search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கலந்துரையாடல் கூட்டம்"

    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு
    • அனைவரும் கலந்து கொள்ள அழைப்பு

    கலவை:

    ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, ஆற்காடு சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி இந்த கலந்துரையாடல் கூட்டம் வருகிற 25-ந் தேதி சனிக்கிழமை, மாலை 2 மணிக்கு ராணிப்பேட்டையில் இருந்து அம்மூர் சாலையில் உள்ள முத்துக்கடை எஸ்.கே. மஹாலில் நடக்கிறது. கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, வாக்குச்சாவடி களப்பணியாளர்கள், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், மூத்த நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள் ஆகியோருடன் கலந்துரையாடுகிறார்.

    பின்னர் அவர் கூட்டத்தின் நோக்கம் குறித்தும், பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் திட்டங்கள் குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆகியவைகள் குறித்தும் விளக்கி பேசுகிறார்.

    ராணிப்பேட்டையில் நடைபெறும் கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ளும், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்க்கு சிறப்பான முறையில் வரவேற்கும் வகையில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி, கிளை நிர்வாகிகள், வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம், மாணவர் சங்கம், மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, பாட்டாளி சமூக ஊடகப்பேரவை, பசுமைத் தாயகம், தேர்தல் பணி குழு, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், சிறுபான்மை பிரிவு, கொள்கை விளக்க அணி, பாட்டாளி தொழிற்சங்கம், கலை இலக்கிய அணி, சமூக முன்னேற்ற சங்கம், வக்கீல் சமூக நீதிப்பேரவை ஆகிய சார்பு அமைப்பு நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகள், மூத்த முன்னோடிகள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவரும் தவறாது கலந்துரையாடல் சந்திப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

    • மா அறுவடை நெருங்கும் நேரத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும்.
    • மா பயிர்களுக்கு உண்டான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை, தோட்டக்கலை அலுவலர்கள், வேளாண் அறிவியல் மையம், மண்டல ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மற்றும் மா, தென்னை விவசாயிகளுடன் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    தென்னை விவசாயிகள் பேசியதாவது:-

    தென்னை பூச்சி நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த ஒட்டுண்ணி உற்பத்தியை அதிகரித்து வழங்க வேண்டும். தென்னையில் மதிப்புக்கூட்டு பொருட்கள் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலை, போச்சம்பள்ளி சிப்காட்டில் தொடங்கிட வேண்டும். தென்னை மரங்களுக்கு மருந்து தெளிக்க தெளிப்பான்கள் வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    தொடர்ந்து கலெக்டர் தீபக் ஜேக்கப் பதில் அளித்து பேசியதாவது:-

    மா இழப்பீடு குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்ப்படும். மா அறுவடை நெருங்கும் நேரத்தில் முத்தரப்பு கூட்டம் நடத்தப்படும். மாவட்டத்தில் அனைத்து வட்டாரங்களில் போலி பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை தடுக்க, வேளாண், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து அறிக்கை அனுப்பிட வேண்டும். பருவமற்ற காலங்களில் பயிரிப்படும் மா பயிர்களுக்கு உண்டான தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு துறை அலுவலர்கள் மூலம் வழங்கப்படும்.

    மேலும், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து அரசுக்கு கருத்துரு தயார் செய்து, அனுப்ப தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமதுஅஸ்லாம், தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, பையூர் மண்டல ஆராய்ச்சி நிலைய தலைவரும், பேராசிரியருமான சிவக்குமார், எலுமிச்சங்கிரி வேளாண்மை அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி சுந்தர்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி, விவசாய பிரதிநிதி மற்றும் தென்னை, மா விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    • புதிய பஸ் நிலைய திறப்பு விழாவிற்கு மு.க.ஸ்டாலின் வருகை
    • உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம்

    வேலூர்:

    வேலூரில் வருகிற 21-ந் தேதி புதிய பஸ் நிலைய திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.

    இதில் முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதனையொட்டி உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் கூட்டம் அரியூர் தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடந்தது.

    இதில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது;-

    உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஒரு சிலரை நான் நேரில் வாழ்த்தியிருக்கிறேன்.தற்போது ஒட்டுமொத்தமாக அனைவரையும் பார்க்க வேண்டும்.வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கூட்டத்தை கூட்டி இருக்கிறேன்.

    உள்ளாட்சி தேர்தலில் எதிரிகள் கழகத் துரோகிகளை சமாளித்து வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இது சாதாரணமானது அல்ல‌.நீங்கள் வெற்றி பெற்ற பகுதி வளர்ச்சியடைய வேண்டும். அதற்கான செயலில் ஈடுபட வேண்டும்.

    தமிழக அளவில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான பெரிய மாநாட்டை நாமக்கல்லில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்த உள்ளார்.இதில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

    கடந்த 10 ஆண்டு ஆட்சியில்ரூ.7 லட்சம் கோடி கடன் வைத்து விட்டு சென்று விட்டார்கள். இந்த கடன் சுமையுடன் ஆட்சி பீடத்தில் மு க ஸ்டாலின் அமர்ந்திருக்கிறார். நிதி கஷ்டத்தை மக்களிடத்தில் கூற முடியாது.

    நிதியை சமாளிப்பது எப்படி என்று கருணா நிதியின் மகனுக்கு தெரியும். பல்வேறு இடங்களில் மனு கொடுத்த மக்கள் எதுவும் நிறைவேறாமல் முதல்அமைச்சர் வருகையின்போதாவது விமர்சனம் கிடைக்குமா என்ற நோக்கத்தில் மனு கொடுத்திருக்கிறார்கள். இதில் அதிக அளவில் மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும் என கலெக்டரை கேட்டுக்கொள்கிறேன்.

    56 ஆண்டுகள் சட்டமன்றத்தில் உறுப்பினராக இருந்தவர் கருணாநிதி. அதற்கு அடுத்தபடியாக 53 ஆண்டுகள் நான் சட்டசபையிலேயே இருக்கிறேன். நிதியில் கரை கண்டவர் கருணாநிதி. அவரது மகன் கூர்ந்த மதி நுட்பத்தால் ஆட்சி தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது.

    கொரோனா வந்தது. ஊசி போடுவதற்கு அதிக செலவாகிவிட்டது. வெள்ளம் வந்து எல்லாத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. தற்போதும் வெள்ள நிவாரண நிதி வழங்கி கொண்டிருக்கிறோம்.

    ஆட்சியில் நிதிநிலையில் சரியாக நடத்திக் கொண்டிருப்பவர் மு.க. ஸ்டாலின்.

    திராவிடர் கழகம் மற்றும் திமுகவிற்கு உயிரோட்டம் கொடுத்தது வேலூர் மாவட்டம்தான்.

    நிதி ஆதாரம் இருந்தால் 95 சதவீத மனுக்களுக்கு நலத்திட்ட உதவி கொடுக்க முடியும்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை யின்போது வழிநெடுகிலும் நின்று அவரை பிரமாண்டமாக வரவேற்க வேண்டும்.எந்த காரணத்தைக் கொண்டும் கொடி பேனர்கள் தோரணங்கள் கட்டக்கூடாது. மலர்களை தூவி கோஷத்துடன் வரவேற்க வேண்டும்.

    தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவதற்கும் மற்றும் கூட்டுறவு திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை.சூசகமாக சொல்கிறேன். விரைவில் நல்ல முடிவு வரும். இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கதிர் ஆனந்த் எம்.பி, எம்எல்ஏக்கள் நந்தகுமார், கார்த்திகேயன், ஈஸ்வரப்பன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×