என் மலர்
அரியலூர்
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). இவரது மகன் மருதுபாண்டி (15), அரியலூர் அரசு விளையாட்டு விடுதியில் தங்கி, 10-ம் வகுப்பு பயின்று வந்தான்.
மாணவன் மருதுபாண்டி தினமும் விடுதி வார்டனின் செல்போனை வாங்கி பெற்றோருடன் பேசுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி முதல் மாணவனிடம் இருந்து எந்த அழைப்பும் பெற்றோருக்கு வரவில்லை. இதனால் அவர்கள் அரியலூரில் உள்ள அரசு விடுதிக்கு சென்று விசாரித்தனர்.
அப்போது 2-ந் தேதி இரவு 8 மணிக்கு வெளியே சென்ற மாணவன் இதுவரை திரும்பவில்லை என விடுதி காப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாணவனின் பெற்றோர் அரியலூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து மாணவன் மருது பாண்டியை தேடி வருகின்றனர்.
மேலும் பள்ளி, விடுதியில் உடன் இருந்த மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் ஜமீனுக்கு சொந்தான பெரிய கோவிலில் சரத்குமார் கதா நாயகனாக நடிக்கு பாம்பன் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைய அரசியலே அரசியலாக உள்ளது. நடிகர் சங்கத்தை பற்றி எனக்கு தெரியாது என்றும் தான் உறுப்பினராக கூட இல்லை. ஒக்கி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு குறைந்த அளவு நிதி கொடுத்துள்ளது. பாதிப்பின் தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசு, மத்திய அரசுக்கு நிர்ப்பந்தம் தரவேண்டும்.
நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மக்களுக்கு நல்லது தான். மக்களுக்கு யார் நல்லது செய்தால் என்ன? ஆனால் அவர்கள் அரசியலுக்கு எப்போது வரவேண்டும் என்று உள்ளது. தற்போது இரண்டு பெரிய தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் நடிகர்கள் அரசியலுக்கு வருகிறார்கள்.
கமல்ஹாசனுடன் கூட்டணி அமைப்பீர்களா? என்ற கேள்விக்கு கமலுடன் நான் ஏன் கூட்டணி வைக்க வேண்டும், அவர்தான் என்னுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றார். தமிழக அரசின் செயல்பாடு நல்ல நிலையில் உள்ளது. தத்தளித்து கொண்டிருந்த கப்பலை சீரமைத்து கொண்டு செல்கின்றனர். அதற்கு நான் முதலில் பாராட்டுக்கள் தெரிவிக்கிறேன்.
மத்திய அரசுடன் மாநில அரசு அதிக இணக்கத்துடன் உள்ளது. நான் 21 ஆண்டு காலமாக அரசியலில் உள்ளேன். ஓய்வு பெற்று ஓய்ந்த பிறகு அரசியலுக்கு வரவில்லை வெற்றி படங்கள் தந்தபோதும், சூப்பர் ஸ்டாராக இருந்த போது அரசியலுக்கு வந்தேன். நேரம் வரும், காலம் வரும், நானும் ஆட்சி பொறுப்பில் வந்து அமருவேன் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது அவரது மகளும் நடிகையுமான வரலட்சுமி உடனிருந்தார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 33). நேற்றிரவு இவர் அப்பகுதி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
அப்போது அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த இரும்புலிக்குறிச்சி போலீஸ் நிலைய பெண் சப்-இன்ஸ் பெக்டர் காயத்ரி, சின்னதுரையை மறித்து வாகனத்திற்கான ஆவணங்களை கேட்டார். அப்போது சின்னதுரை குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை எச்சரித்த, சப்- இன்ஸ்பெக்டர் காயத்ரி, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விட்டார்.
இதைத்தொடர்ந்து வீட்டிற்கு சென்ற சின்னதுரை, நடந்த சம்பவம் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம் தெரிவித்து விட்டு தூங்கி விட்டார். இன்று காலை எழுந்து பார்த்தபோது சின்னதுரையை காணவில்லை. அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடிய போது, வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்ட நிலையில் சின்னதுரை பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சிய டைந்த அவரது பெற்றோர் கதறி அழுதனர்.
