என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பதவி பறிப்பு மசோதா- சீமான் ஆதரவு
- மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே.
- திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும்.
குற்றவழக்குகளில் கைதாகி 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்-மந்திரிகள், அமைச்சர்களின் பதவியை பறிக்க வழிவகை செய்யும் மசோதா பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த புதிய மசோதாவிற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* மக்கள் பிரதிநிதிகள் தவறு செய்து தண்டனை பெற்றால் அவர்களது பதவி நீக்கப்படுவது சரிதானே. அப்போதுதான் ஒழுங்கு இருக்கும். இதுபோன்ற நிறைய மாறுதல்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தேவை.
* திருச்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக பிப்ரவரி மாதம் மாநாடு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






