமதிக்கப்படும்.
விலங்குகளின் நடவடிக்கைகள் நன்கு அறிமுகமான மனிதர்கள் மற்றும் அதன் இருப்பிட சூழ்நிலையில் இயல்பு நிலையிலும் மற்ற இடங்களில் மாறுபட்டும் இருக்கக் கூடும். இதனை உரிமையாளர்கள் உணர்ந்து கொண்டு பொறுப்புணர்வுடன் பிறருக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் இவற்றை வளர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
பொது இடங்கள், அடுக்கக குடியிருப்புகளின் மின்தூக்கிகள் (Lift) ஆகியவற்றில் மிகுந்த பாதுகாப்போடும் மற்றவர்களுக்கு அச்சுமூட்டும் வகையிலோ (அ) அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலோ நாய்களின் நடவடிக்கைகள் இல்லாதிருப்பதை உறுதி செய்ய வேண்டியது உரிமையாளர்களின் பொறுப்பாகும்.
இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி (Guidelines with respect to Pet Street Dogs and their care givers and for Residents Welfare Associations and Apartment Owners Associations இந்த விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்துகிறது.
இதனை மீறி உரிமம் பெறாமல் ஆபத்து ஏற்படும் வகையில் வெறித்தன்மை, பதற்றம் மற்றும் துரத்தி கடிக்கும் தன்மையுள்ள நாய்களை அந்த செல்லப்பிராணிகளின் உரிமையாளர்கள், அவற்றை பொது இடங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் திறந்துவிட்டால் அவ்வாறான நாய்கள் மீது இந்திய பிராணிகள் நல வாரியம் (Animal Welfare Board of India) வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படியும், பொதுமக்களின் உடல் / மன அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நாய்களின் உரிமையாளர்களின் மீது உரிய குற்றவியல் சட்ட நடவடிக்கைகளின்படியும் நடவடிக்கைக்கு உள்ளாவார்கள் என கடுமையாக எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.
- ஆன்லைனில் நாளை முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
மேலும், 180 சிறைக் காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் நாளை முதல் செப்டம்பர் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நவம்பர் 9-ந்தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (22.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
ரெட்ஹில்ஸ்: புதுநகர் 3வது - 5வது தெரு, நாரவாரிகுப்பம் தெரு, தர்காஸ் சாலை, ஜே.ஜே.நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேகக்பர் அவென்யூ, பாலாஜி கார்டன், பாடியநல்லூர், கண்ணபாளையம், சேந்திரம்பாக்கம், சீரங்காவூர், பெருங்காவலூர், கும்மனூர், ஆர்ஜேஎன் காலனி, கோமதியம்மன் நகர், பாலவயல், மணீஷ் நகர், ஜெயதுர்கா நகர், ஆரூனுல்சா சிட்டி, விஷ்ணு நகர், மகராஜ் நகர், கரிகலா நகர்.
மாங்காடு: டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொலுமாணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர் மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே.நகர்.
ஐடி காரிடார்: பிள்ளையார் கோவில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, 200 அடி ரேடியல் சாலை, போஸ்ட் ஆபிஸ் தெரு, எம்சிஎன் நகர், எம்சிஎன் நகர் விரிவு, ஸ்ரீபுரம் சாலை.
தரமணி: கந்தன்சாவடி கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர், காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, வால்மீகி தெரு, முல்லை தெரு, காமராஜர் தெரு, கம்பர் தெரு, ராஜீவ் தெரு, அன்னை தெரசா தெரு, கணபதி தெரு, இந்திரா காந்தி தெரு, அண்ணா தெரு, கண்ணதாசன் தெரு, சிதம்பரனார் தெரு, மருதம் தெரு, ஜான்சிராணி தெரு, அம்பேத்கர் தெரு, வியாசர் தெரு, கொடி காத்த குமரன் தெரு, கட்டபொம்மன் தெரு, சுபாஷ் சந்திரபோஸ் தெரு, அவ்வையார் தெரு, கரிகாலன் தெரு, சேரன் தெரு.
அடையாறு: சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் 1வது, 2வது, 15வது குறுக்குத் தெரு.
திருவான்மியூர்: எல்பி ரோடு, காமராஜ் நகர், அப்பாசாமி பிரைம் டவர்ஸ், இந்திரா நகர், டிஎன்எச்பி, மாளவியா அவென்யூ, மருதீஸ்வரர் நகர், எம்ஜி ரோடு.
சேலையூர்: மாடம்பாக்கம் மெயின் ரோடு, ஹன்சா கார்டன், ஜெயின் அபார்ட்மெண்ட், திருமகள் நகர், பேங்க் காலனி, புவனேஸ்வரி நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி தெரு, கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர், ராஜாஜி நகர்.
பெருங்களத்தூர்: பாரதி நகர் 1 முதல் 8வது தெரு, காந்தி நகர், சாரங்கா அவென்யூ, சடகோபன் நகர், குட் வில் நகர்.
செம்பாக்கம்: சரவணா நகர், விஜிபி சீனிவாச நகர், சத்ய சாய் நகர், கவுசிக் அவென்யூ, காந்தி நகர், சரஸ்வதி நகர்.
- அரசும், ஆணையமும் வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க எதையும் செய்யவில்லை.
- திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தினருக்கு வழங்கப்பட்டு வரும் 17% இட ஒதுக்கீட்டை மூன்றாக பிரித்து பட்டியலினம் (வலது) 6%, பட்டியலினம் (இடது) 6%, பிற பட்டியலினத்தவருக்கு 5% என உள் இட ஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்திருக்கிறது. கர்நாடகத்தில் அனைத்து சமூகங்களுக்கும் உரிய சமூகநீதி வழங்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி எடுக்கப்பட்டுள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை பாராட்டத் தக்கதாகும்.
பட்டியலினத்தவருக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில் அம்மாநில அரசும், அதற்காக அமைக்கப்பட்ட ஆணையமும் காட்டிய வேகமும், அக்கறையும் பாராட்டத்தக்கவை. பட்டியலின சமூகங்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரைப்பதற்காக கர்நாடக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.என்.நாகமோகன் தாஸ் தலைமையில் கடந்த பிப்ரவரி 21-ஆம் நாள் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம், சரியாக 165-ஆம் நாள், அதாவது ஆகஸ்ட் 4-ஆம் தேதி அதன் அறிக்கையை தாக்கல் செய்தது.
அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட 15-ஆம் நாளில் கர்நாடக அரசு அமைச்சரவையைக் கூட்டி உள் இட ஒதுக்கீடு வழங்க தீர்மானித்திருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைக் கூட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில், அதன் கடைசி நாளான, நாளை மறுநாள் ஆகஸ்ட் 22-ஆம் தேதிக்குள் ஒது குறித்த சட்டம் நிறைவேற்றப்படவுள்ளது. அதாவது கர்நாடகத்தில் பட்டியலின மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்து 163 நாள்களில் அது சாத்தியமாகவுள்ளது. இது ஒரு சமூகநீதிச் சாதனை என்பதில் ஐயமில்லை.
ஆனால், தமிழ்நாட்டிலும் தான் ஒன்றுக்கும் உதவாத அரசும், அதனால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் இருக்கிறதே. அவற்றை நினைக்க நினைக்க கோபம் தான் கொந்தளிக்கிறது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் 31.03.20222-ஆம் நாள் தீர்ப்பளித்து இன்றுடன் 1239 நாள்கள் ஆகின்றன. அரசால் அமைக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைக்க ஆணையிடப்பட்டு இன்றுடன் 952 நாள்கள் ஆகின்றன. ஆனால் அரசும், ஆணையமும் வன்னியர்களுக்கு சமூகநீதியை வழங்க எதையும் செய்யவில்லை.
சமூகநீதியை பாதுகாப்பதற்காகவே அவதாரம் எடுத்து வந்தவரைப் போல நாடகங்களை அரங்கேற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்வதெல்லாம் சமூகநீதியை குழிதோண்டி புதைப்பது தான். வன்னியர்கள், பட்டியலின மக்கள் உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் துரோகம் இழைத்து வரும் திமுக ஆட்சிக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் முடிவுரை எழுதப் போவது உறுதி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும்.
- கூலி படத்தில் அதிக வன்முறை இருப்பதாக தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் 400 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் படைத்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் படம் பார்க்க தியேட்டர்களுக்கு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதைதொடர்ந்து, கூலி திரைப்படத்தை U/A சான்றிதழுடன் தியேட்டர்களில் திரையிட அனுமதிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை அவசa மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
கூலி படத்தில் அதிக வன்முறை இருப்பதாக தணிக்கை சான்றிதழ் குழு A சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த மனு மீது இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மனுவில்," அதிக வன்முறை காட்சிகள் இருந்த கேஜிஎப் மற்றும் பீஸ்ட் படங்களுக்கு U/A சான்றிதழ்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகளவிலான சண்டை காட்சிகள் உள்ளதால், கூலி படத்துக்கு A சான்றதழ் வழங்கப்பட்டதாக சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- விசாரணை, தீர்ப்பு என எதுவுமே இல்லாமல் 30 நாட்கள் கைதாகி இருந்தாலே பதவி நீக்கம் என்பது கருப்பு சட்டம்.
- எதிரணியை அமைதியாக்குதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்கும்.
முதலமைச்சர், அமைச்சர்கள் பதவி நீக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்ட இன்று கருப்பு நாள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களவையில் அமித் ஷா தாக்கல் செய்த 130வது அரசமைப்புத் திருத்த மசோதா சீர்திருத்தம் அல்ல, ஒரு கருப்பு மசோதா.
இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்றி, அரசியலமைப்பையும் அதன் ஜனநாயக அடித்தளத்தையும் சீர்குலைக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
விசாரணை, தீர்ப்பு என எதுவுமே இல்லாமல் 30 நாட்கள் கைதாகி இருந்தாலே பதவி நீக்கம் என்பது கருப்பு சட்டம். வாக்குத்திருட்டு, எதிரணியை அமைதியாக்குதல், மாநிலங்களை நசுக்குதல் என சர்வாதிகாரம் இப்படித்தான் தொடங்கும்.
போட்டியாளர்களை கைது செய்து பதவியில் இருந்து நீக்கும் அதிகாரத்தை தனக்குத்தானே வழங்குவதைத்தான் வளர்ந்து வரும் சர்வாதிகாரிகள் முதலில் செய்வார்கள். இம்மசோதா அதைத்தான் செய்ய முயல்கிறது.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.