மேலும் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இரும்புலிக்குறிச்சி,- உடையார்பாளையம் சாலையில் திரண்டு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்த தும் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், சப்- இன்ஸ்பெக்டர் காயத்ரி, சின்னதுரையை அவதூறாக பேசி தாக்கியதால்தான் மன முடைந்து சின்னதுரை தற்கொலை செய்துள்ளார்.
எனவே எஸ்.ஐ.காயத்ரியை கைது செய்ய வேண்டும் என்று புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் பொதுமக்கள் மறியலை கைவிட மறுத்து விட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உரிய விசாரணை நடத்துவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சின்னதுரை உடல் பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலை செய்த சின்னதுரைக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் பெண் பார்த்து வந்துள்ளனர். நேற்று ஒரு பெண்ணை பார்த்து விட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
அரியலூர் அருகே உள்ள முனியங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவம், தொழிலாளி. குடும்பத்தகராறு காரணமாக இவரது உறவினர்கள் 4 பேர் மீது விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
அவர்களை ஜாமீன் எடுக்க 8 பேரின் அத்தாட்சி தேவைப்படவே, பரமசிவம், ரெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அதிகாரியான கீழப்பளூர் கிராமத்தை சேர்ந்த நாராயணனை சந்தித்து அத்தாட்சி வழங்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் நாராயணன், அத்தாட்சி வழங்க வேண்டுமென்றால் தனக்கு 800 ரூபாய் தரவேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பரமசிவம், இது பற்றி திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் ரசாயனம் தடவிய பணத்தை பரமசிவத்திடம் கொடுத்து அனுப்பினர். அவர் ரெட்டிப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று வி.ஏ.ஓ. நாராயணனிடம் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 21.5.2004 அன்று நடந்தது.
இந்த வழக்கு விசாரணை அரியலூர் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை முடிவடைந்ததையடுத்து இன்று நீதிபதி ரவி தீர்ப்பு அளித்தார். அதில் நாராயணனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். #Tamilnews
அரியலூர் மாவட்டம் செந்துறையில் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் எம்.எல்.ஏ.வுமான ஆர்.டி.ராமச்சந்திரன் பேசியதாவது:-
ஒரு ஊரில் உள்ள சிவன் கோவிலுக்கு செல்லும் மக்கள் அனைவரும் பயபக்தியுடன் பவ்வியமாக சிவனை வணங்கி வந்தார்கள். சிவன் கழுத்தில் இருந்த பாம்பு நம்மைதான் இந்த மக்கள் வணங்குகிறார்கள் என்று நினைத்து கொண்டு இருந்ததாம்.
கோவிலில் சிவன் இல்லாதபோது ஊருக்குள் சென்ற பாம்பை தீயசக்தி வந்து விட்டதாக எண்ணி அந்த பாம்பை விரட்டி அடித்தனர். அதேபோன்று தமிழகத்தில் இருக்கும் 1½ கோடி தொண்டர்களும் ஜெயலலிதாவைதான் விழுந்து வணங்கினோமே தவிர அவரது பின்னால் இருந்த பணிப்பெண் சசிகலாவை அல்ல.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் வேலைக்காரி சசிகலா, தானே ஜெயலலிதாவாக எண்ணிக்கொண்டு தொண்டர்களிடம் வந்த போது அ.தி.மு.க. தொண்டர்கள் தீயசக்தி வேலைக்காரி சசிகலாவை வெறுத்து ஒதுக்கினோம்.
தற்போது சிறையில் இருக்கும் சசிகலா மீண்டும் இரட்டை இலையை மீட்டு, தி.மு.க.வின் குடும்ப ஆட்சியைப்போன்று தனது குடும்ப ஆட்சியை கொண்டு வந்த தமிழக மக்களின் வரிப் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்று கனவு காண்கிறார். இதனை அ.தி.மு.க. தொண்டர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. #Tamilnews
அரியலூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று அ.தி.மு.க. தினகரன் அணியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தையன் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் எம்.எல்.ஏ.வும், தினகரன் அணியின் பொருளாளருமான ரெங்கசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் மனோகரன் , முன்னாள் எம்.எல்.ஏ. துரை மணிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ரெங்கசாமி எம்.எல்.ஏ.பேசும் போது, திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து நாற்காலியில் அமர வைத்தனர். பின்னர் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். #tamilnews






