search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பாவூர்சத்திரத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம்
    X

    பாவூர்சத்திரத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    பாவூர்சத்திரத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம்

    • திருயேடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
    • கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் புறப்பட்டு பாவூர்சத்திரம் வந்தடைந்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் சுற்றுவட்டார தலைமைப் பதியில் அய்யா வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானை திருயேடு வாசிப்பு நிகழ்ச்சி கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கியது. 8-ம் திருநாளான 30-ந் தேதி மாலையில் அன்னதானமும், இரவில் அய்யா வைகுண்டரின் இகனைதிருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனைத்தொடர்ந்து நேற்று அகிலத்திரட்டு திருயேடு வாசிப்பும், குறும்பலாபேரி பெரும்பனையூர் தெருவில் உள்ள அய்யா நிழல் தாங்கள் பதியில் இருந்து கருடவாகனத்தில் அய்யா வைகுண்டர் ஊர்வலம் புறப்பட்டு பாவூர்சத்திரம் வந்தடைந்தது. இரவில் அய்யா வைகுண்டரின் பட்டாபிஷேக நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

    இதில் சுவாமிதோப்பு குரு பாலபிரஜாபதி அடிகளார் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றினார். திருவிழாவில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×